Tag: வாகன விபத்து
கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்
கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்
கொழும்பில் வாகன விபத்து பலர்காயம் கொழும்பில் வாகன விபத்து பலர் காயமடைந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தற்போது தெரிவிக்கின்றன.
மூன்று வாகனங்கள் கொழும்பின் சுற்றுப்புறப் பகுதியில் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வான் லொறி எரிபொருள் தாங்கி விபத்து
வான் லொறி எரிபொருள் தாங்கியமன இந்த சம்பவத்தில் மோதி கொண்டிருக்கின்றன.
மேலும் இந்த வீதி விபத்தின் பொழுது ஏழுக்கு மேற்பட்டவர்களுக்கு காயமடைந்துள்ளதாகவும் தற்பொழுது தெரிய வருகின்றது.
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகமாக காணப்படுவதும் வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் 1077 பேர் வீதி விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
அதிகரிக்கும் வீதி வித்துக்கள்
இவ்வாறு வீதி வித்துக்கள் பலியான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்க முடியாது தற்பொழுது இலங்கை காவல்துறை திணறிவு வருகிறது.
மாதந்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகி வருகின்ற பொழுதும் அந்த மக்கள் உயிர்ப்பலிகளை தடுக்க மறந்து ஆளும் அனுர அரசு மக்கள் நலணற்று அரசாட்சி செய்வதையே இந்த வீதி விபத்துக்கள் மீளவு எடுத்துக்காட்டி நிற்கின்றன.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே
லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே
லண்டன் பெக்கம் குயின்ஸ் வீதியில் ,கடந்த தினம் பெரும் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது .
வான் ஒன்றுடன் கார் ஒன்று மோதியதில், இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .
கார் மற்றும் வான் என்பனவற்றின் முற்பக்கம், பலமாக சேதமடைந்துள்ளன .
எனினும் சாரதிகள் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இந்த வாகன விபத்தினால் ,அந்த வழிச்சாலை போக்குவரத்து, சிலமணி நேரம் பாத்திக்க பட்டது குறிப்பிட தக்கது .
காட்சி படம் – அமுதன் நன்றி .
லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்
லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்
லண்டன் M1 வீதியில் பயணித்தது கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,சிதறியதில் ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .
மேலும் பலர் படுகாயமடைந்தனர் .
இந்த M1 வீதி விபத்தினால் ,அந்த வீதி போக்குவரத்து ,பல மணிநேரம் தடை பட்டது .
இவ்வாறான விபத்துக்கள், சமீப காலங்களில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
இராணுவ முகம் அருகில் கவிழ்ந்த வாகனம்
இராணுவ முகம் அருகில் கவிழ்ந்த வாகனம்
இலங்கை திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்திற்கு அருகில் ,வான் ஒன்று ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
சீனக்குடா விமானப்படை இராணுவ முகாம் பகுதியில், உள்ள வளைவு ஒன்றில் திரும்புகையில் ,வேகமாக பயணித்த வாகனம் ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது .
வாகனம் கவிழ்ந்த பொழுதும் ,அதனை செலுத்திய சாரதி காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டார் .
சாரதியின் அலட்சிய போக்கே ,மேற்படி வாகன விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்துக்களில் சிக்கி, நான்கிற்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்
அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்
அமெரிக்கா ,Texas ; அமெரிக்கா கிழக்கு Texas அதி வேகசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா டெக்ஸாஸ் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் இந்த உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ள்ளது .
இந்த வீதி விபத்தினால் குறித்த வீதி போக்குவரத்து பலமணி நேரம் தடை பட்டது .
இந்த அமெரிக்கா வீதி விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்
பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்
இலங்கை ;கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ்
பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் கெப் ரக லொரி ஒன்று பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இன்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கெப் ரக லொரி பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சம்பவம்
குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.
பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்
இந்த லொரியானது பூண்டுலோயா பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு மரணவீடு ஒன்றுக்கு செல்வதற்காக 11 பேருடன் காலை பயணித்துள்ளது.
பின் மீண்டும் பூண்டுலோயா நோக்கி குறித்த லொரி இன்று மாலை பயணிக்கையிலே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாரதி உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பலத்த காயங்கள்
ஏற்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன விபத்துகளில் 457 பேர் மரணம்
வாகன விபத்துகளில் 457 பேர் மரணம்
.ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் 25 ஆம் திகதி வரையில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் 434 .
இதில் 457 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் மாத்திரம் பதிவான மரண எண்ணிக்கை 44 ஆகும். இந்த வாகன
விபத்துக்களுக்கு முக்கிய காரணம் கவனயீனமாகும். இதனால் சாரதிகள் வீதி
ஒழுங்குமுறைகளில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்
வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி
விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
இவ்விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன
வவுனியாவில் வாகன விபத்து – ஒருவர் மரணம்
வவுனியாவில் வாகன விபத்து – ஒருவர் மரணம்
வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிளொன்று, ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில், எதிரே வந்த கடற்படை பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மாலை(06) இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதான
அனுஸ்க அபயரத்தின லக்மால் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் சமீப காலங்களாக வாகன விபத்துக்கள் அதிகம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் ஏழுபேர் இந்த விபத்துக்களில் பலியாகியள்ளனர்
இதனை கட்டு படுத்தும் நடவடிக்கையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
வாகன விபத்துக்களால் 39 பேர் உயிரிழப்பு
வாகன விபத்துக்களால் 39 பேர் உயிரிழப்பு
கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்
இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதியில் 527 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களினால் 122 பேர் கடும் காயங்களுக்கு
உள்ளாகியுள்ளனர். 238 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழப்புக்கள் இல்லாத 130 வாகன விபத்துக்கள் இந்தக்
காலப்பகுதியில் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.











