Tag: ஏலம்
பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்
பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்
யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாம்பழத்திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள்குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.
இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன் எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.
இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்
மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழமை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடையவுள்ளது.
- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

சொகுசு வாகனங்கள் ஏலம்
சொகுசு வாகனங்கள் ஏலம்
சொகுசு வாகனங்கள் ஏலம்,அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் எம்பிக்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி வந்த ஆதி சொகுசு வாகனங்களை இவ்வாறு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசவையில் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் என்பன பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும் .
அவற்றை வைத்து அரசுக்கு படத்தை விவரிக்கின்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது அதனை அடுத்து தற்பொழுது எந்த வாகனங்கள் அவசர அவசரமாக ஏலத்திற்கு விற்பனை ஆக்கப்பட்டுள்ளது ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் எந்த ஒரு அரசு நிறுவனம் ஏலத்தில் எடுக்க கூடாது எனவும் அமைச்சின் செயலர் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்
ஆளுகின்ற அதர குமர திசநாயக்க அவருடைய ஆட்சியில் இடம்பெறும் முதலாவது உதயமாக இது காணப்படுகிறது.
இதுபோன்று ஏனைய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு ஒரு சிறப்பான செல்வ குறிப்புகள் எவ்வித சந்தேகமும் இல்லை.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை

ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன் இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
உலகின் அதிகம் உயரவும் உடைய விஸ்கி பாட்டில்
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி
இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது.
இதுகுறித்து வேல்ஸ் ஆன்லைன் என்ற இணையதளம் கூறுகையில், இந்த பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி விலையை கொண்டது. அதிக விலைக்கு விற்கப்படும்
விஸ்கி என்ற உலக சாதனையை இந்த பாட்டில் படைத்துள்ளது. கடந்த வருடம் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இந்த பாட்டில் இடம்பிடித்தது. இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன்
இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.











