ஒற்றுமையை வளர்க்க தமிழ் முஸ்லீம்களை வருக அனுரா
Posted in இலங்கை செய்திகள்

ஒற்றுமையை வளர்க்க தமிழ் முஸ்லீம்களை வருக அனுரா

ஒற்றுமையை வளர்க்க தமிழ் முஸ்லீம்களை வருக அனுரா

ஒற்றுமையை வளர்க்க தமிழ் முஸ்லீம்களை வருக அனுரா ,ஒற்றுமையை வளர்ப்பதற்கான முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கேட்டுக்கொள்கிறார்.

சமூகங்களுக்கிடையேயான புரிதலை

சமூகங்களுக்கிடையேயான புரிதலை வளர்ப்பதற்கும் அமைதியான, உள்ளடக்கிய இலங்கையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும்

முயற்சிகளை ஆதரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, அனைத்து மத மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கும் முழு

மரியாதையுடன் வாழ ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரசாங்கம் நாட்டை “எந்த வகையான இனவெறி பொறிக்குள்

அரசாங்கம் நாட்டை “எந்த வகையான இனவெறி பொறிக்குள்” இழுக்க அனுமதிக்காது என்பதை அவர் உறுதிப்படுத்தினார், மேலும் ஒற்றுமை மற்றும்

சகவாழ்வை ஊக்குவிக்கும் தேசிய முயற்சியை ஆதரிக்க அனைத்து தரப்பினரையும் அழைத்தார்.

டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தினத்திற்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்குவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது. பரஸ்பர

புரிதலை வளர்ப்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் தொலைநோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த முயற்சியை வரவேற்றனர், அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு பகிரப்பட்ட தளத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியைப் பாராட்டினர்.

அவர்கள் இந்த திட்டத்தை ஆதரிப்பதற்கான திட்டங்களையும் வழங்கினர்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய “ஒரு தேசம் ஒன்றுபட்டது” என்ற பணிக்கும், தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை

மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த அரசாங்கத் திட்டங்களுக்கும் பிரதிநிதிகள் நிபந்தனையற்ற ஆதரவை உறுதியளித்தனர்.

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் ஒருங்கிணைக்கப்படும் இலங்கை தினத்தின் நிறுவன அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

ஒற்றுமை மற்றும் அமைதிக்கான கூட்டு உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து அரசியல், மத மற்றும் கலாச்சார பின்னணிகளைச்

சேர்ந்தவர்களும் ஒன்றாக பங்கேற்க அனுமதிக்கும் வகையில் நிகழ்வை வடிவமைக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்க ஏற்பாட்டுக் குழுவிற்கு அறிவுறுத்தினார்.

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில் ,புட்டும் தேங்காய் பூவும்..
அமைச்சர் ரபூப் ஹக்கீம் சொன்ன கருத்துக்குரிய பதில்
எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு சகல இனத்தையும் ஆளும் தமிழ்த்தலைவன் முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.


உலகமே வியந்து போக்கும் நல்லூரான் மண்ணில் சகோதர மதத்தை பின்பற்றுபவர்கள் நிற்பது தமிழனின் எம்மதமும் சம்மதம் என்பதற்குரிய சான்றாக இப்படத்தை நான் பார்க்கிறேன்…


இந்து மதம் மட்டுமே எம்மதம் சம்மதம் என்று சொல்லிக் கொள்கிறது..
வாழ்க எனது நல்லூரான்..
அரோகரா..
முருகப்பெருமானுக்கு அரோகரா..


முருகன் இப்போதுதான் ஏன் உலகத்தை சுற்றி வந்தார் ஆண்டியாகவும் அம்மணமாகவும் என்று விளங்கிக் கொள்கிறேன்..


அந்தத் தத்துவத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறேன்..


காலத்தாலும் கபடத்தாலும் அழிக்க முடியாதவன் எனது முருகப்பெருமான்..
முருகனின் சன்னதியில் முஸ்லிம் ஒருவரின் சமாதி இருக்கிறது என்பதையும் நாம் சொல்லிக் கொண்டாக வேண்டும்..


(புட்டும் தேங்காய் பூவும் என்று ரவுக் கபிம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
தயவுசெய்து கோவிக்க வேண்டாம்..


புட்டு எது தேங்காய் பூ எது?
இனம் சம்பந்தமான பதிவு அல்ல..
சத்தியமாக தெரியாததால் கேட்கிறேன்..) இவ்வாறு அர்ச்சுனா இரமானதகன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு


இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு

இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் எனஇரான் மத தலைவர் அழைப்பு விடுத்துள்ளார் .

இஸ்ரேல் 25.000 மக்களை கொன்று விட்டது அதற்கு தகுந்த தண்டனையை வேண்டும் என ஈரான் வேண்டுதல் .

இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் தண்டனை வழங்குவதன் ஊடாகவே எமது நாடுகளின் பாதுகாப்பை உறுதி படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்

வீடியோ

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை
Posted in இலங்கை செய்திகள்

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி

வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது.

இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம் .

வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும்

நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும் என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்றத்தில் அண்மையில் இராமாயணம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றமை தொடர்பில் இன்று(15) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

பாராளுமன்றத்தில் அண்மையில் ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.இராவணன்.தமிழில் இராவணன்.சிங்களத்தில் இராவண என்று சொல்வார்கள்.இந்த இராவணன் என்பவர் யார்?இந்த இராவணன் தமிழனா?

சிங்களவனா என்று விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.உண்மையில் இந்த விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விடயமல்ல.படித்த மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இவ்விடயம்

விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.ஆனால் இவ்விடயம் 100 க்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்கள் இருக்கின்ற பாராளுமன்றத்தில் விவாதிப்பது என்பது ஒரு அதிசயமாகவும் ஒரு அருவருக்கத்தக்க விடயமாகவும் நாம் பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம்.2013 ஆண்டு இவ்வாறு தெளிவாக தெரிவித்துள்ளேன் என நினைக்கின்றேன்.

இது தவிர 2020 ஆண்டு பொதுத்தேர்தல் காலப்பகுதியிலும் இவ்விடயம் குறித்து சொல்லி இருக்கின்றோம்.இராவணன் என்பவர் இலங்கையை

ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராணவன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது.இவ்விடயம் கிட்டத்தட்ட 7000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறுகின்றார்கள்.

கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் கிட்டத்தட்ட 25000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறி இருந்ததை காண்கின்றோம். ஆகவே இராமாயணம் என்பது ஒரு புராணக்கதை.இந்த புராணக் கதை சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டிருந்தது.அது தமிழிலோ அல்லது சிங்களத்திலோ எழுதப்பட்ட புராணக் கதை அல்ல.புராணக் கதை

எனும் போது அதில் கற்பனைகளும் இருக்கலாம் உண்மைகளும் இருக்கலாம்.இவ்விடயம் ஒரு சிறிய சம்பவம் .ஆனால் மிகைப்படுத்தபட்ட ஒரு புராணக் கதை என்பதே எமது கருத்தாக உள்ளது.

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

ஆனால்நாங்கள் கேட்கின்ற கேள்வி என்னவெனில் அந்த புராணக் கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள் தமிழர் பெயர்களாகவோ அல்லது சிங்களவர் பெயர்களாகவோ அல்லது சமஸ்கிரத மொழி பேசுகின்றவர்களின் பெயர்களாகவோ இல்லாமல் அரபு

மொழிக்கு நெருக்கமான இருக்கின்ற காரணம் என்ன என்ற கேள்வியை நாம் பலகாலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம் .

இந்த கேள்விக்கு பதில் தராமல் பலரும் எங்களுடைய கருத்தை நையாண்டி செய்வதை தான் நாம் பார்க்கின்றோம்.நாங்கள் இன்னும் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம்.

இந்த கதைகளில் வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும் நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.

இதில் இராமன்-ரஹ்மான் இராவன் -இராவணன் சீதா -சைதா நுஃமான் -அனுமான் என்பது ஒரு மொழியில் தான் வருகின்றது.

ஏன் இவ்வாறு வருகின்றது என்பதை ஆராயும் போது இது முஸ்லீம்களின் ஒரு சிறிய வரலாறு தான் என்பதுடன் பின்னர் அது கற்பனையாக புராணக் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் எங்களுக்கு ஏற்பட்ட தெளிவான கருத்தாக

உள்ளது.இராமாயணம் 7000 வருடங்களுக்கு முந்தியது எனும் போது அது எப்படி முஸ்லீம்களின் வரலாறாக முடியும் என்பது சிலருக்கு ஆச்சரியமளிக்கலாம்.இஸ்லாமியர்களின் வரலாறு என்பது 1400 ஆண்டு கால வரலாறு தான் என்பதை சிலர் கேட்க கூடும்.இது உண்மையில் இஸ்லாம் பற்றி

தெரியாதவர்களின் கருத்தாகவே நாம் கருதுகின்றோம்.இஸ்லாத்தின் வரலாறு என்பது 1400 வருடமல்ல.இந்த உலகத்தில் முதல் மனிதன் ஆதம் என்பவரை நாங்கள் நபி என்கின்றோம்.இந்த உலகத்தில் ஆதம் எப்போது இறங்கினாரோ அல்லது கால் வைத்தாரோ அன்று முதல் இஸ்லாமும் முஸ்லீம்களும் இந்த உலகில் வாழ்கின்றனர் என்பதை ஹதீஸ் குர்ஆன் என்பன மிக தெளிவான கருத்தாக கூறுகின்றன.

நாங்கள் நபி இப்றாகீம் அவர்களை முஸ்லீம் என்கின்றோம்.நபி இப்றாகீம் வரலாறு என்பது இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

.எனவே அவ்வாறாயின் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது தான் இஸ்லாமிய வரலாறு என்பதை நாம் காண்கின்றோம்.அதே போன்று நூஹ் நபி அவர்களின் வரலாற்றை சாதாரணமாக கணிப்பின் ஊடாக ஆராய்ந்தால் கிட்டத்தட்ட 1 இலட்சம் ஆண்டு வாழ்க்கை வரலாறாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே இவ்வாறான விடயங்களை வைத்து பார்க்கின்ற போது இஸ்லாம் என்பது முதல் மனிதன் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை இஸ்லாமிய வரலாறாக இருந்து கொண்டே இருக்கின்றது.முஹம்மது நபி அவர்கள் இஸ்லாத்தினை கொண்டு வரவில்லை.

இஸ்லாத்தை புதுப்பிக்க வந்தவர்கள் தான் எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.அவர் இறுதி நபியாக தான் இவ்வுலகத்திற்கு வருகை தந்தார்கள்

.இஸ்லாத்தை புதுப்பிக்க வருகை தந்தவர்களே தவிர இஸ்லாத்தை அவர்கள் கொண்டு வரவில்லை.இப்றாகீம் நபியினுடைய வழியில் தான் இருக்கின்றென் என்பதை எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே கூறி இருக்கின்றார்கள் என்பதை நாம் காண்கின்றோம்.

இவ்வாறு எல்லாம் பார்க்கின்ற போது இந்த இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது எங்கயோ ஒரு இடத்தில் நாம் சொல்கின்ற காரணம் எவராலும் மறுக்க முடியாத விடயமாகவே உள்ளது.

இந்த காரணத்தை நாம் கூறுகின்ற போது அதாவது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம்.என்ற கருத்தை கூட நாம் கூறி இருக்கின்றோம்

.உதாரணமாக இராவணன் எனும் பெயருக்கு நாம் அனைவரும் அறிந்த எகிப்து நாட்டு மன்னன் ராவுன் அல்லது பிர்அவ்ன் எனும் பெயர் ஏன் இங்கு வந்தது என்ற வினா எழுகின்றது.

அதாவது இலங்கையில் இராமாயண புராணக்கதை இடம்பெற்றிருந்தால் அங்கு இருந்த மன்னனுக்கு ஏன் சிங்கள பெயராகவோ அல்லது தமிழ் பெயராகவோ இல்லாமல் எகிப்திலே இருந்த மன்னனுடைய பெயர் பிரவுன் என்பது போன்று ஏன் இராவனை அழைக்க வேண்டும்.என்ற கேள்வியை நாம் கேட்க விரும்புகின்றோம்.

இந்த கேள்விக்கு எவரும் பதில் தர முன்வருவதில்லை.உண்மையில் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர சிவஞானம் சிறிதரன் ஆகியோர் நாங்கள் பாராளுமன்றத்தில் இல்லாவிடினும் எமக்கு பதில் அளிக்க முன்வாருங்கள்.ஏன் இந்த புராணக்கதையில் வருகின்ற

கதாபாத்திரங்களின் பெயர்கள் முஸ்லீம் பெயர்கள் போன்று இருக்கின்றன. இதற்கான காரணம் என்ன?நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.அவ்வாறு இவ்விடயத்தை தெளிவு படுத்த முடியவில்லை எனின் நாங்கள் சொல்கின்ற முஸ்லீம்களின் சம்பவத்தை

கற்பனையாக வடிவமைத்து இராமாயணமாக உருவாக்கி உள்ளார்கள் என்பதே எமது கருத்தாக உள்ளது என்பதை நாங்கள் தெளிவு படுத்த விரும்புகின்றோம்.இதை விட பாராளுமன்றத்தில் விவாதங்களில் கலந்து கொள்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கையின் வரலாறு சிங்கள தமிழ் மக்களது வரலாறு மிக சரியாக தெரியாது என்பது எமது கருத்தாகும்.

மகாவம்சத்தில் சிங்களவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இளவரசன் விஜயன் மூலம் உருவானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.2700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர்களது வரலாறு சான்று பகிர்கின்றது.அவ்வாறாயின் இராவணன் ஆட்சி என்பது 2700 க்கு

உட்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.அவ்வாறாயின் இராவணனை எப்படி சிங்களவர் என்று கூறுவீர்கள்.அதே போன்று தமிழ் மொழிக்குரிய வரலாறு என்று பார்க்கின்ற போது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பின் படி 5000 ஆண்டுகளாகும்.

அதே போன்று எழுத்துருவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் என்றும் தமிழர் வரலாற்றை கூறுகின்றார்கள்.ஆனால் அந்த காலத்தில் கூட தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக எந்தவொரு வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவுமில்லை.மாறாக இளவரசன் விஜயன்

தனது 700 கூட்டாளிகளுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் போது அந்த 700 பேருக்கும் மனைவிகள் இல்லாத சூழ்நிலையில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் இளவரசிகளும் அவர்களது தோழிகளும் இலங்கைக்கு வந்து மணம் முடித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.

Posted in Uncategorized

இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு


ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது ,மேலும் இணையம்,தொலைத் தொடர்புகள் துண்டிக்க பட்டுள்ளன

இரு மதங்களுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட மதவாத போர் திட்டமிட்ட அரசியல்

நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்

இந்த மத மோதலினால் ஜோடபூர் பகுதி இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது