மங்கைகள் களம் புகுந்தது
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மங்கைகள் களம் புகுந்தது

மங்கைகள் களம் புகுந்தது

மங்கைகள் களம் புகுந்தது
மணி மகுடம் அங்கு தரித்தது
வேங்கை தாமென சிலிர்த்தது
வெந்த தமிழோ மகிழ்ந்தது

புறநானூறு இங்கு பிறந்தது – புலி
புது சரிதம் இங்கு படைத்தது
எதுகை மோனையும் எழுந்தது
எழுதியே வரலாறு படைத்தது

குனிந்த தலை நிமிர்ந்தது – தமிழ்
குரல்கள் இன்று உயரந்தது
அகிலம் இன்று வியந்தது – கால்
ஆடு களம் சிறந்தது

முதல் கோல் நமக்கு
முடிவை எழுது உனக்கு
ஆடினர் மகிழ்வோ நமக்கு
அங்கையர் கன்னிகள் சிறப்பு

உதைத்தவன் கால்கள் உருண்டன
உதை பந்தில் அவை சுருண்டன
எதிர்த்தார் இன்று மிரண்டன
எதிர்காலம் உண்டு விழித்தன …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-06-2024

பதில் சொல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பதில் சொல்

பதில் சொல்

இதயம் கனக்கும் வேளையிலே
இதயம் உன்னை தேடுகிறேன்
மழையாய் பொழியும் கண்ணீரால்
மலைமகள் உன்னால் வாடுகிறேன்

நெருங்கி உன்னை நேசிக்கையில்
நெஞ்சே இதயம் உடைக்கின்றாய்
வலிகளை தினம் எனக்களித்து
வாட ஏனோ வைக்கின்றாய்

அழுவதால் உனக்கு மகிழ்வென்றால்
அல்லும் பகலும் அழுகின்றேன்
தொழுவதால் உனக்கு மகிழ்வென்றால்
தொடராய் உன்னை தொழுகின்றேன்

விடை பெறு என்றேன் விரட்டுகிறாய்
விரிசலை ஏனோ விரிக்கின்றாய்
உறவை உடைக்க முனைவதாலோ
உள்ளமே என்னை உதைக்கின்றாய் ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-06-2024

என் செய்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் செய்வேன்

என் செய்வேன்

தொட்டு பேசிட வந்தால்
தொட முன் ஏன் முறைக்கின்றாய்
கட்டு கடங்கா காதலித்தால்
காதலை ஏன் வெறுக்கின்றாய்

முட்டி பேசிட வந்தால்
முன்னே வர மறுக்கின்றாய்
விட்டு விலகிட நினைத்தால்
விழுந்தேன் அழுகின்றாய்

தட்டி தழுவும் மழை துளியாய்
தரையில் ஏன் விழுகின்றாய்
கட்டி தழுவிட நினைத்தால்
கத்தி ஏன் முறைக்கின்றாய்

கட்டி தாலி தொழுதுவிடு
கரம் கூப்பி வேண்டுகிறாய்
இப்படி என்னை தண்டித்தால்
இதயமே என் செய்வேன் ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-06-2024

முட்டை கண்ணு பார்வை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்னு பார்வையாலே
முத்தம் தந்து போறவளே
மூக் குத்தி வெட்குதடி
முத்தம் இங்கே சொக்குதடி

கட்டியணைக்கும் போதிலே
கரும் கூந்தல் விலகுதடி
வெட்கம் இல்லா தழுவ
வென் இதழ் தீண்டுதடி

கன்னம் இரண்டை வருடவே – தங்க
கழுத்து தூண்டுதடி
வண்ண நிலா வாடவே
வாலிபம் அழைக்குதடி

சொல்லி சொல்லி ஆறவே
சொந்தம் உன்னை தேடுதே
பந்தம் உன்னில் படரவே
பாயும் இங்கே காயுதே

நிலவே என்ன தயக்கம்
நீயும் வந்திடு
நீளம் நாங்கள் கடக்கவே
நிகழ்வுகள் செய்திடு !

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-05-2024

படம் ஒன்றை பார்த்த பொழுது வடித்தது.

facebook கவிதை பக்கம் இதில் அழுத்துங்க

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

பதினெட்டாம் நாளில்
படாத பெரும்பாடுபட்டு
பிணம் தொட்டு அளைஞ்ச
பெரும்துயரைச் சுமந்துசென்று

பனங்கொட்டு நிறமுடைய
படையினர் ஆட்சிக்குள்ள
உயிர்விட்ட உடல்பிணமாய்
உள்ளுக்குள்ள கால்வைத்தோம்.

கொட்டி கொட்டியாவென ஆமி
கிட்டவரப் பயந்து, பேரூந்தில்
முட்டமுட்ட அடைஞ்சு
மூச்சுவிடேலாம அவிஞ்சு

செட்டையுரிச்ச கோழிபோல
செட்டிகுளம் போனகதை
ஐயோ!

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

செத்திருந்தாலும் பரவாயில்ல.
ஏனம் அரக்கி அரக்கி
எலும்பு நாரிமுறிய
சாமம்வரை காத்திருந்து

சருவத்தில தண்ணியெடுத்து
ஓமம் வளர்ப்பதுபோல் உடம்பை
ஒவ்வொருக்கா ஒத்தியெடுத்த
பாவப்பட்ட எம் நிலையை
பாவில் வடிக்கேலுமோ?

காலைக் கடன்முடிக்க
காப்போத்தில் தண்ணியோட
மாலைவரை அடக்கி அடுத்த
மத்தியானம் போய்க்குந்த

ஆளைக் கண்டவுடன்
அரைகுறையா எழும்பி நாம்
அவஸ்தைப்பட்ட நிலையை
ஆரிடம் போய்ச்சொல்ல..

கியூவில உறவுகள் வந்து
கிட்டவரேலாமல் எட்டிநின்று
சூவிலுள்ள புலிபோல
சூம்பண்ணி எமைப் பாத்து

மாவில்செய்த பலகாரத்தை
மாத்தையாவிடம் அனுப்பியதை
சாவிலும் மறக்கேலுமோ?
சரித்திரம் நிறைய உண்டு.

வனாந்தர காட்டுக்குள்ள
வளைக்கப்பட்ட ரென்ருக்குள்ள
பனங்கிழங்கு அடுக்கியதுபோல்
பதினைந்து பேர் கிடந்து

சினந்து, சிரங்குவந்து
சீழ்வடிந்து சீரழிஞ்சு
இணைந்து வாழ்ந்ததை
இன்றைய சந்ததி அறியுமோ?

கொன்னைத் தமிழ் கதைப்போர்
கூர்ந்து எமைப்பார்க்க
இன்னஇவர் இயக்கமெண்டு
எங்கடையள் காட்டிக்கொடுக்க

உண்ணஏதும் தருவினமோவென்று
ஒவ்வொருநாளும் ஓடிப்பாத்து
என்னயிது வாழ்க்கையென்று
ஏதிலியாய் எத்தனை நாட்கள்.

வெய்யிலில் வாடிவதங்க
விழுப்புண் புழுப்பிடிக்க
கையினில் எதுவுமின்றி
காண்பவரைக் கடன்கேட்க

செய்ய ஏதும் வழியின்றி
செத்தபாம்பாய் சூழ்ந்திருந்ததை
சீ..சீ ..செட்டிகுளமும் மறக்காது
சீவியத்திலும் இது மறையாது❗

-பிறேமா(எழில்)-19-05-2024

பெண்ணால் உறவில் யுத்தமா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பெண்ணால் உறவில் யுத்தமா

பெண்ணால் உறவில் யுத்தமா

பெண்ணால் உறவில் யுத்தமா
பேரழிவில் வாழ்வு நித்தமா
மண்டை உடைந்து இரத்தமா
மனதில் என்ன பித்தமா

கட்டிய தாலி துச்சமா
கண்டவள் உனக்கு சித்தமா
எல்லாம் ஒருநாள் முற்று பெறும்
என்னவாழ்வென விரக்தி வரும்

வந்தவள் இடையில் சென்றிடுவாள்
வாழ்வில் உள்ளாள் துணையிருப்பாள்
முந்தைய நிலைகள் பிழையாகும்
முதிர்வில் விழியில் நீராகும்

இடையில் நாட்கள் இடராகும்
இதயம் கூட வேறாகும்
அடி வாங்கி வாழ்வு அழுகையில்
அந்தோ செயல்கள் தவறாகும்

அழகில் மயங்கி அலையாதே
அக்கினியில் நீயோ ஏரியாதே
வலிகள் தாங்கிய மனைவியவள்
வாழ்வில் உனக்கு பேறாகும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-05-2024

வெல்ல போறேன் காத்திரு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வெல்ல போறேன் காத்திரு

வெல்ல போறேன் காத்திரு

வெல்லாய் என்ற வெற்றிடம் நிரப்பிட
வென்றிட வெற்றி தேடுகிறேன்
நாளை எந்தன் நாளென எண்ணியே
நாளுமே நாளும் ஓடுகிறேன்

பொல்லா வார்த்தைகள் எறிந்தார் வாய்களை
பொடியாக்க முனைகின்றேன்
எல்லாம் தெரிந்தார் என்றே முழங்கிய
ஏற்றத்தாரே வருகிறேன்

தடுத்தார் வழிகளை உடைத்தே
தரணியில் தலை நிமிர்ந்தேன்
இல்லா அறிவு என்றார் முன்னிலை
இயக்கம் இயம்பி நின்றேன்

வாசலில் வந்து வெற்றியில் உள்ளேன்
வரியில் எழுதி வைத்தேன்
சொன்னால் செய்திடும் வல்லமை யானாம்
சொல்லி விட்டே வெல்கின்றேன்

இதுவரை தமிழர் புரியா சாதனை
இமயமாய் நானே புரிவேன்
இழிந்த நாவும் இடித்த உரலும்
இமயம் பார்க்க வைப்பேன்

கடுகதி வேகம் காண்பீர் நீரும்
கண்ணீர் மழையில் தவள்வீர்
எப்படி வென்றான் இப்படி என்றே
எண்ணி எண்ணி துவள்வீர் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-04-2024

உடைந்த காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உடைந்த காதல்

உடைந்த காதல்

இதயம் கனக்கும் இரவுக்குள்ளே
இதயமே உன்னை தேடுகிறேன்
வடியும் கண்ணீர் துளிகளுக்கு
வார்த்தைகள் தேடி அலைகின்றேன்

உடைந்த உள்ள நின்மதிக்கு
உயிரே காரணம் தேடுகிறேன்
அடர்ந்த காட்டின் நடுவினிலே
அலைவதாய் எனக்குள் உணர்கின்றேன்

வழியில் வந்து சதி செய்தார்
வகையை இங்கே தேடுகிறேன்
வலியில் நெஞ்சு துடிக்கையிலே – உன்
வார்த்தைகள் வருடி துடிக்கின்றேன்

இல்லா இந்த இடைவெளியில்
இதயமே உன்னை புரிகின்றேன்
அதிகம் அன்பை பொழிந்ததுவே
அன்பே அது நீ என்கின்றேன்

இடையில் நுழைந்த இடையூறால்
இதயம் இரண்டு பிரிந்ததுவே
புரிதல் ஒன்றில் கிழிந்ததினால்
புண்ணாய் இதயம் மாறியதே ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-04-2024

எட்டு திசையும் எழ வெடி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எட்டு திசையும் எழ வெடி

எட்டு திசையும் எழ வெடி

எதுகை மோனை புனையாதான்
எதற்கும் இங்கு உதவாதான்
அடியும் தொடையும் அறியாதான்
அவையில் உலவ இயலாதன்

செயலும் பொருளும் செப்பாதன்
செயல் பாட்டிற்கிங்கு செழியாதான்
இத்தனை நுணுக்கம் இதிலிருக்கு
இது புரிந்து இவை இயக்கு

அற்புதம் அடியில் அவை அழுத்து
அதனை அறிந்து கவி இயக்கு
அலைகள் அடிக்கும் அடி தாங்கி
அக்கரை அகலும் அவை கப்பல்

இக்கரை இயம்பும் இயல் இசையை
இப்படி இயற்று இயல் இடையை
இப்படி இயற்றின் இவை இனிக்கும்
இப்படி இயற்றின் இவை இருக்கும்

ஏது உரைத்தாய் என்றென்பின்
ஏடு புரட்டி எடுத்து படி
ஏற்றம் ஏற்பின் எடுத்து அடி
எட்டு திசையும் எழ வெடி ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2024

இவரே சாதனையாளர்கள்
Posted in கவிதைகள்

இவரே சாதனையாளர்கள்

இவரே சாதனையாளர்கள்

கடலேறி படகோட்டி செல்வார்
கரை வந்தால் உயிருளார் நினைப்பார்
புயலோடும் மழையோடும் தவிப்பார் – இவர்
புண்பட்ட வலிகளை யார் அறிவார் ..?

வாய்க்கு சுவை மீன் தந்தார்
வாழ்வதை யாரடா தரிசித்தார்
போராடும் இவர் வாழ்வு கேளடா – இவர்
போர் குணம் உனக்குள்ளதா எண்ணடா

சாதியில் இவன் உனக்கு கீழடா – இவர்
சாதனை உனக்குள்ளதா கூறடா
நாம் எல்லாம் மனிதரே எண்ணடா
நற் பன்பை மாற்றாரில் காட்டடா

இவர் தொழில் எவர் செய்வார் சொல்லடா
இந்த வேதனை எவர் சுமப்பர் சொல்லடா
பேச்சிலும் இவரை நீ இழியாதே – இவரில்
பேர் அன்பு கொள்ள மறக்காதே ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2024

இது தான் காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இது தான் காதல்

இது தான் காதல்

எங்க ஊரு வீதியில
ஏ மனமே நடந்தேண்டி
உன் நினைவு எனை துரத்த
உட்க்கார்ந்து அழுதேண்டி

நீ தந்த உணவுகளும்
நீ யிட்ட முத்தங்களும்
நெஞ்சில் நீச்சலிட
நித்தம் உனை நினைக்கிறேன்

மடி சாய்ந்து நீ அழுதிட
மணி விரல்கள் தலை கோத
கண் துடைத்து நீயணைத்த
கால நினைவு துடிக்குதடி

போர் வந்து சதி செய்ய
போராலே பிரிந்தோமே
ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை பிரிவாய் நீ என்று

இன்றுவரை உறவில்லை
எங்கிருக்காய் தெரியவில்லை
ஆனாலும் ஆள் மனதில்
அன்பே உனை நினைக்கிறேன்

எனக்குள்ளே அழுது எனக்குள்ளே புலம்பி
என்னை நானே சமரசமாக்கி
உன் நினைவோடே வாழ்கிறேன்
உண்மை காதல் இது தானே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024

இவள் எங்கள் ஈழ குயில்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இவள் எங்கள் ஈழ குயில்

இவள் எங்கள் ஈழ குயில்

இசை பாடும் கீதம் – இவள்
இளம் கலை நாதம்
அலை பாயும் ஓடம் – இவள்
அழியாத ராகம்

மெட்டோடு பாடும்
மெல்லிசை கீதமே
துள்ளிசை பாடையில
துள்ளி மனம் குதிக்குமே

மெல்ல வந்து காதோரம்
மெல் லிசைக்கும் நேரம்
துன்பங்கள் மறையுமே
துளி விழி நீர் சொரியுமே

இலை மறை காயானாய் – ஜோதி
இதயங்களில் ஒன்றானாய்
சந்தத்தோடு சொந்தமாகி
சாந்தம் ஆடினாய்

தப்பாமல் தாளமிடும்
சங்கீதமே என் கீதமே
உன்னை நானும் வாழ்த்துகிறேன்
உலகாள போற்றுகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-04-2024

லண்டனில் பாடி அசத்தும் எங்கள் ஈழ குயில் ஜோதி

இவள் எங்கள் ஈழ குயில்
இவள் எங்கள் ஈழ குயில்

சீமான்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சீமான்

சீமான்

நட மாடும் ஊடகமே
நான் கண்ட நூலகமே
புல்லரிக்கும் உன் பேச்சால்
புலி கூட புல் உண்ணும்

சொல் அடுக்கு உன் மொழிகள்
செல் அடிகள் போலிருக்கும்
மறவாது நினைவிருத்தும்
மாசற்ற பேச்சு இருக்கும்

மறந்த தமிழ் வரலாற்றை
மணி கணக்காய் கற்பிக்கும்
செயல் நெறி வித்தகனே
செந்தமிழன் நீ தானே

இக்கால அரசியலில்
இடி முழக்கம் நீ தானே
இரத்தத்தை சூடேற்றும்
இயந்திரம் நீ தானே

வீர பிறப்பெடுத்த
வீர புலி மகனே
கோட்டை பல நடுங்குதடா – உன்
கொள்கையாலே எரியுதடா

ஆர்ப்பரித்த கூட்டத்தில்
ஆர தழுவுகின்ற
நேசத்தின் முதல் மகனே – எம்
நெஞ்சம் எல்லாம் நீதானே…!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-03-2024

இரக்கம் காட்டு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இரக்கம் காட்டு

இரக்கம் காட்டு

பறவைகளே பறவைகளே
பார் தேசம் போனீரா
பகை வனவன் போர் தொடுக்க
மண் விட்டு பறந்தீரா

சொந்த மண்ணின் துயர் அறிந்து
சோகமுடன் வாழ்கிறீரா
பந்தம் அது இழந்து
பார் தேசம் வாழ்கிறீரா

எங்களவன் தேசமதை
எவன் வந்து ஆழ்வதுவோ
ஏக்கத்தில மனம் தவிக்க
ஏங்கி தினம் தவிப்பதுவோ

ஒன்று பட்டு வாழ்ந்திடுவோம்
ஓர்மமதை விட்டுடுவீர்
எங்களுக்கும் உம் உரிமை
எடுத்து கொஞ்சம் தந்திடுவீர்

பார் புகழும் நாடாக – இலங்கை
பாரினில காட்டிடுவோம்
பாசமதை காட்டி விடு
பல தடை உடைந்தோடும் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-02-2024

இறுதிவரை இவனே துணை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இறுதிவரை இவனே துணை

இறுதிவரை இவனே துணை

கருணை கொள்வான் கடவுளை நம்பு
காலை மாலை அவனை வணங்கு
நெஞ்சின் நெருடல் வருடி எறிவான்
நேசம் ஊட்டி மகிழ்வை தருவான்

சொல்லும் செயலும் அவனே தருவான்
சொன்னதை செய்யும் அருளும் புரிவான்
தனிமை விலக்கி தாயாய் மலர்வான்
தகமை அளித்து உலகை தருவான்

கண்ணின் ஒளியாய் அவனே இருப்பான்
கடினம் இலகு இரண்டும் தருவான்
தெளிந்து நிமிர தெளிதல் புரிவான்
தெவிட்டா திருக்க தேடுதல் அளிப்பான்

மலர்ந்த அகமது மன்றில் தருவான்
மலரும் சேவை முதலே இடுவான்
மடியும் வரையில் இவனை நினைப்பாய்
மனதில் நின்மதி பெற்று வாழ்வாய் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-12-2023

என்னை கூட்டி போ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை கூட்டி போ

என்னை கூட்டி போ

சின்ன சின்ன ஆசை வந்து
சீக்கிரம் நெஞ்சில் முட்டுறதே
கொஞ்சி பேச நினைக்கையிலே
கோபம் கொண்டு துரத்துறியே

வஞ்சி உந்தன் பேரழகை
வழியில் நிண்டு தரிசிக்கிறேன்
கொஞ்சம் இரக்கம் காட்டாயா
கொள்கை கொஞ்சம் மாற்றாயா

அழைத்தால் பேச மறுக்கிறாய்
அருகில் வந்தால் முறைக்கிறாய்
என்ன செய்தால் இரங்கிடுவாய்
எடுத்து கொஞ்சம் சொல்லாயா

ஆண்டு ஒன்று கழிகையில
அகவை ஒன்று கழிகிறதே
பொல்லு ஊன்றும் காலமதில்
பொக்கை வாயு வேண்டாமே

வீடு வந்த வேளையில
விழியால் பேசி நின்றவளே
அழைத்து போக மாட்டாயா
ஆகமத்தை முடிக்காயா ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-12-2023

வீடியோ

கலங்காதே மனமே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கலங்காதே மனமே

கலங்காதே மனமே

ஊரு விட்டு ஊரு வந்தா
உன்னை மறப்பேனா
உள்ளமதில் நின்றாய்
உன்னை எறிவேனா

கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
கண்ணு மறந்து தூங்குமா
காதலது தாங்குமா

விண்ணும் மண்ணும் உள்ளவரை
விடயங்களை மறப்பேனா
விரதமதை முடித்து வைத்த
விருந்தோம்பல் மறப்பேனா

எந்தனது நெஞ்சுக்குள்ள
என்றும் நீ ஆலயமே
என்றும் உன்னை மறவேனே
ஏன் மனமே கலங்காதே

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

-நிலாதமிழ்
26.11.2023

வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வந்து விடு

வந்து விடு

நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை

பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை

நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி

போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023

உன் நிலை என்ன
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன் நிலை என்ன

உன் நிலை என்ன

சொந்த நிலம் பறிபோக
செந்தமிழன் விலை போக
வெந்து இங்கு வாழ்க
வேதனையில் நோக

மூத்த குடி நாங்கள் என்று
முன்னே பலர் சொன்னார் -அட
மூத்திரம் பெய்துவிட
முன்னே படை காவலா

கோத்திரத்தில் இங்கு உந்தன்
கொள்கை என்னவோ
கொடும் பகைவன் செயல் இழக்கும்
நிலை என்னவோ

மாற்று பகை நகர்வில் உன்
மடை என்னவோ
மறு மலர்ச்சி காண
உன் நிலை என்னவோ ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-09-2023