மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா
Posted in இலங்கை செய்திகள்

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா ,மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடு நாடாக ஓடி

அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு நாடாக ஓடி கடனை பெற்று ,நாட்டின் கடனை அடைப்பதில் ஆளும் அரசு தீவிரம் காண்பித்து வருகிறது .

நாடுகள் சுற்றி பார்க்கும் பயண செலவு

இந்த நாடுகள் சுற்றி பார்க்கும் பயண செலவுகளை குறைத்தாலே நாட்டின் கடனில் பாதியை தீர்த்து விடலாம் .

இதுவே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது .

நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் யாவரும் லஞ்ச ஊழலல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் நாடு தொடர்ந்து பின்னோக்கி செல்வது குறிப்பிட தக்கது .

ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சவுதிக்கும் இடையில் சந்திப்பு ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று

அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதும், புதிய திட்டங்களுக்கான

வாய்ப்புகளை அடையாளம் காண்பதும் இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. அரச சேவைகளை மிகவும் வலுவாகவும்

செயற்திறனுடனும் செயல்படுத்துவதில் முக்கியமான டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் செலுத்த நிதியம் உடன்பாடு தெரிவித்தது.

சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கையில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொருளாதார

நெருக்கடியை எதிர்கொள்வதில் சவுதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

புதிய திட்டங்களுக்கு சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தால் வழங்கப்படும் உதவிகளை, மக்களின் முக்கிய தேவைகளை அடையாளம் கண்டு அந்தத்

தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதர் காலித் ஹமூத் நாசர் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani), சவுதி அபிவிருத்தி நிதியத்தின் ஆசிய செயல்பாட்டு பணிப்பாளர் நாயகம் சவுத் அயித் ஆர்.

அல்ஷம்மாரி (Saud Ayid R. Alshammari) மற்றும் நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த

பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும்

வெளிநாட்டு வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.பி.எஸ். பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ,அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார

திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல், முன்னர் அறிவிக்கப்பட்ட 44% வரியை 30% ஆகக் குறைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவை அடுத்து,

இலங்கையின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால உத்திகளை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய

வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ.

விமலேந்திராஜா, மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம்

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக

இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார்.

தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு

நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள்

குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார சவால்கள்

பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க

சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார்.

நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி

நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு ,கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால்

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (22) கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு

செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மாகாண ரீதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்வு, இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டுவதற்கு, ஜனாதிபதி நிதியம் தயாராகி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியை சென்றடைந்த அனுர
Posted in இலங்கை செய்திகள்

ஜேர்மனியை சென்றடைந்த அனுர

ஜேர்மனிக்கு உத்யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அனுர இன்றைய தினம் ஜேர்மனியை சென்றடைந்துள்ளார்.

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

இன்று முற்பகல் (11) பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். 

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும். 

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில்

உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அனைவரும் ஒன்றிணையுங்கள் ஜனாதிபதி அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

அனைவரும் ஒன்றிணையுங்கள் ஜனாதிபதி அழைப்பு

அனைவரும் ஒன்றிணையுங்கள் ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுர அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும்,

அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நிதி அமைச்சில் நேற்று (04) திறைசேரி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

சீனா, கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் பல காலகட்டங்களில் பொது மக்களுடன் இணைந்து மேற்கொண்ட

கூட்டு முயற்சியின் பலனாகவே பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒரு நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்வதில் தனிநபர்கள் என்ற ரீதியில் சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,

அதே நேரம் இலக்குகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அரசியல் அதிகாரம் என்ற வகையில் அதிகாரிகள் மீது தனது கருத்தை மாத்திரம் திணிக்க மாட்டேன் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

நிபுணத்துவ அறிவு கொண்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு இடையே இடம்பெறும் முறையான கலந்துரையாடல்கள் மூலம் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சில தன்னிச்சையான அரசியல் தலையீடுகளால் கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தோல்வியடைந்த விதம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அரசாங்கத்தின் கீழ் பேணுவதுடன், அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் குறித்த நிறுவனங்களில்

கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இங்கு திறைசேரி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டம்,

அத்துடன் அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள், 2027 ஆம் ஆண்டுக்கான GSP+ சலுகை குறித்தும் ஜனாதிபதி நிதி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்
Posted in இலங்கை செய்திகள்

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம்,

அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான(Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு

தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும்

ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு 2025.06.21 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும்,

நவீன மயமாக்கப்பட்ட  ஆன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும்,மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும்எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை,

நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும்.

அந்த நோக்கத்தை அடைய,எதிர்காலத்தில் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும்.

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்

ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் எமது கடல் வளத்தையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பேரழிவைத் தடுக்குமாறு கோரி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக

எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை.

தற்போது மீனினங்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை.

இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும். அந்தவகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது.

இந்தக் காலகட்டம் முடிவடைந்த நிலையில் – அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக்கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நிச்சமயாக வரும்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பான இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை இந்திய அரசுடன் மேற்கொண்டும்,

மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற்பரப்புக்குள்ளான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

படை நலன் விசாரித்த ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

அனுரா படை நலன் விசாரித்தார்

அனுரா படை நலன் விசாரித்தார்

அனுரா படை நலன் விசாரித்தார் படை நலன் விசாரித்த ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.

படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டார்.

முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றதாக தெரிவித்த ஜனாதிபதி,

இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார். ஊனமுற்ற படையினர் மற்றும்

அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மிஹிந்து செத் மெதுரா சுகாதார விடுதியில் பணிபுரியும் மருத்துவர்கள் தலைமையிலான உத்தியோகஸ்தர்களுடனும் ஜனாதிபதி அநுர குமார

திசாநாயக்க கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். படையினருக்கு மேலும் மருத்துவ மற்றும் சேவை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ,மிஹிந்து செத் மெதுர பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. ஜீ.

எஸ். டீ. எஸ். ராஜகருணா, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ. ஏ. எஸ். விஜயதாச உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிநிலை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை

ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை

ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை, செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் தற்போது , இரண்டாவது முறையாக விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆளும் அனுரா ஆட்சியில் .ஜனாதிபதி பாவனையில் இருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

அரசாங்கச் செலவுகளை குறைத்து. நிதிகளை மீதப்படுத்தும் நடவடிக்கையில் ஆளும் அனுரா ஆட்சி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ,நடத்தப்பட்ட வாகன ஏலத்தில் 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது 27 வாகனங்கள் இன்று விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சொகுசு வீடுகள், அதிக சொகுசு வாகனங்கள் என்பன, இப்பொழுது பாவனையில் தவிர்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது இலங்கையின் பாராளுமன்ற எம்பிக்கள் அரசு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

நாட்டினுடைய பொருளாதார சுமைகளை குறைக்க வேண்டுமாக இருந்தால் இந்த வாகனங்களுக்கு ,செலுத்தப்படுகின்ற நிதி நிறைய குறைத்து ,

அதனை சேமித்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் , தமது அரசு ஈடுபட்டு வருவதாக அனுரா அரசு இப்படி விளக்கம் அளிக்கிறது.

லஞ்ச ஊழல்வாதிகளை பிடித்து சிறையில் அடைக்காது, இவ்வாறான வாகனங்களை, கண்துடைப்புக்கு விற்று மக்களை ஏமாற்றுகிறார் ,நடிப்பு நாயகன்,அனுரா என ,உலகளாவிய இலங்கை வாழ் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம் ஜனாதிபது அனுரவுக்கு தற்துணிவு என்பது கடுகளவும் இல்லை என விமல் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அநுர அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்தத் தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கிடையாது.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தவறான அரசியல் தீர்மானம் எடுத்ததை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

அதனையே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள். பெரும்பான்மைப் பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அநுர அரசு தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது.

2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசுக்கும் பெரும்பான்மைப் பலம் இருந்ததையும், அந்தப் பலம் இரண்டாண்டுக்குள் பலவீனமடைந்ததையும் அநுர அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவுடன் அரசு அண்மையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் இதுவரையில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த விடயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதாயின்

அதற்கு இந்தியாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

கடந்த காலங்களில் இதனைக் காட்டிலும் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிபுடன் செயற்பட்டார்.

அந்தத் தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் அநுர அரசு நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிந்துள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு ஊடாக இதனை எதிர்வரும் மாதமளவில் விளங்கிக்கொள்ள முடியும்.” – என்றார்.

ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குத
Posted in உலக செய்திகள்

ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல்

ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல்

ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல் என்று இடம் பெற்றுள்ள சம்பவம் உலக ஊடகங்களில் பர பரப்பாக இடம் பிடித்துள்ளது.

கென்யா ஜனாதிபதி நடத்திய மக்கள் பொது கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த பொழுது ,அங்கு நின்ற நபர் ஒருவர் திடீரென செருப்பு தாக்குதலை நடத்தி இருக்கின்றார்.

தான் அணிந்து வந்த செருப்பை கழட்டி .கென்யா ஜனாதிபதி மீது திடீரென வீசியதை அடுத்து அந்தக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டு மக்களுக்கு நல்ல விடயங்கள் செய்யாமல் .லஞ்ச ஊழல் நடவடிக்கையில் .அவரும் அவரது அரசும் ஆட்சியாளர்களும், ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தி கொண்டனர்.

அதனால் கோபம் கொண்ட நபர் .செருப்பை கழட்டி கென்யா ஜனாதிபதியின் மீது திடீரென வீசியுள்ளார்.

தற்பொழுது இந்த செருப்பு தாக்குதல் வீடியோ உலக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

தாக்குதல் நடத்தியவரை தற்போது கைது செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மக்கள் நன்மதிப்பை பெற்று இருந்தால். இவ்வாறான ஜனாதிபதிகள் மீது செருப்பு தாக்குதல் இடம் பெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்று வரும் காலங்களில் ,இலங்கையிலும் ஜனாதிபதிகள் மீது ,செருப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்கின்ற பர பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம் இந்த விடயம் தற்பொழுது அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆளுகின்ற ஜனாதிபதி டொனாட் ட்ரம் அவர்களின் தேசிய ஆலோசராக விளங்கிய மைக் அவர்களே தற்பொழுது தனது பதவியில் இருந்து ராயினமா செய்துள்ளதாக ஆரம்பித்துள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதியாகி சில மாதங்கள் ஆகின்ற நிலைகள் முதலாவதாக அவரது தேசிய ஆலோசகர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக ஆரம்பித்துள்ளார் .

கடும்போக்கு கொள்கை கொண்ட ஒருவராக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எப்பொழுதும் காணப்படுவார்? .

ஏனையவர்கள் சொல்கின்ற விடயத்தை செவிமடுக்க மாட்டார் .அதனால் அந்த பதவியில் இருந்து இவர் விலகி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஆளுகின்ற ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி அரியணைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவும்,

இவரை போன்று ஏனையவர்களும் ஒன்று ஒன்றாக விலக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சர்வதேச செய்திகள் இப்படி தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்வில் முழுதும் டிரம்பருடைய நிர்வாகத்தில் பணியாற்றிய மிக முக்கியமான அமைச்சர்கள் ஆலோசர்கள் பதவி விலகி இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி ,தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்திற்கான அணிவகுப்பு நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், அதன் தலைவர்களின் பங்கேற்புடன், தலவாக்கலை நகரில் மே தினக் கூட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன், நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கொழும்பிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.

மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எடுக்கவில்லை.

இந்த நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தீவின் பல்வேறு பகுதிகளில் மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சார்பான அதிகாரிகள், பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்கு ரூ.98 மில்லியன் செலவிடப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்துடன் தொடர்புடைய டினுக் கொலம்பகே கூறுகையில், முந்தைய ஜனாதிபதிகளிடமிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இலவசமாக அனுப்பப்பட்டன.

“இது தொலைத்தொடர்பு விநியோகத்தர்களால் வழங்கப்படும் சேவை” என்று அவர் தனது ‘X’ பக்க பதிவு ஒன்றில் கூறினார்.

கடந்த ஆண்டு மட்டும், இலங்கை ஜனாதிபதியின் வருடாந்திர சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தி செய்தியை அனுப்புவதற்கு ரூ. 98 மில்லியன்

செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை

ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை

ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை ,ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) வரவழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க

அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது என்றும் கூறிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி இந்தப்

பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் கூறினார்

உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி

உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி

உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி ,தென் கொரியாவில் ஏப்ரல் 10-14 ஆம் திகதி வரை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

உலக அமைதி மாநாட்டின் சர்வதேச அமைதி உச்சி மாநாடு கவுன்சிலின் ஆசிய-பசிபிக் பிராந்தியத் தலைவர் மைத்ரிபால சிறிசேன, உலகளாவிய உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் சிறப்பு உரை நிகழ்த்தினார்.

உலகளாவிய அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைப் பேணுவதற்கும், காலநிலை மாற்றத்தை நிர்வகிப்பதற்கும், மோதல்களை நிர்வகிப்பதற்கும்

மதத்தையும் அரசியலையும் ஒருங்கிணைக்கும் இரு சபை உலகளாவிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மைத்ரிபால சிறிசேன தனது உரையின் போது வலியுறுத்தினார்.

2025 உலகளாவிய உச்சி மாநாட்டில் முன்னாள் அரச தலைவர்கள், தற்போதைய பேச்சாளர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள்

மற்றும் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த பிற இராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்
Posted in இலங்கை செய்திகள்

மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்

மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதிகளான, ​மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோர், கொழும்பில் வைத்து மரியாதை நிமிர்த்தம்,சனிக்கிழமை (05) சந்தித்தனர்.

இதன் ஊடாக முக்கிய செய்தியை இந்தியா உலகிற்கு தெரிய படுத்தியுள்ளது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்ற்ன .