Tag: திரையரங்கு
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது ,கனடாவில் தமிழர் திரையரங்குக்கு தீ வைத்த நபர்கள் கைது .
கனடா டொரண்டா பகுதியில் அமைந்துள்ள தமிழருடைய பாரம்பரிய மிகப் பெரும் திரையரங்கு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இதேவேளை அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விடயங்கள் போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் உள்ளாக்கப்பட்ட வந்தது .
அதனை அடுத்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தை அறிவதற்காக கனடா குற்றப்புலனாய்வு காவல் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர் .
இதன் பொழுது பிரசன்னா என்கின்ற நபர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தில் செயலாற்றியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
எனினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டாவது சந்தேகம் நபராக கருதப்பட்ட இவர் ,விசாரணை வலயத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொழுதும் ,நீதிமன்றத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என படுகிறது .
கனடிய போலீசார்
எனினும் தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வருவதுடன் ,அவருடன் தொடர்புடைய வலயமைப்புகளை கண்டறியும் நோக்குடன் ,விசாரணைகளை கனடிய போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .
கனடாவில் ரவுடி அல்லது குழு நபர் என அழைக்கப்படுகின்றாவராக உள்ளவரே ,கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .
ரவுடி கும்பல்களுடன் தொடர்பு பட்டவர்களாக ,இவர்கள் உள்ளார்கள் என்ற சந்தேகத்தை, கனடிய காவல்துறைக்கு ஏற்படுத்தியுள்ளது .
கனடா நாட்டில் தமிழர்கள் அதி உச்ச காவல் துறை அதிகாரிகளாக கூட செயலாற்றி வருகின்றார்கள் .
அவர்களது பணிப்பின் அடிப்படையில் ,இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனடிய நாட்டில் சாதாரண மக்கள் போன்று தமிழர்கள் கனடிய நாட்டின் உடைய காவல்துறைக்கும் உளவுத்துறைக்குமாக பணியாற்றி வருகின்றனர் .
அவர்கள் ஊடாக நெருக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட, வேளையே இந்த நடவடிக்கையில் இவர் சிக்கியதான புதிய தகவலும் வழியாக உள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

இலங்கையில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு
இலங்கையில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு
கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இதன்போது திரையரங்களுகள் அதன் திறனில் 25 மாத்திரமே செயற்பட இடமளிக்க அனுமதிக்கப்படுள்ளது.
இதற்காக அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி நீக்க தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார
வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இன்று முதல் நாடளாவிய
ரீதியில் உள்ள திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்கத்கது







