Tag: அநுர
பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர
பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர
பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர ,ஐக்கிய நாடுகள் சபையின் (BBNJ) பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, பிரான்ஸ் அரசாங்கம் சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு
தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு
தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கு இது தனது முதல் விஜயம்
இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக
இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார்.
தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு
நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள்
குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய பொருளாதார சவால்கள்
பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க
சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார்.
நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி
நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர
திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர
திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர ,அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்திய மக்களுடன் இலங்கை எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளது என்றார்.
உலகில் எங்கு இடம்பெற்றாலும், பயங்கரவாதத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்தார்.
மேலும், எழுந்துள்ள நிலைமையால் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை விரைவில் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்
இதைதான் முதலில் செய்யவுள்ளேன் – அநுர
இதைதான் முதலில் செய்யவுள்ளேன் – அநுர
மக்களின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் என இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (22) இரவு கொழும்பு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க,
மேலும் கருத்து தெரிவித்த புதிய ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்க,
“இந்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது ஒரு வெற்றி.
அடுத்த தேர்தலுக்கு முன் தேர்தல்களில் திருத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன். சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்பதை உணர்ந்துள்ளோம். அதில் விசேட கவனம் செலுத்துவேன்.
நாடு பல வழிகளில் நிலையற்று உள்ளது. மக்களின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்.
நம் நாட்டில் எந்த தேர்தலிலும் யாரும் இறக்கக்கூடாது.
நம் நாட்டில் பல விடயங்கள் மாற வேண்டும். தேர்தலை நடத்துவது, வெற்றியை கொண்டாடுவது, பின்னர் மற்றையவருக்கு பயத்தை ஏற்படுத்துவது போன்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்.
நம் நாட்டில் உள்ள பல பிளவுகளை மிக விரைவாக சமரசம் செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் நாம் முன்னோக்கி செல்ல முடியும்” என்றார்.
மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி
மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி
மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி ,தமது அரசாங்கத்தின் கீழ் மீனவர்களுக்கு டீசல் மானியம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
தேவையான உபகரணங்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்




















