Tag: தமிழ் கவிதை
வெல்ல போறேன் காத்திரு
வெல்ல போறேன் காத்திரு
வெல்லாய் என்ற வெற்றிடம் நிரப்பிட
வென்றிட வெற்றி தேடுகிறேன்
நாளை எந்தன் நாளென எண்ணியே
நாளுமே நாளும் ஓடுகிறேன்
பொல்லா வார்த்தைகள் எறிந்தார் வாய்களை
பொடியாக்க முனைகின்றேன்
எல்லாம் தெரிந்தார் என்றே முழங்கிய
ஏற்றத்தாரே வருகிறேன்
தடுத்தார் வழிகளை உடைத்தே
தரணியில் தலை நிமிர்ந்தேன்
இல்லா அறிவு என்றார் முன்னிலை
இயக்கம் இயம்பி நின்றேன்
வாசலில் வந்து வெற்றியில் உள்ளேன்
வரியில் எழுதி வைத்தேன்
சொன்னால் செய்திடும் வல்லமை யானாம்
சொல்லி விட்டே வெல்கின்றேன்
இதுவரை தமிழர் புரியா சாதனை
இமயமாய் நானே புரிவேன்
இழிந்த நாவும் இடித்த உரலும்
இமயம் பார்க்க வைப்பேன்
கடுகதி வேகம் காண்பீர் நீரும்
கண்ணீர் மழையில் தவள்வீர்
எப்படி வென்றான் இப்படி என்றே
எண்ணி எண்ணி துவள்வீர் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-04-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

- என்னை அழைக்காயா

- எழுந்து வா

பாயும் பெண் புலி
பாயும் பெண் புலி
காடு காத்த கரும்புலியை
கா தழைத்து கொன்றவரே
செய்த செயல் தவறாச்சு – சிசு
செம்புலியாய் பாய்ந்திருச்சு
கோட்டையிலே கொடி கட்டி
கொடுமைகளை உடைத்தெறிய
வீரமுடன் வந்திருச்சு – திறன்
விவேகமது கொண்டிருச்சு
நான் என்ற ஆணவத்தில்
நாடாண்ட கோமகனே
முடி தரித்த உன் ஆட்சி
முள் வேலியில் வீழ்ந்திருச்சு
அவள் அழுத கண்ணீர் துளி
அனலாக கொத்திருக்கு
குற்றவாளி உங்களை தான்
கூண்டில் அடைக்க வந்திருக்கு
வால் ஆட்டி திரிந்தவரும்
வாயாட்டி நகைத்தவரும்
சிறை புகும் காலமிது
சிரித்து இன்று மலர்கிறது
ஆதிக்க வெறி என்றும்
அரங்கமதில் நிலைக்காது
நீதியின் வெற்றிடங்கள்
நிரம்பிடா உறங்காது
வீரப்பன் விழிக்கின்றான்
விடுதலையை அழைக்கின்றான்
சத்திய தேவதை யோ
சரிதம் எழுத வருகிறாள்
நாம் தமிழர் ஆட்சியில்
நல்லாட்சி செய்திடுவாள்
நலிந்த மக்கள் மகிழ்ந்திடவே
நல்லுதவி புரிந்திடுவாள் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-03-2024
23-03-2024 நாம் தமிழர் கட்சியில் 40 வேட்பாளர் போட்டியில் வீரப்பன் மகள் சத்தியா போட்டியிட்ட செய்தி அறிந்த பொழுது …
- மீள வருவாயா
- ஒரு நாள் வெல்வேன்
- எப்படி நான் பேசிடுவேன்
- என்னை விடு
- நேரில் வந்து விடு
- என் உயிரே நான் வெல்வேன்
- என்னை ஏற்று விடு
- என்னை அழைப்பாயா
- அடைத்து வைக்க வாவேண்டி
- கவலைப் படுகிறேன்
- யார் மேல் குற்றம்
- காதலே சோகமா
- கண்டதெல்லாம் கனவு
- ஏமார்ந்த காதல்
- அர்ச்சுனா ஆவி பேசிறது
- எனக்கு என்ன ஆச்சு
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
நிலவே நிலவே நீ எங்கே
நினைவுகள் மட்டும் ஏன் இங்கே
ஏக்கத்துடன் நான் தவிக்க
ஏங்க வைத்து போனதெங்கே
அந்தி வரும் பொழுதில்
ஆகாயம் தேடுகிறேன்
ஆதரவு இல்லா
அன்பே வாடுகிறேன்
தன்னம் தனி வாடையிலே
தாகம் தவிக்கிறது
தாராளம் செய்தாய் அன்று
தவறிழைத்தேன் நான் இன்று
ஓடும் நதியில் ஆடும் படகாய்
ஓடினாயே அன்று
ஓடி ஆடும் அலையில்
ஓங்கி அடி வாங்கினாயே நன்று
வலி வாங்கி அமைதி கொண்டாய்
வாழ்வின் வழி தெரிந்து நின்றாய்
உன்னை புரியா தவறிழைத்தேன்
உன்னாலே இன்று ஊமை ஆனேன்
படிக்கும் போது தானே பிடிக்கிறதே
பக்குவம் அதில் தானே முளைக்கிறதே
காலம் கடந்து தெளிதல் பிழைதானே
கண்ணீர் வடிக்கிறேன் உனக்காய் நானே ,
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2024
வந்து விடு
வந்து விடு
நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை
பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை
நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி
போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023
உன் நிலை என்ன
உன் நிலை என்ன
சொந்த நிலம் பறிபோக
செந்தமிழன் விலை போக
வெந்து இங்கு வாழ்க
வேதனையில் நோக
மூத்த குடி நாங்கள் என்று
முன்னே பலர் சொன்னார் -அட
மூத்திரம் பெய்துவிட
முன்னே படை காவலா
கோத்திரத்தில் இங்கு உந்தன்
கொள்கை என்னவோ
கொடும் பகைவன் செயல் இழக்கும்
நிலை என்னவோ
மாற்று பகை நகர்வில் உன்
மடை என்னவோ
மறு மலர்ச்சி காண
உன் நிலை என்னவோ ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-09-2023
- மீள வருவாயாby நிருபர் காவலன்
- ஒரு நாள் வெல்வேன்by நிருபர் காவலன்
- எப்படி நான் பேசிடுவேன்by நிருபர் காவலன்
- என்னை விடுby நிருபர் காவலன்
- நேரில் வந்து விடுby நிருபர் காவலன்
இறந்து போ
இறந்து போ
சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்
வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்
கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே
துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே
இறந்து போ
பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன
கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன
பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே
பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு
வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா
இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
என்பாட்டை என்பாட்டை நீ பாடவா
எனக்குள்ளே நீதானே எழுந்தாடவா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
உள்ளத்தை தந்தே உயிராகினேன்
கறுப்பென்ன சிவப்பென்ன ஒன்றாகினோம்
கலந்தாடி தானே மகிழ் வேற்றினோம்
உன்மொழி எனக்கு பலம் இட்டதே
உலகாழ எனக்கு வழி தந்ததே
நீயின்றி நானின்றி உலகாடுமா
நினைவுகள் இலலாமல் உயிர் வாழுமா
உன்போல உறவொன்றை நான் காணுமோ
உயிராகி நின்றாய் அது போதுமே
இல்லாமை இருக்கின்ற வேளையிலே
இதயத்தில் உன் பாசம் குறையலையே
இதுதானே நீ தந்த காதல் என்றேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன் ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 01-08-2022
உன்னை தா எனக்கு
உன்னை தா எனக்கு
உனக்குள்ளும் ஒரு காதல் பூத்திருக்குதே – இதை
உணராமல் நீ இன்று மறந்திருக்குதே
வார்த்தைகளை கோர்த்து இன்று பேசிவிடு
வளையல்கள் உடையுமுன்னே நீட்டிவிடு
நாளை என்று காத்திருந்தால் இறந்திடுவாய்
நல்ல காதலை நீயும் இழந்திடுவாய்
இறக்கும் முன்னே வாழ்ந்துவிட வந்துவிடு
இதயமதை ஓடி வந்து தந்துவிடு
நீ சிரிச்சா நான் மகிழ்வேன் ஏற்றுவிடு -அந்த
நீர் உறங்கும் கன்னக்குழி தந்துவிடு
மூச்சிழக்க பேசும் உன் உதடு
முத்தமிட நீ எனக்கு தந்துவிடு
உலகாளும் அத்தனையும் உனக்கிருக்கு – நீ
உறங்குமிடம் ஏனோ இங்கிருக்கு ..?
உன் திறனை ஏன் மறைத்தாய் சொல்லெனக்கு
உலகாள வைத்திடுவேன் உனை தாயெனக்கு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-07-2022
இறந்தால் உன்னை மறப்பேன் …!
இறந்தால் உன்னை மறப்பேன் …!
நினைத்து நினைத்து உருகிடத்தான்
நீ வந்து போகிறாய்- உன்
நினைவுகளை தந்து விட்டு
நிதம் ஏனோ மறைகின்றாய்..?
ஆழ் மனதில் நீயிருக்க
அன்பே உனை மறப்பேனா
அடியே உனை மறந்தால்
ஆவி உடல் தங்குமா ?
நீயெடுத்த முடிவொன்றால்
நிகழ் காலம் இதுவாச்சு
ஏதெடுத்து உனை மொழிவேன்
எப்படி உனை உமிழ்வேன்
காதோரம் செய்திகளை
காதலியே சொல்லிட வா— நான்
காணாமல் போகு முன்னே
கதை ஒண்ணு சொல்லிட வா
உருமாறும் அகவையில
உள்ளத்தை மாற்றிட வா
உனக்காக நான் வாழ்ந்தேன்- இந்த
உண்மையை ஏற்றிடவா
எதை உரைத்தும் இன்றென்ன
எனக்கில்லை நீதானே
எதை விதைத்தும் இன்றென்ன
எல்லாமே வீன்தானே
இருவருக்கும் இடையிலின்று
இடையே ஒர் வேலியிட்டாய்
இரு வேறாய் பிரிவதற்கா
இடையில் ஒரு பதி வைத்தாய்?
இதயத்தை சலவை செய்ய
இன்றென்னால் முடியாது
இறந்தால் உனை தொடரேன்
இதயமே வருந்தாதே …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -10-03-2021






























