நுவரெலியாவில் கனமழை
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் கனமழை

நுவரெலியாவில் கனமழை

நுவரெலியாவில் கனமழை ,நீண்டகால வறண்ட வானிலை மற்றும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், நேற்று மாலை நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.

லபுகெலே பகுதியில் யூக்கலிப்டஸ் மரம்

லபுகெலே பகுதியில் யூக்கலிப்டஸ் மரம் ஒன்றின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த மூன்று பேர், மின்னல் தாக்கியதில் லேசான காயங்களுடன் தப்பினர்.

வறண்ட வானிலையால் காய்கறி மற்றும் தேயிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் மிகக் குளிரான காலநிலை
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் மிகக் குளிரான காலநிலை

நுவரெலியாவில் மிகக் குளிரான காலநிலை

நுவரெலியாவில் மிகக் குளிரான காலநிலை ,நுவரெலியாவில் இன்று (22) காலை வேளையில் மிகக் குளிரான வெப்பநிலை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, இலங்கையில் .

வெப்பநிலை கடுமையாகக் குறைந்துள்ளது.

இன்று (22) வெப்பநிலை கடுமையாகக் குறைந்துள்ளது. நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை 3.5°C ஆக பதிவாகியுள்ளது.

திணைக்களத்தின் பிராந்திய கண்காணிப்பு வலையமைப்பிலிருந்து இன்று அதிகாலை எடுக்கப்பட்ட இந்த அளவீடு, சமீபத்திய காலங்களில் பதிவான

மிகக் குளிரான வெப்பநிலையாகும், இது மலைநாட்டில் வழக்கத்திற்கு மாறாக குளிரான நிலையை பிரதிபலிக்கிறது.

மற்ற குறைந்த வெப்பநிலைகளும் பதிவாகியுள்ளன, பண்டாரவேலாவில் 11.5°C, பதுளையில் 15.1°C மற்றும் கட்டுகஸ்தோட்டையில் 15.9°C, மத்திய மற்றும் ஊவா

பிராந்தியத்தின் பல பகுதிகளில் பரவலான குளிர்

பிராந்தியத்தின் பல பகுதிகளில் பரவலான குளிர் காலநிலையைக் குறிக்கிறது.

இதற்கிடையில், வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களின் சில பகுதிகளில் வெப்பமான சூழ்நிலை நிலவியது. முல்லைத்தீவில் காலை வேளையில்

அதிகபட்ச வெப்பநிலை 25.3°C ஆகவும், ஹம்பாந்தோட்டையில் 22°C ஆகவும், கொழும்பில் 22.1°C ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் பனிப்பொழிவு தேயிலை காய்கறி இழப்பு
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் பனிப்பொழிவு தேயிலை காய்கறி இழப்பு

நுவரெலியாவில் பனிப்பொழிவு தேயிலை காய்கறி இழப்பு

நுவரெலியாவில் பனிப்பொழிவு தேயிலை காய்கறி இழப்பு ,நுவரெலியாவில் பனிப்பொழிவு மற்றும் கனமழை தேயிலை மற்றும் காய்கறி பயிர்களை பாதித்தது.

உறைபனியுடன் இணைந்த கனமழை

காலை உறைபனியுடன் இணைந்த கனமழை நுவரெலியா பகுதியில் காய்கறி மற்றும் தேயிலை சாகுபடியை கடுமையாக

பாதித்துள்ளதாக தோட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தேயிலைத் தோட்டங்கள் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளன, உறைபனி இலைகள் காய்ந்து ஒட்டுமொத்த தேயிலை விளைச்சலைக் குறைத்துள்ளதாக

தோட்ட மேலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், காய்கறி விவசாயிகள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு தங்கள் பயிர்களில் இருந்து

உறைபனியைக் கழுவி எரிவதையும் மேலும் இழப்பையும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வானிலை ஆய்வுத் துறை ஜனவரி

வானிலை ஆய்வுத் துறை ஜனவரி 21 அதிகாலையில் 7.4 °C ஆக வெப்பநிலை வீழ்ச்சியைப் பதிவு செய்தது, இது மலைப்பகுதி விவசாயப் பகுதிகளைப் பாதித்த உறைபனி நிலைமைகளுக்கு பங்களித்தது.

எதிர்பாராத வானிலை தொடர்ந்து பிராந்தியத்தை பாதிக்கும் என்பதால், விவசாயிகள் விழிப்புடன் இருக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நுவரெலியாவில் குறைந்த பட்ச வெப்பநிலை
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் குறைந்த பட்ச வெப்பநிலை

நுவரெலியாவில் குறைந்த பட்ச வெப்பநிலை

நுவரெலியாவில் குறைந்த பட்ச வெப்பநிலை 8°C ஆக பதிவாகியுள்ளது.

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (17) நுவரெலியா வானிலை ஆய்வு நிலையத்தில் பதிவாகியுள்ளது, அங்கு வெப்பநிலை 8.0 டிகிரி

செல்சியஸாகக் குறைந்துள்ளது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின்படி, பண்டாரவளையில் அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 டிகிரி செல்சியஸாகவும், பதுளையில் 14.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

வடமத்திய மாகாணத்தில், பொலன்னறுவையில் குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

பிராந்திய தரவு சேகரிப்பு

பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை வரைபடத்தில் டிகிரி செல்சியஸில் காட்டப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பின்படி, தீவின் பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா
Posted in இலங்கை செய்திகள்

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் நுவரெலியா

ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 128 பேர் பலி
ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 128 பேர் பலிஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 128 பேர் பலி


சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளமை தொடர்பாக தகவல்கள்

கிடைக்கப்பெற்றபோதும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.


போக்குவரத்து பாதிப்பு தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மின்சார தடை போன்ற

காரணங்களால் தகவல்களை உறுதிப்படுடுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.


நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா வலப்பனை கொத்மலை மதுரட்ட ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவம நிலையத்தால் மண்சரிவிற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


நுவரெலியாவில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் பிரதான பாதை முற்றாக நீரிழ் மூழிகியுள்ளமை காரணமாக

வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதிலும் வைத்தியர்கள் தமது கடமைக்கு திரும்புவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்திசாலையின் சேவைகள் பாதிப்பு

இருந்த போதிலும் வைத்திசாலையின் சேவைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல நகரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக நுவரெலயிh நகரம் 1994 ஆம் ஆண்டு நுவரெலியா நகரின் பிரதான வீதி பஸ்தரிப்பிடம் என்பன நீரிழ் மூழ்கியது.


அதனைத் தொடர்ந்து இன்று 27.11.2025 நுவரெலியா நகரின் பிரதான வீதி பஸ்தரிப்பு நிலையம் உட்பட நுவரெலியா நகரம் முற்றாக செயல் இழந்துள்ளதுடன் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இது தவிர ஆவெலியா வைத்தியசாலை பகுதி மகிந்த மாவத்தையின் ஒரு பகுதி எதிரிசிங்க மாவத்தையின் ஒரு பகுதி குதிரைப்பந்தய திடல் அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மாகாஸ்தோட்ட மூன்பிலேன் நேஸ்பி

பம்பரகலை போன்ற பகுதிகளிலும் பாரிய அளவில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடுகள் விவசாய நிலங்கள் விவசாய பயிர்கள் என்பன முற்றாக சேதமடைந்துள்ளது.


பிரதான பாதைகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை நுவரெலியா கண்டி பிரதான பாதையில் கெரன்டி எல்ல பகுதியில் முன்னெச்சரிக்கை காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதுடன் ஒரு சில இடங்களில் மண்சிரிவுகள்

ஏற்பட்டுள்ளன.இதன் காரணமாக நேற்று நுவரெலியா கொழும்பு நுவரெலியா கண்டி பகுதிகளுக்கான பேருந்துகள் மிக குறைந்த அளவிலேயே சேவையில் ஈடுபட்டன.


குறிப்பாக தனியார் சொகுசு பேருந்துகள் முற்றாக சேவையில் இடுபடவில்லை.அதே நேரம் இரயில் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு பதுளை இரயில் போக்குவரத்து நானுஒயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் வலப்பனை ஹங்குரன்கெத்த உடபுஸ்ஸல்லாவ இராகலை கந்தப்பளை ஹபொரஸ்ட் போன்ற பகுதிகளிலும் பாதைகள் சேதமடைந்துள்ளமை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தேவையான ஏற்பாடுகளை செய்துவருவதுடன்

அரசசார்பற்ற நிறுவனங்களும் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.அதே நெரும் சேத விபரம் தொடர்பாக முழுமையான அறிக்கை

ஒன்றை தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலையில் வழங்க முடியாது எனவும் தகவல்கள் தற்பொழுது திரட்டப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.


இந்த பாரிய அனர்த்தம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாய நிலங்களும் விவசாய பயிர்களும் முற்றாக நீரிழ் மூழ்கியுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள்

பாரிய அளவில் அதிகரிக்கலாம் அல்லது மரக்கறிகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவிக்கின்றது.


பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிப்பு தொடர்பாக உரிய முறையில மதிப்பீடு

செய்யப்பட்டு அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை ஒன்றையும் முன்வைக்கின்றார்கள்.

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
Posted in பாடல்கள்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல் ஒன்று தற்பொழுது வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .

மலையகம் நுவரெலியவை சேர்ந்த தயாணி அவர்கள் இந்த பாடலை எழுதியிருக்கின்றார் .

இறம்பொடை பேருந்து விபத்தில் இடம்பெற்ற அந்த கோர காட்சிகளை மனதில் வைத்து ,அங்கு நடந்த அந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து ,இப்பொழுது இந்த பாடலை வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இனத்தின் ஊடாக இணைந்து தயாணி வெளியீடு செய்திருக்கின்றார்.

அந்த விபத்திலே 16க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள், தாயோடு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் அதிலே பலியாகி இருந்தார்கள் .

சாரதிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்புணர்வற்ற அரசின் செயல்பாட்டின் காரணமாக ,இந்த பேருந்து விபத்து இடம்பெற்றதாக, பாடல் ஆசிரியர் அந்த வரிகளிலே குறிப்பிடுகின்றார்.

கேட்கும் பொழுதே சோகம் ததும்ப கூடிய இந்த பாடல் ,இப்பொழுது உங்கள் நெஞ்சங்களை உருக வைத்திருக்கும். காட்சி அமைப்பு அப்படி இருக்கிறது .

குறித்த பேரூந்து விபத்து தலைவிரி கோலமும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருகத்தான் வைக்கிறது .கேட்டு பாருங்கள் இந்த புதிய பாடலை .

தற்போது வன்னிமைந்தன் டிக்கெட் தளம் ,எதிரி இணையம் இணைந்து நூறு பாடல் உருவாக்கம் மற்றும் புதிய பாடலாசிரியர்கள் உருவாக்கத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

அதிலே வெளியான ஆறாவது பாடலாசிரியராக தற்போது தயாணி அவர்கள் எதிரி இணையம் ஊடாக அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றார்.

புதிய பாடலாசிரியர் உருவாக்கத்தில் புதியவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார், எங்களுடைய சேனிசை செல்லப்பா அவருடைய புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

அவருடைய மகன் பாவேந்தன் அவர்கள் மதுர குரலால் பாடிக் கொண்டிருக்கின்றார் ..

இந்த படைப்புகள் உருவாக காரணமாக இருக்கின்ற இந்த குருக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – தயாணி
-தயாரிப்பு வன்னி மைந்தன்
வெளியீடு – எதிரி இணையம்


காணொளியில் அழுத்தி பாடலை பாருங்கள்

நன்றி வன்னிமைந்தன்

நுவரெலியா பாடசாலைக்கு அள்ளி உதவிய வன்னி மைந்தன் |டிக் டாக் தளம்
Posted in வன்னி மைந்தன் உதவி

நுவரெலியா பாடசாலைக்கு அள்ளி உதவிய வன்னி மைந்தன் |டிக் டாக் தளம்

நுவரெலியா பாடசாலைக்கு அள்ளி உதவிய வன்னி மைந்தன் |டிக் டாக் தளம்

நுவரெலியா பாடசாலைக்கு அள்ளி உதவிய வன்னி மைந்தன் |டிக் டாக் தளம்

வீடியோ

6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள் வன்னி மைந்தன் உதவி

6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி திட்டம் வேகமாக இணைக்க பட்டுள்ளது .

காணொளியில் விபரம்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை (30) காலை திடீர் சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.

அதன்போது, சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்றுள்ளனர். அதனையடுதே, பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். அதில் ஒருவர் காயமடைந்தார். தப்பிச்​சென்ற நால்வரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இதில், தற்காலிகமாக பணி இடைநிறுத்தம்

செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயடைந்தவர் (41) வயதுடையவர் எனவும் இவர் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக

சிகிச்சைக்காக கண்டி- போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர பொலிஸார், நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தீ
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தீ

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தீ

நுவரெலியா நகர மையத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறை பகுதியில் (31) ஏற்பட்ட தீயினால் சமையலறை பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் சமையல் எரிவாயு கசிவு என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததுள்ளது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியா - ஹட்டன் வீதியில் மண்சரிவு
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு

நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஹாத்த பகுதியில் சனிக்கிழமை (18) ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.

இம் மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை , ஹட்டன் மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நானுஓயா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு

மேலும் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் விடாது பெய்யும் அடைமழை காரணமாகவே நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வீதியில்

பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo

வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் பொருப்பதிகாரியான பிரதான பொலிஸ்

பரிசோதகர் இந்திக்க ஹேமகுமார அவர்களின் தலைமையில் பிரதேசத்திற்கு

உட்பட்ட வருமைகோட்டிற்கு கீழ் காணப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்


வீடு வீடாக சென்று இன்று (07) கையளிக்கபட்டன. இந்த உன்னதமான

செயற்பாட்டில் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் பலரும்

கலந்துக் கொண்டனர்.

வீடு வீடாக சென்று மக்களுக்கு
வீடு வீடாக சென்று மக்களுக்கு