இவரே சாதனையாளர்கள்
Posted in கவிதைகள்

இவரே சாதனையாளர்கள்

இவரே சாதனையாளர்கள்

கடலேறி படகோட்டி செல்வார்
கரை வந்தால் உயிருளார் நினைப்பார்
புயலோடும் மழையோடும் தவிப்பார் – இவர்
புண்பட்ட வலிகளை யார் அறிவார் ..?

வாய்க்கு சுவை மீன் தந்தார்
வாழ்வதை யாரடா தரிசித்தார்
போராடும் இவர் வாழ்வு கேளடா – இவர்
போர் குணம் உனக்குள்ளதா எண்ணடா

சாதியில் இவன் உனக்கு கீழடா – இவர்
சாதனை உனக்குள்ளதா கூறடா
நாம் எல்லாம் மனிதரே எண்ணடா
நற் பன்பை மாற்றாரில் காட்டடா

இவர் தொழில் எவர் செய்வார் சொல்லடா
இந்த வேதனை எவர் சுமப்பர் சொல்லடா
பேச்சிலும் இவரை நீ இழியாதே – இவரில்
பேர் அன்பு கொள்ள மறக்காதே ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2024

இது தான் காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இது தான் காதல்

இது தான் காதல்

எங்க ஊரு வீதியில
ஏ மனமே நடந்தேண்டி
உன் நினைவு எனை துரத்த
உட்க்கார்ந்து அழுதேண்டி

நீ தந்த உணவுகளும்
நீ யிட்ட முத்தங்களும்
நெஞ்சில் நீச்சலிட
நித்தம் உனை நினைக்கிறேன்

மடி சாய்ந்து நீ அழுதிட
மணி விரல்கள் தலை கோத
கண் துடைத்து நீயணைத்த
கால நினைவு துடிக்குதடி

போர் வந்து சதி செய்ய
போராலே பிரிந்தோமே
ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை பிரிவாய் நீ என்று

இன்றுவரை உறவில்லை
எங்கிருக்காய் தெரியவில்லை
ஆனாலும் ஆள் மனதில்
அன்பே உனை நினைக்கிறேன்

எனக்குள்ளே அழுது எனக்குள்ளே புலம்பி
என்னை நானே சமரசமாக்கி
உன் நினைவோடே வாழ்கிறேன்
உண்மை காதல் இது தானே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024