யாழ் ரயில்சேவை இனி தினசரி
யாழ் ரயில்சேவை இனி தினசரி ,யாழ்ப்பாணம் முதல் கல்கிசை வரையிலான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, இதுவரை வார இறுதி நாட்களில் (சனி
மற்றும் ஞாயிறு) மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் தினசரி சேவையாக விரிவாக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய அத்தியட்சகர் ரீ. பிரதீபன் தெரிவித்தார்.
நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொது மக்கள் மற்றும் துறைசார் தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சேவை தினசரி அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
இதன்படி, எதிர்வரும் 7ஆம் திகதி முதல் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொழும்பு கோட்டை நிலையத்தை காலை 5:45 மணிக்கு வந்தடைந்து, யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கும்.
இது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை மதியம் 11:49 மணிக்கு வந்தடைந்து, பின்னர் காங்கேசன்துறையை மதியம் 12:13 மணிக்கு சென்றடையும்.
மீண்டும் மாலை 1:30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்த ரயில், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 2:12 மணிக்கு
பயணத்தைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டையை இரவு 8:33 மணிக்கு வந்தடையும். பின்னர், கல்கிசையை இரவு 8:55 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை அடுத்த சில நாட்களில் ரயில்வே திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் எனவும் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
மேலும், இதுவரை காலை 5:45 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்டு வந்த யாழ் தேவி ரயில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் காலை 6:35 மணிக்கு புறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்









