Tag: தமிழ்
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
கற்புக்கு பெண் என்று சொல்லாதே
காசிற்கு விற்கிறார் மறக்காதே
உவமைக்கும் இவரை காட்டாதே -இந்த
ஊத்தையில் கண்ணை வைக்காதே
பேருக்கு ஆனாய் இருக்காதே – இந்த
பேரிடரை பெண்ணுக்கு வழங்காதே
தன் பசி போக்க என் செய்வாள்
தன்னிடம் உள்ளதை விற்கிறாள்
கற்பிற்கு விலை வைக்கும் கறையானே
கண்ணீரை உறிஞ்சும் உதையோனே
வெப்பத்தை தூவி போகாதே – இந்த
வேட்கையில் பெண்ணை நீ கொல்லாதே
பூலன் தேவியாய் ஆக்காதே – இவள்
புலியாகி எழுவாள் மறக்காதே
எதை வந்து சொன்னாலும் ஏற்கேனே
ஏளன பெண்ணை மிதிப்பேனே
சிந்திக்கும் ஆற்றலை இழந்தாளை
சிந்தைக்குள் வைக்க முனையாதே
பானைக்குள் புகுந்த அகப்பைகள்
பாதியில் முறியும் மறவாதே
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
தோன்றுதல் பிறந்திட வேண்டும் என்றால்
தோலுக்குள் புகுந்திட வேண்டும்
அணைத்து பால் மலர்ந்திட வேண்டும் என்றால் – இந்த
ஆகமம் நடந்திட வேண்டும்
எதை வந்து சொன்னாலும் எற்கேனே
இந்த இழிசாதி பெண்ணை நம்பேனே
ஆணை கொல்லும் எமன் என்பேன்
ஆக்கினை இந்த பெண் என்பேன்
நூற்றுக்கு 90நூறு இழிவென்பேன்
நுண்ணறிவில்லா மலடென்பென்
ஆண்கள் பெறுமை இழந்துவிடின்
அத்தனை குடும்பமும் இரண்டென்பேன் ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-09-2021
எங்கள் தலைவிதி
எங்கள் தலைவிதி
இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்
கரும்புகை ஏறி வானை மறைக்கும்
கந்த துகளில் மூச்சு உறையும்
வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்
வலியில் நெஞ்சு வாடி தவிக்க
வழி தெரியா நின்றோம்
உரிமை போரும் முடிவில் தவிக்க
உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்
தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
சுதந்திர தேசமே நீதி இல்லையா
மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
இதயம் இல்லா நடக்கும் உலகம்..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-03-2021
வேதிகாவிற்கு திருமணமா?
வேதிகாவிற்கு திருமணமா?
தமிழில் பரதேசி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை வேதிகா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வேதிகா.
இப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
ஆனால் அதற்கு பின்பு தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் வேதிகா திருமண கோலத்தில் வெள்ளை கவுன் அணிந்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஆனால் கூடவே கேப்ஷனில் “நல்ல வேளை நீங்கள் நினைப்பது போல எதுவும் இல்லை.
இது விளம்பர படத்திற்காக எடுக்கும் புகைப்படம்” எனப் பதிவிட்டு உள்ளார்.
இதன் மூலம் இந்தப் பதிவு தன்னுடைய திருமணத்தை பற்றியது இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்
நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
பிரபல நடிகையின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதால் நீக்க கோரி கோர்ட்டு உத்தரவிட்டுதுள்ளது.
நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
சாக்ஷி மாலிக்
நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து வி என்ற
பெயரில் தயாரான தெலுங்கு படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது புகைப்படத்தை அனுமதி
இல்லாமல் பயன்படுத்தி உள்ளதாக இந்தி நடிகை சாக்ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒரு போட்டோ ஷூட்டில் எடுத்த படங்களை சாக்ஷி மாலிக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த
புகைப்படங்கள் வி படத்தில் இடம்பெற்று இருந்தன. அத்துடன் படத்தில் பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனத்திலும் சாக்ஷி மாலிக் படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
சாக்ஷி மாலிக் – நானி
இதை எதிர்த்து சாக்ஷி மாலிக் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். தனது அனுமதி இல்லாமல் புகைப்படங்களை
பயன்படுத்தியது தவறு என்றும், இதற்காக ரூ.30 கோடி நஷ்டஈடு வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சாக்ஷியின் புகைப்படத்தை நீக்கும்படி ஓ.டி.டி. தளத்துக்கு உத்தரவிட்டது. புகைப்படத்தை
நீக்கும்வரை வி படத்தை எந்த தளத்திலும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்
நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்
திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது,
“நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை
இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை” என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.
அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு
இருந்தார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும்
யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்.
மீரா மிதுன்
உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான
விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான்
சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார்.
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்
. ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
கணவருடன் அனிதா ஹசானந்தனி
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந்
தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரை வைத்துள்ளனர். நடிகை அனிதா
ஹசானந்தனி, தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்.
அதில் தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவிடுவதற்காக இந்த பக்கத்தை அவர் தொடங்கி உள்ளார்
காதலை மறைக்கும் நடிகை
காதலை மறைக்கும் நடிகை
வாரிசு நடிகை ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவரை காதலித்து வந்தராம். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க, விரைவில்
திருமணம் செய்து கொள்ள இருந்தாராம் நடிகை. நடிப்பை விட்டு விலகலாம் என்று முடிவு செய்து இருக்கும் நிலையில், திடீர் என்று காதலரை பிரிந்தாராம் நடிகை.
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை, தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய இருக்கிறாராம்.
ஆனால், இந்த முறை யாருக்கும் தெரியாமல் மறைத்து வருகிறாராம்.
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், அவர்கள் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் பட போஸ்டர்
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து ஏற்கனவே நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து
விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
செக்ஸ் தொல்லையால் அவதிப்படும் இவர்கள்
வருகின்றனர். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன்
நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
50 கோடி -வசூல் வேட்டையில் விஜய் சேதுபதி படம்
50 கோடி -வசூல் வேட்டையில் விஜய் சேதுபதி படம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந்
தெலுங்கில் வெளியான படம்
தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
உப்பென்னா பட போஸ்டர்
இந்நிலையில், உப்பென்னா படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. அதன்படி இப்படம் மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.
ராதிகா திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சித்தி’ தொடரின் இரண்டாம் பாகம் தனியார் தொலைக்காட்சியில் தற்போது
ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிகை ராதிகா நடித்து வந்தார். இந்நிலையில் சீரியல்
நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ராதிகா தரப்பில் கூறும்போது, ”சில வாரங்களுக்கு முன்பே எடுத்த முடிவுதான் இது.
ராதிகா
அடுத்தடுத்த சில காலம் தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளார். சினிமா நடிப்பில்
எப்போதும்போல கவனம் செலுத்துவார். அதேபோல, அவரது தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி 2’ சீரியல் தொடர்ச்சியாக
ஒளிபரப்பாகும். அவர் சீரியலில் நடிப்பதை மட்டுமே தற்போது நிறுத்தியுள்ளார். என்றார்.
காதலரை அறிமுகப்படுத்திய நடிகை
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ராபி ஆபிரகாம். இவர் ‘நேரம்’, ‘ஓம் ஷாந்தி ஓஷானா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் “உன்னை
சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு
சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள்
உங்களை எப்போதும் ஆசிவதிப்பார்” என்று பதிவு செய்திருக்கிறார்.
மடோனா
தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்துடன் இந்த பதிவை
செய்திருக்கிறார் மடோனா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்
மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்
இலங்கையில் 12 ஆண்டு சிங்கள ஆளும் சர்வதிகார அடக்குமுறைக்கு
பின்னர் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியுடன் கூடிய போராட்டம் ஒன்றை
நடத்தியுள்ளனர் ,அந்த போராட்டத்தை கண்டு சிங்களம் மட்டும் அல்ல உலகமும் திரும்பி பார்த்துள்ளது
இவ்வாறான இந்த ஒன்று பட்ட போராட்டத்தை தாமே நிகழ்தியதாக அரசியல்
வியாபாரி நாரதர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,அந்த மக்கள் முன்பு பேசும்
பொழுது இந்த கூட்டத்தில் அதிகம் பேசாதே ,சாணக்கியன் தனிமனித
விடயம் பேசாதே என அங்கிருந்து மக்கள் சிலர் நேர்வாதமாக பேசியதும் ,
மைக்கை கொடுத்து விட்டு சுமந்திரம் ஓட்டம் பிடித்த காட்சிகளும் பதிவாகியுள்ளது
சுமந்திரனின் இந்த திமிர் பேச்சு மக்கள் மத்தியில் விசனத்தை கிளப்பியுள்ளது
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பேரினவாத அரசு
வீதிகளில் இராணுவ காவலரண்கள் அமைத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது
போர் வெறியுடன் தமிழர்களை அடக்கியாளும் நிலையில் சிங்கள பவுத்த
இனவெறி இராணுவம் வீதியில் குவிக்க பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
போர் குணங்களுடன் ,போர்கால பகுதியில் எவ்விதம் நாட மாடினார்களோ
அதே போன்ற செயலுடன் இராணுவம் வீதிகளில் இறக்கிவிட பட்டுள்ளது ,
அனைவரும் புது முகங்கள் ,எனவும் தமது வாகனங்களை சோதனை செய்திட
இராணுவத்தினர் தம்மை தாக்காத குறையாக அவர்கள் பார்வை மற்றும் உடல் அசைவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்
மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கே இவ்வாறான
நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்விதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் ,இது தான் இன்றைய இலங்கை
கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும் நித்யாமேனன்
கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும் நித்யாமேனன்
கொரோனா நிவாரணத்துக்காக தான் உடுத்திய உடைகளை ஏலம் விட்டு வருகிறார் நடிகை நித்யாமேனன்.
கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும்
நித்யா மேனன்
மெர்சல், 24 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். சில மாதங்களுக்கு முன் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன்
பங்கேற்றார். அதில் தான் அணிந்த உடையை அவர் முதல் கட்டமாக
ஏலம் விடுகிறார். அதை தொடர்ந்து படங்களில் பயன்படுத்திய உடைகளை ஏலம் விட உள்ளார்.
இது பற்றி நித்யா மேனன் கூறியது:- ‘நான் இந்த உடையை ஏலத்திற்காக கொடுக்கப் போகிறேன். அதில் வரும் பணத்தில் 100
சதவீதமும் அப்பணம் டிரஸ்ட்டுக்கு செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை
மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்கு பண உதவி செய்து மீண்டும் அவர்கள்
சொந்த காலிலேயே நிற்க வழி செய்யப்படுகிறது. இந்த உடையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது பல மாதங்கள் தயாரான
டிசைனர் உடை. அது எனக்காகவே ஸ்பெஷலாக செய்யப்பட்டது. பேஷன்
நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்வதற்காக தான் இந்த உடை டிசைன் செய்யப்பட்டது.
இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன்.
நீங்கள் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனது தோழியும் பிரபல
டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார். அவர் அழகான, இயற்கையாக தெரியும் உடைகளை தயாரிப்பவர் என்றார்.
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்
ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? – தமன்னா கறார்
தமன்னா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில்
நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு
நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் பரவின.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமன்னா, என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து
எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த
பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை. ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.
தமன்னா
எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட
சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று
பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை.
நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும்
படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஹீரோக்கள்
மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.
விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்
விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்
விஜய்யை பார்த்து அஜித் பொறாமைப்பட்டார் என்று பிரபல பாடகி
சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் – பிரபல பாடகி
நடிகர்கள் அஜித், விஜய்
விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக,
வலம் வருகின்றனர். தங்களுக்குள் நல்ல நட்பைப் பகிர்ந்து
கொள்ளும் இருவரும் ‘ராஜாவின் பார்வையில்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
அதன் பின்னர் இரண்டு நடிகர்களும் தங்களது தனி பாதையில் பயணித்து,
தொழில்துறையில் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர்.பாடகி சுசித்ரா
தற்போது பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்திய
ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு படங்கள்
மட்டும் அல்லாது படங்களில் இடம்பெறும் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை
பெறுவது வழக்கம். இதற்காக விஜய் மீது அஜித் பொறாமை கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட 4 தமிழ் வாலிபர்கள் கைது
செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட 4 தமிழ் வாலிபர்கள் கைது
இந்தியா தமிழகம் சென்னை பகுதியில் நான்கு இளம் வயது வாலிபர்கள்
வீடு ஒன்றில் செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட நிலையில் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
19,18,மற்றும் 17 வயது உடைய நான்கு வாலிபர்களே இவ்விதம் கைது செய்யப் பட்டுள்ளனர் .
தமது கமராக்கள் மூலம் தமது அந்தரங்க விடயங்களை படம் பிடித்து அப்டியே இணையத்தில் வெளியீடு செய்துள்ளனர் ,அவளையே இவர்கள் சிக்கினர்
செக்ஸ் இணையதளங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு உள்ளாக்க
பட்டுள்ளது ,இதில் யார் இவ்விதமான விடயங்கள் பதிவு செய்தாலும் அவர்கள் கைது செய்ய படுகின்றனர்
இதனை வெளிப்படையாக போலீசார் அறிவித்திருந்த நிலையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது ,குக்கி என்பது உங்களை கண்காணிக்கும் செயல் பாடாகும் ,
நீங்கள் உங்கள் கணனியில் இருந்தோ ,அல்லது கைபேசியில் இருந்தோ
எதனை எல்லாம் பார்வை இடுகிண்றீர்கள் ,என்ன செய்கின்றீர்கள் என்பதை
குற்ற தடுப்பு பிரிவினர் கண்காணிக்கின்றனர் ,உங்கள் கடவு செல்லு முதல் அனைத்தும் அவர்கள் தெரிந்து வைத்து கொள்வார்கள்
இதன் ஊடாகவே உங்களுக்கு தெரியாது நீங்கள் கண்காணிக்க படுகிண்றீர்கள் என்பதாகும்
மீனாவை கிண்டலடித்த ரஜினி
மீனாவை கிண்டலடித்த ரஜினி
அன்புள்ள ரஜினிகாந்த் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னை கிண்டலடித்தது குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிண்டலடித்த ரஜினி…. புன்னகையுடன் பகிர்ந்த மீனா
மீனா, ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தப் படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகை மீனா ரோசி என்ற
கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதில் தான் அவர் அறிமுகம். 1984-ம் ஆண்டு வெளியான இப்படத்தை
நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை மீனாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த மீனா, இந்த படத்தின் போது
தனக்கு கிடைத்த அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
அந்தப் படத்தில் லதா ரஜினிகாந்த் பாடியிருந்த கடவுள் உள்ளமே என்ற பாடலையும்
தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தில் தனது அறிமுக காட்சியையும் பகிர்ந்துள்ளார்.
மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
உணவில் தண்ணீர் ஊற்றுவது, பாலை நடிகை அம்பிகாவின் முகத்தில் ஊற்றுவது போன்ற காட்சிகளை பகிர்ந்து கொடுமையான சிறுமி என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரஜினிகாந்த் தனக்கு
சாக்லேட் வழங்கும் காட்சியையும் அதனை அவர் துப்புவதையும் பகிர்ந்தார் மீனா. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மீனா, தான்
நடித்ததிலேயே இதுதான் மிகவும் கடினமான காட்சி, ஏனெனில் எனக்கு சாக்லேட்,இனிப்புகள் ரொம்ப பிடிக்கும் என கூறியிருக்கிறார்.
தொடர்ந்து முத்துமணி சுடரே வா.. என்ற பாடலையும் பகிர்ந்துள்ள மீனா.. ரஜினி அங்கிள் என்று கூறும் குரல் தன்னுடையது என்றும்
கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய தாயாரிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குறீங்க என்று தன்னை கிண்டலடிக்கும் வகையில் கேட்டார் என்றும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.
சிம்ரன் வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு
சிம்ரன் வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரனின் தற்போது வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
சிம்ரன் வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு
நடிகை சிம்ரன்
தமிழில் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில்
கால்பதித்தவர் சிம்ரன். முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த பெருமை இவரை சேரும்.
நேருக்குநேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார்.
ஊரடங்கு என்பதால் பிரபலங்கள் தங்கள் டிக்டாக், போட்டோக்கள், வீடியோக்கள் என பலவற்றை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது சிம்ரன் டிக்டாக் வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் அழகான ரியாக்சனுடன் சாப்பிடுவதை பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் சாப்பிடுவதிலேயே இவ்வளவு அழகா என்று ரசித்து பகிர்ந்து வருகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

என் கணவரை விட அவர் சூப்பர் பண்ணுறார் – சமந்தா
என் கணவரை விட அவர் சூப்பர் பண்ணுறார் – சமந்தா
என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் என்று இயக்குனரிடம் நடிகை பற்றி சமந்தா கூறியுள்ளார்.
என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் – சமந்தா
நடிகை சமந்தா
2015-ல் வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தெலுங்கில் அறிமுகமான
பின்தான் தமிழுக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தமிழில் நடித்த ‘கரு, மாரி 2, என்ஜிகே’ ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை.
அதனால், தமிழில் தற்போது கைவசம் எந்தப் படமும் இல்லாமல் இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல
பெயரையே பெற்றுத் தந்துள்ளன. ‘பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, பதி பதி லேச்ச மனசு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது சேகர்
கம்முலா இயக்கத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா ஜோடியாக ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.
சாய் பல்லவி, சமந்தா
இன்னும் சில நாள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்குள்
படத்தைப் பார்க்கும் தன் ஆவலை இயக்குனரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி சமந்தா.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

இயக்குனரும் எடுத்தவரையில் எடிட் செய்யப்பட்ட படத்தை சமந்தாவிற்கு காட்டியிருக்கிறார்.
அதைப் பார்த்த நடிகை சமந்தா, ‘இந்த படத்தில் நாக சைதன்யாவை விட சாய்
பல்லவி தான் டாமினேட் செய்கிறார்,’ என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்







