வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |

வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |

வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |

full video

Posted in Uncategorized

புலிகள் முற்றுகையில் சிக்கிய அதே மாத்தில் தள்ளாடும் கோட்டா அரசு -ஆத்மாக்களின் சாபம்

புலிகள் முற்றுகையில் சிக்கிய அதே மாத்தில் தள்ளாடும் கோட்டா அரசு -ஆத்மாக்களின் சாபம்

இலங்கையில் முள்ளிவாய்க்கள் பகுதியில் கொத்து குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்று ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா,கோட்டா அரசு ,மக்கள் கும்பிட கும்பிட கொன்று குவிக்க பட்டனர்

சடலங்கள் மீது இராணுவ டாங்கிகள் ஏறி ஆடின,

சிறை பிடிக்க பட்ட பெண்கள் கற்பழித்து தலைகள் ,உறுப்புகள் வெட்டி கொலை செய்ய பட்டனர்

பல நூறு பேர் உயிரோடு கிடங்குகளில் புதைக்க பட்டனர்

இந்த ஆத்மாக்களின் சாபம் கண்ணீர் கதறல் 14 ஆண்டுகள் கழித்து அதே மாத்தில் கோட்டா ,மகிந்த ஆட்சிகளை அலற வைக்கிறது ,மக்கள் இவ்வாறு துடித்தார்களோ

அதே பதைப்பில் கோட்டா அரசு சிக்கி திணறுகிறது ,எந்த மக்கள் வெற்றியின்

புதல்வர்கள் என கொண்டாடினார்களோ அதே மக்கள் போடா போ என திட்டிய வண்ணம் போராட்டத்தில் குதித்துள்ளனர்

இவர்களுக்கு உதவி புரிந்து தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக விளங்கிய

பாகிஸ்தான் ,உக்கிரேன்,ரசியா நாடுகளும் அதே மாதத்தில் ஆட்சிகள் பறிபோகும் நிலையில் பேரழிவை சந்தித்த வண்ணம் உள்ளன

இனப் படு கொலை புரிந்து சர்வதிகாரியாக தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்த அதே

அரசுகள் இன்று சுகம் அனுபவித்து வாழ்ந்து வந்த தமது அதிகாரங்கள் பறிக்க பட்டு சிறை செல்லும் நிலையில்

மனு நீதி எப்பொழுதும் ஆட்சி புரியும் ,பழியும்,சாபமும் அவர்களை சும்மா விடாது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு எனலாம்

முள்ளி வாய்க்கால் மண் இப்பொழுது எழுந்து சிவக்கிறது ,தமிழர் தேசம் சிரிக்கிறது .
அரசன் அன்று கொல்வான் ,தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதான் போலும்

  • வன்னி மைந்தன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

அழுகுரல் ஓசை வானை கிழிக்க
அவலம் நடக்கிறது
ஆடி வரும் குண்டு துளைத்து
அரை உடல் கிழிகிறது

போரும் விரட்ட போக்கிடம் கலைய
பொழுதும் விடிகிறது
போர்வெறி பிடித்தான் ஆணை முழங்க
பெரும் நகர் வீழ்கிறது

தேடி சேர்த்த பொருளில் பாதி
தெருவில் மிதக்கிறது
தேடுவார் இன்றி வீதியில் மக்கள்
தேம்பி அழுகிறது

குஞ்சும் கதற பிஞ்சும் பதற
குரல் வளை அறுகிறது
கூவி திரிந்தவர் கூடுபிரிய
குறட்டை விடுகிறது

உன்பலம் அறிந்தே ஊளையிட்டால்
உனக்கு கவலையில்லை
ஊரைநம்பி ஊதி திரிந்தால்
உனக்கு இழி நிலையே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-03-2022

உக்கிரேன் ரஷியா போர் எண்ணியபொழுது