Tag: Jaffna
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.President Anuradha is coming to Jaffna.
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க
தமிழர் வடக்கு பகுதியாக விளங்கும் கலாச்சார பட்டினமாக இருக்கும் யாழ்ப்பாணம் நோக்கி இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க இன்று பயணம் ஆகிறார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மாதங்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு தமிழருக்கு ஏதும் செய்யவில்லை.
தவறான வழியில் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு இன்று அவர் ஓட்டு அரசியலுக்காக இன்று அவசர அவசரமாக இங்கு வருகிறார் .
மீன்பிடி துறைமுகப் பணி
மீன்பிடி துறைமுகப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இன்று அங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல குடி வரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ,யாழ்ப்பாணம், கொழும்பு பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட இரு சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது .Jaffna Colombo Air-conditioned Luxury Bus
யாழ், கொழும்பு போக்குவரத்து
யாழ், கொழும்பு போக்குவரத்தில் இதுவரைகாலமும் தனியார் தரப்பினரே இவ்வாறான பஸ் சேவையை வழங்கி வந்த
நிலையில், இனி அரச தரப்பாலும் சிறப்பு சேவையை வழங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த ஆடம்பர பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து யாழ் டிப்போவிடம் நேற்று கையளிக்கப்பட்டன.
பொதுநலவாய மாநாடு
இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டுக்காக கொண்டுவரப்பட்ட சொகுசு பஸ்கள், சில நாட்கள் பாவனையின் பின்னர் அப்படியே கைவிடப்பட்டன.
குறித்த பஸ்கள் திருத்தப்பட்டு – நவீனமயப்படுத்தப்பட்டு எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஓர் அங்கமாகவே இரு பஸ்கள் யாழ். டிப்போவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கும் பஸ்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .


கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி
இலங்கை – மிருசுவில் பகுதியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் தற்கொலை புரிய முயற்சித்துள்ளனர் .
இதில் 65 வயது மாமியார் சம்பவ நேரத்தில் பலியாகியுளளார் .
மேலும் மக்கள் மருமகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இலங்கையில் ஆடம்பரத்தில் சிக்கி தவிக்கும் எம்மவர்கள் கடனை பெற்று செலவு செய்து விட்டு அதனை மீள
செலுத்த முடியாது திணறி வருவதும் ,இவ்வாறான தற்கொலைக்கு முயற்சிப்பதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை கந்து வட்டி காரர்கள் அதிகம் தொல்லை தருவதும் இயல்பான ஒன்றாக மாறிப்போயுள்ளது ,இந்த
கந்து வட்டி காரர்களை ஆளும் அரசு கைது செய்யும் புதிய சட்டத்தை இலங்கையில் இதுவரை அமூல் படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது










