Tag: பிறேமா(எழில்)
வெளியில் தெரியாத வேர்கள்.
வெளியில் தெரியாத வேர்கள்.
வெளியில் தெரியாத வேர்கள்.❗
♣ வெள்ளோட்டம் காணாத தேர்கள்.❗
♣ தலைவன் துணைநின்ற தோள்கள்.❗
♣ தமிழ்வானில் வலம்வந்த கோள்கள்.❗
♣ வணக்கத்துக்கு உரிய பூக்கள்.❗
♣ வரியில் வடிக்கமுடியா பாக்கள்.❗
♣ பகையை திணறவைத்த பொறிகள்.❗
♣ பலரும் அறிந்திடாத நெறிகள். ❗
♣ எதற்கும் துணிந்த எரிமலைகள்.❗
♣ இலக்கு தவறாத தலைகள்.❗
♣ தேசம் படிக்கவேண்டிய பாயிரங்கள்.❗
♣ தேகம் பிச்செறிந்த உயிராயுதங்கள்.❗
-பிறேமா(எழில்)-
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
பதினெட்டாம் நாளில்
படாத பெரும்பாடுபட்டு
பிணம் தொட்டு அளைஞ்ச
பெரும்துயரைச் சுமந்துசென்று
பனங்கொட்டு நிறமுடைய
படையினர் ஆட்சிக்குள்ள
உயிர்விட்ட உடல்பிணமாய்
உள்ளுக்குள்ள கால்வைத்தோம்.
கொட்டி கொட்டியாவென ஆமி
கிட்டவரப் பயந்து, பேரூந்தில்
முட்டமுட்ட அடைஞ்சு
மூச்சுவிடேலாம அவிஞ்சு
செட்டையுரிச்ச கோழிபோல
செட்டிகுளம் போனகதை
ஐயோ!
செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
செத்திருந்தாலும் பரவாயில்ல.
ஏனம் அரக்கி அரக்கி
எலும்பு நாரிமுறிய
சாமம்வரை காத்திருந்து
சருவத்தில தண்ணியெடுத்து
ஓமம் வளர்ப்பதுபோல் உடம்பை
ஒவ்வொருக்கா ஒத்தியெடுத்த
பாவப்பட்ட எம் நிலையை
பாவில் வடிக்கேலுமோ?
காலைக் கடன்முடிக்க
காப்போத்தில் தண்ணியோட
மாலைவரை அடக்கி அடுத்த
மத்தியானம் போய்க்குந்த
ஆளைக் கண்டவுடன்
அரைகுறையா எழும்பி நாம்
அவஸ்தைப்பட்ட நிலையை
ஆரிடம் போய்ச்சொல்ல..
கியூவில உறவுகள் வந்து
கிட்டவரேலாமல் எட்டிநின்று
சூவிலுள்ள புலிபோல
சூம்பண்ணி எமைப் பாத்து
மாவில்செய்த பலகாரத்தை
மாத்தையாவிடம் அனுப்பியதை
சாவிலும் மறக்கேலுமோ?
சரித்திரம் நிறைய உண்டு.
வனாந்தர காட்டுக்குள்ள
வளைக்கப்பட்ட ரென்ருக்குள்ள
பனங்கிழங்கு அடுக்கியதுபோல்
பதினைந்து பேர் கிடந்து
சினந்து, சிரங்குவந்து
சீழ்வடிந்து சீரழிஞ்சு
இணைந்து வாழ்ந்ததை
இன்றைய சந்ததி அறியுமோ?
கொன்னைத் தமிழ் கதைப்போர்
கூர்ந்து எமைப்பார்க்க
இன்னஇவர் இயக்கமெண்டு
எங்கடையள் காட்டிக்கொடுக்க
உண்ணஏதும் தருவினமோவென்று
ஒவ்வொருநாளும் ஓடிப்பாத்து
என்னயிது வாழ்க்கையென்று
ஏதிலியாய் எத்தனை நாட்கள்.
வெய்யிலில் வாடிவதங்க
விழுப்புண் புழுப்பிடிக்க
கையினில் எதுவுமின்றி
காண்பவரைக் கடன்கேட்க
செய்ய ஏதும் வழியின்றி
செத்தபாம்பாய் சூழ்ந்திருந்ததை
சீ..சீ ..செட்டிகுளமும் மறக்காது
சீவியத்திலும் இது மறையாது❗
-பிறேமா(எழில்)-19-05-2024








