வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வரவிருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது, மர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகோட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் ,அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என ,தற்பொழுது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தியவரை, தேடி கைது செய்யும் நடவடிக்கையில் ,இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அந்த வேட்பாளர்களை இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் செல்வாக்கு நிறைந்தவர்களை இலக்கு வைத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் ,அதனால் தற்பொழுது பல வேட்பாளர்கள் பீதியில் உறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற, மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வருகின்ற பொழுது ,இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் ,அசம்பாவிதங்கள் ,நாடளாவிய ரீதியில் இடம் பெறுவது இயல்பான ஒன்றாக இலங்கையில் இன்று மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை









