Tag: ரவுடி
சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை
சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை
நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் – மேற்பார்வையாளரான பெண் கைது
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில்
கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை
குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த நாராயண ஆனந்ததேவன் தர்சாத் எனும் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சிறுவன் கடந்த புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்
தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் குறித்த பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குறித்த சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.
குறித்த சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினமான இரவு உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில்
நின்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்கு பின்னான வாக்குமூலங்கங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான அப்பெண் பொலிஸ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.
சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை
பின்னர் சனிக்கிழமை(2) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தனது மகனின் மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளையும் பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் நாங்கள் எமது பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள்
யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் மரணம் அடைந்தவரின் தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் ரவுடிகள் அட்டகாசம் – பாதர் கார் அடித்து நொறுக்கு
கிளிநொச்சியில் ரவுடிகள் அட்டகாசம் – பாதர் கார் அடித்து நொறுக்கு
கிளிநொச்சி – மயில்வாகனபுரத்தில் நத்தார் தினத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த
பாதர் மார் கார் ஒன்று அதே சாலையில் அதிக போதையில் நின்ற தெரு ரவுடி கும்பலினாலே வழிமறிக்க பட்டது
அதற்கு நிற்க மறுத்து செல்ல முற்பட்ட இவர்கள் மீது குறித்த குழுவினர் சரமாரியாக தாக்குதலை
நடத்தினர் ,இதில் வண்டி கண்ணாடிகள் உடைத்து நொறுக்க பட்டதுடன் வாகனம் பலத்த
சேதமடைந்துள்ளது ,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது
வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வாள்கள் கோடாலியுடன் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இவர்கள் சமூக விரோத செயல் பாட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது
யாழில் தெரு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்
யாழில் தெரு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்
மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்த
பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி விட்டு கும்பல் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்
உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.
வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பல் நேற்று (07) இரவு 9.30 மணி அளவில் மேற்கொண்டுள்ளது.
5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட குழு முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான
இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட உடமைகளைத் தாக்கிச் சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.
கொழும்பில் இருந்து வருகை தந்து வாடகை வீடு எடுத்து நீண்டகாலமாக வசிக்கும் தாயும் மகனும் எந்தவொரு பிரச்சினைக்கும் செல்வதில்லை என்று அயலவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய கும்பலும் தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தாமல் அச்சுறுத்தும் வகையில் உடமைகளைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம் -பொலிஸ் ஆதரவு
யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம் -பொலிஸ் ஆதரவு
யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வாள் வெட்டு குழு நடத்திட திடீர்
வெட்டு தககுத்தலில் பலத்த காயமடைந்த நிலையில் இருவர்
யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இவரக்ளில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த வெட்டு தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆதரவு வழங்கி காவல் துறையினர் காப்பாற்றி செல்வதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்
கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்
கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்
இலங்கையில் நடப் பாண்டு நிகழ்வுகளின் செய்தி பகிர்வுகள் மற்றும் நாட்டில் நிலவி வரும் சமூக விரோத செயல் பாடுகளின் மூல உறைவிடமாக போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது
இந்த போதை பொருள் ஊட்டலுக்கு அடிமையானவர்கள் ,அதில் இருந்து விடுபடாத முடியாத நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் ,
கடத்தல் ,கற்பழிப்பு ,கொலை ,திருட்டு ,என்ற அனைத்து குற்ற செயல் பாடுகளிலும் தம்மை முன்னிலை படுத்தி கொள்கின்றனர்
இவ்வாறு ,இதற்கு அடிமையானவர்களை தமது கூலிகளாக வைத்திருக்கும் அரசியல் வாதிகள் இவர்களின் ஊடாக அணைத்து விடயத்தைனையும் கட்சிதமாக முடித்து விடுகின்றனர்
இவ்வாறான ரவுடிகளின் முக்கியமானவராக விளங்கி வருபவர் ,கஞ்சா அருள், ரெட்லைட் குரூப்,மின்னல் குரூப்,பாம்பு குறூப் ,என்பன .
இவர்கள் அனைவரும் இலங்கை அரச புலானய்வு துறையின் செல்வாக்குடன் செயல் பாட்டு வருகின்றனர்
தமிழர் பகுதியில் இடம் பெறும் கொலைகளுக்கு இந்த குழுக்களே காரணமாகின்றன
செல்வந்தர்களை மிரட்டி பணம் பறிப்பது ,அழகிய பெண்களை கடத்தி சென்று சீரழித்து மிரட்டி அனுப்பி வைப்பது தொடர்ப்பன
அனைத்து செயல்களும் சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பாதிக்க பட்டவர்கள் அச்சத்தில் தகவல்களை வெளியில் கூற மறுப்பதனால் உறங்கு நிலையில் இவை கிடக்கின்றன
மக்களின் முதல்வன் நானே என பறை சாற்றும் ஆளும் அரசு இதற்கு ஒத்து ஊதுவது இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக காண்பிக்கிறது .
இவர்களின் இந்த செயல் பாடுகள் நாளை இலங்கை அரசு மீள முடியாத மிக பெரும் பொறிக்குள் சிக்க வைக்க போகிறது
அணைத்து விடயங்களும் உரிய பகுதியினரால் ஆவண படுத்த படுகின்றன
இலங்கைக்குள் எட்ட முடியாத தீர்வு .உலக அரங்களில் அந்த காட்சிகள் வெளியாகும் பொழுது எட்டப் படும் நிலையும் அவ்வேளை ,தலை குனியும் நிலையில் இலங்கை செல்லும் என்பதே திண்ணம்
அவை வெளியாகும் பொழுது மிக பெரும் நெருக்கடியை இவர்கள் சந்திப்பார்கள் என்பதனை அடித்து கூறலாம்

கஞ்சா தலைவன் அருள் அட்டகாசம் – கலக்கத்தில் மக்கள்
கஞ்சா தலைவன் அருள் அட்டகாசம் – கலக்கத்தில் மக்கள்
யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவி வரும் போதைவஸ்து கலாச்சாரம் சமூகத்தில்
பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது
கொழும்பை போன்று ,போதைவஸ்து அட்டகாசம் தமிழர் பகுதியில் அதிகரித்து செல்கிறது
போதைக்கு வாலிபர்களை அடிமையாக்கி ,நாட்டில் குற்றங்கள் அதிகரிகவும் ,சமூகத்தில் வசிக்கும் மக்களிற்கு அச்சுறுதலை
ஏற்படுத்தவும் இந்த போதைவஸ்து வியாபாரம் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது
இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்க பட்டால் அது காவல்துறை பஞ்சாயத்திற்கு உள்ளாக்க படும்,அதில் கமிஷன் வேட்டைகள் இடம் பெறுகின்றன .
அரசியல் முக்கூட்டு சுழற்சியின் ,நீரோட்டத்தில் இந்த திரை மறைவு விடயங்கள் மிக இரகசிய மாகவும் ,சாதூரிய மாகவும் நடை பெற்று வருகிறது .
இந்த போதைவஸ்துக்கு பின்புலமாக அரசியல் விபாபாரிகள் மறைந்துள்ளனர் ,இவர்கள் வழங்கும் ஆதரவில் ,இந்த வியாபாரம் இலங்கை எங்கும் கொடி கட்டி பறக்கிறது ,
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

இவ்வாறே யாழ்பாணத்தில் ,குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கஞ்சா தலைவனாகவும்,ரவுடியாகவும் , வலம் வரும் கஞ்சா அருள் மிக பெரும் ,சைக்கோ கொலையாளிகளின் கூடாரமாகவும் விளங்கி வருகிறான் .
இவருக்கு சுவிஸில் உள்ள தமிழ் கூலி கும்பல் ஒன்று தீனி போடும் வேளையில் ஈடுபட்டுள்ளது ,இவர்கள் ஊடாகவே இந்த கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது
யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் முக்கிய மருத்துவராக தன்னை தற்போது அடையாள
படுத்தி நிற்கும் மருத்துவர் ஒருவர் இந்த கஞ்சா அருளுக்கு உடந்தையாக உள்ளது அம்பலமாகியுள்ளது.
அந்த மருத்துவர் மீது நல்மதிப்பு வைத்திருந்த மக்கள்,இவரது இந்த விடயங்களை அறிந்தால் அதிர்ச்சிக்கு உள்ளாகுவீர்கள் என்பதே மறைந்து கிடக்கும் விடயமாகிறது .
அது என்ன என்பதை விரைவில் ,விரிவாக தருகிறோம் காத்திருங்கள்,எதிரி எங்கும் இருப்பான் விழிப்பாயிரு .

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்








