Posted in உலக செய்திகள்

விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்

விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்

அவுஸ்ரேலியா தலைநகர் மேற்கு சிட்னி பகுதியில் Sydney’s west .M4 at Mays Hill, near Parramatta வாலிபர் ஒருவர் சென்ற கார் மீது 68 வயது முதியவர் சென்ற கார் மோதியுள்ளது .

இந்த விபத்தை ஏற்படுத்திய முதியவர் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ,காரை விட்டு இரங்கி அந்த பெரியவர் முகத்தில் தாறுமாறாக அடித்துள்ளார்

அவர் சுயநினைவு இழந்து அவ்விடத்தில்,வீழ்ந்தார் ,தாக்குதலை நடத்திய

வாலிபர் தப்பி ஓடிவிட்டார் ,எனினும் அவரை தூரத்தி சென்ற போலீசார்

அவர் பதுங்கி இருந்த இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர் .
ஆபத்தான

நிலையில் முதியவர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,இந்த தாக்குத்தல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விபத்தில் காரை உடைத்தவர்
விபத்தில் காரை உடைத்தவர்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்

அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்

அமெரிக்கா Texas பகுதியில் காவல்துறையினர் மீது மர்ம நபர் ஒருவர் திடீர்

துப்பாக்கி சூட்டை நடத்தினார் ,இதில் காவல்துறை சிப்பாய் ஒருவர் சம்பவ

இடத்தில பலியானார் ,மேலும் இருவர் படுகாயமாடைந்துள்ளனர்

இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை

செய்துள்ளார் ,இந்த சம்பவம் தீவிர வாத தாக்குதலா என்பது தொடர்பில்

தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மேலதிக காவல் துறையினர் குவிக்க பட்டு அந்த பகுதியில் தேடுதல் நடத்த பட்டு வருகின்றன

Posted in இலங்கை செய்திகள்

மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்

மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்

இலங்கை மஸ்கொலியா சேமநல காட்டு பகுதியில் புலி ஒன்று மரத்தின்

மீது ஏறிய நிலையில் கண்டு பிடிக்க பட்டது .மேற்படி தகவல் வனவிலங்கு

அதிகாரிகளுக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து அந்த புலி மயக்க மருந்து அடித்து சுட்டு பிடிக்க பட்டது

இவ்வாறு பிடிக்க பட்ட புலி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளது

மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த
மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த
Posted in இலங்கை செய்திகள்

நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா,

களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம்

திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று

பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில்

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை

கொத்தடுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை மற்றும் கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும்

கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு
நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு
Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video

பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video

பிரான்ஸ் Chad விமான தளத்தில் தரை இறங்கிய சி-130 என்ற இராணுவ சரக்கு விமானம் மீதுரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


எனினும் சரக்கு விமானம் அந்த தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டது .

இந்த தாக்குதல் சம்பவம் அதே விமான தளத்தில் , நிறுத்தி வைக்க பட்டிருந்த su -25 ரக போர் விமானம் ஒன்றின் மூலம் நடத்த பட்டுள்ளது .

தவறுதலாக இந்த தாக்குதலை அந்த விமானம் மேற் கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விமானம் ரொக்கட் தாக்குதலில் சிதறி இருக்கும் எனின் அங்கிருந்த டசின் கணக்கான விமானங்களும் அழிந்திருக்கும்

,எனினும் தெய்வாதீனமாக இந்த பெரும் அவல நிகழ்வு தடுக்க பட்டுள்ளது


மேற்படி சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன

விமானங்களின் பாதுகாப்பு கருதி இயல்பு நடை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த பட்டுள்ளதாக குறித்த விமான நிலையம் தெரிவித்துள்ளது

அந்த சூட்டு காட்சிகளை கீழ் உள்ள காணொளியில் பாருங்கள்

பிரான்ஸ் விமானம் மீது
பிரான்ஸ் விமானம் மீது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 254 பேர் கொரனோவால் பாதிப்பு 7 பேர் பலி

இலங்கையில் 254 பேர் கொரனோவால் பாதிப்பு 7 பேர் பலி

இலங்கையில் இடம்பெற்று வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை 254 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஏழுபேர்

பலியாகியுள்ளனர் .

தனிமை படுத்தலுக்கு உள்ளான பல்லாயிரம் பேர் தற்பொழுது அந்த நோயின்

தொற்று இல்லை என கண்டு பிடிக்க பட்ட பின்னர் வீடுகளுக்கு

அனுப்பி வைக்க படுகின்றனர் என இராணுவம் தெரிவித்துள்ளது

இலங்கையில் 254 பேர்
இலங்கையில் 254 பேர்
Posted in இலங்கை செய்திகள்

மாதுறு ஓயா நீர் தேக்கத்தில் வீழ்ந்த யானை மீட்பு

மாதுறு ஓயா நீர் தேக்கத்தில் வீழ்ந்த யானை மீட்பு

இலங்கை மாதூறு ஓயா நீர் தேக்கத்தில் வீழ்ந்த யானை ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது

இதன் பொழுது அங்கு திரண்ட மக்கள் அதனை காப்பாற்றி கரை சேர்த்தனர்


இந்த மீட்பு பணிகள் சுமார் ஆறு மணித்தியாலங்கள் இடம்பெற்றன

மாதுறு ஓயா நீர் தேக்கத்தில் வீழ்ந்த
மாதுறு ஓயா நீர் தேக்கத்தில் வீழ்ந்த
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்

மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்

இலங்கை மகவெலகம பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில்

பத்து வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார்

வானிலை மையம் சீரற்ற காலநிலை இடம்பெறும் என தெரிவிக்க பட்டு

முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த மின்னல்

தாக்கி சிறுமி இவ்விதம் பலியாகியுள்ளார்

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஆற துயரை ஏற்படுத்தியுள்ளது

மின்னல் தாக்கி பத்து
மின்னல் தாக்கி பத்து
Posted in உலக செய்திகள்

கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்

கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்

அமெரிக்காவில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வேதனையால்

மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருந்தார் ,அப்பொழுது அவர்கள்

கார் விபத்தில் சிக்கியது ,அவ்வேளை அவர் சிசுவை அதே காருக்குள் பெற்று விட்டார்

பிறந்த சிசுவை காணவில்லை என தேடிய பொழுது சீட்டின் அடியில் இருந்து சிசு மீட்க பட்டது .

இப்பொழுது தாயும் ,சிசுவும் நலமாக உள்ளனர் ,எனினும் கணவன் இந்த சம்பவம் நிகழ்ந்த வேளை ரெம்பவே பயந்து விட்டாராம் ,

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உதவிகளை புரிந்து அவர்களை மருத்துவ மனையில் அனுமதித்தனர்

விதி இப்படியும் விளையாடும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சிறந்த முன் உதாரணம்,

கார் விபத்தில் வீதியில்
கார் விபத்தில் வீதியில்
Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்ஸ் விமான தாங்கி கப்பல் ஒன்றில் மட்டும் 1,081 இராணுவத்தினருக்கு கொரனோ

பிரான்ஸ் விமான தாங்கி கப்பல் ஒன்றில் மட்டும் 1,081 இராணுவத்தினருக்கு கொரனோ

பிராஸ்ன நாட்டின் முதுகெலும்பாக பார்க்க படும் French Carrier Charles De Gaulle என்ற விமான தங்கி கப்பல் ஒன்றில் மட்டும் சுமார்

1,081 இராணுவத்தினர் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளனர் என பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

நோய் தொற்று சோதனைக்கு உள்ளாக்க பட்டதில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இதில் இருபது பேர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது

பிரான்ஸ் முப்படையில் சுமார் 15,000 க்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .


காவல்துறையில் பத்தாயிரத்து மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டு தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருவது குறிப்பிட தக்கது

இதுவரைப் பிரான்சில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் என்பது சுட்டி காட்ட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்

கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்

அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அண்மைக் காலத்தில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துக்

கொண்டு, பலமாக காணப்பட்ட நிலையிலேயே அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டது.

எனினும், இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியிலேயே இந்த பேரிடருக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு

வரை இடம்பெற்ற மோசமான ஆட்சி காரணமாக எமது கடன் சுமை 71% இதனால் அதிகரித்தது. ரூபாயின் பெறுமதி 30% இதனால் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வளர்ச்சி வேகம் 2.7% வரை

குறைவடைந்தது. 2019 நவம்பரில் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கமொன்றை அமைத்த போதிலும்,

எமக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினால், கடந்த அரசாங்கத்தின் மருந்து மற்றும் உர வழங்குனர்களுக்கு

நிலுவைப் பணத்தைச் செலுத்துவதற்கேனும் இடைக்கால கணக்கறிக்கையொன்ற நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 150(3) ஆம் உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிதி தொடர்பான ஏற்பாடுகள் மாத்திரமே ஆறுதலாக உள்ளது. இந்த அனைத்து பாதகமான

நிலைமைகளின் மத்தியிலேயே நாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. கடந்த மார்ச் 11 ஆந் திகதி முதலாவது கொரோனா நோயாளி அடையாளங்

காணப்பட்டவுடன், நாம் நோயினை முன்னரே இனங்காணுதல், நோயாளிகளை வேறுபடுத்தி சிகிச்சையளித்தல், அபாயத்தை எதிர்நோக்கிய நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல்,

நோயாளிகளுடன் பழகிய நபர்களைக் கண்டறிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தினோம். எமது வாழ்க்கையில் இவ்வாறானதொரு

நடவடிக்கையை ஒருபோதும் கண்டதில்லை. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக பல வாரங்கள் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியேற்பட்டது.

நாடு முழுவதும் தமது வீடுகளிலிருந்து வெளியேற முடியாத மக்களுக்கு உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றைத்

தயாரிக்க வேண்டியேற்பட்டது. குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவி வழங்க வேண்டியேற்பட்டது. நாட்டின்

உற்பத்திச் செயற்பாட்டை நடாத்திச் செல்வதற்காக விவசாயிகள், மரக்கறி விவசாயிகள் மற்றும் மீனவர்களின உற்பத்திகளைக்

கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டது. இந்த அனைத்தையும் ஒரே தடவையில் மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்குபடுத்திக்

கொள்ள முடிந்தமை உண்மையில் முகாமைத்துவத்தின் பிரதிபலனாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை இன்று முழு உலகமும் ஏற்றுக்கொள்கிறது. ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக

தனித்துவமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். எமது அரசாங்கத்தின் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாட்தொகுதியினர் முழு உலகினதும் கவனத்தை

ஈர்த்துள்ளனர். நோயாளிகள் பழகிய நபர்களைக் கண்டறிவதில் எமது உளவுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ள திறமை, அர்ப்பணிப்பு

காரணமாகவும், தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொண்டு செல்வதில் முப்படையினர் வெளிப்படுத்தியுள்ள வினைத்திறன் காரணமாகவும் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிசார் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலான அரச ஊழியர்களும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தின்

வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளனர். இன்று கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பற்றதாக மாறியுள்ள உலகில் எமது நாடு மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. அழிக்கப்பட்ட

பொருளாதாரம், இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற, நாட்டின் மீது அன்பு

இல்லாத சந்தர்ப்பவாத எதிர்க்கட்சியொன்று இந்த நாட்டில் உள்ள நிலைமையிலேயே நாம் இவ்வாறான கட்டத்தை அடைந்துக் கொண்டோம்.

தனிமைப்படுத்தலுக்குச் செல்வதை நிராகரித்தவர்களை ஊக்குவித்தமை மூலம் எதிர்க்கட்சித்தலைவர் ஆரம்பத்திலிருந்தே கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தினைச் சீர்குலைக்க

முயற்சித்தார். அதன் பின்பு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரச நிதியை செலவிடுவதற்கு ஜனாதிபதிக்கு

அதிகாரம் இல்லை எனக் கூறி அவர்கள் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து அரச சேவைகளையும் சீர்குலைக்க முயற்சித்தனர்.

புதிய பாராளுமன்றம் ஜூன் இரண்டாம் திகதிக்கு முன்னர் கூட வேண்டும் எனவும், பாராளுமன்றத் தேர்தலை அதற்கு முன்னர்

நடாத்த முடியாது எனவும், அதனால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் இன்று அவர்கள் கூறி வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தமையை நாம் அறிவோம். வழக்குகள் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கேனும் தேர்தலை

நடாத்துவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தமையினால் மாத்திரமே நீதிமன்றம் சென்று தேர்தலை குறிப்பான திகதியின்றி ஒத்திவைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்

முடிந்தது. 2017 ஆம் ஆண்டு மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கு சில நாட்களே இருந்த சமயத்தில், மாகாண

சபைத் தேர்தல் நடாத்தப்படுவதைத் தடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தது.

அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர்

தெரிவித்தபோது, அவர்கள் பாராளுமன்றத்தின் நடைக்கூடத்தில் மேற்கொண்ட பேரம் மூலம் வாக்குகளுக்காக கொள்கைகளைக்

காட்டிக்கொடுத்து தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர்.

அந்த இழிவான கொடுக்கல் வாங்கலின் பிரதிபலனாக 2017 ஆகஸ்ட் 25 ஆந் திகதி நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்

சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 40% ஆக காணப்பட்டதுடன், அதன் ஒரு மாதத்தின் பின்பு நிறைவேற்றப்பட்ட

மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 50% ஆக காணப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மனுச் சமர்ப்பித்து,

பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பாராளுமன்றத் தேர்தலை ரத்துச் செய்த அரசியல் கட்சிகள் உள்ள உலகின் ஒரே ஜனநாயக நாடு இலங்கையாகும். தற்போதைய பாராளுமன்றத் தேர்தலை

ஒத்திவைப்பதற்கு இன்று மேற்கொள்ளும் முயற்சி அந்த இழிவான வரலாற்றின் ஒரு நீட்சியாகும். நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலாவது

பொது சமூக வாழ்வு மீண்டும் ஆரம்பமாக வேண்டியுள்ளது. எமது 25 நிர்வாக மாவட்டங்களில், பதினொரு மாவட்டங்களில் கொரோனா

வைரஸ் தொற்றுள்ள ஒருவரேனும் இல்லை. மேலும் ஏழு மாவட்டங்களில் தொற்றுடைய ஒருவர் அல்லது இருவரே

அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு மாவட்டங்களில் ஐந்திற்கும் ஏழுக்குமிடையிலான எண்ணிக்கையைக் கொண்ட

நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே குறிப்பிடத்தக்களவான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் இரண்டாம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் நடாத்தப்படும் திகதி ஏப்ரல் 25 எனவும், புதிய

பாராளுமன்றம் முதலாவது கூடும் திகதி மே 14 எனவும் அறிவித்தார். அதன் பிறகு பத்து நாட்களின் பின்பு முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட சந்தர்ப்பத்தில் தேர்தல் நடாத்தப்படும்

திகதியை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படவில்லை. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24(3) ஆம் பிரிவுக்கு ஏற்ப,

ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த முடியாவிடின், அதற்கு வேறொரு திகதியைக் குறிப்பதற்கான கடப்பாடு தேர்தல் ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது.

திகதியொன்றைக் குறிப்பிடாது பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது. எதிர்காலத்தில் பல வாரங்களில் அல்லது பல

மாதங்களில் இடம்பெற முடியுமான அல்லது இடம்பெற முடியாத விடயங்கள் தொடர்பாக ஏற்படுத்திக்கொள்ளும் ஊகங்களின்

அடிப்படையில் கட்டாயமாகப் பின் பற்ற வேண்டிய சட்டரீதியான ஏற்பாடுகளை ஒதுக்கித்தள்ளி விட முடியாது.

தேர்தல் ஆணைக்குழு முதலில் 24(3) ஆம் பிரிவின் கீழ் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைப்பொறுப்பினை சட்டத்திற்கு

ஏற்புடையவாறு நிறைவேற்றி விட்டு, அதன் பின்பு கலந்துரையாட வேண்டிய விடயம் ஏதாவது இருப்பின், அது தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும்.


பிரதம அமைச்சர்
மஹிந்த ராஜபக்ஷ

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ ஆபத்து இன்னும் நிலவுகிறது – விசேட வைத்திய நிபுணர்

கொரனோ ஆபத்து இன்னும் நிலவுகிறது – விசேட வைத்திய நிபுணர்

கொவிட் 19 நிலமை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் கட்டுப்படுக்குள்ளாகியுள்ளது என்பதன் அர்த்தமாவது

ஆபத்து இல்லை என்பதல்ல. ஆபத்து நிலவுகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களினால் கொவிட் 19 ஆபத்தின்

தற்போதைய நிலைமை தொடர்பில் தெரிவிக்கப்பட்ட விசேட கருத்துக்கள் பின்வருமாறு

‘இலங்கையில் கொரோனா வைரசின் ஆபத்து குறைந்திருப்பதாக, தாம் தெரிவித்ததாக இன்றைய தினம் முக்கிய

பத்திரிகையொன்றில் தலைப்பு செய்தியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தலைப்பு செய்தி பெரும்பாலும் பிழையானது. இருப்பினும்

இந்த செய்தியின் உட்பகுதியை வாசிக்கும் பொழுது இந்த விடயம் கிடைக்கப்பெற்றதன் கூற்று என்ன என்பது தெளிவாகின்றது

உண்மையில் எடுத்துக்கொண்டால் தற்பொழுது இலங்கையில் கொவிட் 19 தொடர்பில் சமூக அளவிலும் ,சமூக பரவலும் அதாவது

அப்படியும் இல்லை என்றால் ளுழஉயைட வுசயளெஅளைளழைn நிலைமை இல்லை என்பதாகும். இது உண்மையில் சொல்லப்படும்

ஊடரளவநசள இற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தவரையறைக்குட்பட்ட விடயங்கள் கிடைக்கப்பெற்றமை

தொடர்ச்சியாக பெறப்பட்ட செயற்பாட்டு வழிமுறைகள் ஊடாக ஆகும்.

அப்படியென்றால் இந்த நிலைமைக்கு எம்மால் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக தனிந்துவிட்டது என்று கூறமுடியாது

என்பதாகும். இந்த பத்திரிகையில் இந்த விடயம் குறிப்பிடப்படுவது கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்காலத்தில் சுகாதார அமைச்சைப் போன்று பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட அனைத்து

துறைகளும் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதாகும். இது சரியானதாகும். இதற்கமைவாக எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ள

வேலைத்திட்டங்கள் இந்த நாட்டில் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்., அது ஏனென்றால் இந்த ஆபத்து தொடர்ந்தும் இடம்பெறக்கூடும்

என்பதாகும். இருப்பினும் வேறு எதனையும் எம்மால் தெரிவிக்க முடிகின்றமை இந்த நாட்டில் கொவிட் 19 நிலமை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள்ளாகியுள்ளது. இருப்பினும்

கட்டுப்படுக்குள்ளாகியுள்ளது என்பதன் அர்த்தமாவது ஆபத்து இல்லை என்பதல்ல. ஆபத்து நிலவுகின்றது. இருப்பினும்

தற்போதைய நிலவும் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்து இவ்வாறு அனர்த்த நிலை கட்டுப்பாட்டை மேலும் முன்னெடுப்பதன்

மூலம் இங்கு கூறப்படும் ஆபத்தான நிலையை முழுமையாக எதிர்காலத்தில் குறைப்பதற்கு சில கால எல்லைக்குள் எம்மால் முடியும்.’

Posted in உலக செய்திகள்

கொரனோ அபாயம் -கனடா ,அமெரிக்கா எல்லைகள் அடித்து பூட்டு

கொரனோ அபாயம் -கனடா ,அமெரிக்கா எல்லைகள் அடித்து பூட்டு

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை

அடுத்து தற்பொழுது அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான எல்லைகள்

முப்பது நாட்களுக்கு அடித்து பூட்ட பட்டுள்ளன
எதிர்வரும்

வைகாசி மாதம் முப்பதாம் திகதி வரை இந்த எல்லைகள் அடித்து பூட்ட படும் என


கனடா பிரதமர் Justin Trudeau ஒட்டோவாவில் வைத்து தெரிவித்துள்ளார்

இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது .

நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்று முயற்சியின் முன் தடுப்பு நகர்வாக இது பார்க்க படுகிறது

கொரனோ அபாயம்
கொரனோ அபாயம்
Posted in உலக செய்திகள்

ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி

ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி

ஜெர்மன் German,city of Hamburg, பகுதியில் குரீதில் இனத்தைச சேந்த முப்பது வயது

இளம் அழகிய பெண் ஒருவர் அவரது கணவனால் படுகோரமாக குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்

இவரை இரண்டாவதாக திருமணம் முடித்த வசித்து வந்த ,இவருக்கு நான்கு

பிள்ளைகள் உள்ளனர் ,.கொரனோ தொற்றி விட்டதாக கூறி இவரை கணவன் படுகோரமாக கொலை செய்துள்ளார்

குருதீஸ்தான் செங்கல் பகுதியில் Yazidi இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர் ,

இங்கே ஐ எஸ் படைகளினால் குறிப்பாக இந்த இன பெண்கள் கற்பழிக்க பட்டு ,

கடத்தி அரேபிய நாடுகளுக்கு விபச்சாரத்திற்கு விற்க பட்டனர் ,அவ்வாறான

இனத்தை சேர்ந்த இந்த பெண்ணை படு கோரமாக படுகொலை செய்ய பட்டுள்ளார்

நான்கு பிள்ளைக உள்ள பொழுதும் ,இளம் பெண் போன்ற தோற்றமும் ,

அழகாக ,மாடலான தோற்றமும் கொண்ட இவரே இவ்விதம் படுகோரமாக

படுகொலை செய்ய பட்டுள்ளது அந்த இனமக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

இவரது கொலைக்கு பெண்கள் அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தியுள்ளனர்

ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி
ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி

கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி

பிரான்சில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 642 பேர்

பலியாகியுள்ளனர் ,இதுவரை அங்கு இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 19,323 ஆக உயந்துள்ளது

தொடர்ந்து இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் 151,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


அது தவிர 5,893 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவசமுறைக்கு உள்ளான நிலையில் உயிர் பெற்றுள்ளனர்

இந்த சுவாச கவசம் கழற்றி விட்டால் அதுவே அவர்களின் இறுதி மூச்சு நிற்கும் தருணங்கள் ஆகும் .


நாள் தோறும் அதிகரித்து செல்லும் மரணங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோவின் தாக்குதலில்
கொரனோவின் தாக்குதலில்
Posted in இலங்கை செய்திகள்

கொரானாவுடன் தேர்தலை நடத்திட அவசரம் காட்டும் கோட்டபாய -அடிக்கும் இரத்த வாடை

கொரானாவுடன் தேர்தலை நடத்திட அவசரம் காட்டும் கோட்டபாய -அடிக்கும் இரத்த வாடை

இலங்கையில் தற்பொழுது கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் விதிக்க பட்ட தடைகள் விலக்க பட்டு மக்கள் இயல்பு

வாழ்விற்கு மீள் திரும்பும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளதாகவும் ,படிப்படியாக உறங்கு நிலை தளர்த்த படவுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளது

அரசு கூறும் காரணம் இதுவல்ல ,மக்கள் அனுதாபத்தை தான் தேடி கொண்டுள்ளதாகவும் ,இவ்வேளை ஏனைய கட்சிகள் மக்கள்

ஆதரவினை பெற முடியாது போகும் நிலை ஏற்படும் என்பதாலும்
தேர்தலை நடத்தும் முகமாக இந்த தடை விலக்கல் மேற்கொள்ள படுகிறது

மக்கள் பேரவலத்தில் தனது இருப்பை தக்க வைத்து கொள்ளும் கபட முயற்சியில் கோட்டாபய ஈடுபட்டுள்ளது வேதனையின் உச்சம்

என்பதும் ,இந்த சிந்தனை இரத்த வாடையின் நாற்றம் என அடித்து கூறலாம்

மக்கள் சாவில் அரசியல் நடத்தும் மகிந்த சிந்தனை கூட்டம் என்ன திருந்தவா போகிறது ..?

கொரானாவுடன் தேர்தலை
கொரானாவுடன் தேர்தலை
Posted in கொரனோ வைரஸ்

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை

முப்பத்தி ஏழாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 710,272 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவை மருத்துவ மனைகளிலில் இறந்தவர்களது புள்ளி விபரங்கள்

மருத்துவமனை தவிர்ந்து வயோதிப மடங்கள் மற்றும் வீடுகளில் தங்கி

இறந்தவர்கள் இழப்பு இதில் இணைக்க படவில்லை , அவற்றை இணைப்பின் உயிர் பலி அதிகம் என்பதாகும்

தொடர்ந்து வரும் இரு வாரங்களில் ஒரு லட்சம் மக்கள் உயிர் பலிகளாக அமையும் என எச்சரிக்க பட்டுள்ளது சுட்டி காட்ட தக்கது

அமெரிக்காவில் கொரனோவால்
அமெரிக்காவில் கொரனோவால்
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் புதிதாக அமைக்க படும் 1700 சடலங்கள் வைக்கும் சுடலை

பிரிட்டனில் புதிதாக அமைக்க படும் 1700 சடலங்கள் வைக்கும் சுடலை

பிரிட்டனில் கொரனோ வைரஸ் அதிகரித்து செல்லும் நிலையில் மனித உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன ,இதனை

அடுத்து முன்னர் கிழக்கு லண்டனில் அமைக்க பட்ட தற்காலிக குளிரூட்ட

பட்ட சுடலை யில் 700 சடலங்கள் மட்டும் வைக்க கூடியதாக அமைக்க பட்டது .

உயிர் பலிகள் அதிகரித்து செல்வதால் தற்பொழுது அது அடித்து மூட பட்டு இப்பொழுது கிளாஸ்கோ பகுதியில் ஆயிரத்து எழுநூறு

சடலங்கள் வைக்க படும் குளிரூட்ட பட்ட தற்காலிக சுடலை வேகமாக அமைக்க படுகிறது

எதிர்வரும் இரு வாரங்களில் நாப்பது ஆயிரம் பேர் இறக்கலாம் என எதிர் பார்க்க

படுவதால் இந்த தற்காலிக சுடலை அமைக்கும் பணி அதி தீவிர படுத்த பட்டுள்ளது

அது தவிர மேலும் ஒரு சுடலையும் அமைக்கும் பணியும் இடம்பெற்று வருகிறது ,அங்கு மூவாயிரம் பேர் வரை

வைப்பதற்கான நடவடிக்கையாக அமைய பெறவுள்ளது என தெரிவிக்க படுகிறது

இந்த மனித சடலங்களை ஏற்றி பறிக்க அமெரிக்காவை போல கனரக

கொண்டேனர் குளிரூட்ட பட்ட லொறிகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன

மனித பேரவலத்தின் உச்சம் இது என்பது குறிப்பிட தக்கது ,மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வேண்ட பட்டுள்ளது

பிரிட்டனில் புதிதாக
பிரிட்டனில் புதிதாக
Posted in உலக செய்திகள்

சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video

சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video

சிரியா இராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் ,வாகனங்களுடன் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் அடைந்துள்ளனர்

இவர்களது இந்த திடீர் சரணடைதல் ஏன் என்ற கேள்வி எழுகிறது .
ரசியா

படைகள் மோதலை தோற்றுவிக்க இருந்த நிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றுள்ளது

ஏனைய போராளிகளையும் இவர்கள போன்று சரண் அடையும் படி சிரியா

படைகள் துண்டு பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் எல்லைகளில் அறிவித்தல் விடுத்து வருகின்றனர் .

இது ஏனைய போராளிகளை உளவியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி ,வஞ்சகமாக அழைத்து கொலை செய்யும் தந்திரம்

கொண்டவை ,இலங்கை அரசு படைகள் புலிகளுக்கு செய்தவை போன்ற செயல்பாடாகும் . இந்த வலை விரிப்புக்குள் இவர்கள் சிக்குவார்களா என்பதே இன்றைய கேள்வி .

சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா
சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்

பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்

பிரிட்டனில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் சுமார் 888 பேர் பலியாகியுள்ளனர்


மேலும் ஒரு ஒரு லட்சத்து 14 ஆயிரதிற்கு அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர் வரும்நாட்களில் உயிர் பலிகள் அதிகரிக்குமென எச்சரிக்கை

விடுக்க பட்டிருந்த நிலையில் இந்த இழப்பு விகிதம் திகரித்துள்ளது

சில வாரங்களில் மொத்த மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை நாப்பது ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

இன்று வெளியாகியுள்ள மருத்துவமனையில் மட்டும் உயிரழந்தவர்கள்

எண்னிக்கை இது எனின் ,வீடுகளில் இறந்தவர்கள் உயிழப்பும் இணைதல் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாகலாம் என கருத படுகிறது

பிரிட்டனில் 888பேர் பலி - அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்