Author: நலன் விரும்பி
இலங்கைக்கு எதிராக இந்தியா செல்படாது – இலங்கை ஆரூடம்
இலங்கைக்கு எதிராக இந்தியா செல்படாது – இலங்கை ஆரூடம்
இலங்கையுடன் மிக சிறந்த நட்புடனும் ,பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்புடன் செயல்படுகிறது ,இவ்வாறான வேளையில்
இந்தியா எமக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என பீரீஸ் தெரிவித்துள்ளார்
கொழும்பு துறைமுக விடயம் பெரும் சல சலப்பை ஏற்படுத்திய நிலையில் மேற்படி விடயத்தை இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
ஐநாவில் இலங்கை விவகாரம் – நாளை – கலக்கத்தில் இலங்கை
ஐநாவில் இலங்கை விவகாரம் – நாளை – கலக்கத்தில் இலங்கை
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 24ஆம் திகதி புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் முதற்தடவையாக காணொளி ஊடாக இடம்பெறுகிறது.
பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும்.
இந்நிலையில், இலங்கையில் மனித உரிமைகள், நீதி, பொறுப்புக்கூறலைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் சபையின் புதிய தீர்மானமொன்றை போரம் ஏஷியா, சி.ஜே.ஏ, சி.பி.ஏ, சி.பி.ஜே, எச்.ஆர்.டபிள்யூ, பேர்ள் உள்ளிட்ட அமைப்புகள் கோரியுள்ளன.
பாதிக்கப்பட்ட நபர்கள் மீது குறிப்பிட்டதொரு கவனத்துடன் இலங்கையில் மனித உரிமைகள் நீதியைப் பாதுகாப்பதற்காக,
சர்வதேச உறுதிப்பாடொன்றுக்காக, மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வில் பலமான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு,
மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகளிடையே தாங்கள் வலியுறுத்துவதாக குறித்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகை
பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகை
பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான்கான் இன்று இலங்கைக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ,
இரண்டு நாட்கள் இங்கே தங்கி இருக்கும் இவர் இரு நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி ,மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பேசுவார்
எனவும் புதிய ஒப்பந்தங்களில கைச்சாத்திடுவார் எனவும் தெரிவிக்க பட்டுளள்து
இவரது இந்த வருகை இந்தியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்
இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்
இலங்கைக்கு சுமார் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது
பிரிட்டன் Oxford-AstraZeneca மருந்துகளே இவ்விதம் வந்தடைந்துள்ளது
இதனை அடுத்து வரும் நாட்களில் பல லட்சம் பேருக்கு இந்த ஊசிகள் செலுத்த படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் கொரனோவால் 500,071 மக்கள் மரணம்
அமெரிக்காவில் கொரனோவால் 500,071 மக்கள் மரணம்
அமெரிக்காவில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில்சிக்கி இதுவரை 500,071 மக்கள் பலியாகியுள்ளதாக அந்த நட்டு அரசு அறிவித்துள்ளது ,
இந்த நோயினை கட்டு படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்க பட்டுள்ள
நிலையிலும் நாள் தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அமெரிக்காவில் பலியாகிய வண்ணம் உள்ளனர்
டிரம்பின் ஆட்சி காலத்தில் இந்த நோயினால் இறந்தவர்கள் எண்பது சதவீதமானவர்கள் கறுப்பின மக்கள் என புள்ளி விபரங்கள்
காண்பிக்கின்றன ,இது திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒன்றாக பேச படுகிது
வானில் தீப்பிடித்த Boeing 777s விமானம் – அனைத்து விமானங்களும் தரையிறக்கம்
வானில் தீப்பிடித்த Boeing 777s விமானம் – அனைத்து விமானங்களும் தரையிறக்கம்
உலக நாடுகளில் அதிக விமான பாவனையில் உள்ள விமானமாக Boeing 777s விளங்குகிறது ,
சில நாடுகளுக்கு முன்பாக குறித்த விமானத்தின் வலதுபுற இயஙகிரம் ஒன்று தீப்பிடித்து கொண்ட நிலையில் மேற்படி விமான
நிறுவனத்தின் குறித்த Boeing 777s ரக விமானங்களில் பாதி தற்ப்போது தரையிறக்க பட்டுள்ள ,
பரப்பில் ஈடுபட தடை விதிக்க பட்டுள்ளது
தொடராக இவ்விதமான விபத்துக்களில் சிக்கி வருவதால் குறித்த விமானங்கள் பயண செய்திட மக்கள் அஞ்சி வருகின்றனர்
,இதனால் இந்த விமானங்களை கொள்வனவு செய்திட அடர் கொடுத்த
நிறுவனங்களும் அதனை கொள்வனவு செய்வதில் சற்று தாமதம் காண்பித்து வருகின்றனர் என குறிப்பிட படுகிறது
மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்
மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்
இலங்கை நுவரெலியா நானு ஓயா பகுதியில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று
சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில்சிக்கியது ,இதன்பொழுது
அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்
பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் ஒருலட்சத்து முப்பதாயிரம் பேர்
மரணமாகியுள்ளனர் ,மேலும் இதைவிட வீடுகள் ,வயோதிபர்
மடங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இணைக்கப்படவில்லை
இரண்டாம் அலையாக பரவி வரும் நிலையில் இவ்விதம் வசித்து
வந்தவர்கள் விபரங்கள் அறிவிக்க பட்டால் அது பல்லாயிரமாக உயரும் என எதிர் பார்க்க படுகிறது
இரண்டாம் அலையில் ,மருத்துவமனைகளில் இறந்தவர் விபரங்கள் மட்டுமே வெளியிட பட்டு வந்துள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு – விபரம் உள்ளே
பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு – விபரம் உள்ளே
பிரிட்டனில் நடைமுறையிலிருக்கும் லொக்கடவுன் திறக்க படுகிறது
அவை கட்டம் கட்டமான நகர்வின் ஊடக திறக்க பட உள்ளது என ஆளும் அரசு அறிவித்துள்ளது
எதிர் வரும் எட்டாம் திகதி பாடசலைகள் திறக்க படுகின்றன ,இரு வீட்டார் ,அல்லது ஆறு பேர் ஒன்றாக கலந்து பேச முடியும் ,
அதனை அடுத்து சித்திரை 12 ஆம் திகதி ,பார்கள் நீச்சல் தடாகங்கள்,ஆடம்பர கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க படும்
வைகாசி மாதம் 17 ஆம் திகதி நிகழ்கால கொரனோ விதிகளில் திடீர் மாற்றம் தளர்வு மேற்கொள்ள படுகிறது
அதன் படி ஒரே தடவையில் முப்பது பேர் கலந்து கொள்ள முடியும், மக்கள் வீதிகளில் நடமாட முடியும் ,அதாவது முழு லொக்கடவுன் நீக்க படுகிறது என்பதாக அரசு அறிவித்துள்ளது
இத்தாலிய தூதர் உள்ளிட்டவர்கள் -குண்டு தாக்குதலில் படு கொலை
இத்தாலிய தூதர் உள்ளிட்டவர்கள் -குண்டு தாக்குதலில் படு கொலை
கொங்கோ நாட்டில் உள்ள தமது தூதரகத்திற்கு சென்று கொண்டிருந்த இத்தாலிய தூதரக அதிகாரிகள் வாகன
தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் இத்தாலிய தூதரக அதிகாரி உள்ளிட்ட மூவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
மேற்படி தாக்குதலுக்கு இத்தாலிய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
இறந்தவர்கள் சடலங்கள் நாட்டுக்கு எடுத்துவரப் படும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன
செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் – காணொளி வெளியிட்ட நாசா
செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் – காணொளி வெளியிட்ட நாசா
நாசா விண்வெண்ளை ஆராய்ச்சி மையம் செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அனுப்பியது ,இதன் பொழுது அந்த விண்கலம்
தரை இறங்கும் பொழுது ,அதன் சத்தம் ,மற்றும் காணொளி காட்சிகளை வெளியிட்டுள்ளது
பத்து நொடிகள் அடங்கிய அந்த ஒலியில் பல விடயங்களை கணிக்க முடிவதாக அது தெரிவித்துள்ளது ,மனிதர்கள் இங்கு உயிர் வாழ
போதுமான சூழல்கள் இருப்பதாக அது தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை
ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பமாகிறது
நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில் இலங்கை புரிந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரேரணைகள் கடுமையான மொழிவுகளுடன் முன் வைக்க பட்டுள்ளன
இந்த விடயத்தில் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ,இந்த கூட்ட தொடர் தமிழர்கள் எதிர்பார்க்கும்
தீர்வினை பெற்று தருமா என்பதை முடிவில் தெரிய வரும் என தமிழர் தேசம் நம்புகிறது
நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்
நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்
இலங்கை நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி சென்ற இரு
மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது
சமீப நாட்களாக தமிழர் பகுதிகளில் பலர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டு
வரும் நிலையில் இந்த காணாமல் போதலும் இடம்பெற்றுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது
தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்
தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்
இலங்கை யாழ்பாணம் தொண்டமனாறு கடல் பகுதியில் நீராட
சென்ற பதினேழு வயது வாலிபர் ஒருவர் நீரலையில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளார்
எனினும் அவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 445 பேர் இதுவரை மரணமாகியுள்ளனர்
தொடர்ந்து இந்த நோயின் பரவல் கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள
பட்டு வருகின்ற பொழுதும் ,மக்கள் உயிர் பலியை தடுக்க முடியாது அரச நிர்வாகம் தினறி வருகிறது
காரோடு சிறுவர்களை கடத்தி சென்ற திருடர்கள்
பிரிட்டன் புறநகர் பகுதியாக விளங்கும் Birmingham பகுதியில் பதின் ஐந்து வயதுடைய திருடர்கள் சிறுவர்களுடன் காரினை கடத்தி சென்றுள்ளனர் .
சிறுவர் கடத்தல்
இயந்திரத்தை ஆன் செய்தபடி காரினை விட்டு சென்ற தந்தைக்கு ஏற்பட்ட மேற்படி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் ,
பொலிசார் சுற்றிவளைப்பு
விரைந்து செயல் பட்ட மிட்லண்ட் காவல் துறையினர் கடத்தல் காரர்களை காருடன் மடக்கி பிடித்தனர்
சிறுவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி மீட்க பட்டனர்
மேற்படி இரு கார் திருடர்களும் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
திருடர்கள்
,இவ்விருவரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் திருடர்கள் என கண்டு பிடிக்க பட்டுள்ளது
பெற்றவர்களே யாக்கிரதை பிள்ளைகளை இவ்விதம் காருக்குள் விட்டு செல்லாதீர்கள்
லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்
லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்
தீ பரவல்
லண்டன் எம் 67 வேக சாலைக்கு அருகில் அமையப் பெற்றிருந்த warehouse
ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது ,இந்த தீ பரவல் அதிவேகமாக பரவிய நிலையில் அந்த கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது
இந்த தீ பரவல் வானில் பெரும் புகை மூட்டங்களாக காணப்பட்ட நிலையில் குறித்த வேக சாலை அடித்து மூடப் பட்டதுடன்
வீட்டு யன்னல்கள் பூட்டு
அயலில் உள்ள வீட்டு யன்னல்கள் யாவரும் அடித்து பூட்டும்படி உத்தரவிடப்பட்டது
இந்த தீயினை கட்டுப்படுத்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் களத்தில் குவிக்க பட்டனர்
தொடரும் விசாரணைகள்
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை
பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை
பிரிட்டன் Scarborough, North Yorkshireபகுதியில் நபர் ஒருவரை அதிகாலை வேளை கத்தியால் குத்தி கொன்ற ஐந்து பேர் அடங்கிய
ரவுடி கும்பளுக்கு நூறு வருடம் சிறைவழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இளம் கொலையாளிகள்
மேற்படி கொலையை புரிந்த ஐவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது
நீண்ட வருடங்களாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் மூலம் இந்த தீர்ப்பினை நீதிமன்றம் அதிரடியாக வழங்கியுள்ளது
அதிக ஆண்டுகள் தீர்ப்பு வழங்க பட்டுள்ளது இவ்விதமான கொலைகளை புரியும் குற்றவாளிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
இன்று சற்று முன்னர் நையீரியா நாட்டில் Air B350i என்ற இலகுரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வானில் தீப்பிடித்த படி எரிந்து
வீழ்ந்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணம் செய்த ஏழுபேர் தீயில் கருகி பலியாகினர்
விமான பாகங்கள்
விமானத்தின் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகிறது ,குறித்த விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இயந்திர கோளாறு
குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்
கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
பொலீஸ் விசாரணை
,தற்போது நாம் கிளிநொச்சி காவல்துறையினரை தொடர்பு கொண்டு வினவியபோது இறப்பை உறுதி படுத்திய அவர்கள் இது ஒரு தற்கொலை என்றனர்
நாம் இது திட்டமிப்பட்ட படு கொலையாக உள்ளதாக சந்தேகம் உள்ளது என்ற பொழுது ,விசாரணைகள் இப்பொழுது ஆரம்பிக்க
பட்டுள்ளது என்றும் ,விரைவில் இது தொடர்பான முழுமையான விபாரங்கள் தெரிய படுத்த படும் என போலிசார் நமக்கு தெரிவித்தனர்
பளை,முரசுமோட்டை வாலிபர்
பளை,முரசுமோட்டையை பூர்வீகமாக கொண்ட சுமார் நாப்பது வயது மதிக்க தக்க இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
சகோதரன் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார் இன்னும் வரவில்லை என அவரை தேடி சென்ற பொழுது ,அவரது வாகனம் குறித்த பகுதியில் நிற்பதை கண்ணுற்ற சகோதரன் ஒடி சென்று பார்த்த
பொழுது அவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி உற்றுள்ளனர் ,அதன் பின்னர் போலீசாருக்கு தெரிய படுத்த பட்டுள்ளது
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த படுகிறது

மர்ம கொலைகள்
கோத்தபாயவின் ஆட்சியில் தொடராக இவ்விதமான மர்ம கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,தனி நபர் ,அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது
இறந்தவர் இவ்விதமான தற்கொலையில் ஈடுபடும் சிந்தனை கொண்டவர் அல்ல என்பதே உறவினர்கள் வாதமாக உள்ளது
இந்த மர்ம கொலைகள் பின்னால் உள்ளவர்கள் கண்டுபிடிக்க பட்டு தண்டிக்க படுவார்களா ..?







