கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட்
கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட் ,பாலஸ்தீனம் காசா, கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட இஸ்திரேலியா
ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் தமது கோரிக்கைகளை இஸ்ரேலிய ஆளும் அதிபர்நிர்ணையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற டிமாண்டை கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் விடுத்துள்ளது .
அதன் அடிப்படையில் நிரந்தரமான யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் இரண்டு பாலஸ்தீன கைதிகள் யாவரும் இஸ்ரேல் சிறைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என்கின்ற இரண்டு கோரிக்கைகளிலும் இதுவரை இரும்புபொடியாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் இருந்து வருகிறது .
அதனால் தற்பொழுது ஆரம்பிக்கப்படவிருந்த சமாதான பேச்சு நடவடிக்கைகள் தற்போது இறுக்கமடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிளிங்க்டன் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று இந்த பேச்சுவார்த்தை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் .
ஹமாஸ் அமைப்பினர் கையெழுத்துட்டு இந்த பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்பொழுது கமாஸ் மீளவும் இந்த டிமாண்ட் வைத்திருப்பது இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
டிமாண்டை ஏற்க மறுத்து வருவதால் கைதிகள் விடுதலை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .
உடனடியாக கைதிகளை விடுவித்து தரும்படி இஸ்திலிய மக்கள் இஸ்ரேல் ஆளுமை நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் .
இந்த நிலையில் தற்போது கமாஸ் இவ்விதம் தெரிவித்துள்ளது அந்த மக்களுடைய போராட்டம் மேலும் நெதன்யாகுவிற்கு எதிராக வெடித்து பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி







