வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வரவிருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது, மர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகோட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் ,அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என ,தற்பொழுது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தியவரை, தேடி கைது செய்யும் நடவடிக்கையில் ,இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அந்த வேட்பாளர்களை இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் செல்வாக்கு நிறைந்தவர்களை இலக்கு வைத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் ,அதனால் தற்பொழுது பல வேட்பாளர்கள் பீதியில் உறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற, மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வருகின்ற பொழுது ,இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் ,அசம்பாவிதங்கள் ,நாடளாவிய ரீதியில் இடம் பெறுவது இயல்பான ஒன்றாக இலங்கையில் இன்று மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்

- முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்









