Posted in இலங்கை செய்திகள்

கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை

கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை

PCR பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் நேற்று (07)

வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19

    தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண

    குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 பேர் கொழும்பு கடற்படை பொது

    வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இவர்களின் பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி

    அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் மேலும், வைத்தியசாலைகளில் இருந்து

    வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு

      தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக

      குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

      கொரோனா இல்லாத
      கொரோனா இல்லாத
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை

      இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை


      மஞ்சளுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க பல திட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

      நாட்டின் தேவைக்காக, வருடத்துக்க 7 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுவதாகவும் அனால், கடந்த வருடம் வரை இதில்

      ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் மிகுதி 5 ஆயிரத்து 400 மெட்ரிக் தொன்

      இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


      எனினும், கடந்த வருட இறுதியில், மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்க

      ப்பட்டதையடுத்தே மஞ்சள் தூளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது என்றும் அவர் கூறினார்.

      தட்டுப்பாட்டை நீக்குவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, சுங்கப்பிரிவால்

        தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 மெட்ரிக் தொன் மஞ்சளை, சந்தைக்கு அனுப்பவுள்ளதாகவும் இவ்வருடம் சுமார்.

        2 ஆயிரத்து 200 ஹெக்டெயாரில் புதிதாக மஞ்சள் உற்பத்தி செய்ய நடவடிக்கை

        எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

        இலங்கையில் மஞ்சளுக்கு
        இலங்கையில் மஞ்சளுக்கு
            Posted in இலங்கை செய்திகள்

            முல்லைத்தீவு மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய இராணுவம் – photo

            முல்லைத்தீவு மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய இராணுவம் – photo

            முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் தனியார் நன் கொடையாளரினால்

            வழங்கப்பட்ட 150 உலர் உணவுப் பொதிகள் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

            குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரபல்யமான வர்தகர் திரு சுரேஷ் அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்

              டீப்தி ஜயதிலக்க அவர்களை தொடர்பு கொண்டு இதற்பொழுது காணப்படும் தொற்று நோய் மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக

              பாதிக்கப்பட்டுள்ள நாயாறு பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தனது அனுசரணையினை

              வழங்கினார்.20200506 முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களுடன் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி

              மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 593 ஆவது பிரிகேட் தலைமையக கட்டளைத் தளபதி கேணல் வசந்த பலகும்பர, 19

                ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி , அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் இவ்விநியோகத்தில் கலந்து கொண்டனர்

                Posted in இலங்கை செய்திகள்

                கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்

                கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்

                இலங்கையில் நடப் பாண்டு நிகழ்வுகளின் செய்தி பகிர்வுகள் மற்றும் நாட்டில் நிலவி வரும் சமூக விரோத செயல் பாடுகளின் மூல உறைவிடமாக போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது

                இந்த போதை பொருள் ஊட்டலுக்கு அடிமையானவர்கள் ,அதில் இருந்து விடுபடாத முடியாத நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் ,

                  கடத்தல் ,கற்பழிப்பு ,கொலை ,திருட்டு ,என்ற அனைத்து குற்ற செயல் பாடுகளிலும் தம்மை முன்னிலை படுத்தி கொள்கின்றனர்

                  இவ்வாறு ,இதற்கு அடிமையானவர்களை தமது கூலிகளாக வைத்திருக்கும் அரசியல் வாதிகள் இவர்களின் ஊடாக அணைத்து விடயத்தைனையும் கட்சிதமாக முடித்து விடுகின்றனர்

                  இவ்வாறான ரவுடிகளின் முக்கியமானவராக விளங்கி வருபவர் ,கஞ்சா அருள், ரெட்லைட் குரூப்,மின்னல் குரூப்,பாம்பு குறூப் ,என்பன .

                  இவர்கள் அனைவரும் இலங்கை அரச புலானய்வு துறையின் செல்வாக்குடன் செயல் பாட்டு வருகின்றனர்


                  தமிழர் பகுதியில் இடம் பெறும் கொலைகளுக்கு இந்த குழுக்களே காரணமாகின்றன

                    செல்வந்தர்களை மிரட்டி பணம் பறிப்பது ,அழகிய பெண்களை கடத்தி சென்று சீரழித்து மிரட்டி அனுப்பி வைப்பது தொடர்ப்பன

                    அனைத்து செயல்களும் சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    பாதிக்க பட்டவர்கள் அச்சத்தில் தகவல்களை வெளியில் கூற மறுப்பதனால் உறங்கு நிலையில் இவை கிடக்கின்றன


                    மக்களின் முதல்வன் நானே என பறை சாற்றும் ஆளும் அரசு இதற்கு ஒத்து ஊதுவது இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக காண்பிக்கிறது .

                    இவர்களின் இந்த செயல் பாடுகள் நாளை இலங்கை அரசு மீள முடியாத மிக பெரும் பொறிக்குள் சிக்க வைக்க போகிறது


                    அணைத்து விடயங்களும் உரிய பகுதியினரால் ஆவண படுத்த படுகின்றன

                      இலங்கைக்குள் எட்ட முடியாத தீர்வு .உலக அரங்களில் அந்த காட்சிகள் வெளியாகும் பொழுது எட்டப் படும் நிலையும் அவ்வேளை ,தலை குனியும் நிலையில் இலங்கை செல்லும் என்பதே திண்ணம்

                      அவை வெளியாகும் பொழுது மிக பெரும் நெருக்கடியை இவர்கள் சந்திப்பார்கள் என்பதனை அடித்து கூறலாம்

                      கொடி கட்டி பறக்கும்
                      கொடி கட்டி பறக்கும்
                          Posted in இலங்கை செய்திகள்

                          15 இலங்கை கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

                          15 இலங்கை கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

                          இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தற்பொழுது

                          15 கடற்படையினர் பாதிக்க பட்டுள்ளதாக முப்படைகளின் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

                          இதற்கு முன்னர் 280 கடற்படையினர் இந்த நோயினால் பீடிக்க பட்டு தனிமை

                            படுத்த பட்டு இருந்தமையும் ஒரு அதிகாரி பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                            கடற்படையினர்
                            கடற்படையினர்
                                Posted in இலங்கை செய்திகள்

                                லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்

                                லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்

                                பிரிட்டனில் தவித்து கொண்டிருந்த 208 இலங்கையரை காவிய படி இலங்கை எயார்லைங்கா விமானம் ஒன்று இலங்கை சென்றுள்ளது .

                                இதில் பயணித்த அனைவரும் 21 நாட்கள் தனிமை படுத்தலின் பின்னர்

                                அவர் தம் குடும்ப உறவுகளுடன் இணைத்து கொள்வார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    தனிமை படுத்தப்பட்ட களுத்துரை& கண்டி மாவட்டங்கள் விடுவிப்பு

                                    தனிமை படுத்தப்பட்ட களுத்துரை& கண்டி மாவட்டங்கள் விடுவிப்பு

                                    ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான

                                    ஊடக சந்திப்பு நேற்று மதியம் (3) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்,

                                    பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

                                      “களுத்துரை மாவட்டத்தில் அமைந்துள்ள பேருவலையிலுள்ள முடக்கப்பட்ட பன்னில பிரதேசம், கண்டி மாவட்டத்திலுள்ள

                                      சீனகொட்டுவ மற்றும் அக்குரனை ஆகிய பிரதேசங்கள் இன்று 3 ஆம் திகதி மருத்துவ ஆலோசனையின் பிரகாரம்

                                      விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசங்கள் ஏனைய பிரதேசங்களை போன்று இயல்பு நிலையில் இயங்கும்.

                                      லன்டனில் இருந்து இன்று மாலை மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 207 பேர் இலங்கை வரவுள்ளனர். அவர்கள்

                                      தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்டவுள்ளனர்.

                                      இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தம்மின்ன (9) மற்றும் வெலிகந்தை(2) தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 11 பேர்

                                      கொண்ட மேலும் ஒரு குழுவினர், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

                                      முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 4917 பேர் இன்று 3 ஆம் திகதியுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

                                      அதேவேளை, கோவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய

                                      தொடர்புகளை பேணிய 1023 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

                                      முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 36 தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரையில் 4635 பேர் தனிமைப்படுத்தலில்

                                      உள்ளனர் என லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.

                                      சுருக்கம் :

                                      இதுவரை மொத்தம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை -4917

                                      தற்பொழுது மொத்தமாக தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்- 4635

                                      மொத்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் – 36

                                      தனிமை படுத்தப்பட்ட
                                      தனிமை படுத்தப்பட்ட
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்

                                      தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்

                                      கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழர் வீடுகளுக்குள் இலங்கை அரச இராணுவத்தினர் முதலை விட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

                                      இந்த பகுதியில் குளங்கள் ,ஆறுகள்,ஏதும் இல்லாத நிலையில் இந்த முதலைகள் திடீரென வீடுகளுக்குள் நுழைந்துள்ளது,முதலை விடப் பட்ட பகுதிக்கு அருகில் இராணுவ முகாம்கள் உள்ளன

                                      கொடிகாமம்,கிளிநொச்சி ,இயக்கச்சி பகுதியில் இந்த முதலைகள் விட பட்டுள்ளன ,வீட்டு தாவரத்தில் உறங்கி கொண்டிருந்த சிறு பிள்ளை ஒன்றை முதலை உண்ண விரைந்து வந்துள்ளது ,

                                        இதனை கண்டு நாய் குரைத்து ஒலி எழுப்பிய நிலையில் சுதாகரித்து கொண்ட மக்கள் வீ,ட்டின் முற்ற பகுதியில் வந்த பொழுது முதலையை கண்டுள்ளனர்

                                        நாயின் குரைத்து இருக்க விட்டால் அந்த சிசுவை முதலை தின்று இருக்கும் என பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் ,

                                        ஊரடங்கு வேளையில் இராணுவத்தினர் ,வீடுகளுக்கு அருகில் இவ்வாறு முதலைகளை விட்டு செல்கின்றனர் ,

                                        மதம் பிடித்த யானைகளை ஆனையிறவு ,ஊரியன் ,கண்டாவளை ,பகுதிகளில் இராணுவத்தினர் விட்டுச சென்றுள்ளனர்
                                        ,
                                        இந்த யானைகள் மக்களின் பயன் தரும் மரங்கள் ,மற்றும் மக்களை அடித்து கொன்றுள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன .

                                        மக்கள் இந்த விடயங்களை வெளியில் கூற முடியாத நிலையில் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,

                                        இறுதி போர் முடிவடைந்த நிலையில் தமிழர் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                        தமிழர் வீடுகளுக்கு முதலை
                                        தமிழர் வீடுகளுக்கு முதலை
                                            Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                            இலங்கையில் வாலிபனை செருப்பால அடிக்கும் தமிழ் பெண் – வீடியோ

                                            இலங்கையில் வாலிபனை செருப்பால அடிக்கும் தமிழ் பெண் – வீடியோ

                                            இலங்கையில் மட்டக்களப்பு வீதியால் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து
                                            அவனை செருப்பால் அடிக்கும் காட்சி இது

                                            இதில் அந்த பெண் செய்த செயல் சரி எனின் சரி எனவும் ,பிழை எனின் பிழை எனவும் வாதிடுக ,ஆனால் அடிவாங்கிய நபர் அந்த பெண்ணை சும்மா விடுவாரா ..?

                                            பெண்ணின் காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கும் வாலிபரை இப்படி கொடூரமாக போட்டு தாக்கும் பெண்ணின் செயல் கண்டிக்க வேண்டியது .

                                              சட்டத்தை இவர்கள் கையில் எடுத்தால் ,இலங்கை நீதிமன்ரறம் என்ன அப்பமா சுட்டு விக்கிறது என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்

                                              தற்போது மீள இந்த காணொளி வைரலாகி வருகிறது – இதில் அழுத்தி வீடியோ பார்க்க

                                              இலங்கையில் வாலிபனை
                                              இலங்கையில் வாலிபனை
                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே

                                                  பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே

                                                  கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலத்திற்கு பெரும் உயிரச்சுறுத்தலாக மாறியுள்ள இவ்வேளையில், இதனை

                                                  எதிர்கொள்ளும் வகையில் உலகத் தமிழர்களுக்கான சிறப்புக்குழுவினை ( Corona – Tamils Task Force) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்து செயற்படத் தொடங்கியுள்ளது.

                                                  கொரோனா நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்க இருக்கின்ற நிலையில், தமிழர்களின் நலன்களின் அடிப்படையில்

                                                  உடனடியானதும், நீண்டகாலத்துக்குமான செயற்திட்டங்களை வகுத்து தமிழர் தாயகம், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் என செயற்படத் தொடங்கியுள்ளது.

                                                    மருத்துவம், விழிப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் என பல்வேறு பரிமாணங்களில் கொரோனாக்காலம்,

                                                    கொரோனாவுக்கு பிந்திய காலம் என தனது செயற்திட்டத்தை கொரோனா – தமிழர்கள் சிறப்புக்குழு வகுத்து வருகின்றது.

                                                    குறிப்பாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று இலங்கைத்தீவில் இனம்காணப்பட்ட உடனேயே, அது தொடர்பிலான விழிப்பு

                                                    பிரச்சாரங்களை தமிழர் தாயகம் எங்கும் உள்நாட்டு தொண்டு அமைப்புக்கள் வழியே மேற்கொள்ளப்பட்டதோடு, ஒரு தொகுதி

                                                    முதியவர்களுக்கு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சுவாச்சகவசங்களும் வழங்கப்பட்டன.

                                                    தொடர்ந்து ஊரடங்கு உத்தரவினால் வீடுகளில் முடங்கியுள்ள வறியநிலை மக்களுக்கு உணவுப்பொதிகள், அத்தியாவசிய

                                                    பொருட்களும் வழங்கப்பட்டு வருவதோடு, மக்களை சுயநிறைவுடன் எதிர்காலத்தில் இருக்கும் வகையில் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.

                                                    இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக களமாடிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி

                                                    தமிழர்களின் நன்றியினையும் தோழமையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.

                                                    கனடாவின் ரொன்ரோவின் பெரும்பாகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு உணவுப்பொதிகளை வழங்கும் பொருட்டு, முதற்கட்டமாக உணவுப்பொதிகள் வழங்கபட்டன. இதுபோல்

                                                    பிரான்சிலும் தலைநகர் பரிசில் Hôpital Bicêtreமருத்துமவனையின் அவரசப்பிரிவு சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

                                                    கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் தேசங்களுக்கு தமிழர்களின் தோழமையினை நல்லெண்ணத்தோடு இவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                    மறுபுறம் புலம்பெயர் தேசங்களில் கொரோனாவுக்கு இரையாகியுள்ள தமிழர்களின் விபரங்களையும் திரட்டி ஆவணப்படுத்தும் பணியிலும் இச்சிறப்புக்குழு ஈடுபட்டுள்ளது.

                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                        யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு

                                                        யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு

                                                        கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

                                                        கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி

                                                        செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

                                                        எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

                                                        அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு

                                                        பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

                                                        யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக் கோட்டை

                                                        மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

                                                        யாழில் கள்ள சாராயம் கைச்சாய் கும்பல் மடக்கி பிடிப்பு
                                                        யாழில் கள்ள சாராயம் கைச்சாய் கும்பல் மடக்கி பிடிப்பு
                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                        கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 690

                                                        கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 690

                                                        இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது..

                                                        நோயாளகளில் 162 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

                                                        COVID-19 பரம்பலின் தரவுகள்

                                                        புதுப்பிக்கப்பட்டது 2020-05-01 22:03:44

                                                        690
                                                        உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

                                                        521
                                                        சிகிச்சை பெறும் நோயாளிகள்

                                                        25
                                                        புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

                                                        162
                                                        குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

                                                        7
                                                        இறப்பு எண்ணிக்கை

                                                        கொரோனா நோயாளர்களின்
                                                        கொரோனா நோயாளர்களின்
                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                            புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை

                                                            புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை

                                                            யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் முக மூடி அணிந்த நிலையில் கையில்

                                                            வாள்கள்,மற்றும் கத்திகளுடன் வீடுகளுக்குள் நுழைந்தான் கொள்ளை

                                                            கும்பல் அங்கிருந்து தங்க நகைகள் ,மிதிவண்டிகள் என்பனவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளன .

                                                            இவ்வாறு மூன்று வீடுகளில் இந்த கொள்ளை சமபவம் இடம்பெற்றுள்ளது ,


                                                              ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டிருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                                                              இது பொலிஸாரின் ஆதரவுடன் இயங்கும் புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழுவே இந்த செயலில்

                                                              ஈடுபாட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது ,வீதிகள் எங்கும் காவல்துறையின்

                                                              சுற்றுக்காவல் நாடவடிக்கையில் ஈடுபடும் பொழுதே இந்த துணிகர கொலை

                                                              சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது

                                                              கத்தி முனையில்
                                                              கத்தி முனையில்
                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்

                                                                  யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்

                                                                  யாழ்ப்பாணத்தில் கடிந்த நள்ளிரவு முதல் உடனை அமுலுக்கு வரும் ஜீலையில்

                                                                  450 கிலோ கிராம் பாணின் விலை மூன்று ரூபாவால் அதிரடியாக அதிகரிக்க பட்டுள்ளது

                                                                  மக்களின் வாழ்வியல் சுமையை குறைப்பேன் என ஆளும் அரசு அறிவித்து

                                                                  வந்த நிலையில் பாணின் விலை ஒரே தடவையில் மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                                    கொரனோ வேளையில் மக்கள் பெரிதும் வறுமையில் சிக்கியுள்ள காலப்பகுதியில்

                                                                    இந்த பாணின் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,ஆளும் அரசு மீது மக்கள் விரக்தி கொள்ள வைக்கும் செயல் பாட்டை அதிகரித்துள்ளது

                                                                    இது கோட்டபாய அரசு மக்கள் விரோதத்தை தாமாக வலிந்து உருவாககிய ஒன்றாக பார்க்கக் படுகிறது

                                                                    யாழில் பாண் விழி
                                                                    யாழில் பாண் விழி
                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                        நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

                                                                        நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

                                                                        பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்

                                                                        உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார்.

                                                                        சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட நெல் ஆலைகளை மீள

                                                                        திறப்பதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை

                                                                          கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

                                                                          அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன

                                                                          என்ற (அறுவடை) பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து

                                                                          உர விவசாய கிராமங்களை ஏற்படுத்வும் திட்டமிடப்பட்டுள்ளது 50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200

                                                                          விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல். இம்முறை ஐந்து லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டெயர் விளைச்சலுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம்

                                                                          விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

                                                                          நிவாரணம் வழங்குவதற்கு
                                                                          நிவாரணம் வழங்குவதற்கு
                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                              இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 649 பாதிப்பு

                                                                              இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 649 பாதிப்பு

                                                                              இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரனோ நோயின் தாக்குதலில்

                                                                              சிக்கி இதுவரை 649 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

                                                                              மேலும் இதுவரை இந்த நோயில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,
                                                                              அது தவிர

                                                                              இராணுவத்தில் 250 க்கும் மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,

                                                                              மீளவும் ஊரடங்கு நாடு தழுவிய நிலையில் பிறப்பிக்க பட்டுள்ளது ,இந்த

                                                                                நோயானது தற்போது வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

                                                                                இலங்கையில் கொரோனா
                                                                                இலங்கையில் கொரோனா
                                                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                                                    பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்

                                                                                    பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்

                                                                                    கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த முள்ளியாடியை சேர்ந்த


                                                                                    அனோச் எனும் மாணவன் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார்

                                                                                    2109 ஆண்டு கா ,பொ ,சா ,பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில்

                                                                                    திடீரென இவர் காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                                                                                      உறவினர்கள் வீடுகளிலும் இவரை காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .


                                                                                      மகனை காணாத துயரில் குடும்பத்தினர் கண்ணீரில் தவிக்கின்றனர் .

                                                                                      இவரை யாரவது கண்ணுற்றால் அவர்களது குடும்பத்தினருக்கோ ,அல்லது அருகில் உள்ள காவல்துறையினருக்கோ ,


                                                                                      அல்லது ஊடகங்களுக்கோ தெரிவிக்குமாறு மன்றாடி வேண்ட படுகிறது

                                                                                      பளை மத்திய கல்லூரி
                                                                                      பளை மத்திய கல்லூரி
                                                                                          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                                                          வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

                                                                                          வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

                                                                                          இலங்கை மாவெனெல்ல பகுதியில் கணவன் மனவிக்கு இடையில் பலத்த சண்டை மூண்டுள்ளது .


                                                                                          இவ்வேளை மனைவி கணவனுக்கு தொடர்ந்து எதிர் தர்க்கம் புரிந்த வாய் கட்டி

                                                                                          வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் அவரை சமையலறை கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்துள்ளார்

                                                                                          இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                                                                                          கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுளளார்,

                                                                                          மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான குற்றங்கள் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                                                                          வாய் காட்டிய மனைவியை
                                                                                          வாய் காட்டிய மனைவியை
                                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                                              இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு

                                                                                              இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு

                                                                                              இலங்கை நாடு தழுவிய ரீதியில் 19 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                                                                              அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

                                                                                              உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

                                                                                              இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 136 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்..

                                                                                              கொரோனா
                                                                                              கொரோனா
                                                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                                                  நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்

                                                                                                  நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்

                                                                                                  நாளையுடன் (29) காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்களிகளின் கால எல்லை; மே மாதம் 31ஆம் திகதி

                                                                                                  வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தள்ளார்.

                                                                                                  இருப்பினும் பொதுவான அலுவல்களுக்கான அவசரகால அனுமதிப்பத்திரம் புதிதாக பெற்றுக் கொள்வது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்

                                                                                                      இன்று கொழும்பில் நடைபெற்ற செயதியாளர்களுடனான சந்திப்பில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்

                                                                                                      ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் தற்பொழுது ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு

                                                                                                      தற்காலிகமாக நீக்கப்பட்டது. நேற்றைய தினம் (28) இந்த மாவட்டங்களின் நகரங்களுக்கு பொதுமக்களின் வருகை

                                                                                                      குறைவாகவே காணப்பட்டது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் வீதிகளில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிவது

                                                                                                      கட்டாயமாகும். இவ்வாறான பின்புலத்தில் முகக் கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டிருந்த பிள்ளையொன்று

                                                                                                      பொலிஸ் அதிகாரியொருவரினால் முகக் கவசத்தை அணிந்து கொள்வதற்காக தமது பணத்தை வழங்கும் அளவிற்கு கருணை

                                                                                                      உள்ளம் வெளிப்படுத்தியமை காணக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார்.

                                                                                                      ஏனைய மாவட்டமொன்றிலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் அத்தியாவசிய சேவை

                                                                                                        வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை கந்தளாய் அக்போபுர பாதுகாப்பு சாவடியில் மேற்கnhள்ளப்பகிறது அங்கு நபர்கள் கிருமி ஒழிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

                                                                                                        இருப்பினும் இவ்வாறு வந்த சில வாகனங்களின் சாரதிகளுக்கு அவர் குடியிருக்கும் பிரதேசத்தில் சுகாதார பரிசோதகரினால்

                                                                                                        வழங்கப்படும் சுகாதார அறிக்கை இல்லாததினால் திருப்பி அனுப்பப்பட்டார்.

                                                                                                        ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 07 மற்றும் 08

                                                                                                        குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அவ்வாறானோர் நாளைய தினம் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக எந்தவகையிலும்

                                                                                                        குறிப்பிட்ட இடங்களைத் தவிர பிற இடங்களுக்கு செல்வதற்கு இடமளிக்க மாட்டாது.


                                                                                                        கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் அதிகாலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும்.

                                                                                                        மிகவும் அனர்த்தமிக்க மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதில்

                                                                                                        இராணுவத்தின் உடனடி செயலணி அதிகாரிகள் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ள

                                                                                                        ஊரடங்கு
                                                                                                        ஊரடங்கு