Posted in Uncategorized

ஐர்லாந் கடல் கரையில் சுறா

ஐர்லாந் கடல் கரையில் சுறா

ஐர்லாந் கடல் கரையில் திடீரென சுறாக்கள் ஊடுருவிய நிலையில் அங்கு கூடி நின்ற மக்கள் சிதறி ஓடினர்


தொடந்து ,அந்த பகுதியில் மக்கள் உலவிட தடை விதிக்க படுகிறது

மேலும் படகுகப்பபு பல்படுத்தியஹா பட்டுள்ளது

இந்த சுறாக்கள் எவ்விதம் இங்கு திடீரென நுழைந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in Uncategorized

    கடத்திய மாணவர்கள் 28 பேர் விடுதலை -பொக்காகராம் சாதனை


    கடத்திய மாணவர்கள் 28 பேர் விடுதலை -பொக்காகராம் சாதனை

    நையீரியாவில் பொக்கோ கராம் அமைப்பினர் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து 121 ,மாணவர்களை

    கடத்தி சென்றனர் , அவ்விதம் கடத்த பட்ட மாணவர்களில் 28 பேரை தற்போது விடுதலை செய்துள்ளனர்

    ஏனையவர்களும் விரைவில் விடுதலை செய்ய படுவார்கள் என பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்ணீரோடு காத்துள்ளனர்


    அரசை தமது பிடிக்குள் சிக்க வைக்கும் முகமாக இந்த கடத்தலில் குறித்த அமைப்பினர் ஈடு பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த 11 பெண்கள் கற்பழிப்பு

      ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த 11 பெண்கள் கற்பழிப்பு

      முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்தப்பட்டிருந்த வயது குறைந்த சிறுமிகளும் யுவதிகள் பலரும் பல்வேறான பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

      அவர்கள் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகையால், அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஐந்து நியமிக்கப்பட்டுள்ளன.

      மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் முழுமையான கண்காணிப்பிக் கீழ், இந்த பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்ளும்.

      ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக கடமையாற்றிய ​யுவதிகள் மற்றும் பெண்கள் 11 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

      அவ்வாறு அழைத்துவரப்படும் யுவதிகளும் சிறுமிகளும், ரிஷாட் பதியூதீனின் மைத்துனரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

      இ​தேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய

      யுவதியொருவர், ரயில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

      Posted in Uncategorized

      மலசல கூடத்தில் ரிச்சார்ட் பதியுதீன் செய்த வேலை

      மலசல கூடத்தில் ரிச்சார்ட் பதியுதீன் செய்த வேலை

      இயற்கை உபாதைகளை கழிப்பதற்காகவே பலரும் மலசலக்கூடத்தை பயன்படுத்துவர். ஆனால், கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மலசலக்கூடத்திலிருந்து என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

      இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் ​செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்குள்ள மலசலக்கூடத்திலிருந்து இரகசியமாக செய்த விவகாரமே இப்போது அம்பலமாகியுள்ளது.

      வைத்தியர்களால் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒளடதங்களை (குளிசைகளை) குடிக்காமல், மலசலக்கூடத்துக்குச் சென்று, அங்கிருக்கும் துளைகளின் ஊடாக அவர், வெளியில் வீசியெறிந்துள்ளமை தெரியவந்துள்ளது.

      தனக்கு வழங்கப்படும் குளிசைகளை, கடதாசிகளால் சுற்றிக்கொள்ளும் ரிசாட் பதியூதீன், இவ்வாறு வீசியெறிந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

      தடுப்புக்காவலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், நோய்வாய்பட்டுவிட்டதாக கூறியதால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

      அவருடைய வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சிறுமி, எரிகாயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த நாளன்றே, அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

      தன்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துக்கொள்வதற்கான அனுமதியை, கோரியிருந்த போதிலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

      சிகிச்சைகளைப் பெற்றுக்​கொண்டதன் பின்னர், அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்றையதினம் (24) அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

      மலசலக்கூடத்துக்கு வெளியே வீசியெறியப்பட்ட குளிசைகள், ரிசாத் பதியூதீனுக்கு வழங்கப்பட்டவை என்பதை, அவரை கண்காணித்த வைத்தியரும் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

      கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

      கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

      அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் அதே வேளை, கிளிநொச்சியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு மேலும் 3 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

      பூனேரி, காசிகுடாவில் உள்ள திரு. சின்னாவி நவரத்னம், மடுவில்நாடு திரு. ராமநாதன் மணிவத்தன் மற்றும் கிளிநொச்சி, பிலிமந்தனாரு, மயில்வானாபுரத்தில் உள்ள திரு. ஆறுமுகம் நகுலேஷ்வரன் ஆகியோருக்கு இந்த புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன.

      புதுமனை குடிபுகும் விழாவின் போது வீடுகளின் பயனாளிகளுக்கு வீட்டு பாவனைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

      கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் புதிய வீடுகளுக்கு தனவந்தர்களின் நிதியுதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

      கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 5வது ஆயுதத் தளவாடங்கள் காலாட்படை, 24வது விஜயபாகு காலாட்படை மற்றும் 14ஆவது தேசிய பாதுகாப்புப் படை ஆகிய படையணி வீரர்களினால் இந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

      கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெற்ற புதுமனை புகுவிழாவில்.

      கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

      Posted in Uncategorized

      மலையக சிறுவர்களை பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

      மலையக சிறுவர்களை பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

      மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

      வயது குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள . தொழில் சட்டத்தில் திருத்தத்திற்காக இவற்றை முன்வைக்கவுள்ளார். இது தொடர்பில் புத்திஜீவிகள் அலோசனைகள் வழங்கலாம் என்றும் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி குறிப்பிட்டுள்ளார்.

      நேற்று (24) அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

      இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கைகளை பிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்த முறைப்பாடுகளை அறிவிக்கவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பாதுகாப்புகாப்தற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்தவிடயத்தில் ஆர்வங்கொண்டுள்ள அனைவரும் ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

      இதற்கான தொலைப்பேசி இலக்கங்கள் 071 555 0666 051 222 2422 என்பதாகும். இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

      எழுத்து மூலமான ஆலோசனைகளை jthondaman@gmail.com என்ற மின் அஞ்சல் ஊடகவும் ஆலோசனைகளை சமர்ப்பிக் முடியும்.
      இதனூடாக 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு எதிராகவும், அச்சுறுத்துக்குள்ளான தொழில்களுக்கு அமர்த்தவதற்கும் அதற்கு சம்மந்தப்பட்ட தரகர்களுக்கு எதிராக அரச உயர் சபைகள் மூலம் நடடிவக்கைகள் முன்னெடுக்கப்படும்.

      அதுமட்டுமல்லாமல் தோட்ட முகாமைத்துவம் மற்றும் கிராம சேவகரின் ஊடாக அந்தந்த இடங்களில் இருந்து 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் எங்கு வேலைகளுக்கு சென்றுள்ளார்கள் என்ற தகவல்கள் திரட்டப்பட்டு அது குறித்தும் ஆராயப்படும்.

      பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் இடை விலகும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி ,கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிககை வழங்கலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரி ஊடாக இலவச கல்வி வழங்கவும் கண்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் இந்த கல்லூரியின் கிளை காரியாலங்களை ஆரம்பிப்பதற்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்துள்ளார்

      Posted in Uncategorized

      மகளை கொடுமை படுத்திய தந்தை , அத்தை கைது

      மகளை கொடுமை படுத்திய தந்தை , அத்தை கைது

      நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொடுமைகளுக்கு

      உட்படுவதாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை பொலிஸார் காப்பற்றியுள்ளனர்.

      குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

      குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

      Posted in Uncategorized

      இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல் – பொக்கோ கராம் வெறியாட்டம்

      உலக

      இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல் – பொக்கோ கராம் வெறியாட்டம்

      பொக்கோ கராம் அமைப்பினர் இராணுவத்தினர் பயணித்த வாகன தொடரணியை இலக்கு

      வைத்து தாக்குதல் நடத்த பட்டது இதில் எட்டுக்கு மேற்பட்டவர் பலியாகியுள்ளனர்

      மேலு இராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன

      மாணவர்களை கடத்தி சென்ற நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        பெல்ஜியம் நாட்டில் வெள்ளம் – 36 பேர் மரணம்

        பெல்ஜியம் நாட்டில் வெள்ளம் – 36 பேர் மரணம்

        பெல்ஜியம் நாட்டில் இடம் பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி முப்பத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்

        ,மேலும் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர் ,,பத்து லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

        வீடுகள் பலநூறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in Uncategorized

          தாலிபான் தாக்குதல் எதிரொலி -ஆப்கானில் 31 மாநிலத்தில் ஊரடங்கு

          தாலிபான் தாக்குதல் எதிரொலி -ஆப்கானில் 31 மாநிலத்தில் ஊரடங்கு

          ஆப்கானில் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் அந்த மண்ணை விட்டு வெளியேறிய

          நிலையில் தற்போது தலிபான்கள் தமது இழந்த பகுதிகளை வேகமான முன்னேறி மீட்ட வண்ணம் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளனர்

          இதனால் அரச இராணுவம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது ,இதனை அடுத்து தற்பொழுது

          இரவு ஒன்பது மணியில் இருந்து அதிகாலை நான்கு மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்ல கூடாது என அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது

          மீறி சென்றால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் ,அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்த படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

          இந்த அவசராக நிலை பிரகடனத்தால் நாடே பெரும் பீதியில் உறைந்துள்ளது

            Posted in Uncategorized

            இந்தியா வெள்ளத்தில் சிக்கி 115 பேர் மரணம்

            இந்தியா வெள்ளத்தில் சிக்கி 115 பேர் மரணம்

            இந்தியா மகாராஸ்திரா பகுதியில் இடம் பெற்ற பாரிய வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 115 பேர்

            மரணித்துள்ளனர் ,மேலும் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            தொடர்ந்து வெள்ள மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

              Posted in Uncategorized

              ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்

              ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்

              ஜெர்மனியில் இடம்,பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இலங்கை மீசாலையை சேர்ந்த 37 வயதுடைய லக்கு என்ற தமிழ் வாலிபர் மரணமாகியுள்ளார்

              இவரது மரண அறிவித்தல் துண்டு பிரசுரத்தில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது ,குறித்த

              வாலிபரை இழந்து அவர் தம் குடும்ப உறவுகள் கண்ணீரில் தவித்து வருகின்றனர்

              வரலாறு காணாத வெள்ளம் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்டது இதில் 120-க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

              இவரது ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது

              நீர் குடித்து மூச்சடக்கி
              நீ இறந்தாய்
              நீங்காத வலி தந்து
              நீ ஏன் மறைந்தாய்

              நிருபர் – வன்னி மைந்தன் –

              வாலிபர் மரணம்
                Posted in Uncategorized

                ரிச்சார்ட் மனைவி உள்ளிட்ட நால்வரை விசாரிக்க உத்தரவு

                ரிச்சார்ட் மனைவி உள்ளிட்ட நால்வரை விசாரிக்க உத்தரவு

                இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் மனைவி உள்ளிட்ட நால்வரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிட பட்டுள்ளது

                இவர்களது வீட்டில் சிறுமி ஒருத்தி வீட்டு வேலை செய்து வந்தார் ,இவர் தீயில் எரிந்த நிலையில்

                சடலமாக மீட்க பட்டார் ,இவரது இந்த கொலை தொடர்பாக விசாரிக்க இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

                மரணம் கொலை என நிரூபிக்க பட்டால் அமைச்சர் உள்ளிட்டவர்கள் சிறை செல்லும் அபாயம் எழுந்துள்ளது குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  இந்திய வெள்ளத்தில் சிக்கி 39 பேர் மரணம் – 1000 பேரை அள்ளி சென்ற கோரம்

                  இந்திய வெள்ளத்தில் சிக்கி 39 பேர் மரணம் – 1000 பேரை அள்ளி சென்ற கோரம்

                  இந்தியாவில் ஏற்படாத வெள்ள பேருக்கு காரணமாக இதுவரை முப்பத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்

                  மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நீரில் அடித்து செல்ல பட்ட நிலையில் காப்பாற்ற பட்டுள்ளனர்

                  தொடர்ந்து பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    Posted in Uncategorized

                    கவிழ்ந்த படகு ஏழுபேரை காணவில்லை

                    கவிழ்ந்த படகு ஏழுபேரை காணவில்லை

                    தென்மேற்கு துருக்கி பகுதியில் பயணித்து கொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்


                    மேலும் 16 க்கு மேற்பட்டவர்கள் மீட்க பட்டுள்ளனர்


                    காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல் படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

                      Posted in Uncategorized

                      இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய – சிரியா இராணுவம்

                      இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய – சிரியா இராணுவம்

                      சிரியாவில் உள்ள முக்கிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தின

                      இந்த ஏவுகணைகள் குறித்த இலக்கினை அடையும் முன்னர் சிரியா இராணுவத்தினர் விமான

                      ஏவுகணைகள் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

                      இஸ்ரேலிய இராணுவத்தினர் தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        அமெரிக்காவில் உணவகம் மீது ஆயுத தாரிகள் தாக்குதல்

                        அமெரிக்காவில் உணவகம் மீது ஆயுத தாரிகள் தாக்குதல்

                        அமெரிக்கா Logan Circle பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது காரில் வருகை தந்த ஆயுத தாரிகள் திடீர் தாக்குதலை நடத்தினர்

                        இதில் குறித்த கடைக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுளள்து ,இருவர் மீது சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                        போலீசார் இருபதுக்கும் மேற்பட்ட சூடு நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன

                        மேற்படி சம்பவம் தொடர்பான விடயங்கள் தெரியவரவிலை

                        விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          Posted in Uncategorized

                          ஐ எஸ் முக்கிய தளபதி கைது

                          ஐ எஸ் முக்கிய தளபதி கைது

                          ஈராக்கில் அரச இராணுவத்திற்கு எதிராக போர் புரிந்து வரும் ஐ எஸ் தீவிரவாதிகளின் முக்கிய

                          தாக்குதல் தளபதி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக ஈராக்கிய உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்

                          கைதானவரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          மேலும் பல முக்கிய நபர்கள் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                            Posted in Uncategorized

                            கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் 15 photo

                            கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் photo

                            தமிழ் மக்களின் அழிப்புக்கு நீதி வேண்டி கண்டன போராட்டம் ஒன்றை சட்ட விதிகளை பின் பற்றி அமைதியான முறையில்


                            தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் மற்றும் தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பும் இணைந்து இன்று 23/07/2021 மதியம் ஒரு மணிக்கு பிரித்தனியாவில் உள்ள இலங்கை

                            தூதரகத்துக்கு முன்னால் ,பிரித்தானிய காவல்துறையினர் முன்னிலையில், மாபெரும் கண்டன
                            போராட்டத்தை நடத்தினர் ..

                            இதன் போது
                            கறுப்பு ஜூலை கொலை வெறியின் நினைவு படங்ககளை தாங்கிய வண்ணம் போராட்டங்கள் இடம்பெற


                            அங்கு நடை பெற்ற நிகழ்வுகளை உள்ளே இருந்து ஜன்னல் வழியாக
                            சிங்கள அதிகாரிகள் படம் பிடித்ததாக பங்கு பற்றியவர்கள் தெரிவித்தனர் .

                            கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலை
                            Posted in Uncategorized

                            வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கம்

                            வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கம்

                            வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது.

                            இங்கு 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டது.

                            இதனையடுத்து இன்று காலை குறித்த வீதியுடனான போக்குவரத்து இராணுவத்தால்

                            துண்டிக்கப்பட்டு, முற்றாக முடக்கப்பட்டது.