Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை
18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை
இலங்கையில் 18 வயதுக்கு கீழ் பட்டவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவது தடை விதிக்க
பட்டுள்ளது ,இதனை மீறி அனுப்ப பட்டால் அவர்கள் மீது விசாரணைகள் நடத்த பட்டு நடவடிக்கை
மேற்கொள்ள படும் என ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்
ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
இலங்கையில் நேற்றைய (19) தினம் மேலும் 43 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முக்கிய நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல்
அமெரிக்கா முக்கிய நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல்
அமெரிக்காவின் மிக முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்து சீனாவின் இணையை சைபர் தாக்குதல் பிரிவினர் கைக்கிங் செய்துள்ளனர்
மைக்கிரோ சொப்ட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு துறைக்குள்ளும் நுழைந்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதனால் இரு நாடுகளுக்கு இடையில் கடும் வாய் மோதல் இடம்பெற்று வருகிறது ,சீனாவின் மீது ஆளும் அமெரிக்கா அதிபர் தொடர் தடைகளை விதிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
உளவுத்துறை எச்சரிக்கை – டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை
.உளவுத்துறை எச்சரிக்கை – டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை
சுதந்திர தினத்திற்கு முன்பு ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி – டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய ஆகஸ்டு 15 வரை தடை
டெல்லி செங்கோட்டை
நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதென கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த
வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில்
ஆளில்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
ஆபரேஷன் ஜிகாத் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த தாக்குதலை டெல்லியில் நடத்தக்கூடும் என கூறப்படுகிறது.
இதற்கேற்றாற் போல், உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அல்-கொய்தா இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள்,
சுதந்திர தினத்தினை முன்னிட்டு பெரிய அளவில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் இன்று முதல் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் வரை டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
மதுசூதனனை ஒரே நேரத்தில் பார்க்க வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா
மதுசூதனனை ஒரே நேரத்தில் பார்க்க வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா
தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைக்கு சென்றார்.
இதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள்.
தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.
தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. வினருடன் அவர் பேசிய பரபரப்பான ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அ.தி.மு. க.வினருடன் பேசும் ஆடியோக்களில், ‘நான் மீண்டும் வந்துவிடுவேன்’ என்று அவர் கூறி வருகிறார். இதனால் சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனை சந்திக்க சசிகலா இன்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென வருகை தந்தார்.
அதிமுக
அவரது காரில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரிக்கு சென்ற சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அ.தி.மு.க.வினருடன் தொலைபேசி வாயிலாக மட்டும் பேசிக்கொண்டிருந்த சசிகலா முதல் முறையாக கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனனின் உடல்நிலை பற்றி கேட்டறிய ஆஸ்பத்திரிக்கே நேரில் சென்றிருப்பது, அ.தி.மு.க. வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சசிகலா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, மதுசூதனனின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் போது சசிகலாவின் கார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழைந்தது.
சசிகலா, மதுசூதனனை சந்திக்க சென்றபோது எடப்பாடி பழனிசாமிஆஸ்பத்திரியில் இல்லை. அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார்.
பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான பிறகு சசிகலா தி.நகரில் உள்ள வீட்டிலேயே இருந்து வருகிறார். இதுவரை வெளியில் வந்ததில்லை.
முதல்முறையாக இன்று வீட்டில் இருந்து அவர் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி
எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி
நாட்டின் எரிபொருள் விலை பிரச்சனை நீண்டகாலப் பிரச்சினை என்பதால், அதனை தீர்ப்பதற்கு
முறையான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று இன்று (20) பாராளுமன்றத்தில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தமக்கு எதிராக எதிர்க் கட்சியினர் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியினர்
எரிபொருள் விலையை அதிகரிப்பை தடுப்பதற்கான மாற்று வழியை முன்வைப்பதற்கு தவறி விட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை பத்து சதவீதமாக அதிகரித்த போதும், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. விலைச் சூத்திரம் காணப்பட்டிருந்தால்,
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 179 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்
பிரிட்டன் கடல் பகுதியில் நடமாடி சென்ற ஈரானிய கப்பல்
பிரிட்டன் கடல் பகுதியில் நடமாடி சென்ற ஈரானிய கப்பல்
தெற்கு பிரிட்டன் கடல் பகுதிக்குள் இரண்டு ஈரானிய போர் கப்பல்கள் ஊடுருவி உளவு பார்த்து சென்றுள்ளன
மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
ரசியா ,மற்றும் ஈரானிய கப்பல்கள் ஊடுருவல் பிரிட்டனை கொதிப்பில் ஆழ்தியுள்ளது
300 பொலிஸாருக்குக் கொரோனா
300 பொலிஸாருக்குக் கொரோனா
தடுப்பூசி செலுத்திக் கொண்ட 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக்
கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே
இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு − பெளத்தாலோக்க மாவத்தை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற இவ்ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ். ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ” சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பது, அமைச்சராக இருந்த ரிஷாட் பதியூதீனுக்கு தெரியாதா?” என ஆனந்தகுமார் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் ”மலையகத்திலிருந்து சிறுவர்கள் அதிகளவில் செல்வந்தர்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு
அமர்த்துவதற்கு எதிராகக் கடும் சட்டங்களை இயற்ற வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் ”இந்த சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், சிறுமிக்கு நீதி கிடைக்க
தாமதமாகும் பட்சத்தில், இன்று அமைதி வழியாக நடத்தப்பட்ட போராட்டம், நாளை பாரியளவில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தா
1,000 ரூபாய் சம்பள விவகாரம் – கோட்டா காதில் ஒதால்
1,000 ரூபாய் சம்பள விவகாரம் – கோட்டா காதில் ஒதால்
1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இருப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (19) இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழு கூட்டத்தில் இந்த விடயத்தை எடுத்து கூறியதாக அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
எனவே பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இதற்காக தொழில் அமைச்சும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் தலையீடு செய்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்து கூறியதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் விலைவாசிகளின் அதிகரிப்பால் பெருந்தோட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சேதன பசளை பாவனை குறித்து மக்களுக்கு பூரண தெளிவூட்டல் இல்லை எனவும் எனவே அது குறித்து மக்களை மேலும் தெளிவூட்டுவது அவசியம் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியுள்ளதாகவும் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் பட்டம் பெற்றும் அவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால்
அங்கிகரிக்கப்பட்டும் வெளிவாரி பட்டதாரிகள் அரச தொழில் வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது
பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது
உஸ்பகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌ்ளவத்த பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குறித்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணுக்கு 36 வயது எனவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவரின் மனைவியும் உஸ்பகிஸ்தான் நாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
AstraZeneca செலுத்திய பெண்ணுக்கு இரத்தஉறைதல் – 77 நாளின் பின் உயிர் தப்பிய அதிசயம்
AstraZeneca செலுத்திய பெண்ணுக்கு இரத்தஉறைதல் – 77 நாளின் பின் உயிர் தப்பிய அதிசயம்
அவுஸ்ரேலியாவில் மூதாட்டி ஒருவருக்கு அஷ்டா செனிக்கா ஊசி செலுத்த பட்டது ,அதில் அவரது
இரத்தம் உறைந்துள்ளது ,இதனால பெரிதும் அவதியுற்ற அவர் 77 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மீள் உயிர் தப்பி வந்துள்ளார்
ஆனாலும் அவரது கைகளில் இப்பொழுதும் இரத்த கண்டல்கள் உள்ளதை காணமுடிகிறது
படங்களை பாருங்கள்


ஆபாசப் படங்களைத் தயாரித்த- ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
ஆபாசப் படங்களைத் தயாரித்த- ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது
ராஜ் குந்த்ரா
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ்
குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சசிகலாவால் -அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி
சசிகலாவால் -அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி விட்டது. வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. மக்களை ஏமாற்றி விட்டது.
சசிகலா எத்தனை பொய்யான தகவல்களைப் பரப்பினாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. சசிகலா அ.தி.மு.க.விலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அ.தி.மு.க .தோல்வியைச் சந்தித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் வேண்டுமென்றே வீணடிக்கவில்லை. ஆரம்பக் காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது என தெரிவித்தார்.
விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்
விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்
தனது தந்தை, தாயின் நினைவாக ஒரு விநாயகர் கோவிலை கட்டித் தந்த கிறிஸ்தவ தொழிலதிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரூ.2 கோடி மதிப்பில் சித்தி விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்
சித்தி விநாயகர் கோவில்
உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கட்டி அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:
உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத் (77). இவர் தொழிலதிபர் ஆவார்.
கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின் உயிரிழப்பதற்கு முன் கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தைக் கொடுத்து இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தனது தந்தை, தாயின் நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோவிலை கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.
கேபிரியல் நாசரேத்
அந்த கோவிலுக்குள் 36 அங்குலம் விநாயகர் சிலை உள்ளது. பின்னர் அந்தக் கோவிலை இந்து பக்தர்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.
இந்தக் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேபிரியல் கூறுகையில், நான் கடந்த 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்குச் சென்றேன். மும்பையில் உள்ள பிரபாதேவி கோவிலுக்கு
தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோவிலை கட்ட முடிவு
செய்து, தற்போது கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது
போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது
இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது 3,009 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் பல் வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் நீதிமன்ற பிடியானையின் மூலம் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் மது போதையில் வாகனம் செலுத்திய 580 பெரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது
கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது
கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்
உள்ளே நுழைவதற்கான அனுமதி பத்திரங்கள் எதுவும் இன்றி சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட
குற்றத்திற்கு கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தாவ பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் ஹொரவ்பொத்தானை – கரடிக்குளம், கல்கந்தாவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹனீபா நுஸ்ரினா (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த பெண் குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து தமது சொந்த ஊரான
கல்கந்தாவ பகுதியில் வசித்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேத பரிசோதனைக்காக
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்கு வானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்கு வானூர்தி
அமெரிக்கா கடல் படை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த MH-60 “Knighthawk ரக உலங்கு வானூர்தி ஒன்று கலிபோனியா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது
எனினும் இதில் பயணித்த நால்வரும் காப்பாற்ற பட்டுள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது
மேற்படி வானூர்தி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
ஒயில் டாங்கர் வெடித்து சிதறியதில் உடல் கருகி 13 பேர் மரணம்
ஒயில் டாங்கர் வெடித்து சிதறியதில் உடல் கருகி 13 பேர் மரணம்
தெற்கு கென்யாவில் ஆயில் ஏற்றி கொண்டு பயணித்த தாங்கி திடீரென வெடித்து சிதறியதில் 13 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் ஏறி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






