Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ

லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ

பண மோசடி

லண்டனில் தமிழர்களிடம் HMRC என கூறி பணம் பறிக்கும் ,கும்பல் ஒன்று சிக்கியது ,அவர்களது மிரட்டல்களையும் ,எவ்வாறு

மோசடியில் ஈடுப்புகின்றனர் என்பதை தமிழ் வாலிபர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்ட திகில் காணொளி இது,அவர் அந்த கும்பலை எவ்வாறு கழுவி ஊத்தியுள்ளார் என்பதற்கு இது நல்ல சான்று

பணத்தை இழந்த தமிழ் பெண்

சில நாட்களுக்கு முன்னர் லண்டன் குறைடன் பகுதியில் தமிழ் பெண்ணிடம் மூவாயிரம் பவுண்டுகளை குறித்த கும்பல் மோசடி செய்துள்ளது

பணத்தை செலுத்திய பின்புதான் இவர்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என அந்த பெண் புரிந்துள்ளார் ,

அவர் மொன்சா காட் மூலம் பணத்தை செலுத்தியதால் அதனை மீள் பெற முடியாத நிலையில் சிக்கியுள்ளார் ,வங்கிகள் மூலம் செலுத்தி இருப்பின் அவர் அதனை பெற்று கொண்டிருக்க முடியும் .

பொலிஸ் விசாரணை

குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் ,தமிழர்களே இந்த காணொளியை முடிந்தவரை உங்கள்

நண்பர்களுக்கு பகிருங்கள் , இவ்வாறான மோசடி கும்பலிடம் இருந்து ஏனையவர்களை காப்பாற்றி கொள்வோம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=KNqvk7jSfrY&feature=youtu.be
Posted in Uncategorized

ஐயா தா.பாண்டியன் மரணம் video

ஐயா தா.பாண்டியன் மரணம் video

இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் அவர்கள் மரணம் அடைந்துள்ளார் ,


சிறுநீரக தொற்று நோயினால் ரஜீவகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த அவர் ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

பல்வேறு பட்ட அதி சிறப்பு மிகு வரலாற்றுக்கு நூல்களை தமிழாக்கம் செய்து படைத்தவர் மட்டுமல்லா பல சொந்த நூல்களையும் எழுதி வெளியிட்டவர்

இவர் எழுதிய முக்கிய குறிப்பு வரலாற்று நூல் என்னை மிகவும் கவர்ந்தது ,அவ்வாறான ஒருவர் இன்று மரணம் எய்தியது மனதிற்கு வேதனையாக

உள்ளது ,அன்னார் சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்

clcik here video

Posted in Uncategorized

கப்பலை கடத்திய வடகொரியா -$2.3 பில்லியன் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கப்பலை கடத்திய வடகொரியா -$2.3 பில்லியன் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

வடகொரியா இராணுவத்தால் 1968 ஆம் ஆண்டு சிறை பிடிக்க பட்டஅமெரிக்காவின் USS Pueblo என்ற கப்பலில் பணியாற்றிய 83

மாலுமிகளில் ஒருவர் பாலியானார் ,மேலும் அந்த கப்பல் சேதமடைந்தது

மேலும் இதில் பணிபுரிந்த மாலுமிகள் மனநிலை பாதிக்கும் படியாக வடகொரியா இராணுவம் நடந்து கொண்டது என கூறி ,மேற்படி

கப்பல் சிறைபிடிப்புக்கு எதிராக வழங்க பட்ட நீதிமன்ற தீர்ப்பில் அவர் தம் குடும்பம் ,மற்றும் கப்பல் சேதம் என்பனவற்றுக்கு

வடகொரியா சுமார் $2.3 பில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

இந்த தீர்ப்பினை அடுத்து குறித்த பெரும் தொகை பணத்தை

வடகொரியா வழங்குமா என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்

Posted in Uncategorized

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்

இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் எல்லையாக விளங்கும் காஸ்மீரில் தொடர்ந்து போர் இடம்பெறு வந்ததது ,

இதனை அடுத்து இருநாட்டு இராணுவம் ஆழ ஊடுருவி தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருந்தன ,

இவ்வாறான நிலையில் தற்பொழுது இரு நாடுகளுக்கு இடையில்

இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து தற்போது குறித்த சர்ச்சைக்குரிய பகுதியில் சமரசம் நிலவுகிறது

Posted in Uncategorized

இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை

இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை

எதிரிதிரியாவில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் அரச இராணுவம்

தனது எதிரி மக்கள் எனப்படுபவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை ஒரே நாளில் படுகொலை செய்துள்ளது

மேற்படி பாடுகொலைக்கு எதிராக மனித உரிமை ஆணையம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது


,பயங்கரவாதிகள் என்ற போர்வையில் அவர் தம் மொழி பேசும்

மக்களை இவ்வாறு ஈவிரக்கமின்றி இராணுவத்தினர் கொன்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்

ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்

சிரியாவில் நிலைகொண்டு ஈரானுக்கு ஆதரவாக இயங்கி வரும் கிளர்ச்சி படைகள்

நிலைகள் மீது அமெரிக்கா இராணுவத்தினர் வான்வழியாக அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி விடுத்த தாக்குதல் உத்தரவை அடுத்து

மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன
ஈரானுடன்

நல்லுறவு மேம்படும் நோக்குடன் ஒருபுறம் ஈடுபட்டு கொண்டவாறே மறுபுறம் ஈரானின்

வலது கையாக விளங்கும் போராளிகள் மீது தீவிர தாக்குதலை விரிவ படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

கொழும்பில் 10 தாவது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

கொழும்பில் 10 தாவது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

இலங்கை கொழும்பு Durdans மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வந்த

வியாபாரி ஒருவரது மகன் ,அந்த மருத்துவ மனையில் இருந்து

தப்பித்து ஓடினார் ,அதன் பின்னர் பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்

மனநிலை பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இவ்விதம் தற்கொலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

கொரனோ தாக்குதலில் பிரேசிலில் 250.000 மக்கள் மரணம்

கொரனோ தாக்குதலில் பிரேசிலில் 250.000 மக்கள் மரணம்

உலக உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரேசிலில் இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்

மேலும் தொடர்ந்து மரணங்கள் இடம்பெற்று வருகின்றன


உலகில் அதிக தொகையில் மக்கள் இறந்த நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது


இந்த நோயினை தடுக்கும் மருந்துகள் கண்டு பிடிக்க பட பொழுதும் தொடர்ந்து உயிர்பலிகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு

இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு

இலங்கை அரச பயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கியா நாடுகள் மனித உரிமை பேரவையில் விவாதம்

இடம்பெற்று வருகிறது ,இதில் ஆளும் அரசு புரிந்த படு கொலைகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்க பட மக்கள்

நின்மதியாக வாழும் வாழ்வுரிமை நிலைநாட்ட பட வேண்டும் என பிரிட்டன் ,அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன் ,கனடா ,ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்தன

ஆனால் இதற்கு எதிராகவும் ,இலங்கைக்கு ஆதரவாகவும் ,வடகொரியா,,பாகிஸ்தான்,சிரியா,நேபாளம்

,மலேசியா,கியூபா,எகிப்த்,கொலம்பியா,வியட்நாம் ,பிலிப்பைன்ஸ்,ரசியா,எரித்திரியா ,உள்ளிட்ட நாடுகள் இயங்கின

யார் பக்கமும் சர்ப்பினிற் இந்தியா ,ஜப்பான்,அவுஸ்ரேலியா உள்ளிட்டவை ,

வெளியில் நின்றன ,இதே நிலைய இந்தியா தொடர்ந்தும் செய்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

Posted in Uncategorized

நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது

நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது

இலங்கை திருகோணமலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆயுத முனையில்

புகுந்த திருடர்ககள் அப்கிருந்து சுமார் 3,8 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடினர்

மேற்படி கொள்ளை சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட

விசாரணைகளின் பின்னர் தற்போது ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர் தொடர்நது தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி

கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு

தலைவராகியுள்ளார் ,பரம்பரையாக ஆண்டு வந்த பண்டாரநாயக்காவின் கட்சி இப்பொழுது பறிபோயுள்ளது

மைத்திரி தெரிவான நிலையில் மீளவும் சந்திரிக்கா மற்றும் ,மைத்திரிக்கு இடையில் மோதல் நிலை நீடித்து செல்கிறது

மேற்படி கட்சியினுள் முக்கிய பதவி நிலைகளில் உள்ளவர்கள்

பெரும்பாலானவர்கள் சிங்கள பபவுத்த இனவாத கொள்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது

போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது

இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் போதைவஸ்து

வியாபாரம் பல்கி பெருகியுள்ளது ,இளைய சமுதாயம் தவறான வழியில் வழி நடத்த படுகிறது

கடந்த வருடம் மட்டும் இந்த வியாபாரத்தில் ஈடு பட்ட சுமார் 61,500

பேரினை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்

தொடந்து இவ்விதமான முக்கிய நபர்கள் கைது செய்ய பட்டு

வருகின்ற பொழுதும் ,மேற்படி போதைவஸ்து பாவனையை ஒழிக்க முடியவில்லை

Posted in Uncategorized

யாழில் அரச அதிகாரிகள் மீது – தொடர் தாக்குதல்

யாழில் அரச அதிகாரிகள் மீது – தொடர் தாக்குதல்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை கைது செய்திட சென்ற மதுவரி திணைக்கள

அதிகாரிகள் மீது திடீரென குறித்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்

இந்த தாக்குதலை நடத்தியவர்களினால் குறித்த அதிகாரிகள்

பலமாக தாக்க பட்டுள்ளனர் ,இந்த தாக்குதலில் மூவர் காயங்களுக்கு

உள்ளாகினர் ,மேலும் இவர்கள் உற்பத்தி புரிந்த 700 லீட்டர் கசிப்பு பறிமுதல் செய்ய பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

45 கிலோ போதைவஸ்துடன் இராணுவ சிப்பாய் கைது

45 கிலோ போதைவஸ்துடன் இராணுவ சிப்பாய் கைது

இலங்கை கொரனோ பகுதியில் வான் ஒன்றில் நாற்பத்தி ஐந்து கிலோ எடையுள்ள போதைவஸ்த்தை எடுத்து சென்று கொண்டிருந்த

இலங்கை இராணுவத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை போலீசார் வழிமறித்து கைது செய்தனர்

இவரது வாகனத்தை சோதனை செய்த பொழுது அதற்குள் மேற்படி போதைவஸ்து இருப்பது

கண்டு பிடிக்க பட்ட நிலையில் அவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in Uncategorized

கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு

கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு

மனித உரிமைகள்

ஆளும் இலங்கை அர சாட்ச்சியில் மக்களின் மனித உரிமைகள் பேணி பாதுகாக்க படவில்லை எனவும் ,

அவை மீளவும் தலைவிரித் தாடுவதாக ஐக்கிய நாடுகள் மனித பேரவையில் நேற்று முன்வைக்க பட்ட பிரேரணையில் தெரிவிக்க பட்டுள்ளது ,

விதி மீறல்

பொறுப்புக் கூறல்,நல்லிணக்கம் ,தீர்வு,மனித உரிமைகள்,பேணி காப்பதில் இதுவரை அரசு எவ்வித விடயத்தையும் நடைமுறை

ப்படுத்தவில்லை என காட்டமாக தெரிவிக்க பட்டுள்ளது
புதிய 20 தவாது சட்ட சீர் திருத்தும் மக்களுக்கு முற்றிலும் எதிரானது எனவும் சுட்டி கட்ட பட்டுள்ளது

முஸ்லீம் அடக்குமுறை

மேலும் பரவி வரும் நோயின் பொழுது முசுலீம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் கூட அவற்றுக்கு நீதி

மறுக்க பட்டு அடக்கியாளும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

சர்வதேச ச நீதி விசாரணை

இலங்கை ஆளும் அரசுக்கு இந்த பிரேரணை பெரும் நெத்தியடியாக வீழ்ந்துள்ளது ,எனினும் அடுத்து வரும் அறிக்கையில் மிக முக்கிய

விடயங்கள் இலங்கை மீது திணிக்க படும் எனவும் ,அவை சர்வதேதச நீதிமன்றில் இலங்கையை பரப்படுத்தும் பொறிமுறை க்கு உள்ளாக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் இன அழிப்பை மறைக்க -இந்திய உதவியை கோரும் இலங்கை

தமிழ் இன அழிப்பை மறைக்க -இந்திய உதவியை கோரும் இலங்கை

இலங்கையில் ,தமிழ் மக்கள் ஆளும் சகோதர ஆட்சி காலத்தில் அழிக்க பட்டனர்,அவர்களின் இந்த அழித்தொழிப்புக்கு எதிராக

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நிலவி வருகிறது ,இதற்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியாவின் உதவிய இலங்கை

கோரியுள்ளது ,தமிழர்களை அழித்தொழிக்க இந்தியா

போராயுதங்கள்,மற்றும் இராணுவத்தை வலங்கை பேர் உதவி புரிந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே

நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே

பிரிட்டன் University Wishaw மருத்துவ மனையில் இருபத்தி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் பெண் ஒருவர் சிசு ஒன்றை

பிரசவித்துளளார் ,இவ்வாறு பிறந்த சிசு சுமார் நான்கு மாதங்கள் மருத்துவ மனையின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து சிகிச்சை

வழங்க பட்டு வந்தது ,அதன் பின்னர் தற்போது சிசு பெற்றோருடன் வீட்டுக்கு

அனுப்பி வைக்க பட்டுளளார் ,தாய் சேய் மிக நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மேற்படி சம்பவம் உலக அரங்கத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஐநா பிரேரணையை நிராகரித்த இலங்கை – தயராகும் பெரும் ஆப்பு

ஐநா பிரேரணையை நிராகரித்த இலங்கை – தயராகும் பெரும் ஆப்பு

இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள

முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது.

எந்தவொரு சுயமரியாதை, இறையாண்மை கொண்ட நாட்டிற்கும், முக்கியமாக ஆட்சி தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் ஆணையிட்டுள்ள உயர்

ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது. இது ஐ.நா. சாசனத்தின் 2 (7) வது பிரிவான ´தற்போதைய சாசனத்தில் உள்ள எதுவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவொரு அரசினதும்

உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்காது…´ ஐ முழுமையாக மீறும் செயலாகும்.

பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் தொடர்பாக வெளிவந்த பாதையானது, இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில

கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது. இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவை.

உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.

முப்பது ஆண்டுகளாக வெளியிடப்படாத மற்றும் அவற்றுள் சில உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் தக்கவைக்கப்பட்டு, அணுகுவதற்கு மறுக்கப்பட்டிருந்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக ஐ.நா மற்றும் அதன் பொறிமுறைகளுடன்

தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு வரும் இலங்கை போன்ற ஒரு நாடு தொடர்பாக, சொத்து முடக்கம், பயணத் தடைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய குறிப்புக்கள் மற்றும் தனிப்பட்ட அரசுகள் உலகளாவிய அதிகார

வரம்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான அழைப்பானது, சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றது. சில

நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையும், மற்றும் இயற்கை நீதியின் கொள்கைகளை மீறுவதுமாகும்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்திற்கும் மேலதிகமாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவல்கள், தவறான கருத்துக்கள் மற்றும் தன்னிச்சையான மதிப்பீடுகள் குறித்து இலங்கை எழுத்துபூர்வ கருத்துக்களை வழங்கியுள்ளது. உயர் ஸ்தானிகர்

அலுவலகம் தனது அறிக்கையை முன்னெப்போதும் இல்லாத பிரச்சாரத்துடன் இணைந்து வெளியிட்டமை மற்றும் குறித்த அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களை ஒரு துணை நிரலாக

வெளியிட மறுத்தமை ஆகியன வருத்தமளிக்கின்றது. இது இலங்கையையும், அறிக்கை குறித்த இலங்கையின் கருத்துக்களை சமமாகக் காணும் உறுப்பினர்களையும் இழந்துள்ளது.

இந்த சபைக்கு முன்னர் விளக்கப்பட்ட காரணங்களுக்காக இலங்கையால் நிராகரிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர் குழுவின் மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலக

விசாரணை அறிக்கை ஆகியவற்றிலிருந்தான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை மறுக்கின்றது. கூறப்பட்ட சர்ச்சைக்குரிய

அறிக்கைகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் எமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில்

தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன.

தலைவி அவர்களே, இந்த சபை மற்றும் அனைத்து ஐ.நா. அமைப்புக்களுடனான எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடுகள் இருந்தபோதிலும், வெளிப்புறமாக இயக்கப்படும்

சக்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதானது பல சவால்களை ஏற்படுத்துவதாக அமைவதுடன், இதுபோன்ற செயன்முறைகள்

ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும்.

அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு

தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

முடிவில், இந்த சபை உட்பட ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்துடன் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில், அரசியலமைப்பிற்கு

இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ விதிமீறல் – 500 பேருக்கு தண்டம்

பிரிட்டனில் கொரனோ விதிமீறல் – 500 பேருக்கு தண்டம்

இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ,அதனை கட்டு படுத்த விதிகள் விதிக்க பட்டன

,இவ்வாறான நிலையில் கடந்த 90 நாட்களில் மட்டும் சுமார் 500 பேருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து யார்டு

தெரிவித்துள்ளதுடன் .இதில் பலது கிரிமினல் குற்றமாகவும் பதிவு செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

அதிக கூடிய தண்டம் ஐம்பதாயிரம் பவுண்டுகள் வரை இடம்பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

17 வயது வாலிபனை போத்தலால் அடித்து சித்திரவதை செய்த 2 பெண்கள்

17 வயது வாலிபனை போத்தலால் அடித்து சித்திரவதை செய்த 2 பெண்கள்

திடீர் தாக்குதல்

பிரிட்டன் Johnstone, Renfrewshire பகுதியில் 17 வயது வாலிபன் ஒருவனை 25 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் அவனை சாராய

போத்தலினால் அடித்து மண்டையில் உடைத்து ,உடைந்த துகள்கள் மூலம் கால் ,மற்றும் உடம்பில் பெயரை எழுதியுள்ளனர்

இந்த வதையால் உடலில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டுள்ளன

மீட்பு

இவ்வாறான நிலையில் மீட்க பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார் ,

தொடர்ந்து அவனது வாழ்நாளில் மீள் இயங்க முடியாத பெரும் நெருக்கடி நிலைக்கு மேற்படி சம்பவம் இட்டு சென்றுள்ளது

நீதிமன்ற விசாரணை

இதனை அடுத்து குறித்த நபர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது ,தாக்குதலை நடத்தியவர்கள் ,போதைவஸ்து

,மற்றும் மன நலன் பாதிக்க பட நிலையில் இருந்தமையால் தண்டனை காலம் குறைக்க பட்டுள்ளது