Author: நலன் விரும்பி
நடிகரின் முகத்தில் அடித்த கீர்த்தி சுரேஷ்
நடிகரின் முகத்தில் அடித்த கீர்த்தி சுரேஷ்
தெலுங்கு பட உலகின் பிரபல நடிகரின் முகத்தில் அடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் அதற்காக மன்னிப்பு கேட்டு கொண்டார்.
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். வருகிற 12ம் தேதி படம் திரைக்கு வர
இருக்கிறது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
படத்தின் பாடல் ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, மகேஷ் பாபுவின் முகத்தில் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டார்.
இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, காட்சிக்கு ஏற்ப நடிக்கும்போது எனது பக்கம் தவறு நடந்து விட்டது. தெரியாமல் மகேஷ் சாரின் முகத்தில் அடித்து விட்டேன்.
உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார். ஆனால், என்னால் அமைதியாக இருக்க
முடியவில்லை. 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விசயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
இந்த படத்தில் கலாவதி என்ற வேடத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், இதுவரை திரை துறையில்தான் நடித்துள்ள படங்களில் நடித்திராத வகையில் காட்சிப்படுத்தப்பட்டு
உள்ளார் என்று கீர்த்தி சுரேஷ் பெருமையுடன் கூறியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். பரசுராம் இயக்கி உள்ளார்.
படத்தில் நடிகர்கள் சமுத்திரகனி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்
உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்
ஐரோப்பாவில் அதிக உடல் எடை கொண்ட நாடாக பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,இந்த
உடை எடை அதிகரிப்பால் ,அவர்கள் தம் அவயவங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இந்த உடல் எடையால் ஆண்டு தோறும் பண்ணி ரெண்டு லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற அதிர்ச்சிக்கர
தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு கரணம் ,அதிக உணவு உட் கொள்ளுதல் ,சொகுகாச வாழ்தல் ,மற்றும் உடல் பயிற்சி இன்மை ,போன்ற காரணங்களும் முதன்மை இடம் வகிக்கின்றன.
உக்கிரேனில்-இரு கால்களை இழந்த மனைவியை -சுமந்து நடனம் ஆடிய கணவன்
உக்கிரேனில்-இரு கால்களை இழந்த மனைவியை -சுமந்து நடனம் ஆடிய கணவன்
உக்கிரேன் மீது ரசியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,இந்த
இராணுவ மோதலின் பொழுது தனது இரு கால்கள் ,மற்றும் நான்கு கை விரல்களை
இழந்த நிலையில் பெண் ஒருவர் Lviv மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
இங்கு இவரை கண்ணுற்ற ஒருவர் இவரை திருமணம் முடித்துள்ளார் ,அந்த கணவனே
இவரை தூக்கியவாறு அதே மருத்துவ மனையில் நடனம் ஆடிய காட்சிகள் வைரலாகி
வருவதுடன் ,குறித்த பெண்ணுக்கு உலகளாவிய நிலையில் இருந்து உதவிட பலரும் முன்வந்துள்ளனர்
ரசியா இராணுவத்தின் தாக்குதல் அகோரத்தை இந்த பெண் உடல் இழப்பு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது ,
ரசியாவுக்கு கார் பாகங்களை ஏற்றுமதி செய்யும் ஈரான்
ரசியாவுக்கு கார் பாகங்களை ஏற்றுமதி செய்யும் ஈரான்
ரசியா மீது பல நாடுகள் பொருளாதார தடையினை விதித்துள்ள நிலையில் தற்போது ரசியாவுக்கு கார் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்திட ஈரானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது
இதனை அடுத்து ஈரான் தனது உற்பத்தியில் தயாரான கார் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்கிறது
இதனால் ஈரான் புதிய வர்த்தகத்தின் மூலம் பல மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் என எதிர் பார்க்க படுகிறது
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இவர் லூசியம் பகுதியில் முப்பதாம் திகதி காணப்பட்டுள்ளார் ,அதன் பின்னர் எங்கு
சென்றார் என்பது தொடர்பாக தெரியவில்லை.
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிய படுத்தும் படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு
இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு
இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு
ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது ,மேலும் இணையம்,தொலைத் தொடர்புகள் துண்டிக்க பட்டுள்ளன
இரு மதங்களுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட மதவாத போர் திட்டமிட்ட அரசியல்
நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்
இந்த மத மோதலினால் ஜோடபூர் பகுதி இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது
சுமந்திரனுக்கு செருப்படி – இனியாவது திருந்துமா வாலாட்டும் நாய்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது.
யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியதே பெரிய விடயமாக அமையாது.
ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம்.
எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார் என்பதை கருத்தில் எடுப்பதில்லை.
அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில் நேரடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்.
சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள்.
12 வருட காலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
சிறையில் அரசியல் கைதிகள் வாழ்கின்றார்கள் அவர்களை கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை.
இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும் சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியாமை கவலை அளிக்கிறது.
நான் மாகாண சபை அமைச்சராக இருந்தபோது பதுளை மாவட்டத்தில் 150 பாடசாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தேன். 120 பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்களை அமைத்து கொடுத்தேன் ,200 மேற்பட்ட வீதிகளை அமைத்துக் கொடுத்தேன்.
அதுமட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுத்தேன். இவ்வாறு பலதரப்பட்ட வழங்கலை மக்களுக்காக பெற்றுக் கொடுத்தேன்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை சுமந்திரனிடம் கேட்க வேண்டிய சூழ்நிலை
உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்
யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்
யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் சிக்கி
பதினேழு வயது இளம் பெண் ஒருவர் பலியாகியுளளார்
பலத்த தி ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில்
அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்
குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அரசியல் வாதிகளின் லஞ்ச ஊழல் மோசடி அமபலம் – ஜேவி அதிரடி
அரசியல் வாதிகளின் லஞ்ச ஊழல் மோசடி அமபலம் – ஜேவி அதிரடி
இலங்கையில் ஆளும் அரசு உள்ளிட்ட அமைச்சர்கள் புரிந்த லஞ்ச ஊழல் மோசடி தொடர்பிலான
ஆவணங்களை வெளியிடும் ஜேவிபியின் கூட்டம் தற்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இந்த பொது கூட்டத்தில் அனுரா பேசியவண்ணம் உள்ளார்
இதில் யார் யார் பெயர்கள் வெளியிட பட போகிறது, அவர்கள் அடித்த கொள்ளை எத்தனை ஆயிரம் கோடி என்பதை
அறிய மக்கள் ஆவலாக உள்ளனர் ,சில மணித்தியாலங்களில் இவை தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
13 இலங்கையில் அமுலாகும் – மோடி கட்சி யாழில் கபடி ஆட்டம்
13 இலங்கையில் அமுலாகும் – மோடி கட்சி யாழில் கபடி ஆட்டம்
இலங்கையில் -இந்தியா ,இலங்கை அரசு ஏற்பாட்டில் உருவாக்க பட்ட 13 தவது திருத்த சட்டம் இலங்கையில்
அமுலாகும் என ஆளும் மோடி கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இலங்கையில் வைத்து தெரிவித்துள்ளார்
இவரை போன்று முன்னரும் அதே முன்னாள் தலைவர் அம்மணி சென்று வந்தார்
,தாமரை மலர்ந்ததும் ,தமிழகத்தில் புது பொலிவு வரும் என அவர் தெரிவித்தார் , அத்துடன் அந்த கதை ஓய்ந்தது
இப்போது அணணமலை என ரஜனி பட பெயரில்; பெயரை வைத்துள்ள தமிழக தலைவர் இந்த பேச்சும் ஒரு கண் துடைப்பு நாடகம் என அடித்து கூறலாம்
தமது அரசியல் பிழைப்புக்காக ,ஒரு பரப்பிற்கு , இவ்வாறூ விளம்பரம் தேடியுள்ளார் இந்த அண்ணாமலை என்பதே தமிழர்கள் பேச்சாக உள்ளது
இலங்கையில் நடந்த சிங்கள இன படு கொலை தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த கட்சி தலைவர் எதனையும் தெரிவிக்காது நழுவியுள்ள செயல் உலக தமிழர்களை
கொதிப்பில் உறையவைத்துள்ளது ,
இந்திய அரசியல்வாதிகள் கேவலமானவர்கள் என்பது இங்கே மீளவும் ஒருமுறை பதிவாகியுள்ளது
சிங்களவர்களுடன் சேர்ந்து போராடுங்கள் – எட்டப்பன் சுமந்திரன் ஊளை
சிங்களவர்களுடன் சேர்ந்து போராடுங்கள் – எட்டப்பன் சுமந்திரன் ஊளை
இலங்கையில் மத ,மொழி வேறு பாடு இல்லாமல் காலிமுக திடலில் ஆளும் கோட்டா
அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடி வருகின்றனர்
இந்த போராட்டத்தில் தமிழர்கள் இணைந்து கொண்டு ஆதரவு தருவித்து போராட
வேண்டும் என கோட்டா சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்
இவரது இந்த பேச்சு உலக தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
ரசியா 7 கம்பெனிகள் , 170 பேர் மீது தடை விதித்த நியூஸுலாந்
ரசியா 7 கம்பெனிகள் , 170 பேர் மீது தடை விதித்த நியூஸுலாந்
உக்கிரேன் மீது ரசியா போரினை தொடர்ந்து வரும் நிலையால் அமெரிக்கா நேச நாடுகள்
ரசிய மீது பொருளாதர தடையினை விதித்த வண்ணம் உள்ளது
அந்த பட்டியலில் ரசியாவின் மிக பெரும் ஏழு நிறுவனங்கள் மற்றும் 170 பேர் மீது நியூஸுலாந் அதிரடி
தடையினை விதித்துள்ளது
இதனால் ரசியா மேலும் கொதிப்பில் உறைந்துள்ளது.
சேர்பியா நாட்டுக்கு மேலாக பறந்த ரசியா விமானங்கள்
சேர்பியா நாட்டுக்கு மேலாக பறந்த ரசியா விமானங்கள்
Azerbaijani நாட்டு எல்லைக்கு மேலாக ரசியா போர் விமானங்கள் பறந்துள்ளதால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் மீது ரசிய தாக்குதலை மேற்கொண்ட
வாறு நகர்ந்து வரும் நிலையில் ரசியாவின் இந்த விமானங்கள் பறப்பில்
ஈடுபட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை
அண்ணாமலை
இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை சந்தித்தார்.
கடந்த மார்ச் 23 அன்று இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை இன்று யாழ்ப்பாணம் சிறையில் சந்தித்ததாகவும்,
அவர்களுக்கு பாஜக சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டு வசதி, காவல்துறை & நிலம் போன்ற பிரிவுகளில்
சொந்தங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கும் 13வது
திருத்தச் சட்டத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்த பாஜக துணை நிற்கும் என்றும் அண்ணாமலை கூறி உள்ளா
900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்
900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மேற்கு கரையில் ஒரு மாதத்தில் 900 பலஸ்தீன
மக்களை கைது செய்து சிறையில் அடைத்து வதை புரிந்து வருகிறது
இஸ்ரேல் மீது காமாஸ் ரொக்கட் தாக்குதலை நடத்தி ஓய்ந்த நிலையில் ,தற்போது
மீளவும் அப்பாவி மக்களை போராளிகள் என கூறி இஸ்ரேல் கைது
செய்த வண்ணம் உள்ளது மீளவும் ஓரும் பெரும் ரொக்கட் தககுத்தலுக்குள் இஸ்ரேல் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
கற்புக்கரசி என நிரூபி – கற்பூரம் ஏற்றிய கணவரால் மனைவி கை கருகிய பரிதாபம்
கற்புக்கரசி என நிரூபி – கற்பூரம் ஏற்றிய கணவரால் மனைவி கை கருகிய பரிதாபம்
கர்நாடக மாநிலம் கோலார் அருகே கற்புக்கரசி என நிரூபிக்க மனைவின் கையில்
கற்பூரம் ஏற்றிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கற்புக்கரசி என நிரூபி – கற்பூரம் ஏற்றிய கணவரால் மனைவி கை கருகிய பரிதாபம்
மனைவி கையில் கற்பூரம் ஏற்றிய கணவர்
கர்நாடகத்தில் ஒரு பெண் தான் கற்புக்கரசி என நிரூபிக்க கையில் கற்பூரம் ஏற்றினார்
. ஆனால் அவரது கை கருகிய பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு
முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் ஆனந்த்திற்கு சந்தேகம் இருந்துள்ளது. இதுதொடர்பாக
அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆனந்த் தனது மனைவியிடம் உனது நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை போக்க கையில் கற்பூரம் ஏற்றி நீ கற்புக்கரசி என நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஆனந்தின் மனைவியும் தனது உள்ளங்களையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளார். அப்போது தீ அவரது கை முழுவதும் பரவி எரிந்தது. இதனால் அவரது கை
கருகிவிட்டது. ஆனாலும் ஆனந்த் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை என்று தெரிகிறது.
இதுபற்றி அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆனந்தின் மனைவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஆனந்த் மீது வேம்கல் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்
ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் வெளியாக தயாராகி உள்ளது.
ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்
அமலாபால்
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல
’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அமலாபால்
அமலாபால்
இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை
அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.
பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இத்திரைப்படத்தை வி
ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக வெளியிடுகின்றனர்.
இப்படம் விரைவில் வெளியாகும் எனவும் படம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை- விசாரணை தீவிரம்
உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை- விசாரணை தீவிரம்
சுகேசிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதை நடிகை ஜாக்குலின் விசாரணை குழுவிடம் ஒத்துக்கொண்டார்.
உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை.. வழக்கு விசாரணை தீவிரம்
ஜாக்குலின் பெர்னான்டஸ்
பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்ததாக
இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல தடவை தீவிர விசாரணை
நடத்தினார்கள். சுகேஷ் சந்திரசேகரின் பண பரிமாற்றங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் நடிகை ஜாக்குலினின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. ரூ.7 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சுகேசின் மோசடிகள் குறித்து நடிகை ஜாக்குலின் பல்வேறு தகவல்களை விசாரணை குழுவிடம் கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு
ஜூன் மாதம் முதன் முதலாக சுகேசை சந்தித்ததாகவும், அதன் பிறகு அவர் தனக்கு நிறைய பரிசுகள் தந்ததையும் அவர் விபரமாக விசாரணை குழுவிடம் கூறியுள்ளார்.
நடிகை ஜாக்குலின் பயணம் செய்வதற்காக பல தடவை தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுகேஷ் ஏற்பாடு செய்து கொடுத்தார். பல கோடி ரூபாய்
மதிப்புள்ள கார்கள், குதிரைகள் மற்றும் நகைகளை சுகேஷ் பரிசாக கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் ஜாக்குலின் விசாரணை குழுவிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் சுகேஷ் மீதான பணப்பரிமாற்ற பிடி இறுகி உள்ளது.
மீன் பொரியல் ஐந்து கிலோவை சாப்பிட்டு அசத்தும் தமிழிச்சி வீடியோ
மீன் பொரியல் ஐந்து கிலோவை சாப்பிட்டு அசத்தும் தமிழிச்சி வீடியோ
மீன் பொரியல் ஐந்து கிலோ மீனை தனி பெண்ணாக ,தானே உண்டு அசத்தும் தமிழிச்சியின் காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது.
சாப்பாட்டு தமிழிச்சீ என்ற பெயரை, இந்த தமிழ் பெண்மணி தட்டி செல்கிறார் .
ஐந்து கிலோ மீனை பொரித்து அப்படியே அவர் மட்டும் சாப்பிட்டு அசத்துகிறார் .
இவரது இந்த youtube காணொளியை பார்வையிட பல்லாயிரம் மக்கள் காத்துள்ளனர் .
இவர் இங்கே சாப்பிட்டு காண்பிக்கும் காடசியை பார்ப்பவர்கள், ஊடக இவருக்கு பணம் கிடைக்கிறது .
மீன் பொரியல் ஐந்து கிலோவை சாப்பிட்டு அசத்தும் தமிழிச்சி வீடியோ
அப்புறம் என்ன விதம் விதமாக சமையல் செய்து , தயக்கம் இன்றி தமிழிச்சீ உண்டு அசத்துகிறார் .அதை பார்பவர்களினாலே இவருக்கு பணம் கொட்டுகிறது .இது போல நீங்களும் செய்தால் உங்களுக்கும் பணம் கிடைக்கும் .
சும்மா சொல்லப்படாது ,வாயூறுங்க .
மீன் பொரியல் ஐந்து கிலோவை உண்டு அசத்திய தமிழிச்சி காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .
அந்த காணொளியை இங்கே நீங்களும் பாருங்கள்
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன் இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
உலகின் அதிகம் உயரவும் உடைய விஸ்கி பாட்டில்
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி
இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது.
இதுகுறித்து வேல்ஸ் ஆன்லைன் என்ற இணையதளம் கூறுகையில், இந்த பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி விலையை கொண்டது. அதிக விலைக்கு விற்கப்படும்
விஸ்கி என்ற உலக சாதனையை இந்த பாட்டில் படைத்துள்ளது. கடந்த வருடம் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இந்த பாட்டில் இடம்பிடித்தது. இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன்
இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.









