அர்ச்சுனா ஆவி பேசிறது
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா ஆவி பேசிறது

அர்ச்சுனா ஆவி பேசிறது

கொள்ளையடிக்க வந்தவன்
கொள்கை அற்று நிற்பவன்
பைத்தியமாய் நடிப்பவன்
வைத்தியன் என்பவன்

கேடு கெட்ட வார்த்தைகளை
கேளிக்கையாய் சொல்பவன்
முகமூடி கொள்ளையனாய்
முன்னேறி நிற்பவன்

நடமாடும் ஊடகமாய்
நாடெல்லாம் அலைபவன்
வெளிநாட்டு பணத்திற்கு
வெள்ளை அடிப்பவன்

தங்கத்தை மட்டுமே
தாராளம் நம்புறவன்
தமிழரின் சாபமாக
தலைகீழாய் நிற்பவன்

மொத்தத்தில் இவனொரு
பைத்தியமாய் ஆனவன்
பகல் கொள்ளையனை
பார் தமிழா விரட்டி விடு.

ஆக்கம் – 29-04-2025

வன்னி மைந்தன்