கொத்மலை நிலச்சரிவில் 15பேர் பலி 50பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கொத்மலை நிலச்சரிவில் 15பேர் பலி 50பேர் காயம்

கொத்மலை நிலச்சரிவில் 15பேர் பலி 50பேர் காயம்

கொத்மலை நிலச்சரிவில் 15பேர் பலி 50பேர் காயம் ,கொத்மலையின் ரம்போடகல பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் சற்று நேரத்திற்கு முன்பு தெரிவித்தனர்.

கொத்மலை மருத்துவமனையில்

சுமார் 50 பேர் காயமடைந்து கொத்மலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 கிலோமீட்டர் பரப்பளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

மாவட்டத்தின் பிராந்திய செயலகம்

கொத்மலை மாவட்டத்தின் பிராந்திய செயலகம், ரம்போடகலவிற்குள் நுழையும் அனைத்து சாலைகளும்

தற்போது அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியது, இதனால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தடைபட்டுள்ளன.

கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு

கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு

கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு, என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொத்மலை பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்தவர்களில் 21 பேர் பலியாகி இருந்தனர் .

தற்பொழுது அதி ஆபத்தில் இருந்த, 21 வயதுடைய வாலிபரம் தற்பொழுது மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

அதனை அடுத்து கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

44 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்தும் இந்த விபத்தில் காயப்பட்டவர்கள் அதிதீவிர சிகிச்சை பெற்ற சிலருக்கு சிகிச்சை பெற்று வருவதால், அவர்களும் ஆபத்தானில் உள்ளதாகவும் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களுக்குள் மூன்று பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு தற்பொழுது மக்கள் பெரும் அச்சத்தில் நுழைந்துள்ளது இந்த விபத்துக்கள் கோடிட்டு காட்டுகின்றன.

அரசும் ,அரச அதிகாரிகள் காவல்துறையின் அலட்சியப் போக்கும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க மறுத்து வரும் செயல்பாடே , இந்த உயிர்ப்பலிக்கு காரணம் என மக்கள் சமூகம் குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.