வெல்ல போறேன் காத்திரு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வெல்ல போறேன் காத்திரு

வெல்ல போறேன் காத்திரு

வெல்லாய் என்ற வெற்றிடம் நிரப்பிட
வென்றிட வெற்றி தேடுகிறேன்
நாளை எந்தன் நாளென எண்ணியே
நாளுமே நாளும் ஓடுகிறேன்

பொல்லா வார்த்தைகள் எறிந்தார் வாய்களை
பொடியாக்க முனைகின்றேன்
எல்லாம் தெரிந்தார் என்றே முழங்கிய
ஏற்றத்தாரே வருகிறேன்

தடுத்தார் வழிகளை உடைத்தே
தரணியில் தலை நிமிர்ந்தேன்
இல்லா அறிவு என்றார் முன்னிலை
இயக்கம் இயம்பி நின்றேன்

வாசலில் வந்து வெற்றியில் உள்ளேன்
வரியில் எழுதி வைத்தேன்
சொன்னால் செய்திடும் வல்லமை யானாம்
சொல்லி விட்டே வெல்கின்றேன்

இதுவரை தமிழர் புரியா சாதனை
இமயமாய் நானே புரிவேன்
இழிந்த நாவும் இடித்த உரலும்
இமயம் பார்க்க வைப்பேன்

கடுகதி வேகம் காண்பீர் நீரும்
கண்ணீர் மழையில் தவள்வீர்
எப்படி வென்றான் இப்படி என்றே
எண்ணி எண்ணி துவள்வீர் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-04-2024

பாயும் பெண் புலி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பாயும் பெண் புலி

பாயும் பெண் புலி

காடு காத்த கரும்புலியை
கா தழைத்து கொன்றவரே
செய்த செயல் தவறாச்சு – சிசு
செம்புலியாய் பாய்ந்திருச்சு

கோட்டையிலே கொடி கட்டி
கொடுமைகளை உடைத்தெறிய
வீரமுடன் வந்திருச்சு – திறன்
விவேகமது கொண்டிருச்சு

நான் என்ற ஆணவத்தில்
நாடாண்ட கோமகனே
முடி தரித்த உன் ஆட்சி
முள் வேலியில் வீழ்ந்திருச்சு

அவள் அழுத கண்ணீர் துளி
அனலாக கொத்திருக்கு
குற்றவாளி உங்களை தான்
கூண்டில் அடைக்க வந்திருக்கு

வால் ஆட்டி திரிந்தவரும்
வாயாட்டி நகைத்தவரும்
சிறை புகும் காலமிது
சிரித்து இன்று மலர்கிறது

ஆதிக்க வெறி என்றும்
அரங்கமதில் நிலைக்காது
நீதியின் வெற்றிடங்கள்
நிரம்பிடா உறங்காது

வீரப்பன் விழிக்கின்றான்
விடுதலையை அழைக்கின்றான்
சத்திய தேவதை யோ
சரிதம் எழுத வருகிறாள்

நாம் தமிழர் ஆட்சியில்
நல்லாட்சி செய்திடுவாள்
நலிந்த மக்கள் மகிழ்ந்திடவே
நல்லுதவி புரிந்திடுவாள் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-03-2024

23-03-2024 நாம் தமிழர் கட்சியில் 40 வேட்பாளர் போட்டியில் வீரப்பன் மகள் சத்தியா போட்டியிட்ட செய்தி அறிந்த பொழுது …

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

நிலவே நிலவே நீ எங்கே
நினைவுகள் மட்டும் ஏன் இங்கே
ஏக்கத்துடன் நான் தவிக்க
ஏங்க வைத்து போனதெங்கே

அந்தி வரும் பொழுதில்
ஆகாயம் தேடுகிறேன்
ஆதரவு இல்லா
அன்பே வாடுகிறேன்

தன்னம் தனி வாடையிலே
தாகம் தவிக்கிறது
தாராளம் செய்தாய் அன்று
தவறிழைத்தேன் நான் இன்று

ஓடும் நதியில் ஆடும் படகாய்
ஓடினாயே அன்று
ஓடி ஆடும் அலையில்
ஓங்கி அடி வாங்கினாயே நன்று

வலி வாங்கி அமைதி கொண்டாய்
வாழ்வின் வழி தெரிந்து நின்றாய்
உன்னை புரியா தவறிழைத்தேன்
உன்னாலே இன்று ஊமை ஆனேன்

படிக்கும் போது தானே பிடிக்கிறதே
பக்குவம் அதில் தானே முளைக்கிறதே
காலம் கடந்து தெளிதல் பிழைதானே
கண்ணீர் வடிக்கிறேன் உனக்காய் நானே ,

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2024

வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வந்து விடு

வந்து விடு

நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை

பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை

நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி

போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023

உன் நிலை என்ன
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன் நிலை என்ன

உன் நிலை என்ன

சொந்த நிலம் பறிபோக
செந்தமிழன் விலை போக
வெந்து இங்கு வாழ்க
வேதனையில் நோக

மூத்த குடி நாங்கள் என்று
முன்னே பலர் சொன்னார் -அட
மூத்திரம் பெய்துவிட
முன்னே படை காவலா

கோத்திரத்தில் இங்கு உந்தன்
கொள்கை என்னவோ
கொடும் பகைவன் செயல் இழக்கும்
நிலை என்னவோ

மாற்று பகை நகர்வில் உன்
மடை என்னவோ
மறு மலர்ச்சி காண
உன் நிலை என்னவோ ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-09-2023

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இறந்து போ

இறந்து போ

சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்

வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்

கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே

துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே

இறந்து போ

பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன

கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன

பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே

பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு

வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா

இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

என்பாட்டை என்பாட்டை நீ பாடவா
எனக்குள்ளே நீதானே எழுந்தாடவா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
உள்ளத்தை தந்தே உயிராகினேன்

கறுப்பென்ன சிவப்பென்ன ஒன்றாகினோம்
கலந்தாடி தானே மகிழ் வேற்றினோம்
உன்மொழி எனக்கு பலம் இட்டதே
உலகாழ எனக்கு வழி தந்ததே

நீயின்றி நானின்றி உலகாடுமா
நினைவுகள் இலலாமல் உயிர் வாழுமா
உன்போல உறவொன்றை நான் காணுமோ
உயிராகி நின்றாய் அது போதுமே

இல்லாமை இருக்கின்ற வேளையிலே
இதயத்தில் உன் பாசம் குறையலையே
இதுதானே நீ தந்த காதல் என்றேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன் ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 01-08-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னை தா எனக்கு

    உன்னை தா எனக்கு

    உனக்குள்ளும் ஒரு காதல் பூத்திருக்குதே – இதை
    உணராமல் நீ இன்று மறந்திருக்குதே
    வார்த்தைகளை கோர்த்து இன்று பேசிவிடு
    வளையல்கள் உடையுமுன்னே நீட்டிவிடு

    நாளை என்று காத்திருந்தால் இறந்திடுவாய்
    நல்ல காதலை நீயும் இழந்திடுவாய்
    இறக்கும் முன்னே வாழ்ந்துவிட வந்துவிடு
    இதயமதை ஓடி வந்து தந்துவிடு

    நீ சிரிச்சா நான் மகிழ்வேன் ஏற்றுவிடு -அந்த
    நீர் உறங்கும் கன்னக்குழி தந்துவிடு
    மூச்சிழக்க பேசும் உன் உதடு
    முத்தமிட நீ எனக்கு தந்துவிடு

    உலகாளும் அத்தனையும் உனக்கிருக்கு – நீ
    உறங்குமிடம் ஏனோ இங்கிருக்கு ..?
    உன் திறனை ஏன் மறைத்தாய் சொல்லெனக்கு
    உலகாள வைத்திடுவேன் உனை தாயெனக்கு …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 27-07-2022

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இறந்தால் உன்னை மறப்பேன் …!

      இறந்தால் உன்னை மறப்பேன் …!

      நினைத்து நினைத்து உருகிடத்தான்
      நீ வந்து போகிறாய்- உன்
      நினைவுகளை தந்து விட்டு
      நிதம் ஏனோ மறைகின்றாய்..?

      ஆழ் மனதில் நீயிருக்க
      அன்பே உனை மறப்பேனா
      அடியே உனை மறந்தால்
      ஆவி உடல் தங்குமா ?

      நீயெடுத்த முடிவொன்றால்
      நிகழ் காலம் இதுவாச்சு
      ஏதெடுத்து உனை மொழிவேன்
      எப்படி உனை உமிழ்வேன்

      காதோரம் செய்திகளை
      காதலியே சொல்லிட வா— நான்
      காணாமல் போகு முன்னே
      கதை ஒண்ணு சொல்லிட வா

      உருமாறும் அகவையில
      உள்ளத்தை மாற்றிட வா
      உனக்காக நான் வாழ்ந்தேன்- இந்த
      உண்மையை ஏற்றிடவா

      எதை உரைத்தும் இன்றென்ன
      எனக்கில்லை நீதானே
      எதை விதைத்தும் இன்றென்ன
      எல்லாமே வீன்தானே

      இருவருக்கும் இடையிலின்று
      இடையே ஒர் வேலியிட்டாய்
      இரு வேறாய் பிரிவதற்கா
      இடையில் ஒரு பதி வைத்தாய்?

      இதயத்தை சலவை செய்ய
      இன்றென்னால் முடியாது
      இறந்தால் உனை தொடரேன்
      இதயமே வருந்தாதே …!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -10-03-2021