Tag: ஐக்கிய நாடுகள்
இலங்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை
இலங்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை
இலங்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா. ஆதரவு அறிக்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளுக்கு இலங்கை தொடர்ந்து தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறை
1985 முதல் 2024 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய ஒரு புதிய அறிக்கையின்படி, மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இருந்து
தப்பியவர்களை இலங்கை தொடர்ந்து தோல்வியடையச் செய்து வருகிறது, பல தசாப்தங்களாக அரச பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டதாகக்
கூறப்படும் துஷ்பிரயோகங்கள் பெரும்பாலும் விசாரிக்கப்படாமலும் தண்டிக்கப்படாமலும் உள்ளன.
ஆயுத மோதலின் போதும் அதற்குப் பின்னரும், முதன்மையாக ஓரங்கட்டப்பட்ட தமிழ் சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எதிரான
பாலியல் வன்முறை, பாலியல் சித்திரவதை மற்றும் பிற வகையான பாலியல் வன்முறைகளின் ஒரு வடிவத்தை அறிக்கை ஆவணப்படுத்துகிறது. ஒரு சிறிய
எண்ணிக்கையிலான வழக்குகள் தண்டனை பெற்றாலும், பெரும்பாலான விசாரணைகள் முடங்கின, சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்
அல்லது கூறப்படும் சாட்சிய சிக்கல்கள் காரணமாக வழக்குகள் சரிந்தன, இது அறிக்கை வேரூன்றிய தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாச்சாரம் என்று விவரிக்கிறது என்பதை வலுப்படுத்துகிறது.
கண்டுபிடிப்புகளின்படி, இராணுவம், கடற்படை, விமானப்படை
கண்டுபிடிப்புகளின்படி, இராணுவம், கடற்படை, விமானப்படை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட
பாதுகாப்புப் படைகள் – குறிப்பாக அரசு நடத்தும் தடுப்பு மையங்களில், மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டன. 2009 ஆம் ஆண்டு போர்
முடிவடைந்த பின்னரும், 2024 ஆம் ஆண்டு வரையிலான சமீபத்திய சம்பவங்கள் நடந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். ஆலோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் குறிப்பிடத்தக்கவை.
கட்டளை பொறுப்பு அரிதாகவே ஆராயப்பட்டுள்ளது, குற்றவாளிகள் தாங்கள் உத்தரவுகளின் கீழ் செயல்பட்டதாக சாட்சியமளித்த வழக்குகளில் கூட.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இலங்கையின் சட்டப்பூர்வ கடமைகள் இருந்தபோதிலும், வழக்குத் தொடுப்புகள் அரிதாகவே உள்ளன
என்றும், சட்டரீதியான வரம்புகள், வழக்குத் தொடுப்பவரின் விருப்புரிமை மற்றும் முறையான தாமதங்கள் பொறுப்புக்கூறலை மேலும் குறைமதிப்பிற்கு
உட்படுத்தியுள்ளன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. முந்தைய ஆண்டுகளில் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பாலியல் வன்முறை
புகார்களில், ஒரு சில மட்டுமே பாதுகாப்புப் பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டன.
2018 இல் நிறுவப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலகம் உட்பட, பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் நோக்கில் உள்ள வழிமுறைகள்
அர்த்தமுள்ள இழப்பீடு, மறுவாழ்வு அல்லது உளவியல் ரீதியான ஆதரவை வழங்கத் தவறிவிட்டன என்பதையும் அறிக்கை கண்டறிந்துள்ளது.
பாலியல் வன்முறை தொடர்பான இழப்பீடுகளைப் பெற்றதாக ஆலோசிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்களில் எவரும் தெரிவித்தனர்.
அவசர சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்து, கடந்த கால துஷ்பிரயோகங்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும், முறையான மன்னிப்பு கேட்கவும்,
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை ரத்து செய்யவும், மோதல் தொடர்பான பாலியல் வன்முறை வழக்குகளை அரசியல் தலையீடு இல்லாமல்
கையாள ஒரு சுயாதீனமான புலனாய்வு மற்றும் வழக்குத் தொடுப்பு அமைப்பை நிறுவவும் அறிக்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உயிர் பிழைத்தவர்கள் கவனிக்கப்படாத அதிர்ச்சியுடன் தொடர்ந்து வாழ்வார்கள் என்றும்,
அதே நேரத்தில் இலங்கை தனது பொறுப்புக்கூறல் கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக மேலும் சர்வதேச விசாரணைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என்றும் அது எச்சரிக்கிறது.
பாலஸ்தீனம் தனி நாடக ஏற்க ஐக்கிய நாடுகள் தயார் கொதிக்கும் இஸ்ரேல்
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா (Kanni Wignaraja) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தது.
நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய உதவிப் பொதுச் செயலாளர், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கு நீண்டகால அடிப்படையில் முன்னேறுவதற்கும் நாட்டின் எதிர்காலப் பயணத்தை உறுதி செய்வதற்கும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழு ஏற்றுக்கொண்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
பாராளுமன்ற அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நாட்டின் அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடத்தும் கலந்துரையாடல்
என்பன தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், பிரதிநிதிக் குழுவுக்கு விளக்கமளித்ததுடன், தூதுக்குழு அந்த நடவடிக்கைகள் தொடர்பில் தமது பாராட்டுகளை தெரிவித்தது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொழம்பகே,
உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி
2022 செப்டெம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் அறிக்கையை வழங்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு, குழு 77 மற்றும் சீன உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின்
கூட்டம், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர் கூட்டம் மற்றும் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான பல்வேறு கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி
ஐ.நா. உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். மேலும் அவர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்திப்பார்.
இலங்கைத் தூதுக்குழுவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான்
பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமர்வின் உயர்மட்ட அமர்வு 2022 செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெறும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இருந்து ரசியா நீக்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இருந்து ரசியா நீக்கம்
உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ள ரசியாவின் இராணுவ நடவடிக்கையை
அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்டுள்ளது
உக்கிரேனில் இனப் படு கொலையை ரசியா நடத்தி வருவயதான குரல்கள்
ஓங்கி ஒலித்த நிலையில் இந்த தடை விதிக்க பட்டு நீக்க பட்டுள்ளது
இது மேலும் ஐரோப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க
படுகிறது ,இதுவே மூன்றாம் உலக யுத்தமாக
மாறும் நிலை ஏற்படும் என ஏதிர்பார்க்க படுகிறது
ஐக்கிய நாடுகள் சபைக்கு மகயர் அனுப்பும் கூத்தமைப்பு
ஐக்கிய நாடுகள் சபைக்கு மகயர் அனுப்பும் கூத்தமைப்பு
தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்தயிகுழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன்,
“வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பிரச்சினை தற்போது பூதாகாரமாக மாறியிருந்கின்றது. இது தொடர்பாக சில பொது அமைப்புகள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தை உடனடியாக
அமுல்ப்படுத்தவேண்டும் என கலந்துரையாடடியுள்ளோம். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது எமது பிரதான கடமையாக கருதுகின்றோம்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்துமூலான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிடும். மார்ச் 3ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு ஆய்வு இடம்பெறும். அதற்கு உதவியாக இன்றைய
சூழலை அவர்கள் அறியும் முகமாக தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றை தயார் செய்கின்றோம். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணமும்
இரா. சம்பந்தனிடம் உள்ளது. அது நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்படும். மிக விரைவில் அதற்கு இணக்கம் காணப்பட்டு தமிழ்த்
தேசியக்கூட்டமைப்பின் கடிதமாக இரா. சம்பந்தனின் ஒப்பத்தோடு அனுப்பி வைக்கப்படும்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது சிங்கள பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியான மாகாண சபை முறைமை புதிய அரசியல் அமைப்பில்
இல்லை என்கின்ற விடயம் தொடர்பாக கேட்டேன். அவர்கள் அதனை அடியோடு மறுக்கின்றார்கள். அவ்வாறான பிரேரணை வரவில்லை எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் அந்த செய்தி தவறானது என அமைச்சர்கள் எனக்கு கூறினார்கள். இதில் பத்திரிகை சொல்வது உண்மையா அமைச்சர்கள் சொல்வது உண்மையாக என்பது எனக்கு தெரியாது.
அத்துடன் வெள்ளிக்கிழமை காலையில் பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்படுகின்றது என ஒரு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது கண்துடைப்பு நாடகம் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் அதில் எதுவுமே
இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு விடயத்தையும் எடுத்துப் பார்த்தால் அதில் ஒரு மாற்றமும் கிடையாது. ஆகவே வெளிவிவகார அமைச்சர் பீரிஸிடம் ‘ரிபோம்’ (Reform) என்ற ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் புதிய விளக்கம்
கொடுக்கப்படவேண்டியுள்ளது என தெரிவித்திருந்தேன். அவர் சிரித்து விட்டு எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்துக்கு
நான் அறிவித்துள்ளேன் என்பதை அவருக்கு தெரிவித்தேன். இது தொடர்பாக உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் வரும் என நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கை
அரசாங்கம் இவ்வாறான மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதனையும் அவருக்கு தெரிவித்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார்,
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்-பீரிஸ் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்-பீரிஸ் சந்திப்பு
தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. வின் அரசியல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளர் திரு. காலித்
கியாரி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர் 23ஆந் திகதி, செவ்வாய்க் கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, தொற்றுநோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய
முன்னேற்றத்தை சுட்டிக் காட்டிய வெளிநாட்டு அமைச்சர், உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தினார்.
இலங்கை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட சர்வதேசக் கடமைகளுக்கு அமைவாக, நிலையான சமாதானத்தையும்
அபிவிருத்தியையும் அடைந்து கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உதவிச் செயலாளர் நாயகம் கியாரியுடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா சிங்கர் ஹம்டி மற்றும் ஏனைய ஐ.நா. அதிகாரிகள்
இணைந்திருந்தனர். வெளியுறவுச் செயலாளர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக இடம்பெற்ற அதிமேதகு ஜனாதிபதி மற்றும் ஐ.நா. பொதுச்
செயலாளருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பின் தொடர்ச்சியாக, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உதவிச் செயலாளர் நாயகம் கியாரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் முன்பாக தமிழர்கள் போராட்டம் – பறந்த புலிக்கொடி படங்கள் உள்ளே
ஐக்கிய நாடுகள் முன்பாக தமிழர்கள் போராட்டம் – பறந்த புலிக்கொடி படங்கள் உள்ளே
சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.
48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) பெரும் எழுச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காலை (20/09/2021) ஐக்கிய
நாடுகள் அவையின் ஆணையாளர் வதிவிடத்தில் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களால் மனு கையழிக்கப்பட்டது. குறிப்பாக சிங்களப் பேரினவாத அரசினால்
மெற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சி ஆவணங்களும் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்தும் ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) எழுச்சிக்கோசங்களோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறக்க எழுச்சிகரமான மக்கள் வெள்ளத்தோடு மேலும் நிகழ்வுகள் தொடர்ந்தன.
கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் ஆரம்பித்து 6 ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் 1280 Km பயணித்து முக்கிய பல அரசியல் மையங்களின் ஊடாக ஐரோப்பிய நாடுகள் தமிழர்களின்
நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும் என 23ம் தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்கள் தம் விடுதலைப்பயணத்தில் தாம் கண்ட அரசியல் முன்னேற்றத்தினையும் அனுபவங்களினையும் மக்களோடு பகிர்ந்து கொண்டனர். சிறிலங்காப்
பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினவழிப்பின் சாட்சிகள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட
வேண்டும். எனவே அனைத்து தமிழ் உறவுகளும் தங்கள்
சாட்சியங்களை வாய்மூலமோ எழுத்துமூலமோ நிரூபிப்பதன் ஊடாக கால தாமதமின்றி சிங்களப் பேரினவாத அரசினை சர்வதேச சமூகம் தண்டிக்க முடியும். எனவே அதற்கான முன்னேற்பாடுகளுக்கான அறைகூவலும் மனித நேய செயற்பாட்டாளர்களால் விடப்பட்டது.
தொடர்ந்தும் நடைபெற்ற நிகழ்வில் எழுச்சிகரமான கவிதைகளும் , தமிழ் , டச்சு,பிரஞ்சு, மற்றும் ஆங்கில மொழியிலுமாக இளையோர்களால் எழுச்சி உரை நிகழ்த்தப்பட்டது. பன்னாட்டு வாழிட உறவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எதிரொலியினை அழுத்தம் திருத்தமாக இடித்துரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று (20/09/2021) தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 6வது நினைவு நாளின் 34 ம் ஆண்டில் நாம் நின்றுகொண்டு இருக்கின்றோம் ஆனால் இன்னும் விடுதலைப் பசி தீராத எம் திலீபன் அண்ணாவின் கனவும் அற்பணிப்பின் நோக்கமும் ஈடேற வேண்டும் என்றால் தமிழ்
மக்கள் அனைவரும் தம் வாழிட நாடுகளில் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்து வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு
நாம் வாழும் நாடுகள் செவிமடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். காலம் தந்த அரிய வாய்பினை தவறவிட்டு வரலாற்றுப் பெரும் துயருக்கு சொந்தமாகாது இனிதே எம் தமிழீழ மண்ணை மீட்டெடுப்போம் வாரீர் என முழக்கங்கள் எழுப்பியவாறே நம்புங்கள் தமிழீழம் பாடலோடு இன்றைய அறவழிப்போராட்டம் நிறைவு பெற்றது.
எம் அன்பான தமிழீழ உறவுகளே நாம் அனைவரும் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பின் வடுக்களை சுமந்து கொண்டே வாழ்கின்றோம். அவ்விழப்புக்களை சாட்சியங்களாக சமர்பித்தலின் மூலம் நிச்சயம் சர்வதேச மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் தமிழீழ சுதந்திர தேசத்தினை நாம் விரைவாக மீட்டெடுக்க முடியும். எனவே உங்கள் வாழிட நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக சாட்சியங்களை சமர்ப்பிக்க தவறாதீர்கள்.
“காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் , நாம் கொண்ட இலட்சிய நோக்கம் என்றும் மாறாது”
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.






ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக 18 நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக 18 நாடுகள்
இன்று ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெறும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையை ஆதரித்து
பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளித்துள்ளது ,இதில்
சீனா,பாகிஸ்தான் இந்தியா உள்ளிட்டவர்கள் அங்கம் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆனால் அமெரிக்கா,பிரிட்டன் ,பிரான்ஸ் ,கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக ,தமிழர்களுக்கு ஆதரவாக பேசுகின்றன
ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் நெருக்கடி ஏற்படும் இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் நெருக்கடி ஏற்படும் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் 43 ஆவது கூட்ட தொடரில் இலங்கை பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என அரசு அறிவித்துள்ளது .
இறுதி போரில் போர்குற்றங்களி புரிந்து ஆட்சியில் அமர்ந்துள்ள அரசு முதன் முறையாக நேரடியாக இந்த எதிர்ப்பை சந்திக்க உள்ளது ,
அதனை அடுத்தே இம்முறை பெரும் நெருக்கடி நிறைந்த ஒன்றாக இது அமையும் எனவும் ,
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் மேலும் கால அவகாசம் வழங்கும் நிகழ்வுகள் அங்கு இடம்பெறுவது கடினம் என இலங்கை முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் கடந்த ஆட்சியில் பொறுப்பு கூறலுக்கு பதில் கூற தவறியதன் விளைவே இந்த நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்துள்ளது










