Tag: விபத்து
அதிகரிக்கும் விபத்து திணறும் மருத்துவமனை
அதிகரிக்கும் விபத்து திணறும் மருத்துவமனை
அதிகரிக்கும் விபத்து திணறும் மருத்துவமனை ,சுகாதார அமைச்சகம் தேசிய காயம் தடுப்பு வாரத்தை அறிவித்துள்ளது
தேசிய காயம் தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தேசிய காயம் தடுப்பு வாரம் நாளை (ஜூலை 7) முதல் ஜூலை 11 வரை செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு நாளுக்கும் கவனம் பின்வருமாறு என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது:
சாலை போக்குவரத்து விபத்துகளைத் தடுத்தல்
ஜூலை 7 – சாலை போக்குவரத்து விபத்துகளைத் தடுத்தல்
ஜூலை 8 – பணியிடங்களில் காயங்களைத் தடுத்தல்
ஜூலை 9 – வீடுகள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் காயங்களைத் தடுத்தல்
ஜூலை 10 – நீரில் மூழ்குவது தொடர்பான விபத்துகளைத் தடுத்தல்
ஜூலை 11 – பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களில் காயங்களைத் தடுத்தல்
இந்த வாரத்தில், அதிகாரிகள் காயம் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள், பல்வேறு அதிக ஆபத்துள்ள பகுதிகளை ஆய்வு செய்வார்கள் மற்றும் எதிர்காலத்தில் காயங்களின் அபாயத்தைக்
குறைக்க குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை செயல்படுத்துவார்கள் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது.
இலங்கையில், மொத்த மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவர் ஆண்டுதோறும் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் காயத்தை அனுபவிப்பதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது.
தரவுகளின்படி, ஒரு நிமிடத்திற்கு குறைந்தது 6 முதல் 8 இலங்கையர்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் காயத்திற்கு ஆளாகின்றனர்.
அன்றாட வாழ்வில் ஏற்படும் விபத்துகள்
அன்றாட வாழ்வில் ஏற்படும் விபத்துகள் காரணமாக ஒவ்வொரு இலங்கையருக்கும் ஆண்டுதோறும் குறைந்தது ஒரு காயமாவது ஏற்பட வாய்ப்புள்ளது என்று அமைச்சகம் மேலும் வலியுறுத்தியது.
திடீர் காயங்களால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் 15-44 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இந்த வயது வரம்பிற்குள் மரணத்திற்கு
காயங்கள் ஒரு முக்கிய காரணமாகும் என்றும் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் காயங்களால் இலங்கையில் ஆண்டுதோறும் 2,500 முதல் 3,000 பேர் இறக்கின்றனர் என்றும் அது வெளிப்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் இறப்புகளுக்கு 10வது முக்கிய காரணமாக காயங்கள் உள்ளன.
கூடுதலாக, இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் 145,000 மொத்த இறப்புகளில், 10,000 முதல் 12,000 வரையிலான இறப்புகள் திடீர் காயங்களால்
ஏற்படுகின்றன. இது மாதத்திற்கு சராசரியாக சுமார் 1,000 இறப்புகள் அல்லது ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் குறைந்தது 4 இறப்புகள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை பராமரிப்பை அடைவதற்கு முன்பே 7,500 முதல் 8,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்கின்றன என்பது மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பராமரிக்கப்படும் தேசிய காயம் கண்காணிப்பு அமைப்பின் படி
, உள்நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் வீழ்ச்சி தொடர்பான காயங்களுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.
அமைச்சகம் சுட்டிக்காட்டியது:
15% சாலை விபத்துகள் காரணமாகவும் 15% விலங்கு தாக்குதல்கள் காரணமாகவும் 14% விழும் பொருட்களால் 11% தாக்குதல்கள்
(வேண்டுமென்றே அல்லது தற்செயலாக) 8% வெட்டுக்கள், சிராய்ப்புகள் மற்றும் இது போன்ற காரணங்களால்
வேண்டுமென்றே ஏற்படும் காயங்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன, ஆண்டுதோறும் 3,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை காரணமாக இறக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான உயிர்கள் இதன் காரணமாகவும் இழக்கப்படுகின்றன:
வீழ்ச்சிகள்
நீரில் மூழ்குதல்
பல்வேறு பொருட்களால் விஷம்
விலங்கு கடித்தல் மற்றும் தாக்குதல்கள்
வன்முறை மற்றும் கொலைகள்
அதன்படி, முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையைத் தீர்க்க பயனுள்ள காயம் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அவசரத் தேவையை சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பஸ் விபத்து கதிர்காமத்தில்
பஸ் விபத்து கதிர்காமத்தில்
பஸ் விபத்து கதிர்காமத்தில் ,கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு
இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியே தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து கிரான்குளம்
சரஸ்வதி வித்தியாயலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த வம்மி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள்
இந்த விபத்து இடம்பெறும் போது பேருந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள் இருவர் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தோர் பாண்டிருப்பு களுதாவளை பகுதியை சேர்ந்தவர்களாகும். விபத்தில் பேருந்து பாரிய சேதத்துக்குள்ளான நிலையில் வம்மி மரமும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இது மீன்பிடி படகுகள் விபத்து
இது மீன்பிடி படகுகள் விபத்து
இது மீன்பிடி படகுகள் விபத்து ,இரு மீன்பிடி படகுகள் விபத்து மீனவர்களை காணவில்லை தேடும் இலங்கை ராணுவம்.
தெவுந்தரா மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு படகும் ,களுத்துறை பகுதியிலிருந்து புறப்பட்ட மீன் பிடி படைக்கும் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது .
விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள்
இந்த விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள் ஐந்துக்கு மேற்பட்ட மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது .
மேலும் படகு ஒன்று வணிக கப்பலுடன் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
இருப்பினும் விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு ,கரைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏனைய நால்வர்களும் என்ன ஆனார்கள் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
இவ்வாறு காணாமல் போன நால்வரும் பலியாகி உள்ளார்களா, அல்லது கடல் நீந்திக்கொண்டு உள்ளார்களா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
இவ்வாறு காணாமல் போன நால்வரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில், இலங்கை விமானப்படை
இலங்கை விமான படை
ஈடுபட்டுள்ளதாகவும் ,இலங்கை விமான படை உலங்குவானூர்திகளில் தேர்தல் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த விபத்து திடீரென ஏற்பட்ட விபத்தா, அல்லது திட்டமிடப்பட்ட ஒரு விபத்தா என தெரியவில்லை.
படகு கடலில் கவிழ்ந்து காணாமல் போன நிலையிலையே ,இந்த மீனவர்களுக்கு என்ன ஆனாது என தெரியவில்லை.
இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் சிங்கள மீனவர்கள் என தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து தற்பொழுது இலங்கை ராணுவ வான்படை தேடுதலில் ஈடுபட்டுள்ளன.
இந்திய விமான விபத்துக்கு இவைதான் காரணமா
இந்திய விமான விபத்துக்கு இவைதான் காரணமா
உலக அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கும் இந்திய விமானம் வெடித்து சிதறியமைக்கான காரணங்கள் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத் விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.
விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு உயரே பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் பலரது கண் எதிரில் திடீரென கீழே இறங்கிய விமானம்
அரசு கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது ஏன் என்பது தெரியவில்லை.
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது.
விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்தததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
விபத்துக்குள்ளான விமானம் சுமார் 800 மீட்டர் வரையே உயரே பறந்தது. அதற்கு பிறகு அந்த விமானத்தால் தொடர்ந்து உயரே பறக்க இயலவில்லை. அந்த இடத்தில்தான் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அது என்ன கோளாறு என்பதைதான் நிபுணர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.
இந்த விபத்துக்கு பொதுவாக 5 விதமான காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல் இழந்து இருக்கலாம் என்பதை பிரதானமான காரணமாக சொல்கிறார்கள்.
விமான என்ஜின்கள் செயல் இழந்ததால் விமானம் மேல் எழுந்து பறப்பதற்கு தேவையான உந்து விசையை விமானத்தால் பெற இயலவில்லை என்று கருதப்படுகிறது.
விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
ஒரு என்ஜினியுடன் விமானத்தை 330 நிமிடங்கள் இயக்குவதற்கு போயிங் ட்ரீம் லைனர் ரக விமானத்தில் வாய்ப்புகள் இருப்பதாக அந்த விமான தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.
அந்த ஒரு என்ஜின் இயங்கும்போது விமானம் அந்தரத்தில் சற்று தடுமாறும். என்றாலும் விமானத்தை திருப்பி தரை இறக்கி இருக்க முடியும்.
ஆனால் விபத்துக்குள்ளான விமானம் தடுமாறவில்லை. நிலையாக ஒரே சீராக தாழ்வாக பறந்து விழுந்துள்ளது. இதனால் தான் 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தவிர விமானம் மேலே பறக்க தொடங்கிய சில வினாடிகளில் பறவைகள் மோதி இருக்கலாம். அதனால் விமான என்ஜின் செயல்இழந்து இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது.
ஆனால் விபத்துக்குள்ளான விமானம் போயிங் ட்ரீம் லைனர் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஏனெனில் போயிங் ட்ரீம் லைனர் ரக விமானங்களில் என்ஜின்கள் மிகப்பெரியதாக இருக்கும். விமான வகைகளில் இந்த ரக விமானத்தின் என்ஜின் உலகிலேயே பெரியது. எனவே சின்ன பறவைகள் மோதுவதால் அது செயல் இழந்து இருக்காது என்ற கருத்தும் உள்ளது.
ஆனால் விமான போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், “அகமதாபாத் விமான நிலைய ஓடுதளம் அருகே மிகப்பெரிய அளவில் புற்கள் வளர்ந்துள்ளன.
அந்த புற்கள் இடையே நிறைய பூச்சிகள் காணப்படுகின்றன. அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்கு ஏராளமான பறவைகள் வருவது உண்டு.
எனவே அந்த பறவைகள் விமானத்தின் 2 என்ஜின் பகுதிக்குள் மோதி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
மூன்றாவதாக விமான சக்கரங்கள் உள்இழுக்கப்படுவதை ஒரு காரணமாக நிபுணர்கள் கருதுகிறார்கள். விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அந்த சக்கரங்கள் வெளியிலேயே இருந்துக் கொண்டு இருந்தன. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சக்கரங்கள் பழுதாகி இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானத்துக்குள் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நான்காவதாக விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. எடை அதிகமாக இருந்ததால் விமானத்தின் இறக்கைகள் விமானம் மேல் எழும்பி பறக்க ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது.
போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் சராசரியாக 227.9 டன் அளவுக்கு எடையை தூக்கும் ஆற்றல் கொண்டது. நேற்று விபத்து ஏற்பட்டபோது இதை விட கூடுதல் எடை இருந்ததா?
என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. கூடுதல் எடை ஏற்றப்பட்டு இருந்தால் அதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படலாம்.
ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதை மறுக்கிறார்கள். விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் விமானம் ஓடு தளத்தில் பறக்க சாத்தியம் இருந்து இருக்காது என்று கூறியுள்ளனர்.
என்றாலும் இந்த காரணம் அடிப்படையிலும் ஆய்வு நடந்து வருகிறது.
ஐந்தாவதாக விமானத்தில் எரிபொருள் சப்ளையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று போயிங் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
எரிபொருள் தொடர்ந்து கிடைக்காத நிலையில் 2 என்ஜின்களும் செயல் இழந்து இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது.
இந்த 5 விதமான காரணங்களில் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.
இந்த விசாரணைகள் நடந்து முடிய நீண்ட காலம் தேவைப்படும் என்றும் எனவே உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய சில மாதங்கள் ஆகலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
கண்டியில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்
பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்
பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்,புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது ஜமீல் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில்
உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து புத்தளம் நகரில் உள்ள வியாபார நிலையத்திற்கு ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வவுனியாவிலிருந்து
தனியார் பேருந்து விபத்து
புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜமீல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திலும் வைத்தியசாலையிலும் மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.
விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம்
பிரேத பரிசோதனையில், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் விபத்து ஒருவர் பலி
யாழில் விபத்து ஒருவர் பலி
யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி
விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாதகல் மேற்க்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடையவர் ஆவார்.
மேற்படி குடும்பஸ்தர் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார்.
இதன்போது, சங்கானை பிள்ளையார் கோவில் வளைவு பகுதியில் மேற்படி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றை மத்திய கோட்டை தாண்டி முந்தி செல்ல முற்பட்டபோது
எதிர்த் திசையில் வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி இருவரும் மயக்கம் அடைந்தனர்.
உடனடியாக சங்கானை வைத்தியசாலையை கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இருவரும் மாற்றப்பட்ட நிலையில்
மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றவர் மயக்கம் அடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
இலங்கையில் பஸ் க்கு AI தொழினுட்பம்
இலங்கையில் பஸ் க்கு AI தொழினுட்பம்
பஸ் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பஸ்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்ப (AI) சாதனங்களை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இந்த சாதனங்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் சுமார் 40 பேரூந்துகளில் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருவிகள் மூலம் சாரதிகளுக்கு ஏற்படக்கூடிய நித்திரைக் கலக்கம் கண்காணிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம் ,ஈரானில் பேருந்து விபத்தில் 26 பேர் படுகாயம் அணிந்துள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்து உடன் ட்ராக் ஒன்று திடீரென மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வேக சாலையில் பேரூந்து விபத்து
வேக சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், ட்ராக் கொண்டு மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
உலக நாடுகளில் அதிகமான வீதி விபத்துக்கள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன.
ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு
அவிதம் ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு இடம் பெற்று வருவதும் ,சாரதிகளின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையில் ,போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற பொழுதும் ,இந்த மக்கள் உயிர் பலிகள் ,காயம் ,என்பதை தடுக்க முடியாது திணறி வருகின்றன.
தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள் ,தொடரும் பேருந்து விபத்துக்கள் அலறும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன பேருந்து என்றால் எமனா என்ற கேள்வியை பேரூந்து விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன .
இலங்கையில் தொடரும் பேருந்து விபத்துகளினால் மக்கள் பயணிகள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தனியார் அரச பேருந்துகள் விபத்துக்கள் மக்களுக்கு எமனாக செயல்படுகிறதா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கிற
அவ்வாறு கடந்த தினம் வெல்ல வாயா தெனமல்லின பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பின்புறத்தில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் போதியது.
இதன் பொழுது அதில் பயணித்த ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.
விபத்து தொடர்பாக டிப்பர் லோகின் சாரதி போலீசார் அல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்குள் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பேருந்து விபத்துக்கள் தமிழர்களுடைய சிங்களருடைய இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது
தமிழ் பகுதிகளில் இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதும் தமிழர்கள் தொடர்ந்து இவ்வாறு பலியாகி வருகின்ற செயல் என்பது சிங்கள அரசை பயங்கரவாதத்தின் திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது
வேகமாக பேருந்துகள் பயணித்தாலோ அல்லது சாரதிகள் அலட்சியப் போக்கினாக வாகனங்களை செலுத்தினாலும் உடனடியாக அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் மறந்து விடாதீர்கள்
பேருந்து பார்த்து குழந்தைகள் தப்பித்துக் கொள்ள என்னுடைய விழித்துக் கொள்ள வேண்டும் என்பது நமது அவா உள்ளது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல் ஒன்று தற்பொழுது வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .
மலையகம் நுவரெலியவை சேர்ந்த தயாணி அவர்கள் இந்த பாடலை எழுதியிருக்கின்றார் .
இறம்பொடை பேருந்து விபத்தில் இடம்பெற்ற அந்த கோர காட்சிகளை மனதில் வைத்து ,அங்கு நடந்த அந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து ,இப்பொழுது இந்த பாடலை வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இனத்தின் ஊடாக இணைந்து தயாணி வெளியீடு செய்திருக்கின்றார்.
அந்த விபத்திலே 16க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள், தாயோடு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் அதிலே பலியாகி இருந்தார்கள் .
சாரதிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்புணர்வற்ற அரசின் செயல்பாட்டின் காரணமாக ,இந்த பேருந்து விபத்து இடம்பெற்றதாக, பாடல் ஆசிரியர் அந்த வரிகளிலே குறிப்பிடுகின்றார்.
கேட்கும் பொழுதே சோகம் ததும்ப கூடிய இந்த பாடல் ,இப்பொழுது உங்கள் நெஞ்சங்களை உருக வைத்திருக்கும். காட்சி அமைப்பு அப்படி இருக்கிறது .
குறித்த பேரூந்து விபத்து தலைவிரி கோலமும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருகத்தான் வைக்கிறது .கேட்டு பாருங்கள் இந்த புதிய பாடலை .
தற்போது வன்னிமைந்தன் டிக்கெட் தளம் ,எதிரி இணையம் இணைந்து நூறு பாடல் உருவாக்கம் மற்றும் புதிய பாடலாசிரியர்கள் உருவாக்கத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
அதிலே வெளியான ஆறாவது பாடலாசிரியராக தற்போது தயாணி அவர்கள் எதிரி இணையம் ஊடாக அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றார்.
புதிய பாடலாசிரியர் உருவாக்கத்தில் புதியவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார், எங்களுடைய சேனிசை செல்லப்பா அவருடைய புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்கள் .
அவருடைய மகன் பாவேந்தன் அவர்கள் மதுர குரலால் பாடிக் கொண்டிருக்கின்றார் ..
இந்த படைப்புகள் உருவாக காரணமாக இருக்கின்ற இந்த குருக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – தயாணி
-தயாரிப்பு வன்னி மைந்தன்
வெளியீடு – எதிரி இணையம்
காணொளியில் அழுத்தி பாடலை பாருங்கள்
நன்றி வன்னிமைந்தன்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

காலிக்கு சென்ற பஸ் விபத்து
காலிக்கு சென்ற பஸ் விபத்து
மட்டக்களப்பிலிருந்து காலிக்கு சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி ஆகியுள்ளார்.
கொழும்பு – வெல்லவாய வீதியில் சனிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்த சாரதி உட்பட 13 பேர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லையென்பதுடன் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மை நாட்களாக வீதி விபத்துக்களும் அதனால் பல உயிரிழப்புக்களும் நடைபெற்றதை அடுத்து, போக்குவரத்து அமைச்சு என்ன நடவடிக்கையில் ஈடுபட்டதென தெரியவில்லை.
இருப்பினும், பஸ்கள் சரியான நிலையில் இருக்கின்றதா என பரிசோதனை செய்த அரசு, அதனை ஓட்டும் சாரதிகள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என பார்க்க தவறி விடுகின்றனர்.
இதனாலேயே இவ்வாறான விபத்துக்கள் நேரிடுகின்றது எனவும் அப்பாவிப் பொதுமக்கள் இறக்கின்றனர் ர்னவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலமை எங்க போய் முடியுமோ
கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு
கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு
கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு, என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொத்மலை பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்தவர்களில் 21 பேர் பலியாகி இருந்தனர் .
தற்பொழுது அதி ஆபத்தில் இருந்த, 21 வயதுடைய வாலிபரம் தற்பொழுது மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
அதனை அடுத்து கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
44 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்தும் இந்த விபத்தில் காயப்பட்டவர்கள் அதிதீவிர சிகிச்சை பெற்ற சிலருக்கு சிகிச்சை பெற்று வருவதால், அவர்களும் ஆபத்தானில் உள்ளதாகவும் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களுக்குள் மூன்று பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு தற்பொழுது மக்கள் பெரும் அச்சத்தில் நுழைந்துள்ளது இந்த விபத்துக்கள் கோடிட்டு காட்டுகின்றன.
அரசும் ,அரச அதிகாரிகள் காவல்துறையின் அலட்சியப் போக்கும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க மறுத்து வரும் செயல்பாடே , இந்த உயிர்ப்பலிக்கு காரணம் என மக்கள் சமூகம் குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்
கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்
கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம் கண்டி, அலதெனிய, யட்டியானகலவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளார்கள். இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் , கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,
பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் பச்சிளம் குழந்தைகள் உட்பட 21க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று, ஹட்டன் வீதியில் 20 அடி பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் கரோலினா தோட்டம் பகுதியில் நேற்று (11) காலை குடும்பமொன்று பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெல்லம்பிட்டியவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
ஒரே பிரதேசத்தில் தொடர்ந்து ஒரே நாளில் அடுத்தடுத்து
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு வீதி விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.
19பேர் பலி பேருந்து விபத்து
19பேர் பலி பேருந்து விபத்து
19பேர் பலி பேருந்து விபத்து நுவரெலியா கண்டி பிரதான வீதியில் கொட்காலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து விபத்தில் .சிக்கியது .
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், அதில் பயணித்த பத்தொன்பது பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,பேரூந்து இவ்வாறு விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று காயம் அடைந்தவர்களும் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது போலீசார் ஆரம்பித்து இருக்கின்றனர்.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.
இந்த விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.
நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற விபத்தில் ,நால்வர் பலியாகி எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம் அக்குருஷ பிரதான வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வான் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்பட்ட பொழுதுவேனில் பயணித்த 12 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் முல்லட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
காயம் அடைந்தவர்கள் யாவரும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி லொறி வான் விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற வீதியில் இந்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதை கண்காணிக்க முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருவதுடன், மக்கள் வாகனங்களில் பயணம் செல்லவே அச்சம் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

வீட்டின் மேல் விழுந்த விமானம்
வீட்டின் மேல் விழுந்த விமானம்
வீட்டின் மேல் விழுந்த விமானம் ,வீட்டின் மேல் விழுந்த விமான விபத்து சம்பவம் ஒன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இடம் பெற்றுள்ளது.
இன்று அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீட்டின் மீது விழுந்து நொறுங்கி உள்ளது.
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமான ஓட்டி உள்ளிட்ட இருவர் ,சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக ,அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
வீட்டின் ஓட்டின் மேல் விழுந்து விமானம் நொறுங்கியது .இதன் பொழுது வீட்டுக்குள்ளே விமானத்தின் பாகங்கள் விழுந்து சிதைந்து காணப்படுகின்றன.
சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு படைகள் விமானத்தின் உடைய ,பாகங்களை அங்கிருந்து அகற்றியதுடன் ,வீட்டினை துப்புரவு செய்யும் நடவடிக்கையிலும் அதனுடைய ,துப்பு துலாக்கும் நடவடிக்கைகளும் ஈடுபட்டனர்.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் ,விமானம் இயந்திரக் கோளாறு காரணமாகவே, விழுந்து நொறுங்கி இருக்க கூடும் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் தொடராக இவ்வாறான இலகுரக விமான விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதும் ,அதனால் அமெரிக்கா திணறி வருவதையும், மீளவும் ஒரு முறை இந்த விமான விபத்து ஏற்படுத்தி காட்டியுள்ளது.
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன

- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை

கோர விபத்து வாலிபன் பலி
கோர விபத்து வாலிபன் பலி
கோர விபத்து வாலிபன் பலி ஓமந்தையில் நடந்த மிகக் கொடூரமான விபத்தில் அப்பாவி வாலிபன் பலியாகி உள்ள சம்பவம் பார்ப்பவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அழகான வீதியில் ஆடம்பர மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபனே வீதி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சீக்கி பலியாகி உள்ளார்.
பெற்றவர்கள் தமது பிள்ளைகள் விரும்புகின்ற ஆடம்பரமான ஊந்துருளிகளை வாங்கி கையெழுத்து அவர்களது உயிருக்கு அவர்களை உளவித்து விடுகின்ற சம்பவம் இந்த விபத்துக்கள் உடைய காணப்படுகிறது.
இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப இந்த வீதி விபத்தில் இந்த மோட்டார் சைக்கிள் சிதறி சம்பவ இடத்தில் வாலிபர் பலியாகி உள்ளார்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் பீதி விபத்தில் நால்வர் பலியாகி டசனுக்கு மேற்படும் காயம் அடைந்து வருகின்றனர் .
வீதிக்கு வீதி காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .அவ்வாறு இருந்தும் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவது மக்களுக்கு வேதனை அளிக்கிறது .


மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம் ,மஹியங்கனை – திஸ்ஸபுர சந்தியில் இன்று (25) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஜப்பானுக்கு அப்பால் கடலில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
ஜப்பானுக்கு அப்பால் கடலில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
ஜப்பானுக்கு அப்பால் கடலில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது ,தென்மேற்கு ஜப்பானில் ஒரு மருத்துவ போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நோயாளி மற்றும் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
விமானி ஹிரோஷி ஹமாடா (66), ஹெலிகாப்டர் மெக்கானிக் கசுடோ யோஷிடகே (Kazuto Yoshitake) மற்றும் 28 வயது செவிலியர் சகுரா குனிடகே (Sakura Kunitake) ஆகியோர் நீரில் ஊதப்பட்ட உயிர்காக்கும் கருவிகளில்
ஒட்டிக்கொண்டிருந்ததைக் கண்டறிந்த பின்னர் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டனர்.
மூவரும் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டனர், ஆனால் சுயநினைவுடன் இருந்தனர் என்று கடலோர காவல்படையின் அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார், விதிமுறைகளின்படி பெயர் தெரியாத நிலையில் பேசினார்.
யோஷிடகேவின் முதல் பெயர் ஆரம்பத்தில் வேறு எழுத்துப்பிழையுடன் வழங்கப்பட்டது, ஆனால் கடலோர காவல்படை பின்னர் அதை சரிசெய்தது.
மருத்துவ மருத்துவர் கெய் அரகாவா (34), நோயாளி மிட்சுகி மோட்டோஷி (86) மற்றும் அவரது பராமரிப்பாளர் கசுயோஷி மோட்டோஷி (68) ஆகியோரின்
உடல்கள் பின்னர் ஜப்பான் விமான சுய பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டன.
மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடலோர காவல்படை இரண்டு விமானங்களையும் மூன்று கப்பல்களையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியது.
நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று கடலோர காவல்படை திங்களன்று தெரிவித்துள்ளது






















































