Tag: பொரளை
பொரளை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி
பொரளை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி
பொரளை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி ,பொரளையில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
பொரளையில் உள்ள சஹஸ்புர சிறிசர வீட்டு வளாகத்திற்கு அருகில் நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இளைஞர் குழுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சந்தேக நபர்கள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கொழும்பு 09 ஐச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய மேலும் நான்கு பேர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொரளை பகுதியில் விபத்து
பொரளை பகுதியில் விபத்து
பொரளை பகுதியில் விபத்து ,பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம்
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் (Bucket truck) ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்கு சென்ற மேர்வின் சில்வா
சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்கு சென்ற மேர்வின் சில்வா
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர்.
நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











