செந்தமிழ் வாழ வழி காட்டு
Posted in கவிதைகள் வினோத வீடுப்பு

செந்தமிழ் வாழ வழி காட்டு

செந்தமிழ் வாழ வழி காட்டு

பட்டம் பெற்றால் பாராட்டு
படைத்தாய் சாதனை தேரோட்டு
பெற்ற பொருளை முதல் காட்டு
பெருமை உள்ளதா அதில் சுட்டு

திறனை அறிந்து வாலாட்டு
திரிபுகள் திணித்தால் அது தீட்டு
பறந்தால் பட்டம் உன் திறனா
பறப்பின் வாயு உன் அரணா ..?

அவையில் அணியும் அசை காட்டு
அவையின் அழகை அதில் தீட்டு
அகத்தின் அழகை அதில் காட்டு
அகிலம் அழைக்க அதில் சூட்டு

மொழியின் புலமை அதில் காட்டு
மொழியும் மொழியில் உயிர் கூட்டு
மெய்யாய் மேனி அதில் காட்டு
மேன்மை கொள் நீதி நிலைநாட்டு

சொல்லும் செயலும் ஓர் நாற்று
சொன்னதை செய்தால் நீ போற்று
செத்தும் வாழும் நிலை நாட்டு
செந்தமிழ் வாழ வழி காட்டு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-04-2024

Posted in உலக செய்திகள் கனடா செய்திகள் வினோத வீடுப்பு

கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

, ,

கனடா ரொராண்டோ பகுதியில் உள்ள வாகன நெரிசல் கொண்ட சாலை ஒன்றில் கம்பியால் கார் சாரதியை தாக்க சென்ற தமிழர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காணொளியில் உள்ளவர் இலங்கை தமிழர் என நம்ப படுகிறது .தனது காருக்குள் இருந்து யக்கை தூக்கி சென்று சாரதியை தாக்கிட செல்லும் இவரது ரவுடி தனத்தை 8,407,062 views மக்கள் பார்வை இட்டுள்ளனர்.

தற்போது வரை இந்த காணொளி வைரலாகிய வண்ணம் உள்ளது 8.44 நிமிடத்தில் இருந்து பார்க்கவும் ..

கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

காரில் உள்ள கமராவில் இவரது வன்முறை தோய்ந்த மிரட்டல் சம்பவங்கள் யாவும் ஆதாரமாக பதிவாகி கொண்டுள்ளது என்பதை அறியாத இவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் .

கனடா quebec வேகா வீதியில் தரை இறங்கிய விமானம்

வந்த நாடுகளில் அதன் விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதை விடுத்து இலங்கையை போல எண்ணி இந்த நாடுகளில் இவ்விதம் செயல் படும் அநாகரிக செயல் பாடுகள் ஒட்டு மொத்த இலங்கை வாழ் தமிழர்களுக்கு அவப்பெயரை உருவாக்கி விடுகிறது .

கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,மக்கள் கருத்தில் இவரை கழுவி ஊற்றியுள்ளனர் .

இப்பொழுது வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை குறித்த நபர் பார்க்கும் பொழுது தனது தவறு என்ன என்பதை அவரே புரிந்து கொள்வார் .தவிர அவரது நண்பர்களும் இதனை கண்டு தெளிவார்களாக .

    Posted in வினோத வீடுப்பு

    சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்

    சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்

    இந்தியாவில் youtube பிரபலம் ஒன்று வீடியோ பிடித்து காண்பிக்க போய் சிக்கிய திகில் சம்பவம் வெளியாகியுள்ளது .

    அவருக்கு சோமாலியாவில் நடந்தது என்ன என்பதும் எவ்வாறு சோமாலியாவில் சிக்கினார் ,வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    சோமாலியாவுக்கு நீங்கள் சென்றால் அங்கே செத்தான் என்பதற்கு இந்த காணொளி உதாரணம்.

    அங்கு வெளிநாட்டவர்கள் செல்ல முடியாது என்பதற்கு இவரது இந்த பதிவு சாட்சியாக உள்ளது.

    இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

      Posted in வினோத வீடுப்பு

      மீன் பொரியல் ஐந்து கிலோவை சாப்பிட்டு அசத்தும் தமிழிச்சி வீடியோ

      மீன் பொரியல் ஐந்து கிலோவை சாப்பிட்டு அசத்தும் தமிழிச்சி வீடியோ

      மீன் பொரியல் ஐந்து கிலோ மீனை தனி பெண்ணாக ,தானே உண்டு அசத்தும் தமிழிச்சியின் காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது.

      சாப்பாட்டு தமிழிச்சீ என்ற பெயரை, இந்த தமிழ் பெண்மணி தட்டி செல்கிறார் .

      ஐந்து கிலோ மீனை பொரித்து அப்படியே அவர் மட்டும் சாப்பிட்டு அசத்துகிறார் .

      இவரது இந்த youtube காணொளியை பார்வையிட பல்லாயிரம் மக்கள் காத்துள்ளனர் .

      இவர் இங்கே சாப்பிட்டு காண்பிக்கும் காடசியை பார்ப்பவர்கள், ஊடக இவருக்கு பணம் கிடைக்கிறது .

      மீன் பொரியல் ஐந்து கிலோவை சாப்பிட்டு அசத்தும் தமிழிச்சி வீடியோ


      அப்புறம் என்ன விதம் விதமாக சமையல் செய்து , தயக்கம் இன்றி தமிழிச்சீ உண்டு அசத்துகிறார் .அதை பார்பவர்களினாலே இவருக்கு பணம் கொட்டுகிறது .இது போல நீங்களும் செய்தால் உங்களுக்கும் பணம் கிடைக்கும் .

      சும்மா சொல்லப்படாது ,வாயூறுங்க .

      மீன் பொரியல் ஐந்து கிலோவை உண்டு அசத்திய தமிழிச்சி காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .

      அந்த காணொளியை இங்கே நீங்களும் பாருங்கள்

      Posted in உளவு செய்திகள் வினோத வீடுப்பு

      இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு

      இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு


      இந்தியா சீன செல்லியான லடாக் பகுதியில் மெனெடும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

      இரு நாட்டு இராணுவமும் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளன .


      இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திய வண்ணம் உள்ளன

      இந்த துப்பாக்கி சூடுகளை அடுத்து தற்பொழுது போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,


      சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் மூண்டால் இதில் சீனாவே வெற்றி பெறும்
      என அடித்து கூறலாம்

      Posted in இலங்கை செய்திகள் வினோத வீடுப்பு

      எஸ்.பி.பிக்காக கண்ணீர் விட்டு பிரபலங்கள் பிரார்த்தனை- video

      எஸ்.பி.பிக்காக கண்ணீர் விட்டு பிரபலங்கள் பிரார்த்தனை- video

      பாட்டு தலைவன் பால சுப்பிரமணியம் மீண்டும் மீண்டு வர வேண்டும் என திரையுலக பிரபலங்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் 45 ஆயிரம் பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளனர்

      அனைவரும் கண்ணீர் மல்க பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் ,அவர் தம் நெஞ்ச குமுறலை கொட்டி தீர்த்துள்ளனர்

      Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

      ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்

      ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்

      ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு

      அதுதான் ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.

      ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம் என்ன?
      ரத்தம் உறையாமை நோய்


      கையில் சிறிய காயம் ஏற்படுகிறது. உடனே ரத்தம் வழிகிறது. சில நிமிடங்களில் ரத்தம் வெளியேறுவது தானாகவே நின்றுவிடுகிறது, அல்லவா?

      அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், அதுதான் ரத்தம் உறையாமை நோய்.

      ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.

      இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய். உலகில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுவதாகப் புள்ளி

      விவரங்களும் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய்

      ஏற்படலாம். எனவே, இதைப் பரம்பரை நோய் என்றும் கூறுகிறார்கள்.

      ரத்த உறவில் திருமணம் செய்வதன் மூலம், இந்நோய் அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

      தாயின் கருவில் உருவாகும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே

      இந்நோய் ஏற்படக் காரணம். இந்த நோய் உள்ளவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உடலில் எங்கும்

      காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் காரணமாக ஏற்படும் ரத்தக்கசிவு சிக்கலை உண்டாக்கிவிடும். சிலருக்கு எந்தக்

      காரணமும் இல்லாமல்கூட ரத்தக் கசிவு ஏற்படலாம் என்கிறார்கள், நிபுணர்கள்.

      இந்த நோயை எப்படிக் கண்டுபிடிப்பது?

      பிறந்த குழந்தைக்குத் தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது, பல் விழுந்த பிறகு அல்லது பல் எடுத்த பிறகு தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, உடலில் எங்கேயாவது

      காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிற்காமல் இருப்பது, உடலில் நீல நிறத் தழும்புகள் தோன்றி மறைவது, கால் மூட்டுகள் மீண்டும் மீண்டும் வீங்கி வலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தம்

      உறையாமை நோய் இருக்கலாம். இந்நோயை குணப்படுத்துவது மிகவும் கடினம். ரத்தம், பிளாஸ்மா செலுத்துவது மற்றும் உறை

      நிலை மருந்துகளைச் செலுத்துவது என முறையான சிகிச்சையின் மூலம் மட்டுமே இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பது, மருத்துவர்களின் அறிவுரை.

      Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

      பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?

      பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?

      முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம். காபி குடிக்கும் பழக்கமும்

      முகப்பருவிற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.


      முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது. இன்றைய சுற்றுச்சூழல், வெப்பம் எனப் பல

      காரணிகளுடன் போராடி சருமத்தை காப்பாற்ற பல முயற்சிகளும் நாம் எடுக்கிறோம். முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம்.

      பால் பொருட்கள், காரசார உணவுகள், ப்ரெட், பொரித்த உணவுகள் போன்ற பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் முகப்பருவுக்கு காரணம். காஃபி கூட உங்கள் முகப்பருவுக்குக் காரணம் எனச்

      சொன்னால் ஆச்சர்யமாவீர்கள் தானே? ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். “அதிகமாக காஃபி உட்கொள்ளும் பழக்கம்

      உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின்

      அடிப்படைக் காரணி. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகியவற்றை உணவில் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான

      பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

      தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை

      தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.

      தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

      தோலின் ஆரோக்கியத்திற்கு நிறைய தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம் என நாம் அனைவரும் அறிவோம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் சரும பிரச்சனைகள்

      ஏற்படும். “காஃபி விரைவில் கழிவாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதிக காஃபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும் போது

      இயல்பாகவே நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இப்படி உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்.

      எனவே, காஃபி தானே என்று அலட்சியம் அதிலும் அளவோடு இருந்தால் தேவையற்ற முகப்பருக்கள் தானாகவே தடுக்கப்படும்.

      Posted in உலக செய்திகள் வினோத வீடுப்பு

      நிர்வாணமாக கொரனோவை கொண்டாடிய நபர்கள் -கட்டி பிடித்து படம் பிடித்த குமரிகள்

      நிர்வாணமாக கொரனோவை கொண்டாடிய நபர்கள் -கட்டி பிடித்து படம் பிடித்த குமரிகள்

      உலக நாடுகளை கொரனோ நோயானது மிகவும் மிரள வைத்து வருகிறது


      இவ்வேளை நபர்கள் நிர்வாணமாக மிதி வண்டியில் ஊரவலம் சென்றனர்

      இந்த சம்பவம் Philadelphia பகுதியில் இடம்பெற்றுள்ளது ,இவர்களை கண்ணுற்ற சில இளம்பெண்கள் அவர்களை கட்டி பிடித்து புகை படம் பிடித்து மகிழ்ந்து கொண்டனர்

      அட பாவிகளா இப்படியுமா மனிதர்கள் ,என்ன சார் கொடுமை இது

      நிர்வாணமாக கொரனோவை
      நிர்வாணமாக கொரனோவை
          Posted in சினிமா வினோத வீடுப்பு

          என்னை கிழவி என்பதா? – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்

          என்னை கிழவி என்பதா? – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்

          அஜித் ரசிகர்கள் தன்னை கிழவி எனக்கூறி கிண்டல் அடித்ததால், நடிகை கஸ்தூரி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

          என்னை கிழவி என்பதா? – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்
          கஸ்தூரி


          தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பாக இயங்கி சமூக அரசியல்

          விஷயங்கள் பற்றி சர்ச்சை கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. 3-வது திருமணம் செய்த வனிதாவுடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

          இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் வலைத்தளத்தில் ஏற்பட்ட மோதல் இப்போது மீண்டும் வெடித்துள்ளது. டுவிட்டர் முகப்பில் அஜித் புகைப்படத்தை

          வைத்துள்ள ரசிகர் ஒருவர் கஸ்தூரி கதாநாயகியாக நடித்த பழைய படத்தில் இருந்து அவரது பாடல் காட்சி வீடியோவை வெளியிட்டு

          இது நம்ம கஸ்தூரி கிழவிதானே என்று குறிப்பிட்டு அந்த காலத்தில் அழகாக இருந்துள்ளார் என்று சுட்டி காட்டி பதிவிட்டுள்ளார். மேலும்

          பல ரசிகர்கள் அதை ஆமோதித்து பதிவுகளை பகிர்ந்தனர். இது கஸ்தூரிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

          கஸ்தூரி

          அந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “எதற்கு தேவையில்லாமல் ஆணியை புடுங்குவானேன்? அதை எனக்கு சிசி பண்ணுவானேன். இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித்

          கேட்டாரா அவர் பெயரை சொல்லி அசிங்கமா பேசுங்கன்னு. கஸ்தூரி கிழவிக்கு அஜித்தை விட ஐந்து வயது குறைவுதான். போய் வேற வேலை இருந்தால் பாருங்கள்.

          உங்களை மாதிரியான மோசமான ரசிகர்களால் அஜித்தின் அனைத்து நல்ல ரசிகர்களுக்கும் கெட்ட பெயர். அதை புரிகிற

          அளவுக்காவது அறிவு இருக்கிறதா இல்லையா. அஜித்குமார் சிறந்த மனிதர். அவரை மதிக்கிறேன். அவருக்கு பெருமை சேருங்கள்.

          இதுபோல் மோசமாக செயல்பட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த மோதல் வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

              Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

              மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

              மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

              நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

              மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி?


              கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒரு இடத்தை தொட்டால், அந்த இடத்தை மற்றொருவர் தொடும் போது அவருக்கு நோய்க்கிருமி பரவுகிறது. அப்படி உடலின் வெளிப்புறத்தில் பரவிய

              கொரோனா வைரஸ் கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றின் மூலம் தொண்டை குழாய் வழியாக உடலுக்குள் செல்கிறது.

              அந்த வைரஸ் மூக்கும், வாயும் சேரும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அறிகுறிதான்

              தொண்டை வலி. தொண்டை வலி வந்தவுடன் உரிய சிகிச்சை மூலம் வைரசை அழிக்க வேண்டும். அப்படி அழிக்கவில்லை என்றால் அது மூச்சுக்குழாய் வழியாக உடலுக்குள் சென்று விடும்.

              உடலுக்குள் சென்ற வைரஸ் எப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு நோய் எதிர்ப்பு உயிர் அணுக்களையும் (செல்) பல கோணங்களில்

              மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

              தாக்கி அழித்து முக்கிய உடல் உறுப்புகளை எப்படி செயல் இழக்கச் செய்து கொல்கிறது என்பது பற்றி ‘பிராண்டியர்ஸ் இன் பப்ளிக்

              ஹெல்த்’ என்ற அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த இதழில் கூறியிருப்பதாவது:-

              மனிதர்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு நம் உடலில் ஏராளமான நோய் எதிர்ப்பு உயிர் அணுக்கள் உள்ளன. ஆனால் அந்த உயிர் அணுக்களை கொரோனா வைரஸ்

              புதுமையான முறையில் அழிக்கிறது. அதற்கு ‘சைட்டோகைன் புயல்’ என்று பெயர்.

              நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

              உடலில் நோய்களை எதிர்த்து போராடும் அதிகப்படியான ‘லிம்போ சைட்ஸ்’ மற்றும் ‘நியூட்ரோபைல்ஸ்’ என்று அழைக்கப்படும் ரத்த வெள்ளை அணுக்களை ஒன்றோடொன்று தாக்கிக் கொள்ள

              கொரோனா வைரஸ் தூண்டுகிறது. இதனால் அவை அழிந்து போய் விடுகின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

              ரத்த வெள்ளை அணுக்கள் இறந்த பின்னர் கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் எளிதாக ஊடுருவி சேதத்தை ஏற்படுத்துகிறது.

              அடுத்து சைட்டோகைன் புயல் என்ற நிகழ்வு உடலில் அதிகப்படியான காய்ச்சலை உருவாக்கி ரத்த அணுக்களில் கசிவை ஏற்படுத்தி ரத்தத்தை உறையச் செய்கிறது. இதுதவிர குறைந்த ரத்த

              அழுத்தத்தை உண்டாக்கி ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, ரத்தத்தில் அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இதனால் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

              மேலும் கொரோனா வைரஸ் ரத்த வெள்ளை அணுக்களை தவறாக வழிநடத்தி ஆரோக்கியமான திசுக்களை தாக்கி வீக்கத்தை உருவாக்குகிறது. இதனால் நுரையீரல், இதயம், குடல், கல்லீரல்,

              மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

              சிறுநீரகம், பிறப்பு உறுப்புகள் செயல் இழந்து விடுகின்றன. இப்படி பல உடல் உறுப்புகளை செயல் இழக்கச் செய்து நுரையீரலின்

              செயலை கொரோனா வைரஸ் முடக்கி விடுகிறது. இதனால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

              இது எதனால் ஏற்படுகிறது என்றால் கொரோனா வைரஸ் கொன்ற உயிர் அணுக்கள், புரதங்களின் கழிவுகள் ஆகியவை நுரையீரலில்

              தேங்கி விடுவதால் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை நுரையீரல் இழந்து விடுகிறது. எனவே தான் கொரோனா பாதிப்பினால்

              உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மூச்சுச் திணறி இறக்கிறார்கள்.

              கொரோனா வைரசை அழிக்க மருந்து இல்லாத காரணத்தினால் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. அதாவது கொரோனா வைரஸ்

              பாதிப்பை ஏற்படுத்தும் உடல் உறுப்புகளை அதி தீவிரமாக கண்காணித்து செயல்பட வைப்பதின் மூலமே இறப்பு விகிதத்தை

              குறைக்க முடியும். இது எப்படி சாத்தியமென்றால், கல்லீரலில் உள்ள ரத்தத்தை செயற்கை முறையில் எப்படி சுத்திகரிக்கிறோமோ

              அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிசிஸ் முறையை எப்படி பயன்படுத்துகிறோமோ

              அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை செயற்கையாக செயல்பட வைத்து இறப்பை தடுக்க முடியும்.

              கொரோனா தாக்கத்தினால் நுரையீரல் செயலிழந்து விட்டால், அதற்கு மாற்றாக தொண்டை குழாய் வழியாக செயற்கை சுவாச

              எந்திரத்தை(வென்டிலேட்டர்) இணைக்காமல் செயற்கை காற்று குழாய் மூலமாக இளஞ்சூடான ஈரப்பதமிக்க ஆக்சிஜனை மூக்கு

              வழியாக செலுத்தினால் உயிர் பிழைக்க வைக்க முடியும். இதனால்தான், கொரோனா வைரஸ் உடல் உறுப்புகளை தாக்கி

              செயல் இழக்கும் அளவுக்கு அதை வளர விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

              கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

              ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். இதன் மூலம் இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் மோசமடைவதை தடுக்கலாம்.

                  Posted in உலக செய்திகள் வினோத வீடுப்பு

                  குஜராத் போலீசின் முதல் ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி_ (பெண்ணும் பெண்ணும் திருமணம் )

                  குஜராத் போலீசின் முதல் ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி_ (பெண்ணும் பெண்ணும் திருமணம் )

                  கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், குஜராத் போலீசில் ஒரு ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி பரபரக்க வைத்து விட்டது.

                  பிரீத்தி, ஆவ்னி என்பது அவர்களது பெயர்கள். (பெயர்கள் மாற்றி தரப்பட்டுள்ளன). “உனக்கும் 24 எனக்கும் 24” என்று சொல்லும் வகையில் சம வயதினர். ஒரே பாலினத்தவர் என்றாலும்

                  அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை என்பதே நிலை என உணர்ந்தனர். அதனால் இருவரும்

                  ஒன்றாக வாழ்ந்தனர். நீண்ட காலமாகவே இது நடந்து வந்திருக்கிறது.

                  இது அவர்களுடைய நட்பு வட்டாரத்துக்கும், சக போலீஸ் வட்டாரத்துக்கும் தெரியுமாம்.

                  ஆனால் அவர்களது காதலுக்கு சிக்கல் வந்தது, பிரீத்தியின் பெற்றோர் வடிவத்தில். அவர்கள் பிரீத்தியின் காதலுக்கு

                  போர்க்கொடி தூக்கினர். வீடு தேடிச்சென்று மகளை சந்தித்தனர். “ம்கூம்… இதெல்லாம் சரியில்லைம்மா.. வேலையை விட்டுடு…

                  எங்களோடு வந்துடு” என்று சொல்லிப் பார்த்தனர். பிரீத்தி சம்மதிக்க வில்லை. ஆவ்னியுடனான காதலில் உறுதியாக இருந்தார்.

                  இதுபற்றி பிரீத்தி சொல்லும்போது, “ எங்கள் காதல் உறவை அப்பா, அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கையில் நான் விரும்புவது என்ன, என் வாழ்க்கையை நான் எப்படி வாழ

                  விரும்புகிறேன் என்பதில் அவர்களுக்கு கவலையும் இல்லை” என்கிறார். பெற்றோரின் தொல்லை தொடரவே பிரீத்தி, ஆவ்னி

                  ஜோடி மஹிசாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு கடிதம் எழுதினர். அதற்கு சரியான பதில் இல்லை. உடனே அவர்கள் ஐகோர்ட்டை நாடினர்.

                  இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு உஷா ராடா கருத்து தெரிவிக்கையில், “ அவர்கள் இருவரும் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட

                  வாழ்க்கையைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கவலை, அவர்கள் எப்படி தங்கள் போலீஸ் வேலையை செய்யப்போகிறார்கள் என்பதுதான்” என்றார்.

                  ஆனால் இந்த ‘லெஸ்பியன்’ காதல் ஜோடியின் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஜே.தேசாய், இந்த விவகாரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ்

                  பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இது காதல் ஜோடியை நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.

                  இதுபற்றி அந்த காதல் ஜோடியின் வக்கீல் ஜாகீர் ரத்தோடு கூறும்போது, “இவர்கள் கோர்ட்டுக்கு போவார்கள் என்று அவர்கள் (பிரீத்தி பெற்றோர்) எதிர்பார்க்கவில்லை. இந்த பெண்கள்

                  துணிச்சலானவர்கள், படித்தவர்கள். அரசு பணியில் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் விதத்தில் வாழ்வதற்கு தங்களுக்கு உள்ள உரிமைக்காக போராடுவதில் இருந்து அவர்கள்

                  விலகிச்செல்லவில்லை” என குறிப்பிட்டார். அவர் கூறிய கூடுதல் தகவல், இந்த காதல் ஜோடிதான் குஜராத் போலீசில் பகிரங்கமாக அறிவித்துள்ள முதல் லெஸ்பியன் ஜோடி என்பதாகும்

                      Posted in சினிமா வினோத வீடுப்பு

                      நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

                      நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

                      ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

                      நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

                      தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

                      இந்த நிலையில் அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு

                      முயன்றுள்ளார். இதையடுத்து அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக

                      அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

                      விஜயலட்சுமி

                      கண் விழித்த பின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை போலீசார் விசாரிக்க இருக்கிறார்கள். தற்கொலை முயற்சி செய்யும்

                      முன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                      நடிகை-விஜயலட்சுமி-தற்கொல
                      நடிகை-விஜயலட்சுமி-தற்கொல
                          Posted in சினிமா வினோத வீடுப்பு

                          பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி

                          பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி

                          தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், பார்த்தவுடன் கட்டிப் பிடித்துவிட்டேன் என்று பேட்டியளித்துள்ளார்.

                          பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி
                          வரலட்சுமி சரத்குமார்
                          பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை

                          கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் டேனி. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கியுள்ளார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய

                          கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

                          தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள்

                          நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய்

                          நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி

                          அந்தக் கொலையை துப்பு துலக்கினார்கள் என்பதே ‘டேனி’ படத்தின் கதை.

                          இந்தப் படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் கூறும்போது, ‘டேனி என்கிற நாய் தான் படத்தின் ஹீரோ. இதில் இன்ஸ்பெக்டராக நான் நடித்துள்ளேன். நான் எந்தக் கதாபாத்திரத்துக்கும் யாரிடமும்

                          கற்றுக் கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்.

                          டேனியுடன் வரலட்சுமி

                          நாய்க்குட்டியுடன் நடித்தது இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம். கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை

                          எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்ற கதை. தேவையில்லாமல் எந்தவொரு காட்சியுமே இருக்காது.

                          படப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப்பிடித்துவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப்

                          போனதிலிருந்து டேனி எப்போது வருகிறது என்று தான் கேட்டுக் கொண்டே இருந்தேன். தன்னுடைய காட்சிகளுக்குப் பிறகு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது

                          கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியே பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை சரியாக செய்துக் கொடுத்தது’ என்றார்..

                              Posted in சினிமா வினோத வீடுப்பு

                              பிக்பாஸ் நடிகை தற்கொலை முயற்சி

                              பிக்பாஸ் நடிகை தற்கொலை முயற்சி

                              கன்னடத்தில் வளம்வரும் இளம் நடிகையாக அறியப்படுபவர் ஜெயஸ்ரீ ராமையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ்

                              சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் ஜெயஸ்ரீ ராமையா நடித்து இருந்தார்.

                              இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் நான் மனசோர்வாக உள்ளேன். இந்த உலகத்தில் இருந்து

                              விடைபெறுகிறேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பதிவை பார்த்த ஜெயஸ்ரீ

                              ராமையாவின் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை.

                              இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அவரது

                              தோழியும், நடிகையுமான அஸ்வதி ஷெட்டி முற்றிலுமாக மறுத்தார்.

                              ஜெயஸ்ரீ ராமையா

                              இந்த நிலையில் நேற்று மாலை ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் பக்கத்தில் இன்னொரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளேன். அனைவரையும்

                              நேசிக்கிறேன் என்று கூறி இருந்தார். மேலும் அவர் முந்தைய பதிவையும் அழித்து இருந்தார். ஜெயஸ்ரீ ராமையா கடந்த சில

                              தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கி இருந்தார்.

                              இதுதொடர்பாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மனஅழுத்தத்தில்

                              இருந்த ஜெயஸ்ரீ ராமையா தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கன்னட நடிகை தற்கொலைக்கு

                              முயன்றதாக கூறப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                                  Posted in சினிமா வினோத வீடுப்பு

                                  டுவிட்டரில் இருந்து வனிதா ஒட்டம் – கஸ்தூரி வைத்த ஆப்பு

                                  டுவிட்டரில் இருந்து வனிதா ஒட்டம் – கஸ்தூரி வைத்த ஆப்பு

                                  நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதில் இருந்து பிரச்சனைகள் எழுந்து வருவதால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

                                  தொடர் பிரச்சனைகள் – வனிதா எடுத்த திடீர் முடிவு
                                  வனிதா
                                  நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்தார். தனது சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று வனிதா

                                  கண்டித்தார். இந்த தகராறு ஓய்ந்த நிலையில் இப்போது வனிதாவுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இணைய தளத்தில் கடும்

                                  மோதல் ஏற்பட்டது. கஸ்தூரி வெளியிட்ட பதிவில், “லட்சுமி ராமகிருஷ்ணனை நினைக்கும்போது இதயத்தில் ரத்தம் கசிகிறது.

                                  வனிதாவின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. இணையதள துஷ்பிரயோகம் செய்கிறார்” என்றார்.

                                  இதற்கு பதில் அளித்த வனிதா, “எனது சொந்த வாழ்க்கையில் தலையிட முயன்றால் உங்கள் வாழ்க்கை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்” என்றார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி,

                                  “எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும். எனது சொந்த வாழ்க்கையை பேசுவதில் பயனில்லை. உங்களைப்போல் சீசன் 1.2.3 போன்ற

                                  மெகா சீரியல் வாழ்க்கை எனக்கு இல்லை. நீங்கள் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர். உங்களை பிரபலபடுத்த என்னை

                                  பயன்படுத்த வேண்டாம்”என்றார். இதையடுத்து வனிதா, “எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கஸ்தூரியை பிளாக் செய்கிறேன்.

                                  காமெடி பீஸ்” என்றார். பயந்துட்டியா குமாரு என்று கஸ்தூரி பதில் கொடுத்தார். இவர்கள் மோதல் வலைத்தளத்தில் பரபரப்பானது.

                                  வனிதாவின் டுவிட்டர் பக்கம்

                                  இந்நிலையில், தற்போது வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது, டுவிட்டரில் இருந்து அவர் திடீரென

                                  விலகியுள்ளார். வனிதாவின் டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக உள்ளது. வனிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.

                                      Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

                                      கோபப்படும் கணவருடன் குடும்பம் நடத்துவது எப்படி?

                                      கோபப்படும் கணவருடன் குடும்பம் நடத்துவது எப்படி?

                                      சில வீட்டில் கணவன்மார்கள் எதற்குக் கோபப்படுவார்கள், எப்போது கோபப்படுவார்கள் என்பதே மனைவியால்

                                      புரிந்துகொள்ள முடியாது. அவர்களை புரிந்துகொள்ள இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க…

                                      எதற்கெடுத்தாலும் கோபப்படும் கணவருடன் குடும்பம் நடத்துவது எப்படி?குடும்ப சண்டை
                                      கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது.

                                      சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது.

                                      இது மிகவும் முக்கியமான ட்ரிக்ஸ். துணை கோபப்படுகிறார் எனில் நீங்களும் உடனே கோபப்படாமல் அமைதியாக பொறுமைக் காப்பது சிறந்தது. உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்

                                      வைத்தாலும் அந்த நேரத்தில் அமைதியாக விட்டுவிட்டு பின் அதைப்பற்றி பேசுங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் மன்னிப்பு

                                      கேட்டுவிடுவதில் தப்பில்லை. அது அவரின் உட்சபட்ச கோபத்தையும் சாந்தமாக்கிவிடும்.

                                      உங்களின் சில செயல்கள் கூட அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். எனவே உங்கள் ஒழுக்க நெறிகள், நடவடிக்கைகள், செயல்களை கவனித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்வதால்

                                      பிரச்னைகளை தவிர்க்கலாம். விட்டுக்கொடுத்து போவதும் சில நேரங்களில் கோபத்தை தவிர்க்க உதவும். குடும்பம் சிதறாமல் தடுக்க உதவும்.

                                      தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக

                                      மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.

                                      சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம்

                                      வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.

                                      நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார்.

                                      அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.

                                      நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன். ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா

                                      இருந்தா. இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.

                                      என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள். அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.

                                      சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.வெளியே எங்கும் செல்ல

                                      விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள். மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.

                                      சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள். கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங்கள்

                                      உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

                                      கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள்,

                                      கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.

                                      காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான்

                                      உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்க…!

                                          Posted in உலக செய்திகள் வினோத வீடுப்பு

                                          வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video

                                          வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video

                                          போதைவஸ்து கடத்தி வந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரெனெ

                                          இயந்திர கோளாறு காரணமாக வீதியில் தரை இறங்கியது

                                          அவ்வேளை அந்த விமானம் தீ பற்றி எரியும் திகில் காட்சி வெளியாகி

                                          பர பரப்பை கிளப்பியுள்ளது
                                          போதைவஸ்து கடத்தலில் பெயர் பெற்ற நாடாக மெஸ்சிக்கோ விளங்குவது குறிப்பிட தக்கது

                                              Posted in சினிமா வினோத வீடுப்பு

                                              நடனம் ஆடும் போது கீழே விழுந்த லட்சுமி மேனன்

                                              நடனம் ஆடும் போது கீழே விழுந்த லட்சுமி மேனன்

                                              நடிகை லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது தவறி விழுந்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

                                              நடனம் ஆடும் போது கீழே விழுந்த லட்சுமி மேனன்
                                              லட்சுமி மேனன்


                                              ‘கும்கி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து பாண்டியநாடு, சுந்தர

                                              பாண்டியன், கொம்பன், மிருதன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

                                              கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

                                              லட்சுமி மேனன்

                                              இந்நிலையில் லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது கீழே தவறி விழும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி

                                              வருகிறது. தரையில் தண்ணீர் இருப்பதை கவனிக்காததால் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது

                                              நடனம் ஆடும் போது
                                              நடனம் ஆடும் போது
                                                  Posted in சினிமா வினோத வீடுப்பு

                                                  வாடா பீட்டர் வெளியே – வனிதா கணவன் மனைவி கிழிப்பு video

                                                  வாடா பீட்டர் வெளியே – வனிதா கணவன் மனைவி கிழிப்பு video

                                                  சபாஷ் .இப்படிதான் தைரியமா பேசணும் எலிசபெத் அம்மா.அந்த வனிதாவ கிழிச்சி தொங்க விடணும்


                                                  இந்த அக்காவுக்கு நீதி உடனடியாக கிடைக்கனும் 10 மாதம்

                                                  தாமதமானால் வனிதா பீட்டர் பாலுக்கு 4 வது பிள்ளைய

                                                  பெத்துடுவா