Posted in Uncategorized

எதிரி வங்கிகளுக்குள் புகுந்து 1.3 பில்லியன் கொள்ளையடித்த வடகொரியா

வடகொரியா உலக நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் மிரட்டலாகவும் விளங்கி வருகிறது ,

கைக்கிங்

ஒரே தடவையில் நூறு நாடுகளின் கணனிகளை கைக்கிங் மூலம் செயல் இழக்க வைத்த வடகொரியா பெரும் மிரட்டலாக வளர்ந்துள்ளது

வங்கி கொள்ளை

அவ்விதம் ,உலக நாடுகளின் மிக முக்கிய வங்கிகளை இலக்கு வைத்து பெரும் பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது

    இவ்விதம் மிக முக்கிய வங்கிகளின் பிராதன கணனிகளை கைக்கிங் செய்த வடகொரியா அந்த வங்கிகளிடம் இருந்து சுமார் 1.3 மில்லயன் டொலர் பணத்தை கொள்ளையடித்துள்ளது

    மேற்படி தகவல் திரட்டு இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    அமெரிக்கா இலக்கு

    வடகொரியாவின் இலக்குகள் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்தவையாக உள்ளது,

    இவர்களே வடகொரியாவுக்கு பெரும் நெருக்கடி தருவிக்கும் நாடுகளாக விளங்கி வருகின்றன

      பொருளாதார தடை
      வடகொரியாவா கொக்கா ,அதன் மீது பொருளாதார தடையை விதித்து அடங்கும் என எதிர்பாத்த அமெரிக்காவுக்கு

      இப்பொழுது புரிந்துள்ள இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      Posted in Uncategorized

      அமெரிக்கா,இஸ்ரேல் இணைந்து அம்பு ஏவுகணை தயாரிப்பு – சிதறுமா ஈரான் ..?

      அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நான்காவது சந்ததியின் புதிய தொழில் நுட்பத்திலான அம்பு என்ற ஏவுகணையை கூட்டாக இணைந்து தயாரிக்கின்றன

      ஏவுகணை சோதனை

      இந்த ஏவுகணைகள் மூலம் விமானங்கள் மற்றும் செய்மதிகளை கூட சுட்டு வீழ்த்த முடியும் எனப்படுகிறது,மேலும் விமானங்களை இடை மறித்து தாக்கி அழிக்க முடியும்

      செய்மதிகளை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை

      செய்மதிகளை சுட்டு வீழ்த்தினால் ராடார் கட்டு பாடுகள் தகர்ந்து போகும் ,

      அதன் பின்னர் எதிரிகளின் இலக்குகளை சுலபமாக தாக்கி அழித்துவிட முடியும் ,

      அதனால் தான் என்னவோ ஈரான் செய்மதிகளை தகர்த்து அழிக்கும் புதிய ஏவுகணையை தொடராக தயாரித்து சோதன செய்து

      வருகிறது ,இஸ்ரேல் ஈரான் ஏவுகணை போட்டி தயாரிப்பு மத்தியகிழக்கில் மேலும் படத்தை உருவாக்கியுள்ளது

      Posted in Uncategorized

      இங்கிலாந்தில் 85 போலியான பல் கலைக்கழகங்கள் – அரசால் முடக்கம்

      இங்கிலாந்தில் போலியான முறையில் இயங்கி வந்த பல் கலைக்கழகங்கள் எண்பத்தி ஐந்தின் இணையதளங்கள் பிரிட்டன் அரசால் முடக்க பட்டுள்ளது

      கடந்து ஐந்து வருடங்களில் இந்த இணைய தளங்கள் முடக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது ,

      டிகிரி செல்லாது

      மேற்படி இணையங்கள் மூலம் டிகிரி பெற்றவர்கள் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது ,

        அவர்களுக்கும் இதனால் பெரும் இடர் ஏற்பட்டுளள்து ,ஐந்து பல்கலைக்களங்கள் போலியான முறையில் தாண்றிதழ்களை

        வழங்குவதாக கூறி அவையும் முடக்க பட்ட நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துகக் கோரி கூர்மையடையும் போராட்டங்கள் ! வீடியோ

        சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் கூர்மையடைந்து வருகின்றன.

        https://youtu.be/pcmCosMVPf0
        https://youtu.be/gIWKm2y2Pzc
        https://youtu.be/rhyIMar0nLc

        தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்சியாக கோரி வருகின்றனர்.

        குறிப்பாக சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரது முக்கிய பரிந்துரை தமிழர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்திருந்ததோடு, தாயகத்தில் இடம்பெற்றிருந்த பொத்துவிதல் முதல் பொலிகண்டி வரையிரலான மக்கள் எழுச்சிப் போராட்டமும் உரமூட்டியிருந்தது.

        இந்நிலையில் புலம்பெயர் தேசங்களிலும் இக்கோரிக்கை வலிமைபெறும் வகையில் கவனயீர்ப்பு போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள் இடம்பெற்று வருகின்றன.

        அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள நெதர்லாந்தின் கெக் நகரில் இருந்து ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை நோக்கிய நீதிக்கான ஈருருளிப் பயணம் தொடர்ந்து நகர்ந்து வருகின்றது. தலைநகர் பரிஸ், புறநகர சபை வளாகங்களில் இனவழிப்பினை வெளிப்படுத்தும் ஒளிப்பட காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்று வருகின்றன.

        இதேவேளை கனேடிய தலைநகர் ஒட்டாவா அரச மையம் நோக்கி நீதிக்கான வாகன பேரணியொன்றும் இடம்பெற்றுள்ளது.

        குறிப்பாக சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீர்மான வரைவினை கொண்டு வருகின்ற முகன்மை நாடுகளை நோக்கிய அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி

        கையெழுத்து போராட்டங்களும் கனடா, ஜேர்மன் ஆகிய நாடுகளில் கூர்மைப்பெற்றுள்ளன. புதிய தீர்மான வரைவானது சிறிலங்காவை

        சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதானமாக இக்கையெழுத்து இயக்கங்கள் வலியுறுத்துகின்றன.

        Posted in Uncategorized

        பாரிய நிலநடுக்கம் 40 பேர் காயம் – பலரை காணவில்லை

        பாரிய நிலநடுக்கம் 40 பேர் காயம் – பலரை காணவில்லை

        மேற்கு ஈரான் பகுதியில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை நாற்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலு பலரை காணவில்லை .

        தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன ,
        உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்ச படுகிறது

        முழுமையான சேத விபரங்கள் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை

        Posted in Uncategorized

        நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம்

        நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம்

        தமிழில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். இதையடுத்து பல்வேறு ஹிட்

        படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

        இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற

        படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

        மாதவன் டாக்டர் பட்டம் பெற்ற போது எடுத்த புகைப்படம்

        இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மாதவனின் கலைச் சேவையை பாராட்டி

        , கோலாபூரில் உள்ள டி.ஒய். பாட்டில் பல்கலைக்கழகம் அவருக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. டாக்டர் பட்டம்

        பெற்ற மாதவனுக்கு ரசிகர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

        Posted in Uncategorized

        பிரிட்டன் மகாராணி கணவர் மருத்துவமனையில் அனுமதி

        பிரிட்டன் மகாராணி கணவர் மருத்துவமனையில் அனுமதி

        பிரிட்டன் மகாராணியின் கணவரான பிலிப்ஸ் அவர்கள் லண்டன் King Edward VII தனியார் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுளளார்

        சுவாசிக்க ஏற்பட்ட சிரமத்தால் இந்த திடீர் அனுமதி ஏற்படுத்த பட்டுள்ளது

        99 வயதாகும் இவர் இந்த சுவாச திணறலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        பேஸ்புக் அடாவடி -அவுஸ்ரேலியாவில் பாவனைக்கு முற்றாக தடை

        அனைத்து ஆஸ்திரேலிய பயனர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் செய்தி உள்ளடக்கத்தைப் படித்து பகிர்ந்து கொள்ளும் திறனை பேஸ்புக் நிறுத்தியுள்ளது.

        அவசர சேவைகள், தொண்டு நிறுவனங்கள், அரசு சுகாதாரத் துறைகள் உள்ளளவும் இதனால் பாதிக்க பட்டுள்ளன ,

        செய்திகள் பகிர்வுக்கு அவுஸ்ரேலியா அரசு பணம் செலுத்த

        வேண்டும் என பேஸ்புக்கிடன் வேண்டிய நிலையில் இந்த அதிரடி தடையை பேஸ்புக் செய்துள்ளது

        அவுஸ்ரேலியா அரசு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட

        நகர்வுக்கு விழுந்த அடியாக இது பேச படுகிறது ,இதுபோலவே கூகிளும் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        கடலில் மூழ்கிய படகு 36 மணிநேரம் உயிருக்கு போராடிய நபர் – வீடியோ

        36 மணி நேரம் மூழ்கிய படகில் தத்தளித்த மீனவர் – உயிர் தப்பிய மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் – உள்ளே காணொளி பாருங்கள்

        மூழ்கிய படகு

        அமெரிக்காவில் நபர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்க தனது படகில் சென்றுள்ளார் ,

        இவர் சென்ற படகு திடீரென நீரில் மூழ்கியது ,இதன் போது மூழ்கிய கவிழந்த அந்த படகின் மேலே ஏறி நின்றுள்ளார் ,

        சுமார் 36 மணித்தியாலங்கள் அவ்வாறே நின்றுள்ளார் ,கடும் குளிர்,உணவு இல்லை ,இவ்வாறு இருந்தும் அதில் இருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளார் ,

        மீட்ட மீனவர்கள்

        அவ்வழியாக மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இவரை மீட்டு கரை சேர்த்தனர் ,போலீசாருக்கு தகவல் வழங்க பட்ட நிலையில் அவர் தீவிர மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்டார்

        அதிசயம்

        இவர் தப்பித்து வந்தது ,நியத்தில் மறு பிறவி எடுத்துள்ளதாக சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்து

        வருகின்றனர் ,இவரை காப்பாற்றிய சக மீனவர்களுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

        உண்மையில் இதுகடவுளின் ஆசி என்று தான் கூறவேண்டும் இலையா உறவுகளே .

        Posted in Uncategorized

        மலாலாவை சுட்டு கொல்வோம் தாலிபான்கள் மிரட்டல்

        சிறுமியை சுட்டு கொல்வோம் – தாலிபான்கள் மீள மிரட்டல் -பாதுகாப்பு இறுக்கம் -தொடரும் பதட்டம்

        தாலிபான்கள் மிரட்டல்

        பாகிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பினால் சிறுமி மலாலா சுடப் பட்டார் ,

        ஆனால் அவர் அந்தசூட்டு காயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார் ,உலக நோமல் பரிசையும் இவர் தட்டி சென்றார் ,

        எதிர் பரப்புரை

        அதன் பின்னர் அமெரிக்கா,மற்றும் அதன் நேச நாடுகளின் செல்ல பிள்ளையாக மாறியதுடன் ,மலாலா தாலிபான்களுக்கு எதிரான கடும் பரப்புரையை மேற்கொண்டு வந்தார்

        சீற்றம் கொண்ட தலிபான்கள்

        இதனால் சீற்றம் கொண்ட தலிபான்கள் நாம் மீளவும் இவரை சுட்டு கொல்வோம் ,எனவும் இம்முறை எமது தாக்குதலில் இருந்து இவர் தப்ப மாட்டார் என தெரிவித்துள்ளது

        பாதுகாப்பு இறுக்கம்

        இதனை அடுத்து சிறுமியின் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது ,எவ்வகையான பாதுகாப்பு வழங்கினாலும் குறித்த அமைப்பில்

        இருந்து இவர் பாதுகாக்க படுவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

        கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
        Posted in Uncategorized

        தாயை சுட்டு கொன்ற மகள் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்

        அமெரிக்கா கரோலினா பகுதியில் இருபத்தி ஐந்து வயதுடைய தாய் ஒருவரை அவரது பிள்ளை சுட்டு கொன்ற பெரும் துயர் இடம் பெற்றுள்ளது

        தாயை சுட்டு கொன்ற பிள்ளை

        சம்பவ தினம் அன்று அப்பார்ட்மெண்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐந்து பிள்ளைகள் இருந்துள்ளனர் ,

        இதில் ஒரு பிள்ளை தாயின் பையை சோதனை செய்துள்ளது ,அப்பொழுது அதற்குள் செமி ரக கைதுப்பாக்கி ஒன்று இருந்துள்ளது

        ,அவ்வளவு தான் அதனை எடுத்து லோட் பண்ணி தாயினை சுட்டுள்ள்ளார் ,

        இதில் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார் , மேலும் ஒரு குழந்தையும் படுகாயமடைந்துள்ளது ,எனினும் உயிர் ஆபத்து இல்லா தப்பித்துள்ளது ,


        ,இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

        அலட்சியதால் நடந்த பரிதாபம்


        சிறுவர்கள் முன்பாக துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்க தவறியதன் விளைவே இந்த படுகொலை சம்பாவத்திற்கு காரணாமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்

        Posted in Uncategorized

        கணவருடன் பொள்ளாச்சி கடையில் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்

        இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம்

        செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள்.

        இந்நிலையில் காஜல் அகர்வால் மற்றும் அவருடைய கணவர் கவுதம் கிச்சலுவுடன் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் எனும் ஒரு சிறிய உணவகத்துக்கு வருகைத்தந்திருந்தார்.

        காஜல் அகர்வால்

        இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், சாந்தி உணவகம் எனக்கு மிகவும் பிடித்த உணவகம். சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா எனக்கு மிகவும் பாசத்தோடு உணவை

        பரிமாறுவார்கள். கடந்த 27 வருடங்களாக சுவை மாறாமல் அதே அருமையான சுவையுடன் இந்த உணவகத்தை நடத்தி

        வருகிறார்கள். நான் இந்த உணவகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளாக வந்து செல்கிறேன்” என்று பதிவு செய்திருக்கிறார்

        கணவருடன் பொள்ளாச்சி
        கணவருடன் பொள்ளாச்சி
        Posted in Uncategorized

        பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு வருகின்றது !

        விடுதலைப் புலிகள் மீதான தடை

        தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பினை நாளை வியாழக்கிழமை ( 18-02-2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

        இது தொடர்பிலான இணையவழி ஊடக சந்திப்பொன்று பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு நாடுகடந்த தமிழீழ

        அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியே காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

        தடைசெய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீடு

        தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத

        தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல்

        சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தது.

        முதல் தீர்ப்பு

        முதல் தீர்ப்பு தொடர்பில் தீர்ப்பு வெளிவந்து அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடமட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ

        விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே

        அடுத்த நடவடிக்கை

        உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

        இதேவேளை பிரித்தானிய அரச தரப்பும் தமது வாதுரைகளை ஆணையத்திடம் எழுத்துமூலமாக முன்வைத்துருந்தது.

        இந்நிலையில் நாளை வியாழக்கிழமை இரு தரப்பு வாதுரைகளின் அடிப்படையில் மேன்முறையீட்டு ஆணையம் தனது அடுத்த தீர்ப்பினை வழங்க இருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

        Posted in Uncategorized

        தமிழீழம் கேட்கும் வெளிநாட்டு தமிழர்கள் – குமுறிய கோட்டா

        உலக சமாதானத்தை நிலை நாட்ட தான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உழைப்பேன் என
        ஆளும் இலங்கை தமிழ் இன கொலையாளியும் இன்றைய ஜனாதிபதியுமான கோட்டபாய தெரிவித்துள்ளார்

        நாம் பயங்கரவாதிகளை அழித்து நாட்டு மக்களை காப்பாற்றியுள்ளோம் ,

        சிறைகளில் எவரும் இல்லை எமக்கு எதிராக சேறு பூசும் நபர்களாலே வெளி நாடுகளில் இருந்து பொய் பரப்புரை செய்கின்றனர் என கோட்டா குமுறியுள்ளார்

        அவர்களின் கனவு தமிழீம் அது ஒருபோதும் சாத்தியமாகாது எனவும் ,தாம் போரில்

        ஒரு தமிழர்களையும் கொலை செய்யவில்லை எனவும் ,புலிகளே

        கொன்றார்கள் என கொக்கரித்துள்ளார் இரத்தக் கறை படிந்த எசமான் கோட்டா ,

          Posted in Uncategorized

          கோட்டாவை காப்பாற்ற பிரிட்டனுடன் பேசியசுமந்திரன் – கொதிக்கும் தமிழர்கள்

          இலங்கை ஆளும் அரச பயங்கரவாதம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பை அடுத்து அந்த குற்றங்களுக்கு நீதி பெற்று கொடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் விவாதம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

          தமிழ் இன அழிப்பு

          பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்தும் கொலையாளிகள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .

          இந்த கொலையாளிகளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்க படவில்லை ,

          சர்வதேச நீதி

          ஆனால் ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கையை, சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனு

          சிங்கள அரசை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது அதனை தொடர்ந்து பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை,

          தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வியாபாரி சுமந்திரன் ஊடக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனை சந்தித்து பேசியுளளார்

          பொத்துவில் முதல் பொலி கண்டிவரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை அடுத்து தனக்கு வழங்க பட்ட இராணுவ பாதுகாப்பு

          விலக்க பட்டதாக கொக்கரித்த சுமந்திரனின் நரி தந்திரம் இது தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது

          சுமந்திரன் பாதுகாப்பு

          ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் முடிவுற்றதும் மீளவும் சிங்கள இராணுவ பாதுகாப்பு சுமந்திரனுக்கு வழங்க படும் என அடித்து கூறலாம்

          கூட்டமைப்பு அரசியல் வியாபாரி

          தமிழர்களே இந்த அரசியல் வியாபாரி சுமந்திரன் தொடர்பில் யாக்கிரதையாக இருங்கள் ,தமிழ் இனத்தை விற்று பிழைக்கும்

          இவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பும் வேலையில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பாகும்

            Posted in Uncategorized

            தமிழகத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில்

            தமிழகத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில்

            தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ்

            ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

            அடுத்ததாக தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

            இந்நிலையில், நடிகை நிதி அகர்வாலுக்காக தமிழ்நாட்டில் ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். காதலர் தினமான நேற்று

            அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

            நிதி அகர்வால் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்

            இதுகுறித்து நடிகை நிதி அகர்வால் கூறியதாவது: இது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான்

            மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். இதைவிட சிறந்த காதலர் தின பரிசு இருக்க முடியாது. என் மீது இவ்வளவு அன்பு காட்டும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.

              Posted in Uncategorized

              இலங்கையை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றில் நிறுத்துக-கனடாவில் வாகன பேரணி


              யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்காக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு கனடாவை

              வலியுறுத்துவதற்காக கனேடிய தமிழ் சிவில் சமூக உறுப்பினர்கள் ரொறன்ரோவிலிருந்தும்.மொன்றியலிலிருந்தும் ஒட்டாவாவிலுள்ள

              பாராளுமன்ற வளாகம் வரையிலான வாகனப் பேரணி ஒன்றினை 17ம் திகதி புதன்கிழமையன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.

              சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கின்றது.

              அண்மையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை

              மாதம் 27ம் தகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ)

              பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை

              எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் (ஓஎச்சீஎச்ஆர்) வலியுறுத்தியுள்ளார்.

              இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் இலங்கையை

              சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு ஒருமித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

                Posted in Uncategorized இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை -16 பேர் மரணம் -30 பேர் காயம்

                வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை கருகிய மனித உடல்கள் -கதறிய மக்கள் ,சுடுகாடாய் கிடக்கும் தொழில் சாலை

                தமிழகம் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழில் சாலை ஒன்று திடிரென

                வெடித்து சிதறியது ,இதன்பொழுது அங்கு பணிபுரிந்த பதினேழு

                இது எப்படி இருக்கு ..? கிளிக் here

                பேர் மரணமாகியும் மேலும் முப்பது பேர் படுகாயமடைந்தனர்

                காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக

                மருத்துவமனை வட்டாரங்க;ள் தெரிவித்துள்ளன

                குறித்து வெடிவிபத்து தொடபில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றன

                Posted in Uncategorized

                இலங்கையில் அரச இணையதளங்களை முடக்கிய கைக்கர்கள்

                இலங்கையில் அரச இணையதளங்களை முடக்கிய கைக்கர்கள்

                இலங்கையில் இயங்கி வரும், மிக முக்கிய அரச மற்றும் அதன்

                முகவர் இணைய தளங்கள் மர்ம கைக்கிங் நபர்களினால் முடக்க

                பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

                இவ்வாறு முடக்க பட்ட இணையங்கள் மீள செயல் பாட்டுக்குக்

                கொண்டு வரும் நடவடிக்ககையில் தொழில் நுட்ப பிரிவினர் இயங்கி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  தமிழர்களோடு இணைந்திருப்பதே முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது- கண்டு பிடித்த காவிய தலைமைகள்

                  தமிழர்களோடு இணைந்திருப்பதே முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது- கண்டு பிடித்த காவிய தலைமைகள்

                  சிங்கள அரச ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழர்களோடு முஸ்லீம்கள் இணைந்திருப்பது மட்டுமல்ல, முஸ்லீம் மக்களது

                  அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது என யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப்பிரதிநிதி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

                  தமிழர் தாயகத்தில் எழுச்சி கொண்டுள்ள ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ எனும் அறவழிப்போராட்டதுக்கு, புலம்பெயர்

                  தமிழர்களின் உறுதுணையினை வெளிப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த தோழமைக்

                  கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.

                  சிங்கள பேரினவாதிகளாலும், கடும்போக்குவாதிகளாலும் தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற செயற்பாடுகளை வன்மையாக

                  கண்டிப்பதாக தெரிவித்த அப்துல்லா, சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்புக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் தமிழர்களோடு

                  இணைந்து போராடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த இணைந்த செயற்பாடு சக்திவாய்ந்தது மட்டுமல்லாது பலமானது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

                  யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த தமிழினவழிப்பு நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராகவும் தமது

                  கண்டனத்தினை தெரிவித்திருந்தாக குறிப்பிட்டிருந்த அப்துல்லா, ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ பேரணி யாழ்

                  மண்ணில் கால் வைக்கும் போது தமது சமூகம் அதற்கு ஆதரவாக பங்கெடுக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

                  மேலும் இடம்பெயர்ந்த முஸ்லீம்களது மீளகுடியேற்றம் என்பது தமிழ்மக்களது அங்கீகாரத்துடனேயே சாத்தியம் என்பதனை

                  வலியுறுத்திய அப்துல்லா, வடக்கு கிழக்கில் முஸ்லீம் மக்களது அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான சிங்கள

                  அடக்குமுறையாளர்களிடம் இருந்து முஸ்லீம்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எனவும் அவர் இடித்துரைந்திருந்தார்.

                  முன்னராக யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம், ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’யிலான அறவழிப்போராட்டத்துக்கு

                  தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததோடு, முஸ்லீம்களை ‘தமிழர்களாக’ அணிதிரளுமாறு அழைப்பும் விடுத்திருந்தது.

                  இதேவேளை, அப்துல்லாவின் தோழமையினை கூட்டத்தில் பங்கெடுத்திருந்த பலரும் வரவேற்றிருந்ததோடு, இரு

                  சமூகங்களுக்கு இடையிலான இணைந்த செயற்பாட்டுக்கு நல்லதொரு தொடக்கமாக தற்போதைய நிகழ்வுகள் அமைந்துள்ளதென குறிப்பிட்டிருந்தனர்.

                  சமதான காலத்தில் விடுதலைப்புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மானுடத்துக்கான ஒன்றுகூடல் நிகழ்வானது, மானிடத்தின் குரலாக தமிழர்களது உரிமைகளுக்கான

                  ஒலித்திருந்தனை நினைவூட்டிய நீதிக்கான கனேடிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு பிரதிநிதி திருமுருகவேந்தன்,

                  தியாகி திலீபன் காலத்தில் யாழ் பொம்வெளி, புதிய சோனகதெரு, ஒஸ்மேனியே கல்லூரி உட்பட ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கூட்டங்களையும் ஞாபகப்படுத்தினார்.

                  1957ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழரசுகட்சியினால் மேற்கொள்ளப்பட்ட

                  கதவடைப்பு போராட்டத்தினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு முஸ்லீம்கள் துணைபுரிந்த சம்பவத்தினை குறித்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்

                  , தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கலா தன்னாட்சி அதிகார சபை வரைவில், முஸ்லீம் மக்களது தனித்துவம் அதில் அங்கீகரிக்கப்பட்டு, சிறிலங்காவின் யாப்பினையும் விட,

                  அதிகளவான உரிமைகள், அதிகாரங்கள் அந்த வரைவில் உள்ளடக்கப்பட்டிருந்ததனையும் குறித்துரைந்தார்.

                  இவ்வாறு யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப் பிரதிநிதி அப்துல்லா அவர்களது தோழமையினை பலரும் உற்சாகத்தோடு

                  வரவேற்றிருந்ததோடு, தாயக மக்களது எழுச்சிப் போராட்டத்துக்கான தமது உறுதுணையினை வெளிப்படுத்தியிருந்தனர்.