ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி ,தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்திற்கான அணிவகுப்பு நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், அதன் தலைவர்களின் பங்கேற்புடன், தலவாக்கலை நகரில் மே தினக் கூட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன், நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கொழும்பிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.

மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எடுக்கவில்லை.

இந்த நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தீவின் பல்வேறு பகுதிகளில் மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சார்பான அதிகாரிகள், பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்கு ரூ.98 மில்லியன் செலவிடப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்துடன் தொடர்புடைய டினுக் கொலம்பகே கூறுகையில், முந்தைய ஜனாதிபதிகளிடமிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இலவசமாக அனுப்பப்பட்டன.

“இது தொலைத்தொடர்பு விநியோகத்தர்களால் வழங்கப்படும் சேவை” என்று அவர் தனது ‘X’ பக்க பதிவு ஒன்றில் கூறினார்.

கடந்த ஆண்டு மட்டும், இலங்கை ஜனாதிபதியின் வருடாந்திர சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தி செய்தியை அனுப்புவதற்கு ரூ. 98 மில்லியன்

செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை

ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை

ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை ,ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) வரவழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க

அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது என்றும் கூறிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி இந்தப்

பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் கூறினார்

உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி

உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி

உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி ,தென் கொரியாவில் ஏப்ரல் 10-14 ஆம் திகதி வரை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

உலக அமைதி மாநாட்டின் சர்வதேச அமைதி உச்சி மாநாடு கவுன்சிலின் ஆசிய-பசிபிக் பிராந்தியத் தலைவர் மைத்ரிபால சிறிசேன, உலகளாவிய உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் சிறப்பு உரை நிகழ்த்தினார்.

உலகளாவிய அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைப் பேணுவதற்கும், காலநிலை மாற்றத்தை நிர்வகிப்பதற்கும், மோதல்களை நிர்வகிப்பதற்கும்

மதத்தையும் அரசியலையும் ஒருங்கிணைக்கும் இரு சபை உலகளாவிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மைத்ரிபால சிறிசேன தனது உரையின் போது வலியுறுத்தினார்.

2025 உலகளாவிய உச்சி மாநாட்டில் முன்னாள் அரச தலைவர்கள், தற்போதைய பேச்சாளர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள்

மற்றும் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த பிற இராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்
Posted in இலங்கை செய்திகள்

மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்

மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதிகளான, ​மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோர், கொழும்பில் வைத்து மரியாதை நிமிர்த்தம்,சனிக்கிழமை (05) சந்தித்தனர்.

இதன் ஊடாக முக்கிய செய்தியை இந்தியா உலகிற்கு தெரிய படுத்தியுள்ளது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்ற்ன .

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி ,சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதை குறிப்பிட்டார்.

மேலும், மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்றும் சுட்டிக்காட்டினார்.

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டத்தை வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்.

யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. “எங்கள் தாய்நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் இறையாண்மையையும் மீண்டும் நிலைநாட்டுவதே எங்கள் எதிர்பார்ப்பு.” என்றார்

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி ,அரசாங்கத்திற்கு எதிராக இப்போது அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.

இதேவேளை, மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

வழக்குப் பதிவு செய்து வழக்கை விசாரித்த பிறகு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பெலியத்தயில் இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டை திவாலாக்கியவர்கள் மீண்டும் அரசாங்கங்களை அமைக்க வருகிறார்கள். யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். அவை வெறும் கனவுகள்தான். அவை ஒருபோதும் நிஜமாகாது.”

மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என்றும் ஜனாதிபதி கூறினார்

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த ஆண்டு வரவு -செலவுத் திட்டத்தில் அந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முன்னுரிமை வழங்கவேண்டிய

திட்டங்களை அடையாளம் கண்டு திறம்பட பயன்படுத்துவது தொடர்பில் ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யபட்டது.

முறையான நகர்ப்புற அபிவிருத்தியின் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நகர அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தும்

போது பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பௌதீக அடிப்படையில் ஒருங்கிணைந்த திட்டங்களை தயாரிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நகர திட்டங்களை ஒன்லைனில் அங்கீகரிப்பதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அதற்காக தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் 119 நகரங்களுக்கான நகர அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அந்தத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது

மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

நகர திட்டமிடல், மூலதன முதலீடுகள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துதல், நகர காணிப் பயன்பாட்டுக் கொள்கையை தயாரித்து

செயல்படுத்துதல், புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல், நிறைவு செய்வதற்குத் தவறியதால் புறக்கணிக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்திபணியையும் பொறுப்பேற்று நிறைவு செய்தல்,

மூலதன அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல், சுற்றுச்சூழல் தரநிலைகளைத் தயாரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தயாரித்தல், கட்டிட பொறியியல் மற்றும் ஏனைய

செயல்பாடுகளை மேற்கொள்வது மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள

பொறுப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது

ஜனாதிபதி ஆணைகுழுக்களுக்கு ரூ 5301 இலட்சம் செலவு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ஆணைகுழுக்களுக்கு ரூ 5301 இலட்சம் செலவு

ஜனாதிபதி ஆணைகுழுக்களுக்கு ரூ 5301 இலட்சம் செலவு

ஜனாதிபதி ஆணைகுழுக்களுக்கு ரூ 5301 இலட்சம் செலவு ,முந்தைய அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட பதினான்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 530 மில்லியன் ரூபாய்க்கும் (530.1 மில்லியன்)

அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த கால போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை விசாரித்த ஜனாதிபதி

ஆணையத்தின் அறிக்கை மட்டுமே இந்த 14 ஆணையங்களின் பரிந்துரைகளை செயல்படுத்தியுள்ளது என்றும், அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 2024ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக மட்டும் ரூ.110 மில்லியனுக்கும் அதிகமாக

செலவிடப்பட்டதாகவும், ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டபய ராஜபக்ஷ காலத்தில் ஆறு ஆளும் கட்சி அமைப்பாளர்களுக்காக ரூ.370 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாகவும், ஜெயதிஸ்ஸ கூறினார்.

சிவராத்திரிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து
Posted in இலங்கை செய்திகள்

சிவராத்திரிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து

சிவராத்திரிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து

சிவராத்திரிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து ,இன்று மகா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது .உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் இன்று மகா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சிவராத்திக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து அனுப்பிவைத்துள்ளார்.

“உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின்

சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது.

இது உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்ளவதை குறிக்கிறது. எனவே,மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும்’ என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து

தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மகா சிவராத்திரி நாளில் வாழ்வில் சுபீட்சம் கிட்ட பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.

சிவன், பார்வதியின் சங்கமம் ஞானம் மற்றும் ஆற்றலின் சங்கமாகும். அது கண்களை மறைத்திருக்கும் மாயையின் திரைகளை கிழித்து யதார்த்தத்தின் வெளிச்சத்திற்கு கண்களை திறக்கிறது. பல யுகங்களாக எம்மை

சகோதரத்துவத்திலிருந்து ஒதுக்கி வைத்த பிரிவு – பிளவுகளை உருவாக்கிய இருள் திரையைக் கிழித்து, ஒற்றுமையை கட்டியெழுப்பி இந்த பூமியில் ஒரு புதிய யுகத்தின் உதயத்தை காணும் வேளையில் இந்த தருணம் வந்திருக்கிறது.

இது, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை முன்பை விடவும் வரவேற்று, பாதுகாத்து நாட்டின் அனைத்து மக்கள் குழுக்களும் ஒருவருக்கொருவர் மத்தியில் கௌரவம் – அன்பை முன்னிலைப்படுத்தி எமது

தாய்நாட்டின் சுபீட்சத்துக்காக அர்ப்பணிக்கும் தருணமாகும். இந்த வலுவான களத்திலிருந்து சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக்கொள்ள ஒரே தேசமாக நாம் அனைவரும் முன்னோக்கி செல்ல வேண்டும்.

அனைவரும் கோரும் நல்லதொரு அரசியல் கலாசாரத்துடன் கூடிய வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பல புதிய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பலவற்றுடன் தற்போது நாம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச்

சென்று கொண்டிருக்கின்றோம். மஹா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கை இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்ல எண்ணங்களும், விருப்பங்களும் நிறைவேறி அவர்களின் வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமெ பிரார்த்திக்கிறேன்.

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கீதநாத் காசிலிங்கம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கீதநாத் காசிலிங்கம்

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கீதநாத் காசிலிங்கம்

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கீதநாத் காசிலிங்கம் ,இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாண நூலகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.100 மில்லியன் ஒதுக்கியதற்காக ஜனாதிபதி அனுரகுமார

திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரு அறிக்கையை வெளியிட்ட கீதநாத் காசிலிங்கம், மிகவும் யதார்த்தமான மற்றும் புதுப்பித்த அணுகுமுறையை மேலும் முன்மொழிந்தார், இந்த நிதியின் ஒரு பகுதியை நூலகத்தின் சேகரிப்பை டிஜிட்டல் மயமாக்கப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

“டிஜிட்டலுக்கு மாறுவதன் மூலம், இந்த விலைமதிப்பற்ற புத்தகங்களை சேதம், திருட்டு அல்லது கடந்த காலத்தில் பல மதிப்புமிக்க புத்தகங்களை அழித்த தீ போன்ற பேரழிவுகளிலிருந்து நாம் பாதுகாக்க முடியும். கூடுதலாக,

மாணவர்கள் மத்தியில் டிஜிட்டல் ஆராய்ச்சி கருவிப் பயன்பாட்டை ஊக்குவிப்பது முக்கியம். இது இன்றைய உலகில் வெற்றிபெற அவர்களுக்குத் தேவையான வளங்களை வழங்கும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்கால நூலகம் புத்தகங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நவீன டிஜிட்டல் வளங்கள், ஊடாடும் கற்றல் இடங்கள், கல்விக்கான மெய்நிகர் யதார்த்தம் மற்றும் மாணவர்கள் திட்டங்களில் ஒத்துழைப்பதற்கான பகுதிகளையும் வழங்க வேண்டும் என்று கீதநாத் காசிலிங்கம் மேலும் கூறினார்.

“தெற்காசியாவின் பிற நாடுகள் தங்கள் மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்காக ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தியுள்ளன.

நூலகத்தை டிஜிட்டல் மயமாக்குவது நமது கலாச்சார வரலாற்றைப் பாதுகாப்பதிலும், மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதிலும் ஒரு முதலீடாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாண பொது நூலகத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நூலகங்களின் மேம்பாட்டிற்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி

சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி

சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி ,ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு குறித்த காரணங்களை அறிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை இன்று (6) ஜனாதிபதி செயலகத்திற்குl அழைத்துள்ளார்.

இவர்களுடன், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் இணைந்து கொண்டார்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு, சட்டமா அதிபரும் நீதி அமைச்சரும் மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறினர்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில், சாட்சியங்களை மறைத்தல் மற்றும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று சட்டமா அதிபர் ஒரு கடிதம் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிபதி

இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிபதி

இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிபதி ,ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்தப் பயணத்திற்கு இலங்கை விமானப்படையின் எந்த விமானமும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ காரிலேயே பயணம் செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வாகனம் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வாகனம் விபத்து

ஜனாதிபதியின் வாகனம் விபத்து

ஜனாதிபதி வாகனம் விபத்து வந்து சிக்கி சம்பவத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

தலைவா பகுதியில் இன்று அதிகாலை ஒரு பணியாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிப்பர் இரண்டாம் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சாரதி நித்திரை தூக்கம் காரணமாக இந்த வாகனம் விபத்தில் சிக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 கடந்த தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி வாகன பாதுகாப்பு பிரிவினரே திருப்பி தற்பொழுது தமது இருப்பிட நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த வாகனம் விபத்து சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 விபத்தில் சிக்கிய வாகனத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவாக விளங்கிய போலீஸ் அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்களே இதற்கு காயப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

 இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட வருகின்ற நிலையில் அபரண பேச்சுக்கள் அடிபட்டு வருகின்ற நிலையில் அமெரிக்காவின் இலங்கை தூதர் இலங்கை உடைய பாராளுமன்ற சபாநாயகரை சந்தித்த சில நாட்களில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது எங்கே காவடிக்கத்தக்கது.

 இந்த சம்பவம் ஆனது தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களையும் வியப்பையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் வருகையை யோட்டி யாழ்ப்பாண மாவட்ட செயலக சுற்றுவட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு ,ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

அதன்படி இந்நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்காக திட்டமிட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

புதிய சுற்றுலா வலயங்களை நிறுவுதல் மற்றும் சுற்றுலாத்துறையின் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரச நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் SLRM இலங்கைக்கான செயல் தலைவர் ஷொல்போன் மெம்பெடோவா (Cholpon Mambetova), நீர் மற்றும் நகர அபிவிருத்தி பணிப்பாளர் (SG-WUD) ஸ்ரீனிவாஸ் சம்பத், சிரேஷ்ட நகர அபிவிருத்தி நிபுணர்/

செயல் தலைவர் எல்மா மோர்ஷெடா (Elma Morsheda) சிரேஷ்ட திட்ட அதிகாரி (SG-WUD) ) பாஞ்சாலி எல்லேபொல, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க, சுற்றுலா

ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பி. ஏ.டி.தமயந்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை

ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை

ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நாளை இடம்பெற உள்ளது.

கூகிளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவு
Posted in உலக செய்திகள்

கூகிளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவு

கூகிளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவு

கூகிளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவு ,கூகுள் மேப்ஸ் அமெரிக்க பயனர்களுக்கு வளைகுடா மெக்ஸிகோ, தெனாலி என பெயர் மாற்றும் டிரம்ப் பதவியேற்பு நாளில் பெயரை மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவுக்கு இணங்க இரண்டு முக்கிய புவியியல் அடையாளங்களின் பெயர்களை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

அலாஸ்காவின் தெனாலி மலையின் பெயரை Mt. McKinley என்றும், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்றும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்ப நிறுவனமான X இடுகையில் தெரிவித்துள்ளது.

“அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களில் புதுப்பிக்கப்பட்ட பெயர் மாற்றங்களைப் பயன்படுத்துவதற்கான நீண்டகால நடைமுறை எங்களிடம் உள்ளது” என்று கூகிள் எக்ஸ் இடுகையில் தெரிவித்துள்ளது.

பெயர்களைத் தீர்மானிக்க அமெரிக்க புவியியல் ஆய்வின் புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பு (ஜிஎன்ஐஎஸ்) தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது என்று கூகிள் இடுகைகளின் திரியில் கூறியது.

“அத்துடன் நீண்ட கால நடைமுறை: நாடுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ பெயர்கள் மாறுபடும் போது, ​​Maps பயனர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ உள்ளூர் பெயரைப் பார்க்கிறார்கள்.

உலகின் பிற நாடுகளில் உள்ள அனைவரும் இரண்டு பெயர்களையும் பார்க்கிறார்கள். அது இங்கேயும் பொருந்தும்,” கூகிள் மற்றொரு இடுகையில் சேர்த்தது.

Mt. McKinley என்ற பெயரை மீண்டும் நிலைநிறுத்தவும், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மறுபெயரிடவும் உத்தரவிட்ட ஒரு நிர்வாக உத்தரவில் டிரம்ப் பதவியேற்பு நாளில் கையெழுத்திட்ட பிறகு இது வந்துள்ளது.

இன்னும் சிறிது நேரத்தில், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம், மேலும் ஒரு சிறந்த ஜனாதிபதியான வில்லியம் மெக்கின்லியின் பெயரை மவுண்ட் மெக்கின்லிக்கு

மீட்டமைப்போம், அது எங்கு இருக்க வேண்டும், எங்கு இருக்க வேண்டும். சொந்தமானது. ஜனாதிபதி மெக்கின்லி வரிகள் மற்றும் திறமைகள் மூலம் நம்

நாட்டை மிகவும் பணக்காரர் ஆக்கினார்” என்று டிரம்ப் தனது தொடக்க உரையின் போது கூறினார்.

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி
Posted in இலங்கை செய்திகள்

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தின் நிலத்தின் மதிப்பைத் தவிர்த்து மாதாந்த வாடகை

ரூ. 4.6 மில்லியன் என்றார். முன்னாள் ஜனாதிபதிகள் குடியிருப்பை காலி செய்யவோ அல்லது வாடகையை தாங்களே செலுத்தவோ முடியுமென ஜனாதிபதி மேலும் கூறினார்.

“தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குடியிருப்பு அல்லது அவர்களது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு.

அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க கொடுப்பனவாக மட்டுப்படுத்தும்.

இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்” என்று கட்டுகுருந்தவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை தவிர்ந்த அனைத்து அமைச்சு

பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்களுக்காக அல்லது வேறு பொருத்தமான பயன்பாட்டிற்காக மீளப் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.