Posted in சினிமா

கவர்ச்சி பக்கம் திரும்பிய ராதிகா

கவர்ச்சி பக்கம் திரும்பிய ராதிகா

பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா, தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி இருப்பதாக கூறி இருக்கிறார்.

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா
ராதிகா


பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கம் சில தினங்களுக்கு

முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார்.

ராதிகா

இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    Posted in சினிமா

    எனக்கு கொரோனா இல்லை – ராதிகா

    எனக்கு கொரோனா இல்லை – ராதிகா

    தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா இரண்டு நாட்களாக எந்த பதிவும் செய்யாததால்,

    கொரோனா தான் காரணம் என்று ரசிகர்களும், ராதிகா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் பதிவு செய்து வந்தார்கள்.

    ராதிகாவின் பதிவு

    இந்நிலையில் ராதிகா இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், அனைவரின் அன்புக்கும் நன்றி. எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை.

    தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உடம்பு வலி மட்டுமே. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன்

    மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன. நாங்கள் மேல் நீதிமன்றங்களில் முறையிடுவோம். நான் வேலைக்கு திரும்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

      Posted in சினிமா

      ராதிகா திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்

      ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சித்தி’ தொடரின் இரண்டாம் பாகம் தனியார் தொலைக்காட்சியில் தற்போது

      ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிகை ராதிகா நடித்து வந்தார். இந்நிலையில் சீரியல்

      நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      இது தொடர்பாக ராதிகா தரப்பில் கூறும்போது, ”சில வாரங்களுக்கு முன்பே எடுத்த முடிவுதான் இது.

      ராதிகா

      அடுத்தடுத்த சில காலம் தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளார். சினிமா நடிப்பில்

      எப்போதும்போல கவனம் செலுத்துவார். அதேபோல, அவரது தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி 2’ சீரியல் தொடர்ச்சியாக

      ஒளிபரப்பாகும். அவர் சீரியலில் நடிப்பதை மட்டுமே தற்போது நிறுத்தியுள்ளார். என்றார்.