Posted in சினிமா

பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை

பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், பணம் என்றதும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சின்ன நம்பர் நடிகை, தற்போது

குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறாராம். தற்போது

      படப்பிடிப்பு இல்லாததால் நடிகை மிகவும் வருத்தத்துடன் இருந்தாராம்.

      இதை அறிந்த ஆப் நிறுவனம் ஒன்று நடிகையை அணுகி எங்களுடைய

      ஆப்- பில் நீங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்களாம்.

      முதலில் மறுத்த நடிகை பின்னர் நிறைய பணம் தருகிறோம் என்று சொன்னதும் உடனே அதில் கலந்து கொண்டாராம்

      பணம் என்றதும் ஓகே
      பணம் என்றதும் ஓகே
          Posted in சினிமா

          75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நடிகை

          75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரணீதா

          தமிழில் சகுனி, மாஸ் படங்களில் நடித்த நடிகை பிரணீதா, 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.

          75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரணீதா
          பிரணீதா


          கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று

              சம்பாதித்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள் நிலை மோசமாகவே உள்ளது.

              ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்த்தவர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

              அவர்களுக்கெல்லாம் நடிகர்கள், நடிகைகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.


              ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் பிரணீதா
              தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட

              நடிகையான பிரணீதா சுபாஷ், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். அவரது நேரடி மேற்பார்வையில்

                  உணவுகளை சமைப்பது, பேக் செய்வது ஆகியவற்றைப் பார்த்து அவரும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு நாளைக்கு 75 ஆயிரம்

                  பேருக்கு உணவு வழங்குகிறார். பிரணீதாவின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

                  75 ஆயிரம் பேருக்கு
                  75 ஆயிரம் பேருக்கு
                      Posted in சினிமா

                      ரசிகர் மீது கோபப்பட்ட பிரபல பட நடிகை

                      ரசிகர் மீது கோபப்பட்ட பிரபல பட நடிகை

                      விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் ரசிகர் மீது கோபப்பட்டிருக்கிறார்.

                      ரசிகர் மீது கோபப்பட்ட மாஸ்டர் பட நடிகை
                      மாளவிகா மோகனன்


                      விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூனை ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

                          அந்த பதிவில் ‘மாஸ்டர்’ குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் மாளவிகா

                          மோகனன் மட்டும் சமைப்பது போன்றும் மற்றவர்கள் பொழுதுபோக்கு அம்சத்தில் ஈடுபட்டிருந்தது போன்றும் வடிவமைத்திருந்தார்.

                          இந்த கார்ட்டூனுக்கு மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு “ஒரு கற்பனையான

                          பாத்திரம் வீட்டில் இருந்தால் கூட, பெண்ணின் வேலை என்பது சமையல் மட்டும்தானா? இதுதான் பாலின சமன்பாடா? என்று

                          கேள்வி எழுப்பியிருந்தார். இந்த டுவிட்டுக்கு விஜய் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாளவிகா அந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.
                          விஜய் ரசிகர் வெளியிட்டுள்ள கார்ட்டூன்.


                          இதையடுத்து மீண்டும் விஜய் ரசிகர் கிட்டத்தட்ட அதேபோன்ற பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதில்

                              மாளவிகா மோகனன் சமையல் செய்வதற்கு பதில் புத்தகம் படிப்பது போல் உள்ளது. இந்த படத்தை பார்த்த மாளவிகா

                              மோகனன், ‘நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். இதனை நான் மிகவும் விரும்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

                              ரசிகர் மீது கோபப்பட்ட
                              ரசிகர் மீது கோபப்பட்ட
                                  Posted in சினிமா

                                  சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் நடிகர் – அடம் பிடிக்கும் நடிகை

                                  சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் நடிகர் – அடம் பிடிக்கும் நடிகை

                                  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், சமந்தாவுடன் இணைந்து நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

                                  சமந்தாவுடன் நடிக்க மறுப்பது ஏன்? – பிரபாஸ் விளக்கம்
                                  சமந்தா, பிரபாஸ்


                                    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா, திரிஷா என பல முன்னணி

                                    ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் அவர் இதுவரை சமந்தாவுடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.

                                    இதுகுறித்து பிரபாஸிடம் சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

                                    அவர் கூறியதாவது: எனக்கும் சமந்தாவிற்கும் இடையே உயரம் பிரச்சனையாக உள்ளது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து

                                    பணியாற்றாததற்கு முக்கிய கரணம் என கூறியுள்ளார். கடந்தாண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ

                                    திரைப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. பின்னர் அவருக்கு பதில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்தனர்.

                                    சமந்தாவுடன் நடிக்க மறுக்கும்
                                    சமந்தாவுடன் நடிக்க மறுக்கும்
                                        Posted in சினிமா

                                        சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்.

                                        சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்.

                                        படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது நியாயம் அல்ல என பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

                                        சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்
                                        சூர்யா


                                        ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ஜே.ஜே.பிரடரிக் என்ற புது டைரக்டர் இயக்கியுள்ள படம், ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி

                                          நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை

                                          காரணமாக படம் திரைக்கு வருவது தள்ளிப்போய் இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படம், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில்

                                          தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு இணையதள நிறுவனம் ரூ.9 கோடி கொடுத்து வாங்கி, இணையதளத்தில் வெளியிடுவதற்கான

                                          ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

                                          ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்

                                          தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ உள்பட பல படங்களை தயாரித்த பட அதிபர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறுகையில்,

                                          “படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம். முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியுமா? என்று ஒவ்வொரு தயாரிப்பாளரும்

                                          கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது

                                          நியாயம் அல்ல. தயாரிப்பாளரை மிரட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்றார்

                                          சூர்யாவுக்கு ஆதரவாக
                                          சூர்யாவுக்கு ஆதரவாக

                                          .

                                            Posted in சினிமா

                                            தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்

                                            தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்

                                            சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்து நடிகை தமன்னா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

                                            தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்
                                            தமன்னா


                                            தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக

                                              நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக

                                              நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில்

                                              நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.

                                              தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் தமன்னா, சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது

                                              விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னா, சமூக வலைத்தளங்களில்

                                              வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்துள்ளார். தலையணையை மட்டும் அணிந்துகொண்டு, தரையில் படுத்தபடி

                                              புகைப்படம் ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

                                              தமன்னாவின் தலையணை
                                              தமன்னாவின் தலையணை
                                                Posted in சினிமா

                                                மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி

                                                மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி

                                                தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி மலையேற முடியாமல் வருத்தத்தில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

                                                மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி
                                                நடிகை ராய் லட்சுமி


                                                மலை ஏறும் டிராக் முறை நடிகைகள் பலருக்கு சிறந்த பொழுதுபோக்கு. ராய் லட்சுமியும் அதில் ஒருவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அடிக்கடி மலை ஏற சென்றுவிடுவார்.

                                                  கடந்த மார்ச் மாதத்தில் இது போல் கேரள மலைகளுக்கு செல்ல ராய் லட்சுமி முடிவு செய்திருந்தார்.

                                                  அதற்குள் கொரோனா பீதி அதிகரிக்க தொடங்கிவிட்டது. பிறகு ஊரடங்கும் தொடங்கிவிட்டதால் டிராக் செல்ல முடியவில்லை என்று ராய் லட்சுமி வருத்தத்தில் இருக்கிறார்.

                                                  ‘மலை ஏறுவது எனது சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. இது எனக்கு திரில் அனுபவத்தை தரும்.

                                                  6 மாதங்களுக்கு ஒரு முறை டிராக் சென்றுவிடுவேன். இந்த தடவை ஊரடங்கு

                                                  காரணமாக நான் எங்கும் செல்ல முடியவில்லை. இது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார் ராய் லட்சுமி

                                                    Posted in சினிமா

                                                    நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி

                                                    நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி

                                                    இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீ ரெட்டி தற்போது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

                                                    நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி
                                                    நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீ ரெட்டி


                                                    சினிமா துறையில் தொடர்ந்து சர்ச்சையாக பல விஷயங்கள் செய்து வருபவர் ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக புகார் கூறினார்.

                                                    மேலும் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக பெயர்களை வெளிப்படையாக கூறினார்.

                                                    தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் “இது என் உடல்..

                                                    நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் இங்கு வந்து கமெண்ட் செய்கிறீர்கள்” என கேட்டுள்ளார்.

                                                    “எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட்டை மாற்றி கொண்டு தான் இருப்பேன்.”

                                                    “இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாதா ஆண்கள்

                                                    என பலருடன் காதலில் இருந்தார். அவரை பற்றி கமெண்ட் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா?. ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும்,

                                                    வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இது தான் வித்தியாசம்,” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

                                                    நயன்தாராவை இப்படி வெளிப்படையாக ஸ்ரீரெட்டி வம்புக்கு இழுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

                                                    நயன்தாராவை வம்புக்கு
                                                    நயன்தாராவை வம்புக்கு
                                                        Posted in சினிமா

                                                        கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்

                                                        கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்

                                                        கொரோனா நமக்கு பாடத்தை உணர்த்தி இருக்கிறது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.

                                                        கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல் அகர்வால்
                                                        நடிகை காஜல் அகர்வால்


                                                        தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

                                                        நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் கடைசியாக மகிழ்ச்சியான

                                                        வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை

                                                        என்று இந்த கொரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.

                                                        எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும்

                                                        என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது

                                                        வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான்

                                                        நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொரோனாவால்

                                                        மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்.

                                                        இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

                                                        கொரோனா நமக்கு
                                                        கொரோனா நமக்கு
                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                        இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo

                                                        இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo

                                                        மதிப்பிற்குரிய சகோதரர் திரு. ராகவேந்திரா, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம்,

                                                        இரும்பூதிபட்டி என்கிற கிராமத்தில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

                                                        இதில் 10 குடும்பங்கள் அன்றாட சாப்பாட்டுக்கு கூட வழி இல்லை. வேலை இல்லாமல் அரிசி வாங்க கூட காசு இல்லாத நிலையில் இருக்கிறார்கள்.

                                                        ஒரு அக்கா எனக்கு போன் பண்ணி சாப்பிட கூட வழிஇல்லை என அழுதனர். இதனை கேட்டபின்பு எனக்கு மனம் வலித்தது. உடனே என் வீட்டிக்கு வாங்கி வைத்த ஒரு மூட்டை அரிசியை

                                                        கொடுக்கிறேன் என உறுதியளித்தேன். ஆகவே இவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                        உதவுவோர்கள் பாதிக்க பட்ட குடும்பத்துடன் நேரடியாக உரையாடி உதவிங்களை வழங்குங்கள் ,அல்லது இந்த பதிவை share பண்ணுங்கள் ,இதை பார்ப்பவர்கள் யாரவது இவரக்ளுக்கு உதவுவார்கள் .

                                                        மான தமிழா ,மன்றாடி கேட்கிறோம் , இவர்களுக்கு ஒருவேளை உணவு கொடு ,

                                                        🙏🙏🙏இப்படிக்கு S. சந்துரு, விதைகள் அறக்கட்டளை, கரூர் மாவட்டம். 0091-96988 77665, 0091-6380 348455.

                                                        மேலதிக தொடர்புகளுக்கு லண்டன் -0044 7536 707793

                                                        இந்தியாவில் உணவுக்கு
                                                        இந்தியாவில் உணவுக்கு
                                                        Posted in சினிமா

                                                        நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்

                                                        நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்

                                                        தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா, தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

                                                        பிகினியில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
                                                        ஹன்சிகா


                                                        தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து

                                                        முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில்

                                                        நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

                                                        ஹன்சிகா

                                                        இந்நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

                                                        கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர், “கடலை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. மனம் முழுவதும் அங்கு

                                                        தான் உள்ளது” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

                                                        நீச்சல் உடையில் கலக்கும்
                                                        நீச்சல் உடையில் கலக்கும்
                                                        Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                        லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

                                                        லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

                                                        லண்டனில் உள்ள தமிழர் கடைகளில் சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் வியாபாரம் பெரும் சூடு பிடித்தது ,அதனால் வரும்

                                                        மக்களுக்கு வரையறுக்க பட்ட லிமிட் பொருட்கள் வழங்க பட்டன .
                                                        பொருட்களின் விலைகளும் அதிகமாக உயர்த்த பட்டு விற்க பட்டன

                                                        வழமையாக செல்லும் வாடிக்கை யாளர்களுக்கே அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த நிலையால் மீளவும் அந்த

                                                        கடைகளுக்கு தாம் செல்ல மாட்டோம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தன .

                                                        தற்பொழுது சில கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அந்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளனவாம்

                                                        இதனால் கலக்கம் உற்ற தமிழர்கள் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சி வருகின்றனர் ,அங்கு பணி புரியும் தமிழர்களை வற்புறுத்தி

                                                        வேலைகளுக்கு வருமாறு அதே தமிழ் முதலாளி மார்கள் கோருவதாகவும் ,

                                                        ஆனால் நோயின் பீதி காரணமாக அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என கூறும் நிலையில் ,வரா விட்டால் வேலை இல்லை என

                                                        தெரிவிப்பதால் அந்த பணியாளர்கள் பெரும் சங்கட நிலையில் சிக்கியுள்ளன

                                                        எனினும் வேலை போனாலும் பரவாயில்லை உயிர் முக்கியம் என கருதிய பல கூலிகள் அந்த கடைக்கு பணிக்கு செல்வதை
                                                        முற்றாக கைவிட்டு வீட்டில் முடங்கியுள்ளது .

                                                        அண்மையில் பிரிட்டனில் கொரனோவால் இறந்த தமிழர்கள் சிலர் ,கடையில் பணி புரிந்தவர்கள் என கண்டறிய பட்டுள்ளது

                                                        நோயின் தொற்றுடன்,நோயினை மறைத்து , இவர்கள் வேலை செய்ய கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழர்கள்

                                                        இப்பொழுது தமிழர் கடைகளுக்குச செல்வதை அதிகம் தவிர்த்து வருகின்றனர்

                                                        தமது கடைகள் பூட்ட பட்ட பொழுதும் அதற்கான காரணத்தை இவர்கள் மறைத்து வருவதால் அங்கு உள்ளே பணி

                                                        புரிந்தவர்களினாலே கதைகள் வேகமாக பரவிய நிலையில் மக்கள் பெரிதும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்

                                                        மனைவி பிள்ளைகள் கடைகளுக்கு செல்லாதீர்கள் என மறித்த பொழுதும் அது தாண்டி பணிக்கு சென்ற சிலர், நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதும் ,இறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது

                                                        இப்பொழுது ஆள் இல்லா கடையில் இலையான் கலைக்கும் நம்ம சில தமிழ் கடைகள் ,


                                                        உண்மையும் ,நேர்மையும் இல்லாது வியாபாரம் செய்திட முனைந்தால் இது தான் நிலவரம் என சமூக வலைத்தளங்களில் மக்கள் வறுத்தெடுத்து வருவதை காண முடிகிறது

                                                        மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாது போல ,அலறிய மக்கள் மடியில் அதிக பணத்தை கறந்தன இந்த தமிழ் கடைகள் .

                                                        கொரனோ முடிவுற்றதும் ,விலை கூடி விற்ற தமிழர் கடைகளுக்கு வியாபாரம் கொரோனவாக முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக உள்ளன

                                                        சில கடைகளின் முன்பாக மூன்றடி இடைவெளியில் ஒருவர் நிற்க வேண்டும் என்ற விதி உள்ளது அதற்கான கோடுகள் கடைகளில்

                                                        இடப் பட்டுள்ளன, இல்லை எனின் அவ்வாறான தூரத்தில் நிற்க வேண்டும்

                                                        ஆனால் தமிழர் கடைகள் சிலதில் அவை காண முடியாத நிலையிலும் ,கவுண்டரில் இருந்து பணத்தை பெறுபவர் தூரமும்

                                                        அவ்வாறே இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாக பேசு பொருளாகிறது,

                                                        அவ்விதம் இல்லாத கடைகளுக்கு மூடு விழா இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் வைராலகி வருகின்றன

                                                        அனைவரும் தமிழர்கள் எனவே இந்த கொடிய நோயின் காலத்தில் ,சிந்தித்து செயல் படுவது நன்று ,

                                                        பணம் நாளையும் உழைக்கலாம் ,ஆனால் உயிர் போனால் வருமா ..? இந்த நோய் தொற்றின் நிலை என்ன .? உங்களுக்குள் இந்த

                                                        கேள்விகளை எழுப்பி பார்ப்பின் அதன் எதிர்விளைவுகள் சற்றேனும் தெழிந்திட வாய்ப்புக்கள் இருக்கும் என நம்பலாம் .

                                                        இந்த நோயின் பரவல் காலத்தில் நான்கு வாரத்தில் நத்தார் வியாபாரத்தை தாண்டி வியாபாரம் புரிந்து பிரிட்டனில் புரிந்து டெஸ்க்கோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது

                                                        எங்கே நம்ம தமிழர் கடைகளில் உங்கள் வியாபார கணக்கு எது என்பதை காண்பிக்க முடியுமா ….? இது மக்கள் மன்றின் கேள்வி ….

                                                        இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் ஏதும் இல்லை என்பதே ,பதிலாக அமையும் . நேர்மை எங்கு இருக்கிறதோ அவ்விடத்தில் எப்பொழுதும் வியாபாரம் பெருகும் என்பதே வியாபார தந்திரம் .

                                                        லண்டனில் தமிழர் கடைகளுக்கு
                                                        லண்டனில் தமிழர் கடைகளுக்கு
                                                        https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0
                                                        Posted in சினிமா

                                                        தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா

                                                        தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா

                                                        தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என்று கூறியுள்ளார்.

                                                        தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா
                                                        ராஷ்மிகா


                                                        நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த ஒரு வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக வலம் வரும் இவர்,

                                                        தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் கூட இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட

                                                        நிலையில் அந்த வாய்ப்பு திடீரென பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு சென்று விட்டது.

                                                        தற்போது தெலுங்கில் பீஷ்மா என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில்

                                                        கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவரிடம் உங்களது நண்பர், பாய்பிரண்ட் மற்றும் உங்களுக்கு கணவராக

                                                        வரப்போகிறவர் என எந்தெந்த நடிகர்களை கூறுவீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது..

                                                        ராஷ்மிகா

                                                        அதில் தெலுங்கு நடிகர் நிதின் எனக்கு நண்பராக இருக்க வேண்டும் எனக் கூறியவர், எனக்கு பாய் பிரண்டாக இருக்க

                                                        வேண்டும் என நான் விரும்புவது நடிகர் விஜய்யை தான் என கூறியுள்ளார் ராஷ்மிகா. ஆனால் தனக்கு கணவனாக

                                                        வரப்போகும் நபர் என எந்த நடிகரையும் குறிப்பிட்டுச் சொல்லாதவர், தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.

                                                        தமிழ் நடிகரை திருமணம்
                                                        தமிழ் நடிகரை திருமணம்
                                                        https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                        19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்

                                                        19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்

                                                        இலங்கையில் ஆளும் பவுத்த இனவாதியான கோட்டபாய ஆட்சியில் தமிழர் நலன்கள் தொடர்பான பல விடயங்கள் சட்ட மூலோபாய மூலம் அகற்ற பட்டு வருகிறது .

                                                        அவ்விதம் இலங்கை சரத்துக்களில் உள்ள 19 தாவது சட்ட மூலத்தை தாம் அகற்ற ஒருபோதும் இடமளியோம் என

                                                        தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ,முக்கிய நபருமான சுமந்திரன் தெரிவித்துளளார் .

                                                        சட்டவாதியாகவும் ,கோட்டபாயவின் செல்ல பிள்ளையாகவும் விளங்கும் இவரது இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் காமெடியாக வலம் வருகிறது

                                                        Posted in சினிமா

                                                        மகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்

                                                        மகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்

                                                        ஆதித்ய வர்மா படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தில் விக்ரமும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

                                                        மகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்
                                                        விக்ரம் – துருவ் விக்ரம்
                                                        ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன்

                                                        அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது படத்தின் கதை

                                                        தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் தந்தையும் மகனும். பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள்.

                                                        இந்நிலையில் விக்ரமும், துருவ்வும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல

                                                        இயக்குனர் ஒருவர் சொன்ன கதை அப்பாவையும், மகனையும் கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில்

                                                        இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                                                        விக்ரம் – துருவ் விக்ரம்

                                                        விக்ரம், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                                                        மகனுடன் நடிக்கும் விக்ரம்