Posted in இலங்கை செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு

பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு

மட்டக்களப்பு ; மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகிலுள்ள பதுக்கி வைக்க பட்ட எண்ணெய்கள் மீட்க பட்டுள்ளன .

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த கட்டிடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டனர் .

இந்த எண்ணெய் திருட்டு பதுக்களில் சம்பந்த பட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு

குறித்த எண்ணெய் பதுக்கல் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவிற்கு அமைய நடத்த பட்ட விசேட சோதனையில் இந்த பெரும் எண்ணெய் பதுக்கல் முறியடிக்க பட்டுள்ளது .

கடலில் எரியும் எண்ணெய் கப்பல்

இந்த சோதனையின் போது பெரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டதுடன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார் ,

    Posted in இலங்கை செய்திகள்

    எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து

    எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து

    மட்டக்களப்பு ; மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வாங்கிட கடத்திருந்த மக்கள் மீது பேரூந்து ஒன்று மோதியுள்ளது.


    பேரூந்து சாரதியின் காட்டு பாட்டை இழந்த பேரூந்து மக்கள் மீது மோதி விப்பதுக்குள்ளானது .

    இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,

    இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

    பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

    பொதுநலவாய நாடுகள் சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணங்களில் முதன்மையாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து கவனம் செலுத்த

    வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

    பொதுநலவாய நாடுகளின் 24வது உச்சி மாநாடு ஆபிரிக்காவின் றுவண்டாவில் யூன் 24ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. பிரித்தானிய இளவரசர் தலைமையில்

    தொடங்கியுள்ள இந்த உச்சி மாநாட்டில் 54 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ள நிலையில், சிறிலங்காவின் அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டுள்ளார்.

    பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்ற நிலையில், அதற்கு

    முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நா.

    தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

    6 சிவிலியன்களுக்கு 1 இராணுவம் என தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு, தமிழர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் நா. தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

    2022 ஆண்டுக்கான நிதியொதிக்கீட்டில் 12.3 வீதத்தினை தனது இராணுவச் செலவினங்களுக்கு ஒதுக்கியுள்ள சிறிலங்கா, மக்கள் எரிபொருளுக்காகவும், உணவுக்காகவும் வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்கும் நிலையிலும்,

    இராணுவத்துக்கான செலவினங்கள் எந்தவகையிலும் குறைக்கப்படாது என்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாய இராஜபக்சவின் சமீபத்திய கூற்றினையும் நா.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

    பொதுநலவாய நாடுகளில் அதிக இராணுவச் செலவினங்கள் கொண்டுள்ள
    நாடாக சிறிலங்கா இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடதக்கது.

      Posted in உலக செய்திகள்

      துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்

      துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்

      ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய நாட்டின் Zelikan Base இராணுவ முகாம் மீது ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .

      இந்த தாக்குதலில் துருக்கி இராணுவ முகமாக பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

      குறித்த முகாம் பத்து நாட்களுக்கு இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .

      குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

      அதற்கு பதிலடி தாக்குதலாக குருதீஸ் போராளிகள் துருக்கிய முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை

        யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை

        யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் , தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய பெண்மணி கற்பழிக்க பட்டு பின்னர் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார் .

        மருத்துவர்கள் மேற்கொண்ட மரண விசாரணை சோதனையில் மூதாட்டி கோரமாக கற்பழித்து பின்னர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.

        குறித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .


        கற்பழிப்பு குற்றம் புரிந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

          Posted in இலங்கை செய்திகள்

          ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

          ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

          கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

          ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

          குறித்த வர்த்தக நிலையத்தில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள – பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

          இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

          ” நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது.” என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

          இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

            Posted in உலக செய்திகள்

            கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு

            கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு

            கனடா நாட்டில் ஆதிகாலத்து அதிசய யானை குட்டி ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது .
            இந்த யானை குட்டி தற்கால யானைகளை விட ஆதிகாலத்தில் காடுகளில் அதிகமாக வாழ்ந்து வந்தவை இவை தற்பொழுது அழிந்து போயுள்ளன.

            அவ்வாறான யானை குட்டி ஒன்றின் சடலாமே தற்போது மீட்க பட்டுள்ளது

            மீட்க பட்ட யானை குட்டி தொடர்ந்து ஆய்வுகளுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது.

              Posted in இலங்கை செய்திகள்

              சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு

              சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு

              இலங்கையில் சாப்பாட்டு விலைகள் அதிகரிக்க படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .


              தொடர்ந்து இலங்கையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்து

              செல்வதால் மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

              மக்கள் வருமானம் இன்றி வாடும் நிலையில் உணவு பொருட்கள் விலை

              மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை


              அதிகரிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                செல்வந்தர் சுட்டு கொலை

                செல்வந்தர் சுட்டு கொலை

                இலங்கை – எம்பிலிப்பிட்டிய மீத்தேனிய பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தனது கடையினை திறக்க சென்ற பொழுது மறைந்திருந்த மர்ம ஆயுத தாரி நபரால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .

                ஐம்பத்தி இரண்டு வயதான நபரே இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

                இலங்கையில் சமீப காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதும் இவ்வாறான கொலைகள் தொடர்கிறது .

                இந்த துப்பாக்கி சுட்டு கொலைகளை நிறுத்த அரசு இவ்வாறு எவ்வித நகர்வுகள்
                மேகொள்ளாது இருப்பது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

                  எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு


                  இலங்கையில் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்க பட்டுள்ளது.


                  இதன் அடிப்படையில் பெட்ரோல் 50 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 470 ரூபாவாகவும்


                  டீசல் ஓரி லீட்டர் 60 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 460 ஆகவும்


                  ஓக்கேடான ஒரு லீற்றர் 100 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 550 ரூபாவான் விலை அதிகரிக்க பட்டுள்ளது.

                  கோட்டாபய ராஜபக்சவின் இந்த விலை அதிகரிப்பு செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு

                    இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு

                    இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து,

                    பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது.

                    மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு துருப்புக்கள் அந்த பீரங்கிகளை புதுப்பித்ததன் மூலம் இராணுவத்திற்கு பாரியளவு நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

                    இந்நிகழ்வில் இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவின் கட்டளைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க,
                    உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் படையினரும் கலந்துகொண்டனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

                      அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

                      இலங்கை ;அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

                      மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு
                      அவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

                      இவ்வாறு இலங்கை வந்தடைந்த அமெரிக்கா அக்குழுவினர் பதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ஜனாதிபதி கோட்டபாயவுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார் .

                      இதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு அவற்றுக்கு உதவும் திட்டங்களும் முன் வைக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

                        Posted in உலக செய்திகள்

                        உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி

                        உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி

                        உக்கிரேன் – ரசியா இராணுவம் உக்கிரேன் மீது தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .ரசியாவின் தாக்குதலில் உக்கிரேன் உள் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. இவ்வேளை உக்கிரேனுக்கு 6 பில்லியன் கடனுதவி வழங்க பட்டுள்ளது.

                        அவசர நிதி உதவியாக ஆறு பில்லியன் யூரோக்கள் கடனாக வழங்க பட்டுள்ளது .

                        இந்த கடனுதவி மிக குறுகிய காலத்தின் தேவைக்கு ஏற்ப குறைந்த வட்டியுடன் வழங்க பட்டுள்ளது என உதவி புரிந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

                        உக்கிரேன் அருகில் உள்ள ஜெர்மன் நாடானது ஒரு பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது .

                        இலங்கை பாகிஸ்தானுக்கு சீனா எப்படி பெரும் தொகையில் பணத்தை கடனுதவி வழங்கி அந்த நாடுகளை வறுமை நாட்டு பட்டியல் இணைத்ததோ, அதே போன்ற செயல் பாடு உக்கிரேனில் இடம்பெறுகிறது.

                        பணத்தை அவசரமாக அள்ளி வழங்கும் நாடுகளுக்கு இந்த கடனுதவி பணம் மீள வளங்கபடுமா என்பதை சிந்திக்க வேண்டும் .

                        இவ்வாறு மாற்றி யோயுங்கள் -உக்கிரேன் முழுவதுமாக ரசியாவின் கட்டு பாட்டில் சென்றால் ஆயுதங்களை ,பணத்திற்காக கடனுதவி வழங்கிய நாடுகளுக்கு அந்த பணம் யார் கொடுப்பது..?

                        உக்கிரேன் நாடானது ராசியாவின் ஆளுகைக்குள் சென்று விடும் .அப்படி சென்றால் இந்த ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஏன் உக்கிரேனின் இத்தனை மில்லியன் பணத்தை கடனுதவியாக கொடுக்கின்றன.

                        புரிந்துள்ளதா மக்களே தமது நாட்டை காப்பாற்ற அவசர கடனுதவி என்ற போர்வையில் வெள்ளம் வரும் முன் அணையை கட்டுவது போன்ற செயல் பாட்டு சமாச்சாரம் இங்கே கச்சிதமாக நடக்கிறது.

                        உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி

                        உக்கிரேன் போரில் தமது ஆயுதங்கள் மூலமே உக்கிரேன் நாடு உயிர் வாழ்கிறது என்கின்ற நிலையில்,

                        இந்த நாடுகள் இத்தனை பில்லியன் பணத்தை கடனடிப்படையில் வழங்குகின்றன என்றால் அதற்க்கு காரணம் இது தான் மக்களே .

                        ரசியா இதுவரை சோவியத் தயாரிப்பு ஏவுகணைகளையே அதிகமாக பயன் படுத்தி வருகிறது .

                        அப்படி நோக்கின் தனது பழைய சேமிப்புக்களை இப்பொழுது உக்கிரேன் களத்தில் வீசி முடிக்கிறதா என்ற கேள்வி அல்லாவா எழுகிறது.

                        உக்கிரேனில் ரசியாவை ஆழம் பார்க்க முனைந்த அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ நாடுகளுக்கு ரசியா விளையாடடு காட்டிய வண்ணம் நாளை கடத்துகிறது.

                        இந்த நாள் கடத்தல் எது வரை என்பது தான் கேள்வியாகிறது .அப்படி என்றால் ரசியா ஜனாதிபதி புட்டீன் திடீர் பாய்ச்சல் ஒன்றை வேறு திசையில் வேறுமாதிரி நடத்த திட்டம் போட்டு விட்டார் என்பதை இது காண்பிக்கிறது.

                        அப்படி என்றால் விரைவில் வேட்டை நடக்க போகிறது .அந்த வேட்டையில் முண்டு கொடுத்து நகரும் நாடுகளின் முதுகில் ஏறி ஆடும் உக்கிரேன் வீழ்ந்து

                        சிதறும் நிலையே உருவாக போகிறது என்பது களத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் வாயிலாக ஊகிக்க முடிகிறது.

                        உள்ளே நடக்கிறது பெரும் விளையாட்டு .தாம் தப்பிக்க பலியாகும் உக்கிரேன் .நமது ஊகம் சரி தானா என்பதை காத்திருந்து பார்க்கலாம் .

                        • வன்னி மைந்தன் –
                          Posted in உலக செய்திகள்

                          ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் முக்கிய நகர்

                          ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் முக்கிய நகர்

                          உக்கிரேன் தலை நகரின் முதல் காவல் அரணாக விளங்கி வரும் Lysychansk நகரம் தற்போது ரசியா இராணுவத்தின் கட்டு பாட்டுக்குள் வந்துள்ளது .

                          டொன்பஸ் நகரம் முற்றாக வீழ்ந்த நிலையில் தற்போது இந்த Lysychansk நகரம் ரசியா இராணுவத்திடம் வீழ்ந்துள்ளது.

                          தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                          உக்கிரேனின் முதல் தர நகரங்களில் ஒன்றான Lysychansk வீழ்ந்துள்ள நிலையில் விரைவில் உக்கிரேன் தலைநகர் கீவ் நகரும் வீழ்ச்சியுறும் என எதிர் பார்க்க படுகிறது.

                          விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் இராணுவம் தாம் வென்று
                          நிற்பதாக மேற்குலக நாடுகள் முதுகில் ஏறி நின்று கூவி வருகிறது குறிப்பிட தக்கது .

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

                            லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

                            லூசியம் -லண்டன் மாநகரத்தில் உள்ள லூசியம் பகுதி கவுன்சிலுக்கு நபர் ஒருவர் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திட கிடைக்க பெற்ற கடிதத்தை கண்டு அதிர்ந்து போனார்.

                            மேலும் இதே கவுன்சிலினால் இம் மாதம் இந்த தாண்ட பணத்தை செலுத்த தவறின் அவர் £455 and this is expected to increase to £585 by next month.எதிர் வரும் மதம் £585 செலுத்த வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது.

                            அறுபது பவுண்டுகள் தண்டம் செலுத்திட தவறிய நபருக்கு இன்று வட்டிக்கு வட்டியாக சேர்த்து சுமார் 585 அதிகரிக்க பட்டுள்ளது .

                            லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

                            தனது காருக்கு வீட்டு முன்பாக கார் பார்க்கிங் தரித்திடும் அனுமதியை பெற்று இருந்ததாகவும் ,அதற்கு பணம் செலுத்திய பொழுது அது அவ்வேளை இணையம் மூலம் செலுத்திட தவறிய நிலையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

                            கவுன்சில்கள் இப்பொழுது அதிகம் இவ்வாறு சம்பாதிக்கின்றன என்பது இதன் மூலம் மீளவும் தெளிவாகியுள்ளது .

                              Posted in உலக செய்திகள்

                              ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு

                              ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு

                              ஆப்கானிஸ்தானில் Farah பகுதியில் சோவியத் ரசியா வீசிய 500 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .

                              இந்த குண்டு ரஷ்ய இராணுவத்தால் 1980ம் ஆண்டுகளில் வீச பட்டுள்ளது .

                              அதிக எடையுள்ள குண்டு கண்டு பிடிக்க பட்டு தமது குண்டு செயல் இழக்க வைக்கும் படையினரால் அந்த குண்டு செயல் இழக்க வைக்க பட்டுள்ளது என தலிபான் போராளிகள் தளபதி தெரிவித்துள்ளார்.

                              இந்த குண்டு வெடித்திருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் மக்கள் தெய்வாதீனமாக தப்பித்து கொண்டனர் .

                              ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு
                              ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு

                              ஆப்கானிஸ்தானில் மிதி வெடி மற்றும் கண்ணி வெடிகளில் சிக்கி எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் மக்கள் பாதிக்க பட்டு தமது விரல்கள் மற்றும் கால்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

                              சோவியத் ரசியா இரண்டாம் உலக போரில் வீசிய குண்டு கண்டு பிடிக்க பட்டது வியப்பில் உறைய வைத்துள்ளது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

                                கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

                                கொமுகொமுவ : இலங்கை கொமுகொமுவ பகுதியில் கிணறு ஒன்றுக்குள் இருந் சிறுவன் சடலம் மீட்க பட்டுள்ளது .

                                வீட்டில் காணாமல் போன சிறுவனை தேடிய பொழுது கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்க பட்டுள்ளான் .

                                பதினொரு வயதாகும் இந்த சிறுவன் எவ்வாறு இறந்தான் என்பது தொடர்பில் தெரியவில்லை .

                                கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

                                சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீதவான்முன்னிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலம் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளன .

                                இந்த சிறுவன் தவறி வீழ்ந்தானா அல்லது கொலை செய்யப்பட்டானா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர்.

                                சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் தொடராக மீட்க பட்டு வருகின்றமை சுட்டி காட்ட தக்கது.

                                  Posted in உலக செய்திகள்

                                  ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்

                                  ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்

                                  உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணைளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது.

                                  உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து வரும் இராணுவ படையெடுப்பை தடுத்து நிறுத்தும் தற்காப்பு யுத்தத்தில் உக்கிரேன் இராணுவம் ஈடுபட்ட வண்ணம் உள்ளது

                                  இவ்வாறு உக்கிரேன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலை தமது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வானில் இடை மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது .

                                  ரஷ்யா இராணுவத்தின் பத்து ஏவுகணைகளை தமது வான்மறிப்பு ஏவுகணைகள் வானில் மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம்.

                                  தொடர்ந்து கருங்கடல் வழியாகவும் கப்பல்களில் இருந்து தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது.

                                  உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகள் மூலம் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.

                                    Posted in உலக செய்திகள்

                                    வேலியுடைத்து பாய்ந்த 2000 அகதிகள் 20 பேர் சுட்டு கொலை

                                    வேலியுடைத்து பாய்ந்த 2000 அகதிகள் 20 பேர் சுட்டு கொலை

                                    மொரோக்க நாட்டு வழியாக ஸ்பெயின் நாட்டுக்குள் ஆப்ரிக்கா அகதிகள் வேலியுடைத்து நுழைந்துள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                                    எல்லையில் இராணுவம் பொலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொழுதும் அது தாண்டி அவர்கள் அந்த எல்லை வேலியுடைத்து பாய்ந்து சென்றுள்ளனர்.

                                    இவ்விதம் இரண்டாயிரம் அகதிகள் ஒரே தடவையில் அதன் எல்லையை வேலியுடைத்து பாய்ந்துள்ளனர் .

                                    இவர்களை கட்டு படுத்த மேற்கொள்ள பட்ட தாக்குதலில் இதுவரை இருபது அகதிகள் பலியாகியுள்ளனர் .

                                    போலும் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

                                    இந்த சம்பவம் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடையில் இராயத்தந்திர முறுகளை ஏற்படுத்தியுள்ளது.


                                    ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்குடன் இந்த கைதிகள் வருகை காணப்படுகிறது என தெரிவிக்க படுகிறது .

                                      Posted in உலக செய்திகள்

                                      நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்

                                      நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்

                                      நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மக்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

                                      காயமடைந்தவர்கள் அவசர காவுவண்டிகள் மூலம் மருத்துவ மனைக்குஎடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது.

                                      இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .துப்பாக்கி கி சூடு நடத்தியதில் ஒருவர் மட்டுமே சம்பந்த பட்டுள்ளதாக

                                      தெரிவிக்கும் நோர்வே பொலிஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

                                      பாதகமான காலநிலைக்கு மத்தியில் இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.