உடைந்த காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உடைந்த காதல்

உடைந்த காதல்

இதயம் கனக்கும் இரவுக்குள்ளே
இதயமே உன்னை தேடுகிறேன்
வடியும் கண்ணீர் துளிகளுக்கு
வார்த்தைகள் தேடி அலைகின்றேன்

உடைந்த உள்ள நின்மதிக்கு
உயிரே காரணம் தேடுகிறேன்
அடர்ந்த காட்டின் நடுவினிலே
அலைவதாய் எனக்குள் உணர்கின்றேன்

வழியில் வந்து சதி செய்தார்
வகையை இங்கே தேடுகிறேன்
வலியில் நெஞ்சு துடிக்கையிலே – உன்
வார்த்தைகள் வருடி துடிக்கின்றேன்

இல்லா இந்த இடைவெளியில்
இதயமே உன்னை புரிகின்றேன்
அதிகம் அன்பை பொழிந்ததுவே
அன்பே அது நீ என்கின்றேன்

இடையில் நுழைந்த இடையூறால்
இதயம் இரண்டு பிரிந்ததுவே
புரிதல் ஒன்றில் கிழிந்ததினால்
புண்ணாய் இதயம் மாறியதே ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-04-2024