Author: நலன் விரும்பி
அவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்
அவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்-பேஸ்புக் பாவிக்க தடை
கட்டணம்
அவுஸ்ரேலியாவில் உலகில் பிரபல சமூகவலைத்தளங்களாக விளங்கும் கூகிள்,மற்றும் பேஸ்புக் என்பன அதில் வெளிவரும்
செய்திகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நிறை வேற்றப் பட்டுள்ளது
புதிய சட்டம்
மேற்படி சட்டத்துக்கு எதிராக பேஸ்புக் தனது பயனாளர் சேவையை அங்கு நிறுத்தி அதிரடி காட்டிய பொழுதும் ,அது கடந்து இந்த சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
எச்சரிக்கை
அதுபோல கூகிளும் அங்கிருந்து தமது தேடு பொறியை முற்றாக நிறுத்த போவதாக எச்சரிந்திருந்தது
அவற்றை கருத்தில் கொள்ளாது மேற்படி சட்டம் அமுலாக்கம் பெற்றுள்ளாள் நிலையில், கூகிள் தேடு பொறியும்
தவிக்கும் மக்கள்
அவுஸ்ரேலியாவில் மக்கள் பாவனைக்கு தடை செய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர் பார்க்க படுவதுடன் ,தொடந்து அந்த நாட்டு மக்கள் பேஸ்புக்கை பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
லண்டனில் -போலிஸ் நடமாடும் கமரா -27,000 பேருக்கு தண்டம் – படம் உள்ளே
லண்டனில் -போலிஸ் விசேட வேட்டை நடமாடும் கமரா மூலம்-27,000 பேருக்கு தண்டம் – படம் உள்ளே
பொலிஸ் கமரா
பிரிட்டனில் சாலை வேக கட்டுப் பாட்டை கண்காணிக்க காவல்துறையினர் தற்பொழுது நடமாடும் கமராவை நகர்த்தி வருகின்றனர் ,
காவல்துறை வான் ஒன்றில் இந்த கமரா பொருத்த பட்டு இருக்கும் ,இதனை முக்கிய சாலைகளில் நிறுத்தி விடுவார்கள்
வேகமாக வரும் கார்கள் இதில் சிக்கி விடுகின்றன
சிக்கிய கார்கள்
இவ்விதம் கடந்த ஆண்டில் மட்டும் ஏ 282 ,கென்ட் சாலையில் சுமார் 27,000 கார்கள் சிக்கியுள்ளன
மேற்படி கமரா அதிவேக சாலைகளிலும் நிறுத்த பட்டுள்ளன
சாரதிகள் எச்சரிக்கை, போலீசார் இவ்வாறும் உங்களை துரத்து கின்றனர்
வீதி கண்காணிப்பு
பிரிட்டனில் சாலை வேக கட்டுப்பாட்டை கண்காணிக்க காவல்துறையினர் தற்பொழுது நடமாடும் கமராவை நகர்த்தி வருகின்றனர் ,
காவல்துறை வான் ஒன்றில் இந்த கமரா பொருத்த பட்டு இருக்கும் ,இதனை முக்கிய சாலைகளில் நிறுத்தி விடுவார்கள்
வேகமாக வரும் கார்கள் இதில் சிக்கி விடுகின்றன
தண்டம்
இவ்விதம் கடந்த ஆண்டில் மட்டும் ஏ 282 ,கென்ட் சாலையில் சுமார் 27,000 கார்கள் சிக்கியுள்ளன
மேற்படி கமரா அதிவேக சாலைகளிலும் நிறுத்த பட்டுள்ளன
சாரதிகள் எச்சரிக்கை, போலீசார் இவ்வாறும் உங்களை துரத்து கின்றனர்
நுவரெலியாவில் ஒருபகுதி முடக்கம் – போலீஸ் குவிப்பு
நுவரெலியாவில் ஒருபகுதி முடக்கம் – போலீஸ் குவிப்பு
பரவி வரும் நோய்ந் தாக்குதல் பரவலை அடுத்து நுவரெலியாவில் ஒரு பகுதி முடக்க பட்டுள்ளது
மேற்படி முடக்க நிலையை அடுத்து தற்போது அங்கு காவல்துறையினர் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர அபடுத்த பிட்டுள்ளது
மறு அறிவித்தல் வரை மேற்படி பகுதி முடக்க நிலை தொடரும் என தெரிவிக்க பட்டுள்ளது
நெதர்லாந்தில் 600 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு
நெதர்லாந்தில் 600 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு
நெதர்லாந்தில் சுமார் அறுநூறு மில்லயன் யூரோ பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் மேற்கொள்ள பட்ட விசேட சோதனையின் பொழுதேமேற்படி போதைவஸ்து மீட்க பட்டுள்ளது
இருபத்தி மூன்று டன் பெறுமதியான போதைவஸ்தே இவ்வாறு கண்டு பிடிக்க பட்டுள்ளது ,பனமா நாட்டில் இருந்து கொண்டனர்
ஒன்றை இறக்குமதி புரிந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபரே இவ்விதம் மடக்கி பிடிக்க பட்டுள்ளார்
குறித்த கொண்டனருக்குள் பலகைக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட நிலையில் மேற்படி சம்பவம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
கைதான 28 வயது வாலிபர் தொடர் விசாரணைகளுக்கு உபடுத்த பட்டுள்ளார்
ஐநாவில் இலங்கையை போட்டுத் தாக்கிய அமெரிக்கா – தீர்வு முக்கியம் என இடித்துரைப்பு
ஐநாவில் இலங்கையை போட்டுத் தாக்கிய அமெரிக்கா – தீர்வு முக்கியம் என இடித்துரைப்பு
இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம் பெற்று வருகிறது ,இதன் பொழுது
,இலங்கை தாம் புரிந்த கடந்த கால போர்க் குற்றம் தொடர்பில் எவ்வித பொறுப்பு கூறலையும் புரியவில்லை எனவும்
பாதிக்க பட்ட மக்களுக்கு எவ்வித தீர்ப்புகளையும் வழங்கவில்லையு எனவும், தொடர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அது குற்றம் சுமத்தியுள்ளது
மேலும் இந்த பிரேரணைக்கு அணைத்து நாடுகளும் ஆதரவு தர வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது ,
மேற்படி அமெரிக்காவின் கடும் போக்கு இலங்கையை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
இந்த பிரச்சனை தொடர்பில் தாம் அர்ப்பணிப்புடன் செயல் பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துளளது
கோட்டாவுடன் பேசிய பின்னர் நாடு பறந்தார் பாகிஸ்தான் அதிபர்
கோட்டாவுடன் பேசிய பின்னர் நாடு பறந்தார் பாகிஸ்தான் அதிபர்
பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கான் இலங்கைக்கு இரு நாள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டு வந்தார் ,
இவரது பயணம் முடிவடைந்து தற்போது பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார்
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் ,பாதுகாப்பு மற்றும் ,அபிவிருத்தி தொடர்பில் பேச பட்டுள்ளது
இவ்வேளை யுத்தத்தின் பொழுது பாகிஸ்தான் அரசு வழங்கிய உதவிக்கு நன்றியை தெரிவித்து கொண்டார் கோத்தபாயா
வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்
வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்
இலங்கையில் காந்த 24 மணித்தியாலத்தில் நடந்த வீதி விபத்துக்களில்
சிக்கி சுமார் 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாக ஏற்படும் இவ்விதமான விபத்துக்களில்
சிக்கி பெரும் தொகையில் ஒரேநாளில் மக்கள் பலி இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது
சிறையில் கலவரம் 62 பேர் படுகொலை – பல டசின் பேர் காயம்
சிறையில் கலவரம் 62 பேர் படுகொலை – பல டசின் பேர் காயம்
Ecuador பகுதியில் உள்ள மூன்று சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி இதுவரை அறுபத்தி இரண்டு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர் ,தற்போது
இராணுவம் குவிக்க பட்டு கலவரம் கட்டு பாட்டுக்குள்; கொண்டுவரப் பட்டுள்ளது
சிறைக்குள் குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதலே இந்த கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது ,
இவை அரசியல் பின்புலத்துடன் இயக்க பட்டுள்ளதகவும் ,முக்கிய கிரிமினல்கள் இதில் போட்டு தள்ள பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
ஒயில் திருடும் அமெரிக்கா இராணுவம் -சிரியாவில் நடக்கும் கொள்ளை
ஒயில் திருடும் அமெரிக்கா இராணுவம் -சிரியாவில் நடக்கும் கொள்ளை
அமெரிக்கா இராணுவத்தினர் சிரியாவின் வடக்கு கசக்கா பகுதியில்நிலைகொண்டுள்ளன ,அங்கே அவர் சார்பு துணை இராணுவ குழுக்கள் இயங்கி வருகின்றன
இவர்கள் ஊடாக நாள் ஒன்றுக்கு சுமார் 140,000 பெறல் ஒயில் திருடி ஈராக் எல்லைவழியாக எடுத்து சென்றுள்ளமை கண்டு பிடிக்க பட்டுளள்து
சிரியாவில் தொடர் போரில் குதித்துள்ள அமெரிக்க இராணுவம் இவ்விதமான கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது ,பயங்கரவாதம்
என்ற போவையில நாடுகள் மீது போரினை தொடுத்து அதன் ஊடாக அந்த நாடுகளில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது
இது போன்றே ஈராக்கிலும் அமெரிக்காவின் இவ்வாறான முகவர் ஊடக இந்த எண்ணெய் திருட பட்டு அமெரிக்கா போர்க் கப்பல்கள்
பாதுகாப்பு வழங்க எடுத்து செல்ல பட்டு ,கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
சதைகளை உண்ணும் புதிய புண் – பரவும் கொடிய வைரஸ்
சதைகளை உண்ணும் புதிய புண் – பரவும் கொடிய வைரஸ்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போர்ன் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு புதியவகை மர்ம நோயானது பரவியுள்ளது
இந்த நோயானது உடலில் புண்கள் போன்று ஏற்படுகின்றன
பின்னர் அதில் பரவி வரும் கிருமிகள் மனித சதைகளை உண்கின்றன ,இது மிக வேகமாக ஆழமாக ஊடுருவி சதைகளை தின்கிறது
இதனை அடுத்து அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து ,கடல்நீரில் குளிக்க சென்ற பலர் இவ்விதமான புதிய
வைரஸ் நோயினால் பாதிக்க பட்டு கண்களை இழந்துள்ளமை குறிப்பிட தக்கது
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
அவுஸ்ரேலிய தலைநகர் மெல்போர்ன் பகுதியில் பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட
பெண்மணி ஒருவர் அதிக போதையில் அங்கு கலந்து கொண்ட நண்பியின் விரலை கடித்துள்ளார்
பலத்த காயமடைந்த பெண் மருத்துவனையில் அனுமதிக்க பட்டார் ,மேற்படி
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வந்த
விசாரணைகளில் இவர் சிறை தண்டனை இன்றி விடுவிக்க பட்டுள்ளார்
பள்ளத் தாக்கில் வீழ்ந்து சிதறிய கார் – பலர் காயம்
பள்ளத் தாக்கில் வீழ்ந்து சிதறிய கார் – பலர் காயம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஆடம்பர கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறியது
,இதன் போது அதில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக 18 நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக 18 நாடுகள்
இன்று ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெறும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையை ஆதரித்து
பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளித்துள்ளது ,இதில்
சீனா,பாகிஸ்தான் இந்தியா உள்ளிட்டவர்கள் அங்கம் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆனால் அமெரிக்கா,பிரிட்டன் ,பிரான்ஸ் ,கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக ,தமிழர்களுக்கு ஆதரவாக பேசுகின்றன
அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக சிங்கள புதிய காணொளி வெளியீடு
அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக சிங்கள புதிய காணொளி வெளியீடு
இலங்கையில் இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் ஆலோசகர்
ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் சிறுவர் ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் எனவும் ,இவர் ஆயுத பயிற்சி பெற்றவர்
எனவும் கூறி அவரை உடனே கைது செய்ய வேண்டும் என இலங்கை அரசு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது
அதில் விடுதலை புலிகள் தொடர்ப்பிலான பாரிய குற்றச் சாட்டுக்களை சிங்கள அரச பயங்கரவாதம் வைத்துள்ளது ,புலிகளை துடைத்து அழித்துவிட்டோம் என்கிறது
ஆனால் இப்பொழுது அவர்கள் மீள் எழுச்சி கொள்கின்றார்கள் என்ற கோணத்தில் போலியான பரப்புரையை புரிந்து ,ஐக்கிய நாடுகள்
மனித உரிமையை திசை திருப்பும் நகர்வில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது
மைத்திரி சிக்கினார் – கோட்டா,மகிந்தா பழிவாங்கல் ஆரம்பம்
மைத்திரி சிக்கினார் – கோட்டா,மகிந்தா பழிவாங்கல் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (23) கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில், அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதைக் கையளித்தார்.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில், சில முரண்பாடான நிலைமை இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது என, அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, ஆகையால்,
அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டின் பேரில் செயற்படுவதற்கான தேவை இல்லை என்றும் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு
எதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ், நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
TIKTOK கில் பிரபாகரன் படத்தை வெளியிட்ட வாலிபன் கைது
TIKTOK கில் பிரபாகரன் படத்தை வெளியிட்ட வாலிபன் கைது
இலங்கை வத்தளை பகுதியில் இருந்து டிக்டாக் செயலி மூலம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகான் படங்கள் மற்றும்
காணொளிகளை வெளியீடு செய்த காரணத்தால் இருபத்தி ஐந்து வாலிபர் ஒருவர் வத்தளையில் கைது செய்ய பட்டுளளார்
சமூக வலைத்தளங்களில் தலைவர் பிரபாகரன் தொடர்பாக
கேவலமாக சித்தரிக்க அனுமதிக்கும் சிங்களம் பிரபாகரன் தொடர்பான புகழ்தலை அனுமதிக்கவில்லை
இவர் விடுதலை புலிகளை மீள் ஒருங்கிணைத்து நாட்டுக்கு எதிராக செயல் பட்டார் என்ற காரணத்தினாலே கைது செய்ய பட்டுள்ளார்
கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா
கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா
கிளிநொச்சி பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர்
சுற்றிவளைப்பின் பொழுது மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,685 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
புலிகளை அழித்த நோர்வே அனுசரணை சாமாதான ஓப்பந்தம்
புலிகளை அழித்த நோர்வே அனுசரணை சாமாதான ஓப்பந்தம் –
இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம், தமிழ் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக, 2002ம் ஆண்டு இதேநாளில் (பெப்ரவரி 22) நோர்வே
அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் குறித்தும் தனதறிக்கையில் குறித்துரைத்துள்ளது.
குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனித உரிமைகள்
பாதுகாக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழர்களுக்கு, அடுத்தடுத்த நிகழ்ந்தேறிய நிகழ்வுகள், 2009 முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலை முடிவாக நிரூபித்திருந்ததோடு, ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் தமது புவிசார் அரசியல் காரணிகளை
கருத்தில்கொண்டு தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த விடயத்தினை வெளிக்காட்டிய 2012 வெளிவந்த ஐ.நா. உள்ளக
மறுஆய்வு அறிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று, சிறிலங்கா தொடர்பாக முகன்மை குழு ஐ.நாவில் சமர்ப்பித்த ஆரம்ப (ணநசழ னசயகவ) தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பூச்சிய (ணநசழ ) வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது என்பதோடு,
நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைத்துள்ளது.
2009ம் ஆண்டு பெரும் இனப்படுகொலையொன்றின் ஊடாக தமிழர் தேசம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தீவில் தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான
அரசியல்வெளி என்ற நிலையில், தமிழர்கள் மீண்டும் சர்வதேச நிறுவனங்களை, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையை , நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக திரும்பவும் நாடினார்கள் என்பதனை
சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், போரின் போதோ அதற்குப் பின்னரோ தமிழர்களுக்கு எதிரான
இனப்படுகொலையினை புரிந்தவர்கள் எவருக்கும் தண்டனையோ, எதிரான வழக்கோ தொடரப்படவில்லை; எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தனதறிக்கையில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அசராங்கம்,
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்காவை பரிந்துரைப்பதன் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறலை அடைய முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஐ.நா உயர்
ஆணையாளர் பேரவைக்கு அனுப்பிய தனது அறிக்கையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பு நாடுகளை
வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார். ஐ.நாவின் முன்னாள் உயர் ஸ்தானிகர்கள், முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும்
சிறிலங்கா தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்களின் நிபுணர் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் கடந்த பெப்ரவரி 18ம் நாளன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டுமென ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளனர். இந்த கோரிக்கை சமீபத்திய பி 2
பி பேரணியில் (பொத்துவில் முதல் பொலிகண்டி வரை) பல்லாயிரக்கணக்கான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டது. 2011ம்
முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இக்கோரிக்கையினை ஐ.நாவுக்கான மனுவில் தெரிவித்திருந்ததோடு,ஒரு மில்லியன் கையொப்பங்களை பெற்று வலியுறுத்தி 2015ம் ஆண்டில் வலியுறுத்தியிருந்தது.
சிறிலங்கா தொடர்பான முகன்மை குழு சமர்ப்பித்த ஆரம்ப (Zero Draft Resolution) தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள்
புரிந்தவைர்களை பொறப்புக்கூற வைப்பதில் தோல்வியடைகிறது. நீதிக்காக போராடும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூச்சிய ( Zero )
வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது. இதனால் நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம்.
பேரவையின் கடமைகளையும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான உலகளாவிய அறைகூவலை பூர்த்தி செய்யவும் ஒரு புதிய தீர்மானத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த அமர்வு ‘மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் மிக உயர்ந்த நியமங்களை நிலைநிறுத்துவது’, ‘மனிதனின்
முழுமையான செயல்பாட்டை ஊக்குவித்தல்’ உள்ளிட்ட நோக்கத்தையும் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதோடு மேம்படுத்துதல், ‘நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித
உரிமைகளை காக்கும் கடமைகள்’,’ மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு பங்களிப்பு செய்தல் ‘ ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும். என குறித்துரைத்துள்ளதோடு,
உலகெங்கிலும் உள்ள இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஆளானவர்கள்
நீதிக்காக மனித உரிமைகள் பேரவையையே நாடுகின்றனர் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளது
ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் அமைதியான முறையில், பிரென்சு மண்ணில் மேற்கொண்டு வரும் அரசியல் செயற்பாடுகளுக்கு, ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின்
செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக குற்றஞச்சாட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அராங்சகத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள், இவ்விடயத்தில் உண்மைத்தன்மை வெளிக்கொணர நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தலைநகர் பரிசின் அமைந்துள்ள தமிழர் வர்த்தக மையப்பகுதியாக லாச்சப்பலில், வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, காவல்துறை சோதனையொன்றின் போது மீட்கப்பட்ட தங்கம், பெருமளவு பணம் தொடர்பில் விடுதலைப் புலிகளை இணைத்து செய்தி வெளியிட்டிருந்தமை பிரான்ஸ் தமிழர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட நபர், ‘விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்றும், இலங்கையின் பிரிவினைவாத செயற்பாடுகளுக்காக பண சேகரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் செய்தியில் குறிப்பிட்டிருந்தமை தமிழ்உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இவ்வியடம் தொடர்பில் பிரதான பிரென்சு ஊடகங்களுக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்த கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளின் கடிதத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட நபருக்கும் தமிழீழ புலிகளின் இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த இந்த சந்தேகங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. உண்மை முற்றிலும் வேறுபட்டது.
இந்த உண்மைகளின் யதார்த்தத்தை எந்தவொரு விசாரணையும் செய்யாமல் இத்தகைய குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு ஊடக ;பரப்பில் பரப்பப்படும் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.
சட்டத்தின் ஆட்சி கொண்ட பிரான்ஸ் நாட்டில் நாங்கள் இருக்கிறோம். இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதிக்கும், அரசியல் இறமைக்குமான வெளி இல்லா நிலையில், நாங்கள் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகின்றோம்.
தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம் எமக்கான நீதி கோரி போராடி வருவதோடு, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம், எமக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் பிரென்சு மண்ணில் நாம் அமைதியான முறையி;ல் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு இவ்வாறான ஆதரமற்ற செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக கருதுகின்றோம்.
எங்கள் கருத்துக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுவதோடு,செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உங்கள் ஆதாரங்களின் உண்மைத்தன்மை குறித்து உங்கள் விழிப்புணர்வை நாங்கள் கேட்கிறோம்.
எங்கள் கோரிக்கை உங்களின் கவனத்திற்கு ஈர்க்கவில்லை என்றால், இந்த விடயத்தில் நீதிமன்றத்தினை நாட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தமது கடித்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்
இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்
இலங்கையில் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்புக்கு
உரிய தீர்வினை ஐநா மனித உரிமை ஆணையம் பெற்று கொடுக்க வேண்டும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது
மனித உரிமை மையம் தனது கடமையை சரிவர செய்து .அந்த உரிமைகளை காப்பாற்ற வேண்டும் என அது வேண்டியுள்ளது
.பிரிட்டன் முன்வைக்க போகும் இந்த புதிய விடயத்தால் இலங்கை பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளது
நாளை இது தொடர்பான விவாதங்கள் ஐநாவில் இடம்பெறவுள்ள நிலையில் ,இந்தியா உதவியை இலங்கை நாடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது







