Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
காஷ்மீரில் ஏற்கனவே பறந்த டிரோன்களை பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.
காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை படத்தில் காணலாம்.
காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகிறார்கள்.
இதனால் பல்வேறு சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.
இதுவரை இல்லாத புது முயற்சியாக டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவதை தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த மாதம் 27-ந் தேதி ஜம்முவில் உள்ள விமான படைத்தளத்தில் அதிகாலையில் 2 டிரோன்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து பறந்து வந்த இந்த டிரோன்களில் வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தார்கள். அது கீழே விழுந்து வெடித்தது.
விமானப்படை ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த வெடிகுண்டுகள் இரண்டுமே சக்தி குறைந்ததாக இருந்தது. எனவே பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் நடத்தியது இதுவே முதல் முறை ஆகும்.
எனவே பெரிய தாக்குதல்களை நடத்துவதற்காக இது ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாக இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. எனவே பாதுகாப்புப் படை உஷார்படுத்தப்பட்டது.
சிறிய வகை டிரோன்கள் என்பதால் ரேடார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எளிதாக ஊடுருவியது. எனவே சிறிய டிரோன்கள் வந்தாலும் கண்டுபிடிக்கும் கருவிகளை பொருத்தும் பணிகள் நடந்தன.
கடந்த மாதம் நடந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் டிரோன்களை ஊடுருவ செய்து வருகிறார்கள். குறிப்பாக ஜம்மு பகுதியிலும், ஸ்ரீநகரிலும் அதிகளவில் டிரோன்கள் ஊடுருவி இருக்கின்றன.
எனவே அவை பறந்து வந்தால் சுட்டுவீழ்த்துவதற்கு எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை ஜம்முவில் உள்ள அக்னூர் பகுதியில் மர்ம டிரோன் ஒன்று பறந்து வந்தது. எல்லையில் இருந்து 8 கி.மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி வந்து பறந்து கொண்டு இருந்தது. உடனே பாதுகாப்பு படையினர் அதை நோக்கி சுட்டார்கள்.
டிரோனில் 5 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்தது.
இதில் ஒரு குண்டு டிரோனை தாக்கியது. உடனே டிரோன் கீழே விழுந்தது. அதை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தார்கள். டிரோனில் 5 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்தது.
இந்த குண்டு வெடித்து இருந்தால் பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும். சரியான நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதால் சதி முறியடிக்கப்பட்டது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை தகர்க்கும் வகையில் இந்த வெடிகுண்டை அனுப்பி இருக்கிறார்கள். ராணுவம் உஷாராக இருந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
காஷ்மீரில் ஏற்கனவே பறந்த டிரோன்களை பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இந்த டிரோனையும் அவர்கள்தான் அனுப்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே ஜம்மு விமானப் படை தளத்தில் தாக்குதல் நடத்திய டிரோன்களில் சிறிய அளவிலான வெடிகுண்டுகளே இருந்தன. ஆனால் இன்று வீழ்த்தப்பட்ட டிரோனில் 5 கிலோ அளவுக்கு அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து இருந்துள்ளது.
இந்த அளவுக்கு பெரிய வெடிகுண்டுகளை டிரோன்கள் மூலம் அனுப்ப முடியும் என்ற நிலை இருப்பதால், இது ஒரு ஆபத்தான விஷயமாக கருதப்படுகிறது. எனவே பாதுகாப்பு படைகள் மேலும் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதையும் படியுங்கள்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் சஸ்பெண்ட்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
மகளை கற்பழிக்க முனைந்த நண்பன் – அடித்து கொன்ற தந்தை
Ethiri.com – எதிரி இணையம்
மகளை கற்பழிக்க முனைந்த நண்பன் – அடித்து கொன்ற தந்தை
இலங்கை மதுக்கம பிரதேசத்தில் ஒன்பது வயது மகளின் உடலில் அங்க சேட்டை புரிந்த நண்பனை ,அவளது தந்தை அடித்து கொன்றுள்ளார்
மேற்படி செயலை கண்ணுற்ற தந்தை கோபத்தின் உச்சத்திற்கு சென்று இந்த செயலை புரிந்துள்ளார்
கொலை குற்ற சாட்டில் தந்தை கைது செய்ய பட்டுள்ளார் ,
மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோப்பாயில் ஒன்பது பேர் கைது
கோப்பாயில் ஒன்பது பேர் கைது
இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
யாழில் நடந்த பலவேறு பட்ட வன்முறை சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
Ethiri.com – எதிரி இணையம்
Ethiri News எதிரி செய்திகள் Ethiri News Today,Ethiri News Live,
கொரனோவுக்கு 42 பேர் மரணம்
கொரனோவுக்கு 42 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 42 பேர் கடந்த தினம்
பலியாகியுள்ளனர் ,இதன் மொத்த இறப்பு விகிதம் 3,959 என தெரிவிக்க பட்டுள்ளது
மேற்படி நோயினை கட்டு படுத்த பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற
பொழுதும் உயிர் பலியை தடுக்க இயலவில்லை
டயகம சிறுமியின் நினைவேந்தல் நிகழ்வில் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
டயகம சிறுமியின் நினைவேந்தல் நிகழ்வில் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் பணியாற்றிய டயகமவைச் சேர்ந்த சிறுமி கடந்த 17ம் திகதி மரணமடைந்த நிலையில் நேற்;றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன்
தொண்டமான் டயகம பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு. ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்தியேற்றி அஞ்சலியும் செலுத்தினார்.
மேலும் மலையக உறவுகளும் தத்தமது இல்லங்களில் மெழுகுவர்த்தியேற்றி ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாரறு கேட்டுக்கொண்டார். இதற்கமைவாக மலையகத்தில் பல இடங்களிலும் நேற்று
மாலை 6.30 மணிக்கு மெழுகுவர்த்தியேற்றி ஹிஷாலயின் ஆத்ம சாந்திக்காக பிராத்தித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது
இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது
கௌதாரிமுனையில் நெற் காணிகளையும் கடலட்டைப் பண்ணைகளையும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்
இணைத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கடலட்டை செயற்பாடுகளுக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும்
பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், எமது நலன்களுக்கோ அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (22.07.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைமையில் சுமார் 70 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், நெற் காணிளுக்கான கோரிக்கைகளை சுமார் 93 பேர் சமர்ப்பித்திருந்தனர்.
அதேபான்று கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள் சுமார் 27 கடற்றொழிலாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விண்ணப்பித்தவர்களுக்கான வயல் நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அரச சுற்று நிரூபத்திற்கு அமைவாக மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
அதேபோன்று, கௌதாரிமுனைப் பிரதேசத்தில் இதுவரை 16 கடலட்டைப் பண்ணைகளுக்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில்
விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை வழங்குமாறும் ஏனையவர்களுக்கான இடங்களை அடையாளப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கடற்றொழில அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘இலங்கை சீனக் கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்படடுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அந்தக் கடலட்டை குஞ்சு
பராமரிப்பு நிலையத்தினூடாக எமக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் சிந்தித்து வருகின்றேன்.
சீனா போன்ற நாடுகளில் இருந்து முதலீடுகளும் அனுபவங்களும் தொழில்நுட்பமும் பெற்றுக்கொள்ளப்படுமே தவிர, எமது மக்களினதும் நாட்டினதும் நலன்களை பாதிக்கும் வகையில்
அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் ஏற்படும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது, கௌதாரிமுனைக்கான சுமார் 16 கிலோ மீற்றர் வீதியை புனரமைப்பதற்கான சாத்தியங்கள்
தொடர்பாக ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் பாரிய நில நடுக்கம்
துருக்கியில் பாரிய நில நடுக்கம்
துருக்கியில் பாரிய நில நடுக்கம் ,இந்த நில நடுக்கமானது 4.2 ஆக பதிவாகியுள்ளது
இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
ethiri news srilanka அமெரிக்க அமெரிக்கா அர்ச்சுனா இந்தியா இராணுவம் இலங்கை இலங்கை செய்திகள் இஸ்ரேல் ஈரான் எச்சரிக்கை ஏவுகணை கப்பல் காசா காயம் கைது கொரனோ கொரோனா கொலை சடலம் சினிமா சீனா சீமான் ஜனாதிபதி தாக்குதல் துப்பாக்கி படுகொலை பலி பாடசாலை பிரிட்டன் பெண் பொலிஸ் போராட்டம் போர் மக்கள் மரணம் ரணில் ரஷ்யா லண்டன் விபத்து விமானங்கள் விமானம் ஹமாஸ் ஹிஸ்புல்லா
Ethiri.com – எதிரி இணையம்
உடைந்து வீழ்ந்த பல்கணி – உயிருக்கு போராடும் பெண்
உடைந்து வீழ்ந்த பல்கணி – உயிருக்கு போராடும் பெண்
அவுஸ்ரேலியாவில் பெண் ஒருவர் பல்கனியில் வீற்றிருந்த பொழுது அது திடிரென உடைந்து
வீழ்ந்தது ,இதன் பொழுது பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
லண்டனில் எகிறும் வீடு அற்றவர்கள் எண்ணிக்கை
உலக
லண்டனில் எகிறும் வீடு அற்றவர்கள் எண்ணிக்கை
பிரிட்டனில் கடந்த மாசி மாதம் முதல் இதுவரை 62,250 பேர் வீடு அற்று வீதிகளில் உறங்கும் அவலம் அதிகரித்துள்ளது
இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க மறந்து வருவதான குற்ற சாட்டுக்கள் அதிகரித்துள்ளது
வீதியில் இவ்விதம் உறங்கும் நபர்கள் அரசினால் கைவிட பட்ட எவ்வித உதவிகளும் அற்றவர்கள் என தெரிவிக்க படுகிறது
மான் குட்டிக்கு உதவிய நபர் -= வைரலாகும் வீடியோ
மான் குட்டிக்கு உதவிய நபர் -= வைரலாகும் வீடியோ
நபர் ஒருவர் தனது ஊந்துருளியில் பயணத்தை மேற்கொள்கிறார் ,அவ்வேளை அந்த சாலையில் மான் குட்டி ஒன்று தனித்து நின்றதால் ,பீதியடைந்து ஓடுகிறது ,அவ்வேளை தனது வண்டியின்
இயந்திரத்தை அணைத்து அது பயமில்லாமல் கடந்து போக உதவிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது
இப்படியும் மனிதாபிமானிகள் இருக்கத்தான் செய்கின்றனர்
யாழில் இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை
யாழில் இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை
இன்று (22) அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையில்
இருந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இயந்திரம்
இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இயந்திரம்
சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய இயந்திரம் இராணுவத்தின் 4வது மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணி மற்றும் 5வது பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அக்ரி ஷ்ரெடர் பிபி 1 இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 3.5 மெட்ரிக் தொன் புதர்களை 10 மில்லி மீற்றர் துகள்களாக வெட்டக் கூடிய ஆளுமை கொண்டது என இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகை இயந்திரத்தின் சந்தை விலை ரூ. 750,000.00 ஆகும். ஆனால் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணி மற்றும் பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திர தயாரிப்புக்கு சுமார் 150,000.00 ரூபாய் செலவாகியது.
இதை யாழ்- பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பி.டி.எல்.ஏ.சி சிறிசேனா வடிவமைத்துள்ளார் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இஷாலினி மரணத்தின் மர்மம் கண்டறியப்பட வேண்டும்-சிவஞானம் சிறீதரன்
இஷாலினி மரணத்தின் மர்மம் கண்டறியப்பட வேண்டும்-சிவஞானம் சிறீதரன்
முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த இஷாலினி என்னும் 15 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம்
எல்லோரது மனங்களையும் பாதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அவர், அதேவேளை அச்சிறுமியின் மரணத்துக்குப் பின்னுள்ள மர்மங்கள் வெளிப்படுத்தப்பட்டு அவரது குடும்பத்திற்கு நீதியைப்
பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே நான் உட்பட அனைத்துத் தரப்பினரதும் கோரிக்கையாக உள்ளது.
கடந்த 2021.07.03 ஆம் திகதி பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, 2021.07.15 ஆம் திகதி சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருந்தார்.
கொழும்பு விசேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என்.ரூஹுல் ஹக்னினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது இஷாலினி நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மாணவப் பருவத்தை தாண்டியிராத அச்சிறுமியின் அவலத்திற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 15 வயதேயான சிறுமியை பணிப்பெண்ணாக
வீட்டு வேலைக்கு அனுப்புமளவுக்கு பொருண்மியத்தால் நலிவுற்றிருக்கும் அந்தக் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியிருக்கின்ற இஷாலினி என்ற ஒற்றைச் சிறுமியின் அவலத்தைத் தாண்டி, இன்னமும் எங்களால் பேசப்படாத எத்தனை
எத்தனையோ சிறுமிகளுக்கு இத்தகைய துன்பியல் சம்பவங்கள் நாளாந்தம் நடந்த வண்ணமே இருக்கின்றன. மிஹிந்தலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை பாலியல்
நடவடிக்கைகளுக்காக இணையவழியில் விற்பனை செய்த சம்பவம் அண்மையில் எமது நாட்டில் நடந்திருக்கிறது.
இவற்றையெல்லாம் தாண்டி இயல்பாகவோ, எளிதாகவோ கடந்து செல்ல முடியாத அளவுக்கு இஷாலினிக்கு நேர்ந்திருக்கும் அவலத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்
முன் நிறுத்தப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிபவர்களை மையப்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
அதற்கு அப்பால் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனை அரசியலிலிருந்து முழுமையாக ஓரம்கட்டுவதற்கான முஸ்தீபுகள் தற்போதைய அரசால்
முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் காலச்சூழலில் சிறுமியின் மரணத்தின் பின்னணியில் வேறேதும் சதித் திட்டங்களுக்கோ, அரச கைக்கூலிகளுக்கோ தொடர்புள்ளதா என்பது குறித்தும் நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சிகள்
இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சிகள்
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் மற்றும் மிரிஸ்ஸ உயர் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டம் நடத்திய
விஜயம் செய்தல், தரித்திருத்தல், தேடல் மற்றும் பறிமுதல் செய்தல் பாடத்திட்டத்தை இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் பதினாறு பேர் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
இந்த வகையில் சர்வதேச நன்கொடை நிறுவனங்களுடன் இணைந்து மேம்பட்ட பயிற்சி திறன்களைப் பெறுவதற்கான ஒரு பிரதான திட்டமாக விஜயம் செய்தல், தரித்திருத்தல், தேடல்
மற்றும் பறிமுதல் செய்தல் பாடநெறி கருதப்படுவதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெறிவிக்கின்றன.
இந்த பாடநெறியில் பங்கேற்பாளர்கள் பரந்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவைப் பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் கடலோர பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள், சர்வதேச நன்கொடை நிறுவனங்களின் அதிதிகள், இராஜதந்திர பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியதாக கடலோர பாதுகாப்பு படை தெறிவித்துள்ளது.
ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்
ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்
பிரிட்டன் தனது நாட்டின் பாதுகாப்பபு கருதி ஆசியா மற்றும் பசுபிக் கடல் பகுதியில் தனது இரண்டு போர் கப்பல்களை நிரந்தரமாக தரித்து வைக்க முடிவு செய்துள்ளது
ஜப்பானில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி மற்றும் சீனாவின் அத்துமீறல் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தெரிவிக்க படுகிறது
மறு முனையில் ஆசியாவை நோக்கி அமெரிக்கா கூட்டு படைகள் ஆக்கிரமிக்கும் செயல்
நடவடிக்கை எதிர் வரும் காலங்களில் முன்னெடுக்கும் அபாயம் உள்ளதாக போரியல் நிபுணர்கள் எச்சரிகை விடுத்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
சீனா வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
சீனா வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
சீனாவில் பரவிய வெள்ள பெருக்கு காரணமாக இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இரண்டு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
யாழில் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு
யாழில் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு தெரு ரவுடிகள் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்
இதில் இருவரும் பலத்த படுகாயமடைந்த நிலையில் யாழ்போதன வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மகனை தேடி வந்த குழுவினர் அவர் அங்கு இல்லாததினால் பெற்றவர்கள் மீதுதாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்
வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும்
டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 03 ஆம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கும் , டிப்ளோமாதாரிகளை 03 ஆம் வகுப்பு 1 ( இ ) தரத்திற்கும் சேர்த்துக் கொள்வதற்காக கல்வி வலய
மட்டத்தில் ஆட்சேர்கும் பொருட்டு ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாயின் வாயில் சிசுவின் சடலம் – பதறி ஓடிய மக்கள்
நாயின் வாயில் சிசுவின் சடலம் – பதறி ஓடிய மக்கள்
நுவரெலியா கொன்கோடியா தேயிலை தோட்டத்தில் நாய் ஒன்று சிசுவின் சடலம் ஒன்றை காவி சென்றுள்ளது ,இதனை கண்ணுற்ற அங்கு பணிபுரிந்த மக்கள் பதறி ஓடி காவல்துறைக்கு தெரிவித்தனர்
மீட்க பட்ட சிசுவின் சடலத்தில் இரு கால்களும் அற்ற நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது
குறித்த சிசு பிறந்து இரண்டு நாட்களில் ,தயார் சிசுவை இப்பகுதியில் வீசி விட்டு தலை மறைவாகியுள்ளதாக நம்ப படுகிறது
கள்ள தொடர்பின் மூலம் இந்த் சிசு பிந்திருக்கலாம் எனவும் ,அதனாலேயே இந்த சிசு கொலை இடம்பெற்றுள்தக தெரிவிக்க படுகிறது
போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் சமீப காலங்களாக வாகன விபத்துக்கள் அதிகம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் ஏழுபேர் இந்த விபத்துக்களில் பலியாகியள்ளனர்
இதனை கட்டு படுத்தும் நடவடிக்கையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது












