Tag: தமன்னா
தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர்
தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர்
தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர் ,மருத்துவ மாபியா விடயத்தில் போலியான கருத்துக்களை பரப்பி மருத்துவர் ஒருவர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
அர்ச்சனாவினை பொய்யாக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் டாக்டர் முனா என்ற பெயர்வழி தமன்னாவுடன் படம் எடுக்க சென்ற விடயம் தொடர்பான ஆதாரம் கசிந்தது ள்ளது.
மருத்துவ துறையில் தன்னை முதன்மையான நபர் என தெரிவித்து இருக்கும் இவர் தமன்னாவை பார்க்க செல்ல பெரும் தொகையில் பணத்தை செலுத்தி முதல் ஆசனத்தில் அமர்ந்து தமன்னாவை தொட்டு ரசித்துள்ளதாக சமூக ஊடகங்கள் வாயில்கா மக்கள் பேசி கொள்கின்றனர் .
மக்களின் கடவுளாக தன்னை அறிவித்து கொள்ளும் இந்த மருத்துவர் ,நடிகை ஒருவரை கண்டு தரிசித்து ஆசிர்வாதம் செல்ல முயன்றது ஏன் என கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர் .
சமுகம் தொடர்பாக பேச வருகின்றவர்கள் சமூகத்தில் எவ்விதமான கருத்தை விதைக்கிறார்கள் என்பது கவனிக்க படவேண்டிய விடையம் என்பதாக அவர்கள் சுட்டி கடடுகின்றனர் .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா
வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா
தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது ‘போலா ஷங்கர்’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா
தமன்னா
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படம்
தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் இணைந்து நடித்திருந்த
தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறி உள்ளது – தமன்னா
ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறி உள்ளது – தமன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் வெளியானது. இந்த நிலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில், “
தற்போது சினிமாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் மாறி உள்ளது.
சினிமா பற்றிய அவர்களின் பார்வையும் இனிமேல் மாறும். இந்த மாற்றங்கள் காரணமாக நட்சத்திர அந்தஸ்தும் மாற தொடங்கி உள்ளது.
தனி நடிகருக்காக ரசிகர் யாரும் படங்களை பார்க்க மாட்டார்கள். படத்தின் கதை வலுவாக உள்ளதா என்பதை வைத்தே படம் பார்க்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் ஒரு நடிகருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு கிடைப்பது கஷ்டமான விஷயம்.
தமன்னா
இந்த நிலையில் எனக்கும் ரசிகர் கூட்டம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கிரைம், திரில்லர்
கதைகளில் நடிக்காத குறையை நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் போக்கியது. அதில் நான் நடித்த கதாபாத்திரம் பெரிய சவாலாக இருந்தது’’ என்றார்.
மரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா குறித்து தமன்னா
மரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா குறித்து தமன்னா
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது மரண பயம் வந்ததாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
மரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா குறித்து தமன்னா
தமன்னா
நடிகை தமன்னாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். மீண்டும் ஐதராபாத்தில்
தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி வருமாறு: எனக்கு கொரோனா தொற்று உறுதியானதும் மிகவும் பயந்து
போனேன். சிகிச்சை எடுக்கும்போது, செத்து போய்விடுவேன் என்ற எண்ணம்தான் வந்தது. கொரோனா பயம் நிறைய இருந்தது.
நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது. மருத்துவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான
நேரத்தில் எனது பெற்றோர்கள்தான் தைரியம் கொடுத்தனர். அந்த நேரத்தில் வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது. உயிரோடு
இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தோன்றியது.
தமன்னா
கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடித்து வருகிறேன். உடம்பை வலிமையாக வைத்துக்கொள்ள
வேண்டிய நேரத்தில் கொரோனா வந்து விட்டதே என்று வருத்தமாக இருந்தது. இப்போது தேறி வருகிறேன். கொரோனா வந்தவர்கள்
பாதிபேருக்கு பயத்தில்தான் உயிர் போய்விடுகிறது என்று நினைக்கிறேன்.
அந்த பீதி இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தைரியம்தான் மனிதனுக்கு பாதிபலம். கொரோனா பாதித்து
ஆஸ்பத்திரியில் இருந்தால் அவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருந்து தைரியம் கொடுத்தால் பிழைத்து கொள்வார்கள். இவ்வாறு தமன்னா கூறினார்.
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்
ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? – தமன்னா கறார்
தமன்னா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில்
நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு
நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் பரவின.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமன்னா, என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து
எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த
பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை. ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.
தமன்னா
எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட
சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று
பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை.
நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும்
படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஹீரோக்கள்
மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.
தாய்மொழி தெரியாமல் கஷ்டப்படும் தமன்னா
தாய்மொழி தெரியாமல் கஷ்டப்படும் தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரபலமாக இருக்கும் தமன்னா தாய் மொழி தெரியாமல் கஷ்டப்படுவதால் அதை கற்று வருகிறார்.
தாய்மொழி தெரியாமல் கஷ்டப்படும் தமன்னா
நடிகை தமன்னா
‘கேடி’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தமன்னா.
இதைத் தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் வந்தன. தனுஷின் படிக்காதவன்,
சூர்யாவின் அயன், கார்த்தியின் பையா, விஜயின் சுறா, அஜித்தின் வீரம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
தமிழ் வெப்சீரிசில்லும் நடித்து அவரே டப்பிங்கும் பேசி வருகிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்தார்.
தமன்னாவின் தாய் மொழி சிந்தி. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில்
பேசும் நடிகை தமன்னாவுக்கு தனது தாய்மொழியில் பேசத் தெரியாது.
சில வார்த்தைகள் புரியும் என்றாலும் சரளமாகப் பேச வராது என்பதால்,
இந்த ஊரடங்கில் தனது அம்மாவிடம் சிந்தி மொழியை கற்கிறார்.
மற்ற மொழிகள் தெரிந்திருந்தாலும் தாய் மொழி தெரிந்திருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்
தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்து நடிகை தமன்னா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்
தமன்னா
தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக
நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக
நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில்
நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் தமன்னா, சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது
விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னா, சமூக வலைத்தளங்களில்
வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்துள்ளார். தலையணையை மட்டும் அணிந்துகொண்டு, தரையில் படுத்தபடி
புகைப்படம் ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
தமிழில் பேசி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள தமன்னா, இதை செய்தால்
கொரோனாவை எளிதில் ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார்.
இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு
வீட்டில் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்தானதால் நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள்.
ஊரடங்கை மீறி சிலர் வெளியே சுற்றவும் செய்கின்றனர். அவர்களால்
கொரோனா மேலும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
அவர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் நடிகர்-நடிகைகள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “நம்மால் கோவிட்-19 வைரசை எளிதாக
ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான்.
நாம் அனைவரும் இந்த நேரத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும்.
தமன்னா
இப்போது அதுதான் நமக்கு பாதுகாப்பு. கொரோனா வைரசிடம் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கையில்தான்
இருக்கிறது. எனவே அரசாங்கம் சொல்வதை கேளுங்கள். சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். விலகி நின்று
ஒன்றிணைவோம். கொரோனா வைரசை ஒழிப்போம்”. இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் தமிழில் பேசி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.









