சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவிற்கு சொந்தமான ஹரஹலா தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட திருடன் மீது அங்கு இருந்து வாயில் காவலாளி திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
பொலிஸ் துப்பாக்கிச் சூடு
23 வயதுடைய இளைஞனே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார் .
அவசர சிகிச்சை மேலதிகமாக வழங்கப்பட வேண்டிய காரணத்தினால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் .
அதனை அடுத்து இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய 2 போலீஸ் காவலர்கள் காவலர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் .
தேங்காய் திருட வந்தவர் மீது ஏன் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கேள்வி இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .
இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள்
இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள் என தெரிவித்து அவர்கள் மீது உடனடியாக துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்துவது இயல்பான ஒரு விடயமாக காணப்படுகின்றது.
தேர்தல் இடம்பெற உள்ள இந்த காலப்பகுதியில் சந்திரிகாவின் வீட்டில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தேர்தலை விட மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .
இது ஒரு திட்டமிடப்பட்ட சதியா அல்லது தவறுதலாக இடம்பெற்ற ஒரு விடயமா என்பது தொடர்பாகவே ,போலீசார் தற்பொழுது விசாரணை ஆரம்பித்து இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு
ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு
ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு ,ஆஸ்திரேலியா செல்லும் விசாவுக்கு கட்டுப்பாடு .
ஆஸ்திரேலிய நாட்டிற்கு இலங்கை மற்றும் உலக நாடுகளில் இருந்து மாணவர் விசா மற்றும் உல்லாச விசாவில் பயணம் செய்கின்றவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியும் ஆபத்து ஏற்பட்டு இருக்கின்றது.
வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் மக்கள் உல்லாச பயணிகளாகவும் மாணவர் விசாவை பெற்று அங்கு சென்று கல்வியை பெற்று வருகின்றனர் .
இவ்வாறு கல்வியை பெற்றுக் கொள்கின்ற இவர்கள் அங்கேயே தங்கிருந்து வேலைவாய்ப்பைதொழிலை நிரந்தரமாக பெற்று தங்கி விடுகின்றனர் .
இதனால் அவுஸ்ரேலியாவுக்கு வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது .
அதனால் 2025 ஆம் ஆண்டுக்கு உள்ளாக 50% வேதமாக குறைக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
உலகளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் வறுமை காரணமாகவே இந்த நாடுகளுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து படை எடுத்து வருகின்றனர் .
அதனை அடுத்து தற்போது ஒரு சிறிய இடம் பெற்ற சில தவிர்க்க முடியாத சம்பவங்களை அடுத்து அரசியல் ரீதியாக புதிய சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது .
இங்கு டம்பெற்ற பட்ட சில தாக்குதல் சம்பவம் அது தீவிரவாதத்தாக்குள்ள என வரையறுக்கப்பட்ட நிலையில் தற்போது குடியேற்ற வாசிகளை தடுக்கும் நகர்வில் அவுஸ்ரேலியா உள்துறை அமைச்சர் குடிவரவு அமைச்சும் செயல்பட்டு வருவதை இதன் ஊடாக காண்பிக்கின்றது .
உல்லாச விசா
மாணவர் விசாவில் உல்லாச விசாவில் செல்பவர்களுக்கு கடும் இறுக்கமான நிலை காணப்படுவதால் இலகுவாக இனி நுழைய நுழைய முடியாது என்கின்ற விடயம் தற்பொழுது அம்பலமாகி இருக்கின்றது .
உலகளாவிய ரீதியில் இடம் பெறுகின்ற யுத்தம் காரணமாக அந்த மக்களுக்கு சார்பாக சில தீவிரவாத குழுக்கள் வன்முறை சம்பவங்கள் அந்த நாட்டுக்கு ஈடுபட்டது .
இந்த நிகழ்வுகளே இந்த் விசா இறுக்க நிலைக்கு காரணம் என இப்பொழுது தெரிய வருகிறது.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா ,இந்தியாவின் உள்துறை அமைச்சரை சந்தித்தார் செந்தில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக விளங்கிவரும் செந்தில் அவர்கள் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் .
இந்த பேச்சுவார்த்தை இப்பொழுது தமிழர்களுடைய விடயம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கிழக்கு மாவட்ட ஆளுநராக தமிழர் ஒருவர்
கிழக்கு மாவட்ட ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இலங்கை வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகின்றது .
அவ்வாறு நிலையை தற்பொழுது நமது மக்களுக்கான உதவிகளை வழங்கும் நோக்குடன் இந்தியாவில் உள்துறை அமைச்சர் சந்தித்து இந்த பேச்சு வார்த்தையில் அவர் இடம்பெற்றுள்ளார்.
மக்களுக்கான உதவித்தொட்டாக தொடர்பாக அதிகம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தலில் யாருக்கு சார்பு நிலை
அதேபோல இடம் பெற உள்ள தேர்தலில் யாருக்கு சார்பு நிலை எடுக்க வேண்டும் என்று தொடர்பாக இந்த விடயங்களில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இந்தியா இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளை கட்டுப்படுத்துகிறதா என்கின்ற கேள்வி இருக்கின்றது .
உள்துறை அமைச்சர் மிக முக்கியமான அரசியல்வாதியாக கட்சியில் விளங்கி வருகின்றார் .
அவ்வாறான பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்தது மிகப்பெரும் பேசு பொருளாக ,இன்றைய இலங்கை செய்திகளில் இடம் பிடித்திருக்கின்றது.
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம், யாழ்ப்பாணம் அச்சுவலி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த மர்மகும்பல் அங்கு திடீர்னு நடத்தி மோட்டார் சைக்கிள் எரித்து வீடுகளை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர் .
மாற்று பாலினத்துக்கு எதிராக குறித்த ஊடகவியலாளர்கள் மாற்றுக்கருத்தினை தெரிவித்த நிலையில் ஆக்கிரமித்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
ஆனால் மிகப்பெரும் ஊடகவியலாளராகவும் மக்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரான பிரதிபரின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றது .
இந்த தாக்குதல் தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
இதன் பொழுது போக்கில் உள்ள வாகனங்கள் சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தின் ஆளுநரின் விசேட உத்தரவின் அடிப்படையில் நான்கு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விசாரணையின் பொழுது மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களது பின்புலம் யாது என்பது விரைவில் தெரியவரும் என்பதாக அந்த ஊடக நபர் வட்டாரங்கள் ஊடாக செய்திகள் வெளியாகி உள்ளது .
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வாள் வெட்டு அத்துமீறல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .
காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிப்பு
எனினும் காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிக்கப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் தொடர்கின்றன .
தாலியறுப்பு சம்பவங்கள், நகைதிருட்டுகள், தடுக்க முடியாது இலங்கை போலீசார் திணறி வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது ஊடகவியலாளர் வீட்டில், இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,பேசு பொருளாக தற்போது மாற்றம் பெற்றுள்ளது.
தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம்
தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம்
தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம் .கடந்த தினம் வாராந்துறையில் ரயிலுண்டு தடம் புரண்டது அடுத்து அந்த வழி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கரையோர ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியிட்ட நிலையில் காணப்படுகின்றனர் .
பாணந்துறை நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டது
கொழும்பிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டது .
அதனாலயே அந்த வழிச்சாலை தற்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் போக்குவரத்துகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரயில் தடம் புரண்ட இடத்தில் தற்பொழுது பழுது பார்க்கும் பணிகள் இடம் பெற்று வருவதால் மிக விரைவில் சாதாரண நிலைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
தொடரூந்து தடம்புரள்வது சாதாரண நிகழ்வு
இலங்கையில் இவ்வாறான ரயில்வே தண்டவாளங்களில் தடம்புரள்வது சாதாரண நிகழ்வு ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றது .
ரயில்வே தடவைகளில் ரயில் மோதி பல வாகனங்கள் மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
பாதுகாப்பற்ற கடமை ஊடாக பயணிக்கின்ற வாகனங்களை ரயிலில் மோதுண்டு காயமடைந்து அந்த வழிச்சாலைகளில் பயங்கரத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தி வருகின்றது .
அவ்வாறு தற்பொழுது கடந்த தினம் பாணந்துறை பகுதியில் ரயில் தடம் புரண்டதில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்
மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்
மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய், இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில் பதிமூன்று வயது மகளின் மார்பகங்களை படம்பிடித்த தாயார் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார் .
உறக்கத்தில் இருந்த 13 வயதுடைய மார்பகங்களை வீடியோ பிடித்த நிலையில் அதனை கண்ணுற்ற மகள் தனது சித்திக்கு தெரியப்படுத்திய நிலையில் ,32 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளுடன் பசித்து வரும் தாய்
கணவனை பிரிந்து மகளுடன் பசித்து வரும் குறித்த தாயே தனது மகளை இவ்வாறு தகாத முறையில் வீடியோ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏன் இந்த வீடியோவினை பிடித்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணங்களை மேற்கொண்ட பொழுது அதற்குரிய காரணம் கண்டறியப்பட்ட நிலையில் தற்பொழுது தாயாரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி
கணவனை பிரிந்து வசித்து வாழ்ந்த மனைவி தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
அதற்காகவே மகளின் மார்பகங்களை படம் பிடித்து சில நபர்களுக்கு அவர் அனுப்ப முனைந்தார் என்கின்ற விடயமே அதனூடாக தெரிய வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தற்பொழுது யுத்தம் முடிவுற்ற நிலையில் அதிகமான கைபேசிகள் பாவனையும் மது போதை போதை வாஸ்து பாவனைகள் தலைக்கேறிய நிலையில் இவ்வாறான அருவருப்பான சம்பவங்கள் ஆங்காங்க இடம்பெற்று வருவதாக சமூக நல அக்கறை உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர் .
வளர்ந்து வருகின்ற காலத்தில் வளர்ந்துவிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் ஒருவித மனநிலையில் அல்லது மயக்க நிலையில் தமிழர் சமூகம் மாறி செல்கின்றதையும் இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தற்பொழுது புது குடியிருப்பு பகுதியில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
தாயார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பரப்படுத்தும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

கடற்கரையில் சடலம் மீட்பு
கடற்கரையில் சடலம் மீட்பு
கடற்கரையில் சடலம் மீட்பு , களுத்துறை பஸ் கடவ பாதியில் உள்ள கொட்டல் ஒன்றின் பின்பகுதியில் உள்ள கடற்கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .
இவ்வாறு சடலமாக அமைக்கப்பட்டவர் 70 வயதுடைய முதியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவர் இயற்கையாக மரணம் எய்தினாரா அல்லது திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அங்கு இவரது உடல் வீசப்பட்டதா என்பது தொடர்பில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்து இருக்கின்றனர் .
மரண பரிசோதனை
சடலம் மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
மரண பரிசோதனை வெளியிடப்படுகின்ற தகவலின் அடிப்படையிலேயே இவருக்கு நடந்தது என்ன என்ற விடயம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இலங்கையில் நாள்தோறும் நீரேரிகள் காடுகள் ,பாழடைந்த வீடுக; , மலசல கூடங்கள் என்பனவற்றில் இருந்து மனிதர்கள் சடலங்கள் மீட்கப்பட்ட வண்ணமே உள்ளது .
அதிகரித்து செல்லும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரித்து செல்லும் இந்த படுகொலை சம்பவங்கள் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது .
இந்து தொடராக இடம்பெற்று வருகின்ற இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளது யார்.
ஏன் இந்த படுகொலை தொடர்கின்றன என்பதற்கான கேள்விகளுக்கு இலங்கை குற்ற புலனாய்வு துறையிடம் இருந்து இதுவரை எதுவும் பதிலும் வழங்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது .
கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட்
கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட்
கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட் ,பாலஸ்தீனம் காசா, கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட இஸ்திரேலியா
ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் தமது கோரிக்கைகளை இஸ்ரேலிய ஆளும் அதிபர்நிர்ணையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற டிமாண்டை கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் விடுத்துள்ளது .
அதன் அடிப்படையில் நிரந்தரமான யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் இரண்டு பாலஸ்தீன கைதிகள் யாவரும் இஸ்ரேல் சிறைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என்கின்ற இரண்டு கோரிக்கைகளிலும் இதுவரை இரும்புபொடியாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் இருந்து வருகிறது .
அதனால் தற்பொழுது ஆரம்பிக்கப்படவிருந்த சமாதான பேச்சு நடவடிக்கைகள் தற்போது இறுக்கமடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிளிங்க்டன் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று இந்த பேச்சுவார்த்தை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் .
ஹமாஸ் அமைப்பினர் கையெழுத்துட்டு இந்த பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்பொழுது கமாஸ் மீளவும் இந்த டிமாண்ட் வைத்திருப்பது இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
டிமாண்டை ஏற்க மறுத்து வருவதால் கைதிகள் விடுதலை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .
உடனடியாக கைதிகளை விடுவித்து தரும்படி இஸ்திலிய மக்கள் இஸ்ரேல் ஆளுமை நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் .
இந்த நிலையில் தற்போது கமாஸ் இவ்விதம் தெரிவித்துள்ளது அந்த மக்களுடைய போராட்டம் மேலும் நெதன்யாகுவிற்கு எதிராக வெடித்து பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

ஆயுதங்களை குவிக்கும் நாடுகள்
ஆயுதங்களை குவிக்கும் நாடுகள்
ஆயுதங்களை குவிக்கும் நாடுகள், உக்ரைனுக்கு லிதுவேனியா நாடானது பாரிய ஆயுதங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இதன் அடிப்படையில்13 கவச வண்டிகளை வழங்க உள்ளதாக அது தெரிவித்துள்ளது .
இந்த கவச வண்டிகள் போரில் முன்னரங்க பகுதியில் பயன்படுத்துவதற்கு உக்கிரன் ராணுவத்தினருக்கு மிக இலகுவாக இருக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரசியா படைகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல் தீவிரப்படுத்தும் நடவடிக்கை
அதனை அடுத்து தற்பொழுது அவசர அவசரமாக லிதுவேனியா 13 கவச பண்டிகளை வழங்கி வருகிறது .
இந்த கவச அணிகள் ஊடான தாக்குதல் தீவிரப்படுத்தும் நடவடிக்கையிலேயே இந்த கவச வண்டிகள் உக்ரைன் படைகளுக்கு தாங்கள் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன் வீழ்ந்தால் ஐரோப்பிய நாடுகள் பாரிய நெருக்கடியையும் சிக்கலையும் ஏற்படும் என்பதினால், தற்பொழுது ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக யூக்கிரனுக்கு பல மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை கொட்டி குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்
ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்
ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல் ,ஏடன் வளை குடாவில் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர் .
ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கிரேக்க நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதிய போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தின .
கப்பல் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு விமானங்களைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேலியா நாட்டு சார்பு கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு உரிமை கோரி உள்ளது .
இவர்கள் நடத்திய கப்பல் ஏவுகணை விமான தாக்குதல் மூலம் அந்தக் கப்பலின் மேல் தளத்தில் உள்ள இயந்திர அறையிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதில் பயணித்த மாலுமிகளுக்கு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டனவா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.
ரபா எல்லையில் தங்கி இருக்கக்கூடிய அப்பாவி பலத்தின மக்கள் மீது இஸ்திரேலியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையிலேயே இந்த கடல் வழி மீதான தாக்குதலை ஹவுதி படைகள் தீவிர படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடர்ந்து இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் தொடர்ந்து நீடித்தால் தமது தாக்குதல்கள் இதைவிட இரட்டிப்பாக தீவிர படுத்த படும் என ஆன்சர் அல்லா ஹவுதி படைகள் தெரிவித்துள்ளன .
இஸ்ரேல் படைகளுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்தி கடும் கண்டம் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
அடங்க மறுத்தால் எமது அடி இதைவிட இரண்டு மடங்காக பலமாக இருக்கும் என்பதே ஏமன் ஹவுதி அன்சரல்லாவின் பதிலாக உள்ளது.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது ,வடக்கு இஸ்ரேல் நகரங்களை இலக்கவைத்து ஹிஸ்புல்லா ராணுவத்தினர் 215 ரொக்கெட்டுகளைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தினர் .
வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஆக்கிரமித்து நிறுவப்பட்டிருந்த இஸ்ரேலிய ராணுவத்தின் ஆறு இரு ராணுவ முகாம்களை இலக்கு வைத்தும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து இந்த ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு இழப்பு
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மக்கள் வாழ்விடங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமான கட்டளை தளபதி ஒருவர் இஸ்ரேலிய ராணுவத்தின் விமான குண்டு வீச்சில் பலியாகியதை அடுத்து,அதற்கு பலி வாங்கும் பதிலடி தாக்குதலாகவே இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தின் ஆயுத கூடங்கள் ஏவுகணைத் தளங்கள் பீரங்கி தளங்கள் அயோண்டோம் ஏவுகணைகள் ராடர் கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் உள்ளிட்டவை மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
அதேபோல இஸ்ரேலிய ராணுவத்தின் விமானத் தளமும் இலக்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தாக்குதலை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரிய ராணுவத்தினர் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

வன்முறை கும்பல் தாக்குதல்
வன்முறை கும்பல் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீட்டின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் .
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் அந்த வீட்டுக்கு தீவைத்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் உடைமைகள் என்பனத்தை தாக்கி அழித்து சென்றுள்ளது.
அச்சுவேலி பத்மமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பிதுரை பிரதிபனின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மீன் தொட்டிகளை அடித்து உடைத்து
வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் மேற்கொண்டுள்ளது வீட்டில் ஜன்னல்கள் கண்ணாடிகள் மீன் தொட்டிகளை அடித்து உடைத்து வீட்டின் வரவேற்புரையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அடித்து தீ வைத்து சென்றுள்ளனர் .
மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வன்முறை கும்பலின் தாக்குதல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக இவர் செய்தியை பிரசுரித்ததே இதற்குரிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
திரு நங்கைகளில் உணவுகளை தவறாக சித்தரிக்காதே என அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வீட்டில் வீசி விட்டு குறித்த கும்பல் சென்றுள்ளது .
மூன்றாம் பாலினத்தின் உடைய நடவடிக்கை தொடர்பாக ஊடகவியலாளர் கடுமையான விமர்சனங்களை வைத்து ,அந்த பாலினத்தை இழிவு படுத்தியதாகவே தாக்குதலை நடத்திய குழு தெரிவித்துள்ளது .
சர்வதேச நாணய நிதியம் உதவி
சர்வதேச நாணய நிதியம் உதவி
சர்வதேச நாணய நிதியம் உதவி ,இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் குறிபிட்ட பணத்தினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
சர்வதேச நாணய இணையத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மூன்றாவது ஆரம்பிக்கப்பட்டிருந்தது .
பில்லியன் டொலர்கள்
அதனை அடுத்து திட்டமிட்டபடி இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்கள் மூன்றாவது தவணை ஊடாக வழங்க படுகிறது .
336 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிறுவனம் தற்பொழுது அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து எதிர்வரும் சில தினங்களில் 336 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
இதன் ஊடாக இலங்கை தனது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளது.
நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.
அந்த பணத்தை கடனாக வாங்கி அபிவிருத்தி பேரவையில் இலங்கை அரசு தனது பைக்குகள் போட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது .
ஆனால் தொடர்ந்து இலங்கையுடைய பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது .
அபிவிருத்தி மக்கள் நலன் என கூறிக்கொள்ளும் இலங்கையினுடைய அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் இருந்து பெறுகின்ற நிதியை தமது பொக்கட்டுக்குள் போட்டு லஞ்ச உடலில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த கடனை உரிய முறையில் அடைக்க மறுத்தால் மீளவும் இலங்கை இதைவிட பல பொருளாதார நெருக்கடியை அதிகமாக சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு ,இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷம் இலங்கையின் தமிழரச கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரனுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பினர் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தமிழருடைய பிரச்சனை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் இந்திய அரசினால் இதுவரை பாதிக்கப்பட்ட இனத்தவர்களுக்கு ஏதுவான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்றும் இதர தமிழ் கட்சிகளுடன் இந்தியா சுற்று பேச்சு வார்த்தைகள் தொடராக ஈடுபட்டு வருகிறது .
கட்சிகளுக்கு ஏற்ற தேவைகளை மட்டும் நிவர்த்தி செய்துவரும் இந்தியா பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏதுவான எந்த ஒரு தீர்ப்பை நடவடிக்கை மேற்கொள்ளாது இழுத்தடிப்பு செய்து வருகின்றது .
இலங்கையை சீனா முழுவதுமாக ஏப்பமிட்டு வரும் நிலையில் பூகோள நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மறந்து தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருகிறது.
ஆளும் மோடியின் உடைய அரசினால் எதுவிட தீர்வு கிடக்காது என்பது ஈழதமிழர்களின் நிலைப்பாடாக காணப்படுகிறது .
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தொடர்ந்து பேசுகிறது என்ன பேசுகிறது என்பதுதான் இப்பொழுது கேள்வி.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
பெண்வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ,யாழ்ப்பாணம் பருத்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கி இருந்த பொன்னியல் நோய் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
பெண் வைத்தியர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவு மயக்க மருந்தை உடலில் செலுத்தியதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
தனிப்பட்ட நபர் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக வழங்கப்பட்டது.அதனால் இவர் வேறு வழியின்றி இவ்வாறான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வழியாக இருக்கின்றன.
முப்பது வயதுடைய இளம் மருத்துவரை இவ்வாறு பலியாகி உள்ளார் .
கனவுகளை சுமந்து மருத்துவராகி
பெற்றவர்களின் கனவுகளை சுமந்து மருத்துவராகி தனது கடமையை பொறுப்பேற்ற இளம் பெண் ஒருவர் அதிக மன உளைச்சல் மேலதிகாரியினால் வழங்க பட்டதன் காரணமாக தற்கொலைக்கு சென்றுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் பல மருத்துவர்களின் அடக்கு முறையினால் பல தாதிகள் மருத்துவர்கள் சொல்லென இடர்களை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது .
தனிநபர் பழிவாங்குதல்
நிறைவேற்ற பணிப்பாளராக மருத்துவமனைகள் இருக்கும் அதிகாரிகளினால் கீழ் நிலையில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் தாதிகள் மீது கடும் தாக்குதல் தனிநபர் பழிவாங்குதல் மற்றும் சொல்லென இடர்களை அவர்கள் சந்தித்து வருவதாக அங்கு பணி புரிகின்ற பலர் இவ்விதம் குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
என்னை எரிக்காதே
என்னை எரிக்காதே
பங்கு சந்தை போல
பாவை நீ ஆடாத
ஏற்ற இறக்கம் போல
ஏறி என்னை மிரட்டாத
சேர்த்து வைத்த இலாபத்தை
சேதமாக்கி போகாத
செய்கூலி இல்லாமாலே
சென்நெருப்பை வீசாத
சாட்டை நீ பார்க்காமலே
சாளரத்தை திறக்காத
தோற்றுவிட்ட பின்னாலே
தோல்வி என்னில் வீசாத
மூச்சு முட்ட பாசம் வைத்தேன்
முன்னே என்னை முறைக்காத
தாலி கட்டும் வரைக்கும் என்னை
தள்ளி என்னை வைக்காதே
வன்னி மண் யுத்தம் போல
வாட்டி என்னை எடுக்காத
வாலாட்டும் நாயைப்போல
வாசலில வைக்காதே
உன்னை நானே நம்பி வந்தேன்
உயிரே என்னை வெறுக்காதே
வைகாசியில் பிறந்தவளே
வைக்கோலாய் என்னை எரிக்காதே .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-06-2024
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது ,கனடாவில் தமிழர் திரையரங்குக்கு தீ வைத்த நபர்கள் கைது .
கனடா டொரண்டா பகுதியில் அமைந்துள்ள தமிழருடைய பாரம்பரிய மிகப் பெரும் திரையரங்கு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இதேவேளை அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விடயங்கள் போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் உள்ளாக்கப்பட்ட வந்தது .
அதனை அடுத்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தை அறிவதற்காக கனடா குற்றப்புலனாய்வு காவல் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர் .
இதன் பொழுது பிரசன்னா என்கின்ற நபர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தில் செயலாற்றியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
எனினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டாவது சந்தேகம் நபராக கருதப்பட்ட இவர் ,விசாரணை வலயத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொழுதும் ,நீதிமன்றத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என படுகிறது .
கனடிய போலீசார்
எனினும் தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வருவதுடன் ,அவருடன் தொடர்புடைய வலயமைப்புகளை கண்டறியும் நோக்குடன் ,விசாரணைகளை கனடிய போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .
கனடாவில் ரவுடி அல்லது குழு நபர் என அழைக்கப்படுகின்றாவராக உள்ளவரே ,கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .
ரவுடி கும்பல்களுடன் தொடர்பு பட்டவர்களாக ,இவர்கள் உள்ளார்கள் என்ற சந்தேகத்தை, கனடிய காவல்துறைக்கு ஏற்படுத்தியுள்ளது .
கனடா நாட்டில் தமிழர்கள் அதி உச்ச காவல் துறை அதிகாரிகளாக கூட செயலாற்றி வருகின்றார்கள் .
அவர்களது பணிப்பின் அடிப்படையில் ,இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனடிய நாட்டில் சாதாரண மக்கள் போன்று தமிழர்கள் கனடிய நாட்டின் உடைய காவல்துறைக்கும் உளவுத்துறைக்குமாக பணியாற்றி வருகின்றனர் .
அவர்கள் ஊடாக நெருக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட, வேளையே இந்த நடவடிக்கையில் இவர் சிக்கியதான புதிய தகவலும் வழியாக உள்ளது.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு
அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு
கணவன் உயிரிழப்பு ,அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு ,உறவினர்கள் கண்ணீரில் தவிப்பு .
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் கடை ஒன்றில் கணவர் உயிரிழந்த நிலையில் ,அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வந்த பொழுது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தார் .
அதனை அடுத்து உங்களுடனே வருகிறேன் என கதறி கதறி அழுதிருக்கின்றார்.
மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி
அவ்வேளை மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணித்துவிட்டார் .
கணவன் மனைவி இருவரது சடலங்களும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கணவன் மீது அதீத பாசத்தைக் கொண்ட மனைவி நெஞ்சுவலி ஏற்பட்டு கணவனுடன் உடன் கட்டை ஏறிய சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த சம்பவம் அந்த கிராம மக்களை கண்ணீரால் அவர்களை குளிர வைத்துள்ளது .
கணவருக்கும் மனைவிக்கு இடையில் இருந்த நல்லுறவு
கணவன் மனைவிக்கு இடையில் இருந்த நல்லுறவு இதன் ஊடாக வெளிப்பட்டு உள்ளதாகவும், இவர்கள் எப்பொழுதும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்ததாகவும் அந்த மக்கள் தற்பொழுது தெரிவித்து வருகின்றனர் .
கணவன் இறந்த நிலையில் மனைவி உடன்கட்டை ஏரியா சம்பவம் ,வாலிபர்களுக்கும் காதலர்களுக்கும் ஒருவிதா புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா
எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா
எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா , ஹிஸ்புல்லா தளபதி ஒருவரை விமான வழி தாக்குதலில் ஊடாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தினர் படுகொலை செய்தனர் .
தமது மிக முக்கியமான தளபதி பலியானதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை தெற்கு லெபுனான் கிஸ்புல்லா படையினர் நடத்தினர் .
இந்த கிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்தினருடைய காவலரண்கள் கண்காணிப்பு மையங்கள் ஏவுகணைத்தளங்கள் உள்ளிட்டவைகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.
தளபதி ஒருவர் படுகொலை
தமது முக்கியமான தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் தாக்குதலாக 80 ரொக்கெட்டுகளை வீசி தள்ளினார் .
பாலஸ்தீன பகுதியில் ஆக்கிரமித்து நிறுவப்பட்டுள்ள ராணுவ தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமது தளபதியை படுகொலை செய்வதற்கு உளவுத்துறை மையமாக விளங்கிய கண்காணிப்பு உளவுத்துறை மையத்தை இலக்கவைத்து சரமாரியாக ரொக்கேட் தாக்குதலை நடத்தினர்.
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலியா வடக்கு உளவுத்துறை முகாம் முற்றாக சேதமாகி உள்ளதாக தாக்குதலை நடத்திய தெற்கு லெபனான் கிஸ் புல்லா போர்படைகள் தெரிவித்து உள்ளனர் .
ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்தி வரும் அதிரடி ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதினால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .
மக்கள் வாழ்விடங்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் மற்றும் ராணுவ மையங்களை இலக்கு வைத்து இடைவிடாது 250 நாட்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
போர் படைகளின் இந்த இடைவிடாத தாக்குதினால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவ தளங்களை தாக்கியதற்கு பதிலடியாக தற்பொழுது தெற்கு லெபுனானுக்குள் ஆள ஊடுருவி இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்த பறந்தன .
அவ்வாறு தாக்குதல் நடத்த முற்பட்ட பொழுது அந்த விமானங்கள் மீதும் ஏவுகணைத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ,பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

மேஜர் திலகா / வான்மதி
மேஜர் திலகா /வான்மதி
மேஜர் திலகா /வான்மதி , வீர மண்ணின் நாயகியின் நினைவு நாள் இன்றாகும் .மேஜர் திலகா / வான்மதி
வீரப்பிறப்பு: 11.10.1971 வீரச்சாவு: 12.06.1999
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.
சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை
முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார்.
நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும்.
அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான்.
திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்பம்” என்றால் தெரியாதவர் யாருமில்லை எனலாம்.
முதன்முதலில் ஆர்.பி.ஜி (RPG) இயக்கத்துக்கு கிடைத்தபோது, அதை இயக்கி “RPG அப்துல்லா” என அழைக்கப்பட்ட நகுலன் அண்ணாவின் தங்கையே திலகா அக்கா. 1
சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சி
987.10.05 அன்று சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சியில் வீரகாவியமாகி தீருவிலில் தீயுடன் சங்கமமாகிய பன்னிரு வேங்கைகளில் மேஜர் அப்துல்லாவும் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.
யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி கணபதிப்பிள்ளை இணையர் 4 மகன்களையும் 4 மகள்களையும் பெற்றெடுத்தனர்.
இப்படியாக திலகா அக்காவின் குடும்பம் மிக அழகானது. தந்தை ஒரு சிறந்த கட்டடத் தொழிலாளி. கடைசிக்கு முதல் செல்லப்பிள்ளையாக தர்சினி 11.11.1971 அன்று எம் மண்ணில் பிறந்தார்.
சிறுபராயம் முதல் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்று வர்த்தகப்பிரிவில் தேறினார்.
குண்டெறிதல், தட்டெறிதல் மேலும் வலைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். உதவிப்பந்து போடுபவராக இருந்து அவர் கையில் பந்து கிடைத்தால் அது வலையில் விழும் என்ற அளவிற்குத் திறமையாக ஆடுவார்.
1991 ஆம் ஆண்டு ஏழாம் மாதம், யாழ் பழைய பூங்காவில் புதிதாக இணைந்த பெண் போராளிகள் கூடியிருந்தார்கள்.
பெண் போராளிகள்
உயரமாக நீண்ட கூந்தலுடன் “யார் அந்தப் பெண்” என்று தோழிகள் கேட்க, “மேஜர் அப்துல்லாவின் தங்கை” என்ற பதில் வந்தது. அடிமனதில் அடக்கி வைத்திருந்த தமையனின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.
ஒவ்வோர் பிரிவுக்குமுரிய மகளிர் பொறுப்பாளர்கள் தம் உதவிப்பணிக்குத் தேவையான புதிய போராளிகளை அழைத்துச் சென்றனர்.
அங்கு பிரிந்த தோழிகள் மீண்டும் ஒன்பதாம் மாதம் 19 ஆம் அணி மகளிர் பயிற்சிப் பாசறையில் ஒன்றிணைந்து ஆரம்பப் பயிற்சியை நிறைவுசெய்து போராளி திலகாவாக உருவானார்.
1992 ஆரம்பத்தில் நிதித்துறைக்கு முதன்முதலாக மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வர்த்தகம் படித்தவர்கள் (எழுத்து, நேர்முக) தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட, முதல் எட்டுப் பேரில் திலகா அக்காவும் இருந்தார்.
கணக்காய்வுப் பணிக்கான கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. சிறிதுகாலம் செல்ல, வாணிபங்களுக்கான கணக்காய்வு பணியையும் ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் திலகா அக்கா சேரன் வாணிபம், மருந்து பால்மா வாணிபங்களில் தனது கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
நிதித்துறையின் வழங்கல் பகுதி 1993 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு அதற்குரிய கணக்குமுறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு 1994 அளவில் திலகா அக்காவும் இன்னும் சிலரும் கணக்காய்வு செய்து வந்தனர்.
தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை
1993 நவம்பர் மாதம் பூநகரி சிறிலங்கா அரச படையினரின் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது. அந்தவேளையில், தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் திலகா அக்காவும் இருந்தார்.
ஆனால், அவர் தாக்குதலிற்குச் செல்ல அனுமதிக்கப்படாமையால் ஏமாற்றமடைந்தார்.
கணக்காய்வுப் பணியுடன் யாழ்.உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்கியல் உயர் தேசியக் கல்வியையும் பயின்று வந்தார். அவர் குணநடை பற்றிக் கூறுவதாயின், உடனடியாக தெரியாதவர்களுடன் நன்றாகப் பழகமாட்டார்.
பணியாளர்கள், மற்றவர்களிடம் கண்டிப்பாக இருப்பார். “பிழை என்றால் பிழை தான்” என்றும் எல்லோரும் பணியில் “நேர்மையாக” இருக்க வேண்டும் எனவும் எண்ணுவார்.
ஆனால் நன்கு தெரிந்தவர்களுடன் நன்கு நெருக்கமாகப் பழகுவார். மனம் திறந்து கதைப்பார்.
பகிடிகள் விடுவார். வெளிப்பார்வைக்குத்தான் அப்படிக் கடுமை போல் காட்டிக் கொள்வார்.
மனதளவில் அன்பாகப் பழகுவார்
ஆனால் எம்முடன் மனதளவில் அன்பாகப் பழகுவார். ஏனெனில் “ஒரு போராளியின் இதயம் மென்மையானது”.
களமுனைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் ஆழமாக இருந்தது.
1995 ஆம் ஆண்டு (நடுப்பகுதி) யாழ்ப்பாணத்தை வன்கவரும் வெறியோடு வந்த சிறிலங்கா இராணுவத்தை விரட்டியடிக்கும் “புலிப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.
அதற்குச் செல்லவென பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்த திலகா அக்காவும் தோழிகளும் வண்டியில் (pick-up) ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.
மனதுக்குள் மகிழ்ச்சி. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு சமையல்கூடத்தில் இறக்கி விடப்பட்டு சீனிச்சம்பல் செய்வதற்காக வெங்காயம் உரிக்க விடப்பட்டனர்.
(ஏனெனில் வெளிப்பணிகளும் போராட்டத்துக்குத் தேவையானது என்பதால் உரியவர்கள் இடப்படும் பணிகளை செய்ய வேண்டும்)
யாழ் இடப்பெயர்வு இடம்பெற்று 1996 வன்னிப்பகுதி சென்று இழப்பீடுகள் தவிர்த்து கணக்குகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன.
சளைக்காத திலகா அக்கா
எதற்கும் சளைக்காது திலகா அக்காவும் சிறப்புற பணிகளைச் செய்தார். ஓயாத அலைகள் 1 தாக்குதல் பயிற்சிக்கு நிதித்துறை மகளிரிலிருந்து சிலர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனால் அவர் அவ்வணியில் தெரிவு செய்யப்படாதது அவருக்கு மிகவும் வருத்தம் தான்.
எந்த ஒரு நடவடிக்கையின் வெற்றிக்கும் பின்னால் வழங்கல் அணியின் திறமையான பங்களிப்பும் மிக முதன்மையானதாக இருக்கும்.
வழங்கல் சரியாக உரிய நேரத்தில் சென்றடைந்தால் தான் உரிய அப்பணியைச் சிறப்பாக செய்யலாம். அந்தவகையில் முல்லைத்தீவு மீட்புப் போரின்
வெற்றியும் அமைந்தது. அதன் பின் 1997 ஆம் ஆண்டு அளவில் அங்கு முதன்மையான சிற்றுண்டி வாணிபம் திறந்து வைக்கப்பட்டது.
சிற்றுண்டி வாணிபங்களுடன் சமையல்கூடங்களுக்கான கணக்காய்வுப் பணியையும் திலகா அக்கா அணியினர் செய்து வந்தனர்.
1998.06.10 அன்று சுதந்திரபுரம் மீதான சிறிலங்கா இராணுவத்தின் கொடூரமான மும்முனைத் தாக்குதலில் வழங்கல்பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா/அன்பு அண்ணாவும், வழங்கல் வாணிபங்களின் எமது
கணக்காய்வுப்பகுதித் தோழி கப்டன் கலைமதி அக்காவும் அன்று வீரச்சாவடைந்தனர். மற்றும் பணியாளர்கள், பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர். திலகா அக்காவும் அந்தப் பேரிடியால் கலங்கித்தான் போனார்.
கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி
கப்டன் கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி, வழங்கல் பகுதி கணக்காய்வுப் பணியினை கப்டன் கலைமதி அக்காவுடன் இணைந்தே அவர் மேற்கொண்டு வந்தார்.
நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்தமையினால் இருவருக்குமிடையே ஆழமான நட்பும் புரிந்துணர்வும் காணப்பட்டிருந்தது.
தனிப்பட்ட தனது சொந்தச் சிக்கல்களை சொல்லி மனம் விட்டுக் கதைக்கும் நெருங்கிய தோழியாக திலகா அக்காவுக்கு கப்டன் கலைமதி அக்கா விளங்கினார்.
இவரது இழப்பானது திலகா அக்காவை மிகவும் தாக்கியது. அதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டிருந்தார்.
தொடர்ந்து புதுக்குடியிருப்புக்குச் சென்று கணக்குகள் ஒழுங்கமைக்கப்பட்டு மீள தமது பணிகளைச் செய்துவந்தார்.
ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்கா
ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்காவின் முழுக்குடும்பமும் எமது போராட்டத்துக்கு உறுதுணையாகவும் வலுவூட்டிக்கொண்டும் இருந்தனர்.
ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் தாய், தந்தை, அக்காமார், அண்ணாமார், தங்கை என குடும்பமாக இடம்பெயர்ந்து வந்து எமது தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக நின்று உரமூட்டினர்.
விருந்தோம்பலிலும், கட்டட நிர்மாணப் பணிகளிலும், காப்பரண்களாக நிற்பதிலும் இன்னும் இன்னோரன்ன செயற்பாடுகளிலும் அவர்கள் என்றுமே சளைத்ததில்லை.
போராளிகள் சாப்பிடுவதற்கென்றே எந்த நேரத்திலும் அங்கு அடுப்பங்கரை இயங்கிக் கொண்டிருக்கும்.
“எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா” என்று என்றும் அவர்கள் எமது நினைவிலிருப்பார்கள்.
1999 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் முன்னரண்களுக்கான ஆளணி தேவை கருதி நிதித்துறை மகளிரணி பயிற்சிக்கு அணியமானார்கள்.
திலகா அக்காவின் நீண்ட நாள் கனவு நிறைவேற அவரும் தெரிவு செய்யப்பட்டார்.
பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் சென்று வந்தார். அவர்களுடன் உரையாடி, உண்டு மகிழ்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொண்டார்.
திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம்
திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது.
வீட்டுக்குச் சென்று வந்துவிட்ட பின்பாக பயிற்சி முகாம் திரும்பி பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார்.
அதிகாலையில் ஓட்டப்பயிற்சியின் போது “முந்தி, கேட்கக் கேட்க சண்டைக்கு விடேல்லை, இப்ப வயது போட்டுது” என்று கூறிக் கொண்டும் விடாமல் “மூசி மூசி” ஓடுவார்.
ஓய்வுவேளையில் பூப்பந்து, கரப்பந்து நன்றாக விளையாடுவார். தான் சண்டைக் களத்திற்கு சென்று தனது தமையன் போல சாதனை செய்ய வேண்டும் என்ற ஓர்மம் அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது.
அதைத் தொடர்ந்து களப்பயிற்சியை முடித்து நெடுங்கேணி முன்னரங்க காவலரண்களில் கடமையில் ஈடுபட்டார்.
அன்று காவலரண்களுக்கான உணவு எடுத்துச் சென்று வழங்கும் முறை திலகா அக்காவினது.
ஒவ்வொரு அரணாகக் கொடுத்துக் கொண்டு வருகையில் 34 வது அரண் வந்தது. தனது பாசறை மற்றும் கணக்காய்வு முகாம் தோழியிடம் “எனக்குக் களைப்பாக இருக்கிறது.
இங்கு நிற்கிறேன்…அடுத்த அரண்களுக்கு உணவினைக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்.
அவரும் “ஓம்” என்று கொண்டு சென்றார். திடீரென பக்கத்து அரண் நோக்கி சிறிலங்கா இராணுவம் பதுங்கித் தாக்குதலைத் தொடங்கியது.
காப்பரணுக்கு துணையாக தாக்குதல்
ஒரு பக்கம் லெப்.புகழினி நின்ற காப்பரண். உடனே திலகா அக்காவும் பக்கத்துக் காப்பரணுக்கு துணையாக தாக்குதல் நடந்த திக்கை நோக்கி பதிலடி கொடுத்தார்.
எதிரியோ திசை திரும்பி திலகா அக்காவின் தாக்குதலுக்கு எதிராகத் தாக்கத் தொடங்கிவிட்டான்.
திலகா அக்காவும் தோழிகளும் மூர்க்கத்துடன் களமாடினார்கள். திலகா அக்கா தனது காப்பைக் கருத்தில் கொள்ளாது எதிரியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
12.06.1999 அன்று யாருமே நினைத்திருக்கவில்லை. எதிர்பாராத வகையில் எதிரியின் பி.கே (PK) ரவை அவரின் நெற்றியைக் குறிபார்த்தது.
நெஞ்சுரம் நிமிர்ந்த தோற்றம்
அசையாத மரம் போல நெஞ்சுரமும் நிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட எங்கள் திலகா அக்கா எம் தாய் மண்ணை முத்தமிட்டார்.
தோழிகள் கலங்கினர்.எப்படிச் சொல்வோம் அவர் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வோம் என்று பதறினர்.
ஏற்கனவே துன்பத்திலிருந்த அவர்கள் குடும்பத்திலிருந்து இன்னொரு மாவீரரையும் எம் தாய்மண் சுமந்து கொண்டாள்.
“போன வருடம் (1998) மாவீரராய் சென்ற அவர் தோழி (கப்டன் கலைமதி) தான் எங்கள் தர்சினியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்” எனத் தாய் புலம்பினார்.
திலகா அக்காவின் வித்துடலைத் தூக்கிய போது அவரின் அந்த நீண்ட கூந்தலின் பின்னல் ஒன்று கழன்று தொங்கியது.
நெஞ்சிலும குண்டு
உடல் கவசத்தைக் கழற்றிய போது நெஞ்சிலும குண்டு பாய்ந்திருந்தது.
எங்கள் நிதித்துறை வழங்கல்பகுதியின் கணக்காய்வு பகுதி அணிப் பொறுப்பாளர் மேஜர் திலகா/வான்மதியாக வீர வரலாறாகினார்.
தமிழீழ நிதித்துறை கணக்காய்வுப் பகுதியின் ஒரு விருட்சம் வீழ்ந்தாலும் விழுதுகள் அவர் பெயர் சொல்லி தொடர்கிறோம்.
-நிலா தமிழ்.
(இந் நினைவுப் பகிர்வுக்கு தகவல் குறிப்புகள் வழங்கியவர் -விண்ணிலா)
- ஈழச்சுடர்கள்

- மேஜர் திலகா / வான்மதி

- கப்டன் கலைமதி

- எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்

- லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

- மெழுகுவர்த்திகள்

- மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

- தாயுமானவள்

- எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

- தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

- தமிழேந்தியப்பா

- கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

- ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

- ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

- அண்ணா

- கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

- மாவீரர்

- நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா






































