கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு ,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (7) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்து, வழக்கு விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு
ஆணைக்குழு மோஷன் (Motion) ஒன்றின் மூலம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார்
குற்றச்சாட்டின் கீழ்
என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்டது.
இருப்பினும், அவர் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாகக் குறிப்பிட்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு
ஆணைக்குழு, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியது.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

- ஓமன் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் செல்கிறார்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- வறண்ட வானிலை காரணமாக தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 36% ஆகக் குறைந்துள்ளது

- சாகுபடிப் பருவங்களையும் பாதுகாக்க உதவி

- சமாஜி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு ஜாமீன்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்








