சீனா போர் கப்பலில் கொழும்பில்
Posted in இலங்கை செய்திகள்

சீனா போர் கப்பல் கொழும்பில்

சீனா போர் கப்பலில் கொழும்பில்

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இன்று (ஆகஸ்ட் 10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.

இதற்கிடையில், கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
Posted in உளவு செய்திகள்

தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு

சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதலை நடத்தும் முகமாக தாய்வான் கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும் தாய்வான் வான் பரப்புக்குள் அத்துமீறி இருபத்தி இரண்டு சீனா விமானங்கள் பறந்து சென்றுள்ளன .

உக்கிரேன் மீது ரஷ்ய போரினை தொடுத்தது போல் சீனா தாய்வான் மீது தாக்குதலை நடத்தும் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

தாய்வான் எல்லை அருகில் சீனா பாரிய இராணுவம் மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளது.

மேலும் சீனா நடத்தியுள்ள இந்த ஏவுகணை தாக்குதல்கள் சீனா தாய்வான் மீது சில வாரங்களில் தாக்குதல் தொடுத்து விடும் என்பாதக முக்கிய உளவு நிறுவனங்கள் கசிவுகளை வெளியிட்டுள்ளன.

சீனா தாய்வான் மீது இந்த போர் நடவடிக்கை மேற்கொண்டால் உலக நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

    சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

    சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

    இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
    பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

    சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
    நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

    ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது

    கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன

    அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .

    பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,

    இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன

    அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,

    இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்

    அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன

    சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது

    ,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

    பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –

    • வன்னி மைந்தன் –
      Posted in உலக செய்திகள்

      உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி

      உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி

      உக்கிரேன் எல்லை பகுதியில் பல் நாடுகளை சேர்ந்த துணிப்படையினர் 2500 பேர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது.

      இந்த பயிற்சி பெறுபவர்களின் பல முக்கிய படையில் இணைக்க படும் அவசர பயிற்சிகளும் வழங்க பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.

      சிரியாவில் இருந்து நாற்பதாயிரம் படைகளை ரசியா இணைக்கும் முயற்சியில்
      ஈடுபட்டு உள்ளதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது.

        Posted in உலக செய்திகள்

        ரசியா டாங்கிகளை துடைத்தழித்த உக்கிரேன் இராணுவம்

        ரசியா டாங்கிகளை துடைத்தழித்த உக்கிரேன் இராணுவம்

        உக்கிரேன் Donetsk and Luhansk பகுதியில் ரசிய அப்படைகள் நுளைந்து தாக்குதல்களை

        மேற்கொள்ள முனைந்த பொழுது அவர்கள் மீது தாம் எதிர் தாக்குதல் நடத்தியாகாத உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

        இந்த திடீர் தாக்குதலில் ரசியா இராணுவத்தின் ஐந்து டாங்கிகள் மற்றும் five artillery systems, six armored vehicles and seven motor vehicles.தகர்க்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

        மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத தளபாடங்கள் மூலம் உக்கிரேன் இராணுவம் எதிர் தாக்குதலை
        நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          உக்கிரேனில் புதைகுழிகள் கண்டு பிடிப்பு

          உக்கிரேனில் புதைகுழிகள் கண்டு பிடிப்பு

          உக்கிரேன் மீது ரசியா இராணுவம் போரினை நடத்தி வருகிறது மூன்று மாதங்களில் எட்டி பிடிக்கும் இந்த தாக்குதல்களில் உக்கிரேன் மக்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்


          ரசிய இராணுவத்தினரால் புதைக்க பட்ட மனித புதைகுழிகள் மீட்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

          எமது வைபர் குழுவில் இணைந்தது கொள்ள அழுத்தங்கள்

          https://invite.viber.com/?g2=AQBkqkUKd91hf08vW8ZJb0B44D8YD6HD4MQPuO1VYTA7mLlP0eJEaGNoYU2tX%2FGc

          இனப் படுகொலை ஒன்றை ரசியா நடத்தி வருவதாக உக்கிரேன் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள்

            ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்

            ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்

            ரசியாவுக்கு எதிராக இயங்கி வரும் நேட்டோ நாடுகளை ரசியாவில் தற்போது சோதனை செய்துள்ள அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டு ஏவுகணைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

            இந்த அணு குண்டுகள் வீச பட்டால் ,நேட்டோ நாடுகள் அழிந்து விடுவதுடன், பல மில்லியன் மக்கள் பலியாக கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,

            முப்பது நிமிடங்களுக்குள் முப்பது ஐரோப்பிய நாடுகளை ரசியா அழிக்கும் செயல் திறன் வீச்சு கொண்ட அணுகுண்டு ஏவுகணையாக இந்த போராயுதம் பார்க்க படுகிறது

            ஐரோப்பவை மிரட்டும் ரசியாவின் இந்த அணுகுண்டு தாக்குதல் அச்சம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

            அணு குண்டுகள் மூலம் உலகில் தாக்குதல் நடத்தும் வல்லரசுகளாக வல்லாதிக்க சக்திகள் பலம் பெற்றுள்ளன

            யப்பான் மீது அமெரிக்கா ஏவிய அணுகுண்டு கொலைகளுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்

            அங்கு இன்றுவரை இறந்து கொண்டிருக்கும் மக்களுக்கு யார் இழப்பீடுகள் வழங்குவது ,இது போன்ற ஒரு அணுகுண்டு அமெரிக்காவில் வெடித்தால் அந்த நாட்டின் நிலை என்ன என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதா ..?

            ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்

            என்னை அழித்தால் உன்னை அழிப்போம் என்ற நிலை தான் இதன் செயல்பாட்டு கொள்கை திட்டமாக உள்ளது

            ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள் மூன்றாம் உலக யுத்தம் ஒன்று விரைவில் ஆரம்பிக்க பட போகும் அபயா எச்சரிக்கையை இடித்து காண்பிக்கிறது

            கொரனோவின் தாக்குதல் அலையில் இருந்து உலகம் இதுவரை முழுமையாக எழுந்து நடக்க முடியா தவிக்கிறது ,இதற்குள் உக்கிரேன் ரசியா போர் உக்கிரம் பெற்று வருகிறது

            அவ்வாறான கால பகுதியில் ரசியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் அதன் மூலம் விதிக்க படும் பிராந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பன ரசியாவின் மீதான வெறுப்புணர்வை அதிகரித்து செல்கிறது

            ரசியா தனது பரம எதிரி என பறைசாற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ,இன்றைய எதிரி ரசியாவின் இந்த பகைமை அச்சம் கொள்ள வைக்கும் செயல் பாடுகளின் ஆபத்தான கட்டத்தை நெருங்கி செல்கிறது என்பதையே உணர்த்துகிறது .

            • வன்னி மைந்தன் –


            உலக மக்கள் மத்தியில் வெளியாகியுள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு

              உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு

              உக்கிரேன் மீது ரசியா இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

              ,இவ்வாறான நிலையில் மேலும் உக்கிரேனுக்கு உதவும் முகமாக 150 மில்லியன் டொலர்

              ஆயுத உதவிகளை வழங்கப்படுவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

              உக்கிரேன் போரை பயன் படுத்தி மேற்குலக நாடுகள் பெருமளவு


              ஆயுதங்களை விற்று பணத்தை சம்பாதித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை

              உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை

              உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள வேளை மேற்கு நாடுகள் ஆயுதங்களை அள்ளி


              வழங்கி வருகின்றன ,இவ்வேளை பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய

              புட்டீன் உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த்துளளார் ,


              அவ்வாறு வழங்கினாள் விளைவுகளை சநதிப்பீர்கள் என அவர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

                300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

                உக்கிரேன் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை அதி வேகமாக தொடுத்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது

                ரசியாவின் இந்த திடீர் வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கையால் உக்கிரேனின் பல முக்கிய நகர் பகுதிகள் வீழ்ந்த வண்ணம் உள்ளன

                ரசியா மேற்கொள்ளும் இந்த இராணுவ முன் நகர்வினால் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,ஆனால் ஆளும் உக்கிரேன் அதிபர் அடிபணிய மறுத்து ரசியாவை வென்று விடுவேன் என அடம் பிடித்து வருகிறார்

                பரம எதிரியாக விளங்கும் ரசியாவை வென்று விட அமெரிக்கா பிரிட்டனிடம் உக்கிரேன் மில்லியன் டாலரில் ஆயுதத்தை வாங்கு குவிகிறது

                அவசர உதவி என்ற போர்வையில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்கிரேனுக்கு அதி நாவீன ஆயுத தளபாடங்களை வழங்கி வருகின்றன

                பிரிட்டன் அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை ஊடாக உக்கிரேன் பொருளாதாரம் மீள்சி கொள்ளுமா

                இந்த பரம எதிரியான ரசியாவின் போரில் இருந்து முற்றாக விடுதலை பெறுமா என்ற கேள்விகள் வெடித்து பறக்கின்றன ,அவை பேசு பொருளாகவும் மாற்றம் பெற்றுள்ளன

                இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முன்னூறு மில்லியன் பவுண்டுக்கு உடனடி ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்குகிறது ,

                பிரிட்டன் முன்னூறு மில்லியனுக்கு விற்கும் ஆயுத தபாடங்கள் ஊடாக ரசியாவை உக்கிரேன் வீழ்த்தி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

                பிரித்தானிய அரசு விற்கும் இந்த ஆயுத வியாபாரத்தின் ஊடாக தனது பலத்தை பிரித்தானிய முதுகில் ஏறி நின்று உக்கிரேன் காண்பிப்பது போல் உள்ளது

                பிரிட்டன் வழங்கும் இந்த ஆயுத விற்பனை பட்டியலில் அதி முக்கிய .
                ஏவுகணைகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ,மற்றும் இரவு நேர கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன

                300 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?

                மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் மூலம் ரசியாவின் போரை வென்றுவிடலாம் என உக்கிரேன் எதிர் பார்க்கிறது ,

                ஆனால் அது தோல்வியில் முடிய போகிறது என்பதை வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் வேற்று கோஷம் முழங்கி வருவதை காண்பிக்கிறது


                இந்த கால விதியின் ,கள நிலவரத்தை உக்கிரேன் அதிபர் உணர மறுத்து வருகின்றமை துன்பியலின் விளைவாக பார்க்க படுகிறது,

                இங்கிலாந்தினதும் மற்றும் மேற்குலக ஆயுதங்கள் ஊடாக தப்புமா உக்கிரேன் என்பதே கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .

                • வன்னி மைந்தன் –
                Posted in Uncategorized

                உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்

                உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்

                உக்கிரேன் தலைநகர் மீது ரசியா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.


                இந்த தாக்குதலில் உக்கிரேன் கீவ் நகரின் பல பகுதிகள் சுடுகாடாக காட்சியளிக்கின்றன.

                வாகனங்கள் என்பனவும் பலத்த சேதமடைந்துள்ளது.

                ரஷியா இராணுவத்தின் தொடர் ஏவுகணை ,மற்றும் ரொக்கட் தாக்குதலினால் குறித்த பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளது .


                சில நாட்களுக்குள் கீவ் நகர் ரசியா இராணுவத்திடம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது.

                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                  உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்

                  உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்

                  பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

                  உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய வீரர்கள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

                  உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில்

                  வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

                  தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு

                  தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது.

                  அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

                  பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

                  முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள்,


                  ரஷிய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

                    Posted in Uncategorized

                    ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

                    ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

                    உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,

                    உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
                    ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

                    உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .

                    எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்

                    எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது

                    ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா


                    உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை

                    இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது

                    பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன

                    ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன

                    மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

                    ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது

                    ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?

                    -வன்னி மைந்தன் –

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

                      கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

                      அழுகுரல் ஓசை வானை கிழிக்க
                      அவலம் நடக்கிறது
                      ஆடி வரும் குண்டு துளைத்து
                      அரை உடல் கிழிகிறது

                      போரும் விரட்ட போக்கிடம் கலைய
                      பொழுதும் விடிகிறது
                      போர்வெறி பிடித்தான் ஆணை முழங்க
                      பெரும் நகர் வீழ்கிறது

                      தேடி சேர்த்த பொருளில் பாதி
                      தெருவில் மிதக்கிறது
                      தேடுவார் இன்றி வீதியில் மக்கள்
                      தேம்பி அழுகிறது

                      குஞ்சும் கதற பிஞ்சும் பதற
                      குரல் வளை அறுகிறது
                      கூவி திரிந்தவர் கூடுபிரிய
                      குறட்டை விடுகிறது

                      உன்பலம் அறிந்தே ஊளையிட்டால்
                      உனக்கு கவலையில்லை
                      ஊரைநம்பி ஊதி திரிந்தால்
                      உனக்கு இழி நிலையே …!

                      வன்னி மைந்தன் ( ஜெகன் )
                      ஆக்கம் 05-03-2022

                      உக்கிரேன் ரஷியா போர் எண்ணியபொழுது

                        Posted in Uncategorized

                        பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

                        பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

                        உக்கிரேன் கட்டு பாட்டில் உள்ள பாம்பு தீவு ரசிய கடல் படையின் கட்டு பாட்டுக்குள்

                        சென்றுள்ளதாக ரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

                        ரசியாவின் மிதக்கும் கப்பல்கள் மேற்கொண்ட தாக்குதலில் அங்கு தரித்து நின்ற

                        உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அங்கிருந்து அவர்கள்


                        பின்வாங்கி சென்ற நிலையில் அவை ரசிய இராணுவத்தின் கட்டு பாட்டில் சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                          ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

                          ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

                          ரசியா இராணுவம் உக்கிரேனுக்குள் நுழைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் மீது ரசியா

                          போரை தொடுக்கலாம் என்ற நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் குவிக்க பட்டு வருகின்றன

                          இவ்விதம் அமெரிக்கா தனது இராணுவத்தின் விசேட பிரிவு ஒன்றை ரொமேனியா,போலந்து உள்ளிட்ட பகுதியில் குவித்து வருகிறது

                          தாம் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுக்கவில்லை என புட்டீன் அறிவித்திருந்த

                          நிலையில் நேட்டோ தனது படைகளை குவித்து வருகின்றமை மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

                            Posted in உலக செய்திகள்

                            வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

                            வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

                            ரசியா இராணுவம் உக்கிரேன் தலைநகர் வடக்கு பகுதி வழியாக ஆட்டிலறி மற்றும் ஏவுகணைகள் வசம் நுழைந்துள்ளது

                            இந்த இராணுவம் நுழைத்துள்ளதால் அடுத்து வரும் நாட்களுக்குள் தலைநகர் ரசியா படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர்வு கூற படுகிது

                            இராணுவ தாக்குதல்

                            தாம் இராணுவத்தின் இலக்குகளை மட்டும் குறிவைத்து தாக்கி வருவதாகவும் ,அப்பாவி

                            மக்கள் மீது அல்ல என ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து வருகிறது ,இதனையே புட்டீன் அவர்களும் தெரிவித்துள்ளார்

                            அகதிகள்

                            இராணுவம் மேற்கொள்ளும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் ஓசையினால் சிறார் உள்ளிட்ட மக்கள் பீதியடைந்து வருகின்றனர் ,மேலு ஒரு லட்சத்திற்கு அதிகமான

                            மக்கள் உக்கிரேன் எல்லையோர நாடுகளான போலந்து ,ரோமானிய போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

                            விமானங்கள் இரத்து

                            இந்த தாக்குதல்கள் வெடித்துள்ளதால் ,மக்கள் பயணிகள் விமானங்கள் யாவும் உக்கிரேன் மேலாக பறப்பதற்கு தடை விதிக்க பட்டுள்ளது

                            வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

                            இதனால் வான்வழி பயணங்கள் முடக்க பட்டுள்ளன

                            குளிர் நிலை

                            ஆளை கொள்ளும் சினோ பொழிந்து வருவதால் ,மக்கள் பதுங்கு குழிக்குள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது ,சிறார் உள்ளிட்டவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வசித்த வண்ணம் உள்ளனர்

                            பெரும் சிரமத்தின் மத்தியில் அந்த மக்கள் அங்கும் கண்ணீருடன் வசித்த வண்ணம்

                            உள்ளனர் ,மேலும் ரயில்வே நிலையங்களில் ,நில கீழ் சுரங்க வழியிலும் மக்கள் தமது இருப்பிடங்களாக மாற்றி வசித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன

                            கண்டனங்கள்

                            ரசியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலதும் கண்டித்துள்ளன ,தற்போது ஜெர்மனி மற்றும்

                            பெல்ஜியம் என்பனவும் கண்டித்துள்ளதும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடியுள்ள பொழுதும் தீர்வு ஏதும் எட்டப்படாத நிலை காண படுகிறது

                            உக்கிரேன் மாதான போர் உலா ஒழுங்கு வீதியில் பெயரம் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது

                            ரஷியா தனது இலக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது ,வரும் நாட்களில் புதிய அத்தியாயம் எழுத படும் என எதிர் பார்க்கலாம்

                              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                              தாய்வானுக்குள் நுளைந்து மிரட்டி சென்ற 8 சீனா போர் விமானங்கள்

                              தாய்வான் நட்டு வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சீனாவின் எட்டு போர் விமானங்கள் மிரட்டி சென்றுள்ளன- அதிகரித்துள்ள போர் பதட்டம்

                              சீனா அத்துமீறல்

                              ,தாய்வான் தனது நாட்டி ஒரு பகுதி எனசீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில் ,இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                              இராணுவ நடவடிக்கை

                              சீனா எவ்வேளையும் இராணுவ படையெடுப்பை நடத்த கூடும் என்ற எதிர் பார்ப்பு வலுத்து வரும் நிலையில் சீனாவின் இந்த வான்வழி அத்துமீறல் நுழைவு இடம்பெற்றுள்ளது

                              ஒரே தாடையில் எட்டு விமானங்கள் திடீரென நுழைந்தமை ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,

                              அமெரிக்கா ஏவுகணைகள்

                              சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்கு அமெரிக்கா விழுந்தடித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

                              ,அமெரிக்காவின் முக்கிய ஏவுகணைகள் இங்கே குவிக்க பட்டுள்ள நிலையில் சீனா கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது

                              அதன் வெளிப்பாடே இந்த அத்துமீறல் நுழைவு மிரட்டல் என நம்ப படுகிறது

                              Posted in Uncategorized

                              ஜப்பான் கடலுக்குள் நுழந்த சீனா போர் கப்பல்கள்

                              ஜப்பான் நாட்டு செங்கு தீவு பகுதிக்குள் சீனாவின் இரண்டு மிகக்கும் போர் கப்பல்கல் நுழைந்து சென்றுள்ளன ,

                              சீனா நுழைவு

                              இந்த சீனாவின் அத்துமீறல்நுழைவை அடுத்து சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது

                              போர் பதட்டம்

                              சீனாவின் இந்த அத்துமீறல்நடவடிகை நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது ,

                              ஜப்பானின் சில தீவு கூட்டங்கள் தமது என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,அவ்விதமான சர்ச்சைக்குரிய பகுதிக்குள்ளே இந்த ஊடுருவல் இடம்பெற்றுள்ளது

                              எச்சரிக்கை

                              நாம் எப்போதும் எங்கேயும் நுழைவோம் என்பதைஇந்த நடவடிக்கை மூலம் ஜப்பானுக்கு சீனா கூறியுள்ளதை அவதானிக்க முடிகிறது

                              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                              ஈரான்,ரசியா,சீனா கூட்டு போர் ஒத்திகை – அடங்குமா அமெரிக்கா ,இஸ்ரேல்

                              ஈரான் மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,முக்கிய தளபதிகள் ,மற்றும் முக்கிய அணு உற்பத்தி மூலைகளையும் கூட அது கொலை செய்து வருகிறது ,

                              இஸ்ரேல் படுகொலை

                              தமது நாட்டுக்குள் புகுந்து தமது முக்கியமானவர்களை இஸ்ரேல் படுகொலை புரிந்து வருவது ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

                              இதற்கு பதிலடி வழங்க வேண்டும் என்ற நிலையில் ஈரான் துடிக்கிறது ,அதற்கு அமைவாக இஸ்ரேலை சுற்றி பெரும்

                              வலைப் பின்னலை உருவாக்கி வருகிறது ,இதனை நன்கறிந்த இஸ்ரேல் அவர்கள் முந்திட முன்னர் தாம் தாக்குதலை தொடுத்துவிட வேண்டும் என எண்ணுகிறது

                              போர் ஒத்திகை

                              தொடரும் பதட்டங்கள் மத்தியில் ஈரான்,சீனா,ரஷியா இணைந்து இந்தியா ஓசன் பகுதியில் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

                              மேலதிக படைகள் மற்றும் கப்பல்கள் ,விமானங்களை ரசியா,ஈரான்,அனுப்பியுள்ளனர்

                              இதனால் மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,கொடிய நோயினால் மக்கள் மரணித்த வண்ணம் இருக்க வல்லரசுகளின்

                              கொலை வெறி தாக்குதல்களும் ,பழிவாங்கும் படலமும் ,போர்வெறியும் இவ் வேளையும் தொடரத்தான் செய்கிறது

                              வெல்ல போவது யார் ..?

                              இந்த போர் ஒத்திகை மூலம் இஸ்ரேல் ,அமெரிக்கா அடங்குமா ..? இஸ்ரேல் வலிந்து தாக்குதல்கள் நிறுத்த படுமா ..? இதில் வெல்ல போவது யார் ..?கேள்வியோடே நகர்கிறது போர் பதட்டம் .