Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 2019 O/L பரிட்ச்சை முடிவுகள் -நேரடியாக பார்க்க இதில் அழுத்துங்கள்

இலங்கையில் 2019 O/L பரிட்ச்சை முடிவுகள் -நேரடியாக பார்க்க இதில் அழுத்துங்கள்

இலங்கையில் இடம்பெற்ற 2019 O/L பரிட்சை முடிவுகள் கல்வி அமைச்சினால் வெளியிட பட்டுள்ளது

கொரனோ வைரஸ் காரணமாக பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ள, நிலையில்


மாணவர்கள் தமது புள்ளிகளை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்

    பட்டுள்ளது,இவ்வேளை கல்வி அமைச்சின் இணைய தளத்தின் வாயிலாக

    இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது

    கல்வி அமைச்சு இணையம் செல்ல இதில் அழுத்துங்கள்

    பரிட்ச்சை
    பரிட்ச்சை
        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டனில் கொரனோவால் அதிகம் பலியாகும் சோமாலிய மக்கள்

        பிரிட்டனில் கொரனோவால் அதிகம் பலியாகும் சோமாலிய மக்கள்

        பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சோமாலிய நாட்டை


        சேர்ந்தவர்கள் அதிகம் பலியாகி வருவதாக அந்த மக்கள் சபை தெரிவித்துள்ளது
        நாள் தோறும் மருத்துவ மனையில் தமது மக்கள் இறப்பதை அறிவித்த வண்ணமே உள்ளனர்

            பிரிட்டனில் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி அதிகமாக தமது மக்களே பலியாகி வருகின்றனர் எனவும் இதுவரை


            அறுநூறு பேர் வரை பலியாகியுள்ளதாக மாறுபட்ட தகவல்களும் சமூக வலைத்தளங்களில்வெளியாகி வருகின்றன

            அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர், குறிப்பாக நியூ யார்க் பகுதியில் இந்த கறுப்பின மக்கள் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது

            அகதிகளாக வந்து இந்த நாடுகளில் தங்கி உள்ள இந்த மக்கள் இறப்பு விகிதம் பல சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது ,

            பிரிட்டனில் கொரனோவால்
            பிரிட்டனில் கொரனோவால்
                Posted in உலக செய்திகள்

                குண்டு தாக்குதல்களில் சிக்கி 500 மக்கள் பலி -1,293 பேர் காயம்

                குண்டு தாக்குதல்களில் சிக்கி 500 மக்கள் பலி -1,293 பேர் காயம்

                ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் தொடர் போரினால் அந்த மண்ணில் நாள் தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர் .

                இவ்வாறு கடந்த 90 நாட்களில் சுமார் ஐநூறு பேர் பலியாகியும் மேலும் 1,293 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                காயமடைந்தவர்கள் ஐம்பதுக்கு மேற் பட்டவர்கள் உடல் உறுப்புக்கள் செயல் இழந்த நிலையில் காண படுகின்றனர்

                  பல நாட்டு படைகள் ,மற்றும் அரச இராணுவத்திற்கு எதிராக தாலிபான்கள் போராடி வருகின்றனர் .

                  இவ்வாறான தாக்குதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் பெரும் தொகையில் இறந்து வருகின்றனர் .


                  முடிவில்லாது தொடர்ந்து நீண்டு செல்லும் இந்த போரினால் மக்கள் சொல்லென்னா இன்னல்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                  குண்டு தாக்குதல்களில்
                  குண்டு தாக்குதல்களில்
                      Posted in இலங்கை செய்திகள்

                      ராஜீவ் கொலை சந்தேக நபர் -முருகனின் தந்தையார் பளையில் மரணம் -photo

                      ராஜீவ் கொலை சந்தேக நபர் -முருகனின் தந்தையார் பளையில் மரணம் -photo

                      இந்தியா வேலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் முருகனின் தந்தையார், வைரவப்பிள்ளை வெற்றிவேலு சாவகச்சேரி தனியார் வைத்தியசாலையில் காலமானார்


                      . சொந்த இடமான கிளிநொச்சி பளை இத்தாவிலுள்ள அவரின் வீட்டில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

                        இவரது இறுதிக்கிரியைகள் நாளை 1.00மணிக்க்கு இவரது இல்லத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

                        பல்லாண்டுகளாக சிறையில் வசித்து வரும் முருகனின் விடுதலைக்கு

                        ஏங்கி தவித்த தந்தையார் இன்று அவனை காணாத அதே சோகத்தில் பலியாகியுள்ளார்

                        நளினி முருகனுக்கு சிறையில் அழகிய பெண் குழந்தை பிறந்ததும் ,இன்று அவர் ஒரு மருத்துவ துறை சார் பெண்ணாக உள்ளதும் வரலாற்றின் பதிவுகளாக உள்ளன

                        இந்திய ,தமிழா அரசுகளின் நரிதனத்தில் அப்பாவிகள் சிறையில் அடைக்க பட்டு வஞ்சிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                        நன்றி தோழர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            சடலங்களை அடக்கம் செய்ய Body Bags குறித்து விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கம்

                            சடலங்களை அடக்கம் செய்ய Body Bags குறித்து விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கம்

                            சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயனபடுத்தப்படும் (Body Bags) ஆயிரம் பைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை

                            மேற்கொள்ளப்பட்டமை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு செயற்றிட்டத்தில் ஆயிரம் பேர் வரை உயிரிழப்புக்கள ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் அல்ல’

                            சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) பைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் பெற்றுக்கொள்வற்கு

                            முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

                            சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) பைகள் மாத்திரமின்றி சுகாதார அமைச்சின் விநியோக

                            பிரிவினால் மருந்து வகைகள்< உபகரணங்கள் முதலானவற்றின் கையிருப்பை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில்

                            செஞ்சிலுவை சங்கத்திடம் Body Bags பெற்றுக்கொள்வற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும்

                            பொருட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

                            விசேடமான சூழ்நிலைகள் மற்றும் அனர்த்தங்களின் போது பூதவுடல்களின் இறுதிக்கிரிகைகளுக்காக இவ்வாறான பொதிகள்

                            பயன்படுத்தப்படுவது வழமை .அதற்கேற்பவே இவற்றை பெற்றுக்கொளள இந்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

                            இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

                            அதேபோன்று இறப்பு வீதமும் குறைவு. இதற்குக்காரணம் எமது சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்புடனான சேவையாகும் என்று விசேட வைத்திய நிபுணர்; தெரிவித்தார்.

                              நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வைரஸ்

                              பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது சுகாதார பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

                              சடலங்களை அடக்கம்
                              சடலங்களை அடக்கம்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்

                                  யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்

                                  இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள தேசியல்

                                  கல்வியால் கல்லூரியில் உள்ள இரண்டு விடுதிகளை தம தாக்கி கொண்ட

                                  இராணுவத்தினர் ,அதனை கொரனோ தொற்று சோதனையாளர்களை தனிமை படுத்தும் முகாமாக மாற்றி அமைத்துள்ளனர்

                                  விடு முறையில் சென்ற இராணுவத்தினரை சோதனை செய்யும் முகமாக இந்த விடுதிகள் கையக படுத்த பட்டுள்ளன

                                  இதனால் அந்த கல்லூரி அருகில் உள்ள மக்கள் கொந்தளித்துள்ளதுடன் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்

                                  இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .

                                  தமிழர் பகுதியில் இந்த கொரனோ வைரசை இராணுவம் பரப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது .

                                  அதற்கு அமைவாக கொரனோ நோயாளிகளை தமிழர் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளது கவனிக்க தக்கது

                                  யாழில் தமிழர்களுக்கு
                                  யாழில் தமிழர்களுக்கு
                                      Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                      கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்

                                      கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்

                                      கனடாவில் நேற்று முன்தினம் பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளன

                                      North York பகுதியில் இந்த துப்பாக்கி தாக்குதல் மாலை ஆறு மணியளவில்

                                      இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவத்தை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு

                                        விரைந்த பொழுதும் சிறுவனை காப்பாற்றிட முடியவில்லை,

                                        கனடாவின் இந்த பகுதியில் தொடர் கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .


                                        இந்த கொலையினை புரிந்தவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில்

                                        குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்,இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          இலங்கையில் பரவும் புதிய வகை காய்ச்சால் – பலர் பாதிப்பு

                                          இலங்கையில் பரவும் புதிய வகை காய்ச்சால் – பலர் பாதிப்பு

                                          இலங்கையில் புதிய வகையான காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது ,இது நிமோனியா

                                          போன்ற ஒன்று என தெரிவிக்க படுகிறது,கடந்த சில நாட்களில் மேற்கொள்ள

                                          பட்ட கொரனோ சோதனைகளின் பொழுதே இந்த விடயம் கண்டறிய பட்டுள்ளது

                                            இவ் வகையான புதிய வைரஸ் காய்ச்சலில் சிக்கி பாதுகாப்பு படைகளும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                            எனினும் இதுவரை இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று எந்த வகையை சேர்ந்தது என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                                            கொரனோ நோயானதும் இவ்வகையான தொற்று ஒன்றால் பரவி வருகிறது இங்கே சுட்டி காட்ட தக்கது

                                            இலங்கையில் பரவும் புதிய
                                            இலங்கையில் பரவும் புதிய
                                                Posted in உலக செய்திகள்

                                                கொரனோவை கைபேசியில் கண்டு பிடிக்கலாம் -அவுஸ்ரேலியா வெளியிட்ட ஆப்

                                                கொரனோவை கைபேசியில் கண்டு பிடிக்கலாம் -அவுஸ்ரேலியா வெளியிட்ட ஆப்

                                                உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ வைரஸ் நோயினை

                                                கண்டு பிடிக்கும் புதிய கைப்பேசி அப்பிளிக்கேஷன் ஒன்றை அவுஸ்ரேலியா கண்டு பிடித்துள்ளது

                                                இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட ஆப்பிளிகேஷனை ஆயிர கணக்கான மக்கள்

                                                  தரவேற்றம் செய்து வருவதாக அந்த அரசு அறிவித்துள்ளது,

                                                  ஆப்பிளிகேஷனில் சென்று COVIDSafe என தேடினால் இந்த அப்பிளிக்கேஷன்

                                                  வருகிறது ,பதிவேற்றம் செய்து சோதனை செய்து பார்க்கலாம் ,வீதி விதிமுறை போல ,மஞ்சள்,சிவப்பு ,பச்சை காண்பிக்கிறது

                                                  Step Two: On an iPhone, you will have a little blue application already on your device called App Store. You click on that and search for ‘COVIDSafe’.

                                                  On an Android phone, the app will be a colourful triangle called Google Play. Go in there and search ‘COVIDSafe’.

                                                  கொரனோவை கைபேசியில்
                                                  கொரனோவை கைபேசியில்
                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                    மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு

                                                    மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு

                                                    கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம்

                                                    திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை நங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

                                                    இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த அகைத்து வார நாட்களில்

                                                      காலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை திறந்திருக்கும்.

                                                      ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

                                                      சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுநுத்தப்பட்டுள்ளது.

                                                      மெனிங் மரக்கறி சந்தை
                                                      மெனிங் மரக்கறி சந்தை
                                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                          லண்டன் Ilford. இல் இரு சிறார்கள் வெட்டி கொலை

                                                          லண்டன் Ilford. இல் இரு சிறார்கள் வெட்டி கொலை

                                                          கிழக்கு லண்டன் பகுதியான Ilford. பகுதியில் ஒரு வயது மற்றும் மூன்று

                                                          வயது சிறுவர்கள் கத்தியால் ,குத்தி ,வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                                            இரத்த வெள்ளத்தில் மிதந்த இரு சிசுக்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது


                                                            இதுவரை இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                                            இந்த கொலையினை புரிந்த நாப்பது வயது நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                                            குற்ற பதடுப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர் ,


                                                              கொரனோ பேராபத்து வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                                              லண்டன்
                                                              லண்டன்
                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              29 கடற்படையினருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

                                                              29 கடற்படையினருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

                                                              இலங்கை கடற்பயினர் இருப்பத்தி ஒன்பது பேருக்கு கொரனோ உள்ளது

                                                              கண்டு பிடிக்க பட்டுள்ளது ,விடுமுறையில் வீடுகளுக்கு சென்றவர்களுக்கே இந்த கொரனோ தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                                              இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

                                                                நாடு தழுவிய ரீதியில் ஆயிரம் இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளதாக

                                                                உள்வீட்டு கசிவுகள் சில தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                                                                ஆனால் அரசு இதனை வெளியிடாது மூடி மறைத்து வருகிறது

                                                                29 கடற்படையினருக்கு கொரனோ
                                                                29 கடற்படையினருக்கு கொரனோ
                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் செயல்படவேண்டிய முறை குறித்த வழிமுறைகள்

                                                                  ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் செயல்படவேண்டிய முறை குறித்த வழிமுறைகள்

                                                                  வைரசு தொற்று அனர்த்தம் உள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில்

                                                                  தற்போது அமுலிலுள்ள ஊடைங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொதுமக்கள் செயல்பட்வேண்டிய முறை குறித்த வழிமுறைகள்

                                                                  வகுக்கப்பட்டுவருகின்றன. இந்த மாவட்டங்களில் மக்கள் செயற்படவேண்டிய இந்த புதிய பொறிமுறையை மே 04ஆம் திகதி அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது”.

                                                                    கொரோனா வைரசை தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்

                                                                    பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இந்த விடங்களை தெரிவித்தார்.

                                                                    இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்களில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் வலையத்தளங்களில் இடம்பெற்ற 9

                                                                    விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ்

                                                                    மாஅதிபர் இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்கள் மூலம் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களுக்கு சர்வசேச மனித

                                                                    உரிமைகள் சிவில் சட்ட விதிகளுக்கு அமைவாக 07 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார்.

                                                                    இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதிகாலை 5 மணியிலிருந்து

                                                                    இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை முறையாக பின்பற்றி ஊழியர்களுக்கு

                                                                    போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

                                                                    ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலங்களில் உற்சவங்கள் நடத்தல், சுற்றுலாக்களை மேற்கொள்ளுதல், குழுக்களாக

                                                                    இணைந்து செயற்படுதல், பல்வேறு சமய நிகழ்வுகளை நடத்துதல், விளையாட்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், சங்கீத இசைக்

                                                                    கச்சேரிகளை நடத்துதல் முதலானவை தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வெயல்படுபவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள்

                                                                    கிடைத்தால் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

                                                                    மேற்கொள்ளப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

                                                                    ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள
                                                                    ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள
                                                                      Posted in உலக செய்திகள்

                                                                      இந்தியாவில் மின்னல் தககி 10 பேர் பலி – 9 பேர் காயம்

                                                                      இந்தியாவில் மின்னல் தககி 10 பேர் பலி – 9 பேர் காயம்

                                                                      இன்று கிழக்கு இந்தியாவில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கி

                                                                      பத்து பேர் பலியாகினர் ,மேலும் ஒன்பது பேர் பலத்த எரி காயங்களுக்கு

                                                                      உள்ளான நிலையில்,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                                                      கிழக்கு இந்தியாவின் Pratay Amrit, பகுதி கிராமத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது


                                                                      ,சீரற்ற கால நிலை தொடரும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக

                                                                      இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

                                                                      மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                                      இந்தியாவில் மின்னல்
                                                                      இந்தியாவில் மின்னல்
                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo

                                                                      கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo

                                                                      கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் 1500 வரைரயான குடும்பங்களுக்கு

                                                                      அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தினால்  தலா 1200 பெறுமதியான  உலர்உணவுப்பொருட்கள்        வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


                                                                      கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள     பதினாறு கிராம

                                                                      அலுவலர்; பிரிவுகளிலும் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட குடும்பங்கள்

                                                                      முதியோரைக்கொண்ட குடும்பங்கள், பெண்தலைமைத்துவம்கொண்ட குடும்பங்கள்  என தெரிவு

                                                                      செய்யப்பட்ட 1500 குடும்பங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை

                                                                      மையத்தினால்  E.U நிதியுதவியுடன் மேற்படி உலர் உணவுப்பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டன

                                                                      கண்டாவளையில் தில்
                                                                      கண்டாவளையில் தில்
                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                        கொரனோவால் இலங்கையில்; 80 பேர் மரணம் – மறைக்கும் அரசு

                                                                        கொரனோவால் இலங்கையில்; 80 பேர் மரணம் – மறைக்கும் அரசு

                                                                        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இதுவரை எண்பதுக்கும்

                                                                        மேலானவர்கள் பலியாகியுள்ளனர் ,இவ்வாறு இறந்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்களாவர் .

                                                                        தொடர்ந்து ஏழு பேர் மட்டுமே கொரனோவால் இருந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்து வருகிறது ,


                                                                          எதிர் வரும் தேர்தலில் உண்மையான முடிவுகளை அறிவித்தால் அதுவே தமக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இவ்விதம் அரசு மறைத்து வருகிறது

                                                                          இவ்வாறன செய்திகள் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி வெளியிட்டால் வதந்தி பரப்பினார்கள் என கைது செய்ய படுகின்றனர்

                                                                          ஆயிரம் இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் அதில் ,இதுவரை ஐந்துக்கு மேலானவர்கள் பலியாகியுள்ளனர் எனவும்

                                                                          , சில டசின் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த கசிவுக தெரிவிக்கின்றன

                                                                            தேர்தலில் ஆளும் அரசு வெல்ல வேண்டுமாக இருந்தால் இந்த கொரனோ பலிகளை மறைத்தாக வேண்டும் தவறின் ,அவர்கள் ஆட்சி கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது

                                                                            அதனால் தொடர்ந்து மூடி மறைப்பு இடம்பெறுகிறது என அந்த கசிவுகள் எதிரொலிக்கின்றன

                                                                            கொரனோவால் இலங்கையில்
                                                                            கொரனோவால் இலங்கையில்
                                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                                கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து

                                                                                கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து

                                                                                முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

                                                                                முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு

                                                                                அமைச்சினால் ரத்து செய்யப்படுவதினால் அனைத்து படைவீரர்களும் தத்தமது முகாம்களுக்கு திரும்ப வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

                                                                                  தற்போது விடுமுறையில் உள்ள படைவீரர்கள் தமது தலைமை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக

                                                                                  அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

                                                                                  முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் ரத்து

                                                                                  செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குரணரத்னவினால் ஒப்பமிடப்பட்டு முப்படைகளின்

                                                                                  தளபதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                                                  கொரனோ அபாயம்
                                                                                  கொரனோ அபாயம்
                                                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                                                    யாழில் நடந்து சென்றவர் வீழ்ந்து மரணம் – மரண சான்றிதழை மாற்றி வழங்கும் மருத்துவர்

                                                                                    யாழில் நடந்து சென்றவர் வீழ்ந்து மரணம் – மரண சான்றிதழை மாற்றி வழங்கும் மருத்துவர்

                                                                                    இன்று யாழ்ப்பாணம் ஓட்டு மடத்தை சேர்ந்த வயதிபர் ஒருவர் வீதியால் நாடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென வீழ்ந்து இறந்துள்ளார் .

                                                                                    இவரது மரணம் எவ்விதம் நிகழ்ந்தது என்பதை மருத்துவ மனைகள் கூறுவதை மறைத்து வருகின்றன .


                                                                                    கடந்த இரண்டு நாட்களில் ஆறுபேர் இவ்விதம் மர்மமான முறையில் இறந்துள்ளனர் ,

                                                                                      முகமூடி கொலையாளிகள் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் இவ்விதமான கொலைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,

                                                                                      எனினும் இவர்கள் சடலங்களை பரிசோதனை செய்யும் சட்ட மருத்துவர் வழங்கும் மரணம் தொடர்பான அறிக்கையை மாற்றி

                                                                                      எழுதி வழங்கி வருகிறார் ,யாழ்போதன வைத்தியசாலையில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிஒருவர்

                                                                                      இறந்தவர்கள் மரபணு சோதனைகளை அங்குள்ள மருத்துவர் ஒருவரது மாதிரிகளை காண்பித்து இந்த சடலங்களின் உண்மை

                                                                                      தன்மையை மாற்றியமைத்து வழங்க படுகிறது ,இவர் கூறும் விடயத்தை புரிய மறுத்தால் அந்த சட்ட மருத்துவ அதிகாரி பழிவாங்க படுகின்றனர்

                                                                                      இவ்வாறே மருத்துவர் சிவரூபன் பழிவாங்க பட்டு பொய் குற்ற சாட்டுக்கள் மத்தியில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .


                                                                                      இந்த விடயம் தவறு என கருத்தினால் யாழ்போதன அவைத்தியசாலையின் பொறுப்பு நிலை மருத்துவர்களிடமோ

                                                                                      அல்லது வடக்கு மாகாணம் சுகாதார அதிகரியிடமோ கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

                                                                                      யாழில் நடந்து சென்றவர்
                                                                                      யாழில் நடந்து சென்றவர்
                                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                                        கொரனோவால் கடற்படை இராணுவ அதிகாரி மரணம் -ஆயிரம் இராணுவம் பாதிப்பு

                                                                                        எலிக் காய்ச்சலினால் உயிரிழந்த கடற்படை அதிகாரி யின் இறுதி கிரிகை, கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர் போன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும்.

                                                                                        இதுதொடர்பாக இலங்கை கடற்படையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

                                                                                        எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

                                                                                        எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில்

                                                                                          சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் 2020 ஏப்ரல் 25ஆம் திகதி காலமானார்.

                                                                                          இவ்வாறு காலமானவர் கடற்படை தலைமை நிலையத்திற்கு உட்பட்டதாக கடமையாற்றிய கலேன்பிதுனுவௌ பிரதேசத்தைச்

                                                                                          சேர்ந்தவரான 35 வயது லெப்டினென்ட் கமாண்டர் ( தொண்டர்) தொடம்வல கெதர சுனில் பண்டார தொடம்வல என்ற

                                                                                          அதிகாரியாவதுடன், இவர் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                                                                          இந்த அதிகாரி சிகிச்சைப் பெற்றுவந்த காலப்பகுதியில் வைத்தியர்களினால் இவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட

                                                                                          பரிசோதனையின் போது இவர் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்தாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று

                                                                                          வெலிசறை கடற்படை முகாமிற்குள் கொவிட் 19 வைரசு தொற்று பரவியதைத் தொடர்ந்து மேற்கொள்ள்பட்ட பரிசோதனைகளில்

                                                                                          இந்த கடற்படை அதிகாரி கொவிட் 19 வைரசு தொற்றிற்கு உள்ளான நபர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கமைவாக எலிக்

                                                                                          காய்சச்ல் நோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்த போது இந்த நோய் நிலைமை அதிகரித்ததன் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில்

                                                                                          அனுமதிக்கப்பட்டிருந்த போது இந்த அதிகாரி 2020 ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி காலமானார்.

                                                                                          இந்த மரணம் கொவிட் 19 வைரசு தொற்றின் காரணமாக ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும் , வெலிசறை கடற்படை முகாம் கட்டிடத் தொகுதியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள

                                                                                          நிலைமையின் அடிப்படையில் கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும்

                                                                                          நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்கு ராகம நீதிமன்ற மருத்துவ

                                                                                          அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த பரிந்துரைகளுக்குட்பட்டதாக பூதவுடல் தொடர்பான இறுதி

                                                                                          நடவடிக்கைகள் கடற்படையினருக்கான கௌரவத்துடன் மேற்கொள்ளப்படவுள்ளது.

                                                                                          இவர் கொரனோவால் இறந்துள்ள பொழுதும் இராணுவம் மறைத்து எலி காய்ச்சல் என அறிவித்துள்ளது,மேலும் ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

                                                                                          கொரனோவால் இராணுவ தளபதி மரணம் -ஆயிரம் இராணுவம் பாதிப்பு
                                                                                          கொரனோவால் இராணுவ தளபதி மரணம் -ஆயிரம் இராணுவம் பாதிப்பு
                                                                                            Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                                            பிரிட்டனில் 413 பேர் கொரனோவால் பலி –

                                                                                            பிரிட்டனில் 413 பேர் கொரனோவால் பலி –

                                                                                            பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
                                                                                            413 பேர் பலியாகியுள்ளனர்

                                                                                            இதுவரை 20,800 பேர் மரணித்துள்ளனர் .165 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
                                                                                            இன்று வழமையைவிட மரணத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது

                                                                                              உலகளாவிய ரீதியில் 204 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் மேலும் கிட்ட

                                                                                              தட்ட முப்பது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் தொடர்ந்து பல நாடுகள் முடக்க நிலையில் உள்ளன என்பது குறிப்பிட தக்கது

                                                                                              பிரிட்டனில் 413 பேர் கொரனோவால்
                                                                                              பிரிட்டனில் 413 பேர் கொரனோவால்