தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
Posted in இலங்கை செய்திகள்

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்

மர்ம நபர்களால் திடீர் துப்பாக்கிப் பிரயோகம் வாகனம் பழுது பார்க்குமிடத்திற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது T56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும் வாகனங்கள் இரண்டும் சேதம் அடைந்துள்ளன.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No posts found.
முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறக்கோட்டையில் குறித்த அதிகாரிகளால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 5 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய இராஜகிரிய நாவல வீதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​தலங்கம,
கடுவெல, கிராண்ட்பாஸ், கோட்டை மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 5 திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (23) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No posts found.
2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பயன்களை எதிர்பாராமல் நன்நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக சேவைகளை, சமூக வெளியில் கொண்டு
செல்லாம் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றவர்ளூடாக,
கற்றுக்கொண்ட பாடங்களையும், அவர்களின் முன்மாதிரியான


செயற்றிட்டங்களைப்பற்றி இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக
முன்னிருத்தி செயற்படவேண்டும்.

அப்போதுதான் இளம் தலைமுறையினர்
இவ்வாறான பணிகளைச் செய்ய முன்வருவார்களென சமூக சேவைகள்
திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை அன்பின் பாதை சமூகத்தின் ஒருங்கிணைப்பின்
கீழ் “விளிம்புநிலை மக்களின் வாழ்வை ஒளியேற்ற தம் வாழ்நாளினை
அர்ப்பணிக்கும் பெருமக்களை கொண்டாடி மகிழல்”


என்ற தொனிப்பொருளில் அறம் செய்வோம்
அறக்கட்டளையின் முதலாவது அகல் விருது –
2023 வழங்கள் விழா இன்று (18) திருகோணமலை
நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக சேவைகளைச்
செய்யவேண்டும் என்ற நன்நோக்கில் இளம் வயதிலிருந்தே
தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டுவருகின்ற

2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்


சன்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர்
செல்வி விமலா நடராஜாவின் சமூக சேவைகளைப் பாராட்டியாக
வேண்டும்.

அவர் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு
மறைமுகமாக பல்வேறுபட்ட சமூக சேவைகளைச் செய்து
வருவதென்பது மிக இலகுவான விடயமல்ல.

அது கடும் சவால் மிக்கதொன்றாகும்.
இவ்வாறான பணிகளைச் செய்து வருகின்றவர்கள் தங்களின்
சேவைகள் சமூக வெளியில் கொண்டு செல்வதை எதிர்பார்ப்பதும் இல்லை,
விரும்புவதும் இல்லை.

இவரைப்போன்ற பலர் இன்னும் மறைமுகமாக இருந்துகொண்டு
செயற்பட்டு வருவார்கள். அவ்வாறானவர்களையும் அறம் செய்வோம்
அறக்கட்டளை அடையாளம் கண்டு அவர்களின் நற்செயற்பாட்டினை


இளம் தலைமுறையினர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களையும்
இவ்வாறான சமூக செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் உதவி புரியவேண்டும்.

அறம் செய்வோம் அறக்கட்டளை கடந்த மூன்றாண்டு
காலமாக இலங்கையிலுள்ள காப்பகங்கள், வலையமைப்புக்கள்,
சமூக சேவை நிறுவனங்கள் ஊடாக சிறுவர்கள்,விசேட தேவையுள்ளோர் மற்றும் முதியோர்களின் வாழ்வை மேம்படுத்த பல உதவிகளைச் செய்து வருகின்றார்கள்.

அவர்கள் மக்களின் மேம்பாட்டிற்காகவே தங்களின் நேரகாலங்களைச்
செலவிடுகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு எங்களாலான
உதவிகளைச் செய்ய முன்னிப்போம் என்றார்.

இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக நன்நடத்தை
மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண
ஆணையாளர் (திருமதி) றிஸ்வாணி றிபாஸ், சமூக சேவைகள்


திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன்
மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சுபாசினி சித்திரவேல் உள்ளிட்ட பல அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கடந்த பல ஆண்டு காலமாக, தன்னலமற்ற ஒன்றிணைந்த
எண்ணிலடங்கா சமூக சேவைகளைச் செய்துவருகின்ற
சன்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர் செல்வி


விமலா நடராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி 2023
ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுன்
அவருக்கு 2 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா

No posts found.
தேர்தலுக்கு பணம் இல்லை ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய ரணில்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலுக்கு பணம் இல்லை ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய ரணில்| இலங்கை செய்திகள்

தேர்தலுக்கு பணம் இல்லை ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய ரணில்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |தேர்தலுக்கு பணம் இல்லை என தெரிவித்து ராஜபக்ச குடும்பத்தை ரணில் விக்கிரமசிங்கா காப்பாற்றியுள்ளார் .

நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் விட்டு வரும் ராஜபக்ச குடும்பத்தை ஜனாதிபதியாக்கிய விசுவாசத்திற்கு ரணில் அடிமையாகி நடந்து வருகிறார் .

தேர்தல் இடம்பெற்றால் ஆளும் ஆட்சி கவிழ்க்க படும் நிலை உள்ளதால் ,ரணில் விக்கிரமசிங்க இவ்வித அரசியல் சித்து விளையாட்டில் நடை போடுகிறார் .

இன்றைய இலங்கை முக்கிய செய்திகள் பக்கத்தில் ,
இந்த விடயம் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து
அலங்கரித்து உள்ளமை கவனிக்க தக்கது .

No posts found.
இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்

இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளி நாடுகளுக்கு ஓடுவதால் இலங்கை திணறிய வண்ணம் உள்ளது .

மாதம் தோறும் ஐம்பது முதல் 60 வரையான மருத்துவர்கள் ,
நாட்டை விட்டு செல்கின்றனர் .பலர் விடு முறைவிண்ணப்பம்
கோரியுள்ளனர் .

மேலும் 1000 மருத்துவர்கள் நடத்தி விட்டு சென்றுள்ளனர் என்கின்ற அதிர்ச்சிகர விடயத்தை அவர் தெரிவித்தார் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த
அவல நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள்
சங்கத்தின் (GMOA) பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இலங்கை முக்கிய செய்திகள் பக்கத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது .

No posts found.
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை |இலங்கை செய்திகள்

சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .

சீனா கடன் தள்ளி வைப்பு நடவடிக்கைக்கு ரெண்டு வருடம் மட்டுமே அனுமதி வழங்கியது .


இந்த காலக்கெடு போதாமை உள்ளதினால் ,சீனாவை புறம் தள்ளி
கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு நிதி வழங்க,
சர்வதேச நாணய நிதியம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

இலங்கை இவ்வாறான நிலைக்கு செல்ல ,சீனாவே காரணமாக விளங்கியதும் ,
தொடர்ந்து இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா
முயல்வதும் இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது .

இந்த விடயம் உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும்

உள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.

ஜப்பான் அரசாங்க நிதியுதவியின் கீழ் ஜப்பான் நாட்டின் பீஸ் வெயின்ட் அரச சார்பாற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவு

இணைந்து நடாத்திய இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகவும், ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு

கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்

உள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திக்கூடங்களை பிரதம
அதிதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் திறந்து
வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களையும் பார்வையிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் மிகச் சிறந்த முறையில் சேதனைப் பசளைகளை உற்பத்தி செய்து அதன் மூலம் நல்ல விளைச்சலைப்பெற்ற உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களுடன் நினைவுச் சின்னங்களை ஆளுநர் மற்றும் ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு ஆகியோரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது .

அபு அலா –

No posts found.
ரசியாவுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதிப்பு |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதிப்பு |உலக செய்திகள்

ரசியாவுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதிப்பு |உலக செய்திகள்

உலக செய்திகள் |ரஷியாவுக்கு ஆதரவாக ஈரான் ஆயுதங்களை வழங்கி வருகிறது .


ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள்
உக்கிரைன் இராணுவத்தினருக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .

உக்கிரைன் இராணுவத்தினரால் ஈரானின் பல தற்கொலை
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .

இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமான இழப்பை அடுத்து
தற்போது ஈரான் தற்கொலை விமானங்களை
ஏவும் பயிற்றுவிக்க பட்ட நிபுணர்குழு ரசியா வந்தடைந்துள்ளது .

இவர்கள் தற்போது உக்கிரைன் லுஹான்ஸ்க்கு வரவழைக்கு பட்டு ,
ரசியா இராணுவத்தினருக்கு பயிற்சிகளை
வழங்கி வருகின்றனர் .

ஈரானின் இந்த நேரடி பங்களிப்பு ,
உக்கிரைன் மற்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு,
மிக பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் பதிவாகியுள்ளன .

பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
பிரபாகரன் உயிரோடு இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார் .

இந்த பிரபாகரன் உயிரோடு உளளார் என்கின்ற
அறிவிப்பானது அரசியலுக்கும் ,மக்கள் எழுச்சிக்கு உரித்தானதல்ல .

காலம் கடந்து தெரிவிக்க படும் இந்த கருத்தியல் ஏற்புடையதல்ல .
தலைவர் பிரபாகரன் ஆளுமை ,அவரது கொள்கை நோக்கு
என்பன இந்த வெளிப்பாட்டுக்கு உகந்தது அல்ல என திருமாவளவன்
தெரிவித்தார் .

சிலரது அரசியல் தேவைக்கு ஏற்ப இவ்விதம் சில பரப்புரைகள் அவசியமாகிறது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார் .

இலங்கை உலக செய்திகளில் பிரபாகரன் உயிரோடு உள்ள செய்தி வாத பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் ஒன்று
சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

தாம் ஒன்று தமது வாழ்வு ஒன்று என வாழும் இவ் வேளையில் .
இளம் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை ,பசியால் வடியோருக்கு உணவு வழங்கியும் ,கச்சான் விற்ற தாய் ஒருவருக்கு புரிந்த செயல் ஒன்று பாராட்ட பெற்று வருகிறது .

இப்படியும் மனிதமுள்ள பெண்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளதை எண்ணி, பலர்
வியந்து உருகி பேசி வருகின்றனர் .

இந்த காணொளி பலராலும் விரும்பி பகிரப்பட்டு வருகிறது .
முடிந்தவரை உணர்வுகளை கட்டு படுத்தி
அழுகையை நிறுத்தி பாருங்கள்.

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம் .

No posts found.
இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | இலங்கை கடல்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது
மர்ம கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
நடத்தி அவர்கள் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள்
கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் .

இலங்கை கடல் படை , இந்த தாக்குதல்களை தாம் நடத்தவில்லை என்கிறது .

சீனா நாட்டின் ஆதரவு கடல்கொள்ளையர்களினாலே இந்த தாக்குதல்
இலங்கை கடற்பரப்பில் ,நடத்த பட்டுள்ளது என்ற சந்தேகத்தை
இந்தியா ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன .

No posts found.
ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | மட்டக்களப்பு ஆற்றில் இருந்து வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .


கடந்த மூன்று நாடுகளுக்கு முன்னர் காணாமல் போன வாலிபனே
ஆற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இந்த வாலிபன் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகள் ,
காடுகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | மினுவாங்கொடை பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் .

இருவர் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டின் பொழுதே ஒருவர் சூட்டுக்கு
இலக்காகி பலியாகியுள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

No posts found.
பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்

பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர் அத்தியடியில் 55 வயதுடைய தாய் 12 ஆம் திகதி இரவு அடித்து கொலை செய்யப்பட்டார்.

கணவனை பிரிந்து வாழும் அவர் பெண் பிள்ளை ஒருவருடன் வசித்து வந்தார்.

அவரது வீட்டிற்கு வேலைகளுக்காக ஒருவர் நீண்டகாலமாக தினமும் வருவது வழமை. நேற்றுமுன்தினம் காலையும் அவர் வழமைபோல வருகை தந்து இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

குடும்பப் பெண்ணுடன் அவர் முரண்பட்டு வாய்த்தக்கம் செய்துள்ளார். வீட்டுக்குள் இருந்த பெண் பிள்ளை சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை் தாயார் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பெண் அடித்துக்கொலை குற்றவாளி கைது |இலங்கை செய்திகள்

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்து தலைமறைவாகிய நபர் நாவற்குழியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நேற்று (16) காலை கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த பெண்ணுடன் 10 ஆண்டுகளாக நட்பு உறவாடி வருகின்றேன். அவர்கள் வீடு மாறுவதற்கு உதவுவதிலிருந்து பல உதவிகளை வழங்கி வந்தேன்.

அண்மையில் கோப்பாயில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அவரது காணி ஒன்றை விற்பனை செய்து பணத்தையும் வழங்கினேன்.

தண்ணீர் குழாயை நிலத்துக்கு அடியால் புதைப்பதற்காக கிடங்கு வெட்டச் சொன்னார். எனது வீட்டில் கூலிக்கு வேலைக்கு போவதாக அறிந்தால் பிரச்சினை என நான் கூறிய போது, அவர் என்னை சமுக வேறுபாடு சொல்லி பேசிவிட்டார். அதனால் ஆத்திரத்தை அவரை கட்டையால் தாக்கிவிட்டேன். அவர் உயிரிழந்துவிட்டார் என்று சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No posts found.
யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | ஏ9 வீதி, யாழ். நாவற்குழி பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்வத்தில் படுகாமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்-இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்|இலங்கை செய்திகள்

மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்-இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |மார்ச் 1 ஆம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி அமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் தொழிற்சங்கங்களுடன்
இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

No posts found.
13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும்

பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும்

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்

சமஷ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல
தமிழ் பெயரும் அல்ல அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.

No posts found.
யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ- இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ| இலங்கை செய்திகள்

யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ

இலங்கை செய்திகள்யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் 10 ரூபாவுக்கு சாப்பாடு உள்ளது .


இலங்கையில் எகிறிய விலைவாசிக்கு ,இப்படியும் ஒரு தமிழர், மக்களுக்கு இவ்வாறான சேவை செய்வது என்பது
பாராட்ட பட வேண்டிய ஒன்று .

இந்த கடைக்கு படையெடுக்கும் மக்களை இங்கே பாருங்கள்.
காணொளியை முழுமையாக பார்த்தால் வியந்து போவீர்கள் .

No posts found.
இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்

இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன் .


இலங்கைக்கு வெளிநாட்டு தமிழன் வந்தால் என்ன எல்லாம்
செய்வார்கள் என்பதற்கு இவர் உதாரணம் .


இப்போ காசு எங்க இருக்கு இலங்கையில்.ஆனால் இலங்கையில் உள்ளவன் என்ன செய்கிறார்கள் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்த்தபடி காத்துள்ளார் .


லண்டனில் ஒரு மணித்தியாலம் 9 பவுண்டுகள் சம்பளம் ..
கோடியில் இலங்கையில் வீடுகள் வாங்கினால் அவர்
எத்தனை மணித்தியாலம் லண்டனில் வேலை செய்திருப்பார்
என்கின்ற கேள்வியை அவரிடம் கேளுங்கள்.


2 அறை கொண்ட வீட்டில் வாழும் ஒரு குடும்பத்திற்கு
மாதம் தோறும் வீடு வாடகை
மட்டும் 1390 காஸ் மின்சாரம் நாள் ஒன்றுக்கு 10 பவுண்டுகள் .மொத்தம் 1690 .


இப்போ யோசிங்க வீடு காணிகள் இலங்கையில்
வாங்குபவர்கள் செய்யும் சூத்து மாத்து மேலும்
சொல்ல போனால் தவறான தொழில் அல்லது அவ்வாறான
ஒன்றை செய்கிறார்கள் என்பதே வெளிப்படை .

https://www.youtube.com/watch?v=1dXeSMdvoPw
No posts found.
வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது.

வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம்
வரவழைக்கப்பட்டு தற்பொழுது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

No posts found.