வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வரவிருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது, மர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகோட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் ,அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என ,தற்பொழுது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தியவரை, தேடி கைது செய்யும் நடவடிக்கையில் ,இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அந்த வேட்பாளர்களை இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் செல்வாக்கு நிறைந்தவர்களை இலக்கு வைத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் ,அதனால் தற்பொழுது பல வேட்பாளர்கள் பீதியில் உறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற, மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வருகின்ற பொழுது ,இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் ,அசம்பாவிதங்கள் ,நாடளாவிய ரீதியில் இடம் பெறுவது இயல்பான ஒன்றாக இலங்கையில் இன்று மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை









