Posted in Uncategorized

2009 இற்கு பின்னர் பொங்கிய எழுந்த தமிழர்கள்

2009 இற்கு பின்னர் பொங்கிய எழுந்த தமிழர்கள்

தமிழீழத்தில் சமகாலத்தில் கடுகதியாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுவரும்

தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழீழத்தின் வடக்கும் கிழக்கும் ஓரணியில் திரண்டு,

இலட்சிய வேட்கை மேலோங்க, பேதங்கள் புதையுற தன்னெழுச்சிகொண்டு முன்னெடுக்கும் போராட்டத்தை தமிழர் இயக்கம் வரவேற்கின்றது.

அனைத்துலக அரங்கில் தொடர்ச்சியாக உறுதி தளராது போராடுவதற்கான உத்வேகத்தையும் இப்போராட்டம்

வழங்கியுள்ளது. தமிழீழத்தில் இடம்பெற்றது, இடம்பெற்றுக்கொண்டிருப்பது திட்டமிட்ட தமிழின அழிப்பு என்ற

கருத்தியலை சமரசமற்று முன்னெடுத்துவரும் தமிழர் இயக்கம் எமது எதிரிகளால் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பல

சந்தர்ப்பங்களில் எமது நிலைப்பாடு தாயக மக்களின் நிலைப்பாடு அல்ல என்று

பெரும்பாண்மை அனைத்துலக சமூகத்தாலும், ஏன் சில தமிழ் தரப்புக்களினாலும் ஓரம்கட்டபட்ட வரலாறும் இடம்பெற்றது.

ஆனால் அவற்றை எல்லாம் பொய்ப்பித்து இடம்பெற்றது தமிழின அழிப்பு என்று தாயகம் வானதிர இடித்துரைக்கும் பிரகடனமாக

இப்போராட்டம் திகழ்வதுடன், தாயக மக்களின் ஆழ்மன விருப்புடன், அவர்களும் நாமும் ஓர் கோரிக்கையில் ஓர் தாய்

பிள்ளைகளாக பயணிக்கின்றோம் என்ற ஒரு செய்தியை இப்போராட்டம் உலகிற்கு கட்டியம் கூறி நிற்கின்றது. வெடித்த

நிலத்தில், அழித்த நிலத்தில் இனி ஏதும் முளைக்காது என பகல்கனவு கண்ட பலரின் எண்ணங்களில் “ போராட்டம் நீள்கிறது” என்ற வரலாற்றுச் செய்தியை பறைசாற்றியுள்ளது.

இப்போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகளை தமிழர் இயக்கம் பன்மொழிகளில் அனைத்துலக சமூகத்திற்கு அனுப்பிவைத்துள்ளதுடன் போராட்டத்தினை நிறுத்தும், அடக்கும்

வகையில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் ஐ.நா வின்

பிரதிநிதிகள், உறுப்பு நாடுகள் உற்பட பன்னாட்டு இராசதந்திர மட்டங்களிற்கும் தொடர்ச்சியாக அறிக்கைகளை அனுப்புவதன் ஊடாக தெரியப்படுத்தியவாறே இருக்கின்றோம்.

ஓர் திருப்புமுனையாக அமையும் இப்போராட்டத்தில் தாயக உறவுகள் பெருந்திரட்சிகொள்ளுமாறு வேண்டுவதுடன்

உலகத்தமிழர்களும் தமது தார்மீக ஆதரவை வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

வெல்வது உறுதி
தமிழர் இயக்கம்

    Posted in Uncategorized

    திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா

    திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவ… வைரலாகும் புகைப்படம்

    திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

    திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன்,
    இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும்

    கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம்

    விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து

    ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சில திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்கள்.

    அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற

    திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இந்த படத்தின்

    வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த

    நிலையில் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்

    நேஷனல் திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்படுகிறது.

    கூழாங்கல் படக்குழுவினர்

    இதற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்

    . இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிஎஸ்.

    வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திர்கு யுவன்ஷங்கர்

    ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    Posted in Uncategorized

    இலங்கை சுகாதார மந்திரி – கொரனோவில் இருந்து தப்பினாராம்

    இலங்கை சுகாதார மந்திரி – கொரனோவில் இருந்து தப்பினாராம்

    இறக்கையின் சுகாதார மந்தி பரவி வரும் கொரனோ நோயின் கோர

    பிடியில் சிக்கிய நிலையில் கடந்த நான்கு நாட்களுக்குள் அவர் அந்த நோயின்

    தாக்குதலில் இருந்து தப்பித்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது

    உலக நாடுகளில் நிகழாத அதிசயம் இலங்கையில் நிகழ்ந்துள்ளது ,ஆளும்

    கோட்டாவின் சாதனையின் ஒன்றாக இது பார்க்க படுகிறது ,நாம் சொல்வது எல்லாம் உண்மைதாங்க என்கிறது அரசு .

        Posted in Uncategorized

        சிங்கள இராணுவத்தால் 417 துப்பாக்கிகள் ,மீட்பு – தொடரும் வேட்டை

        சிங்கள இராணுவத்தால் 417 துப்பாக்கிகள் ,மீட்பு – தொடரும் வேட்டை

        இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் கடந்த ஏழுமாத காலமாக

        நடத்திய தேடுதலின் பொழுது போதைவஸ்து ,மற்றும் கடத்தல்களில்

        ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 289 பேர் கைது செய்ய பட்டும் இவர்கள் பயன்

        படுத்திய சுமார் 417 போராயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

        இலங்கையில் மகிந்த ஆட்சியி பின்னர் போதைவஸ்து கலாச்சாரம்

        தலைக்கு மேல் ஏறி ஆடி வருகின்றமை கவனிக்க தக்கது

        Posted in Uncategorized

        கோட்டா ,மகிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வேண்டும் பிரான்ஸ் ,எம்பி முழக்கம்

        கோட்டா ,மகிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வேண்டும் பிரான்ஸ் ,எம்பி முழக்கம்

        இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு

        நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என பிரான்ஸ் எம்பியும் ஐரோப்பிய

        பாராளுமன்ற உறுப்பினருமான Jean-Yves Le Drian கோரிக்கை விடுத்துள்ளார் ,

        ,கனடா ,பிரிட்டன் ,பிரான்ஸ் நாடுகளின் முக்கிய எம்பிக்கள் இந்த கோரிக்கையை

        தொடராக வலியுறுத்தி வருகின்றமை இலங்கை ஆளும் இனவாத இரத்த

        காட்டேரி கோட்டபாயவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

        ஐநா அனிதா உரிமை பேரவையில் முன் வைக்க பட்ட அறிக்கையை தாம்

        மனித எதிர்க்க உள்ளதாக சிங்கள ஆளும் அரசு கூவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

        எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

        இலங்கையின் எழுபத்தி மூன்றாவது சுதந்திர தின நிகழ்வில் முல்லைதீவு மாவட்டத்தில்


        காணாமல் ஆக்க பட்ட உறவுகள் போராடடத்தில் குதித்தனர்
        சிங்கள

        அரச பயங்கரவாதம் கைது செய்து சென்ற எமது உறவுகள் ,எங்கே ,என கேட்டு

        தொடர் போராட்டத்தை அவர்கள் நடத்தினர் ,இவ்வாறு காணாமல் போன

        அணைவருக்கும் மரண சான்றிதழ் வழங்கி வருகிறது சிங்கள அரசு ,

        ரணிலோ அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        கோட்டா மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை

        கோட்டா மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை

        இலங்கையின் 73 டாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைகளில் அடைத்து

        வைக்க பட்டிருந்த பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய

        சுமார் 146 கைதிகள் ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை

        செய்ய படுகின்றனர் என சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது

        இவ்வாறு விடுவிக்க படுபவர்களில் தமிழர் பத்து வீதம் மட்டுமே

        என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

        Posted in Uncategorized

        129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து

        129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து

        இலங்கையையில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற சுமார்

        129 முக்கிய குற்றவாளிகள் என ஆளும் அரசு கருதும் 129 பேருக்கு

        இண்டர்போல் சிவப்பு அறிவித்தல் வெளியிட பட்டுள்ளது

        இவர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் நடவடிக்கையில்

        சர்வதேச போலீசார் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

        Posted in Uncategorized

        இன்று இலங்கையின் 72டாவது சுதந்திர தினம்

        இன்று இலங்கையின் 72டாவது சுதந்திர தினம்

        இன்று இலங்கையின் 72 டாவது சுதந்திரதினம் ஆகும் ,.கொழும்பு சுதந்திர

        சதுக்கத்தில் சுகாதார முறைமையை கடைபிடித்து இந்த வெற்றி நிகழ்வு

        கொண்டாட படுகிறது .கோட்டாவின் முதலாவது ஜனாதிபதி ஆட்சியின்

        முதலாவது சுதந்திர தின நிகழ்வாக உள்ளது ,இந்த நாளை

        தமிழர்கள் கறுப்பு நாளாக புறக்கணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா

        நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா

        தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட

        முடியாது. அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது.


        ஒரு காலத்தில் தங்க நகை கூட நடுத்தர மக்களுக்கு எட்டாத நிலையில்

        இருந்தது. இன்று பலரும் வைர நகைகளை தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.

        தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட முடியாது.

        அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி

        உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் அதை போட்டுக்கொண்டு

        சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்றவை செய்யக்கூடாது.

        வீட்டில் குளிக்கும் போதும் சரி, சுற்றுலா செல்லும் போது, கடல் மற்றும் நீச்சல்

        குளங்களில் குளிக்கும் போதும் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது.

        நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் தண்ணீரும், கடலில் உள்ள உப்புநீரும் வைரத்துக்கு ஆகாதது.

        நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா

        எல்லாவிதமான அலங்காரங்களும் அழகுசாதனங்களும் பயன்படுத்தப்பட்ட

        பின் கடைசியாகத்தான் வைர நகைகளை அணிந்து கொள்ளவேண்டும்.

        அழகு சாதனங்களில் இருக்கும் ரசாயனங்கள் வைரத்தின் மீது பட்டால்

        வைரம் கருத்துவிடு்ம். இப்படி கருத்த நகைகளை சுத்தம் செய்ய சாக் பவுடரை

        பஞ்சால் தேய்த்து அழுத்தி துடைத்தெடுத்தால் வைரம் பழைய பளபளப்பு பெற்றுவிடும்.

        விழாக்கள் முடிந்து வீடு வந்ததும் வைர நகைகளை கழற்றி வைத்துவிட வேண்டும்.

        அதற்கு முன் கழற்றிய நகையை ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை வைத்து அதற்குள்

        நகையை மூழ்குமாறு அமிழ்த்தி வைத்துவிட வேண்டும். சில நிமிடங்கள்

        கழித்து நகையை வெளியே எடுத்து மென்மையான பருத்தி துணியால் துடைத்து, காய்ந்த பின் உள்ளே வைக்க வேண்டும்.

        வைர நகைகளை சுத்தம் செய்ய இளம் சூடான நீரில் முக்கி எடுத்து பழைய பல் துலக்கும் பிரஷ்சால், சோப்பை தொட்டு லேசாக

        தேய்த்து, பிறகு தண்ணீரில் சுத்தமாக அலசி துடைத்து வைக்கலாம். வைரக்கற்களில் நேரடியாக கை படக்கூடாது. தங்கம் இருக்கும்

        நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா

        பகுதியை பிடித்துக்கொண்டே சுத்தம் செய்யவேண்டும். வைர நகைகளை குளியலறையிலோ, தோட்டத்திலோ வைத்து சுத்தம்

        செய்யக்கூடாது. வைரக்கல் ஏதாவது உதிர்ந்து விழுந்தால் கண்டுபிடிக்க முடியாது. வீட்டினுள் ஏதாவது ஒரு பாத்திரத்தில் வைர

        நகைகளை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகு கற்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதன்பின்னே கழுவிய தண்ணீரை கீழே ஊற்றுங்கள்.

        வங்கி லாக்கரில் வைர நகைகளை சும்மா வைத்திருந்தால் கூட நாளடைவில் அது கருத்துவிடும். அதற்காக பிரத்யேகமாக

        செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்து, அதிலும் மென்மையான வெல்வெட் துணியால் சுற்றி வைப்பதுதான் கருகாமல் இருக்க வழி.

        தங்க நகைகளுடன் சேர்த்து வைர நகைகளை வைக்கக்கூடாது. தனித்தனி அறை கொண்ட ஜிப் வைத்த நகைப்பை கிடைக்கிறது. அதில் வைத்துக்கொள்ளலாம்.

          Posted in Uncategorized

          வைரலாகும் சிம்புவின் ‘மாநாடு’ பட டீசர் video

          வைரலாகும் சிம்புவின் ‘மாநாடு’ பட டீசர் video

          வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ்

          புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

          இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.

          இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா

          , டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

          யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன்

          ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை

          எட்டியுள்ளது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை, தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

          இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளான இன்று மாநாடு படத்தின் டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.

          பஞ்ச் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த டீசராக இது அமைந்துள்ளது.

          மாநாடு படத்தின் தெலுங்கு டீசரை ரவி தேஜாவும், கன்னட டீசரை

          சுதீப்பும், மலையாள டீசரை பிரித்விராஜும், இந்தி டீசரை அனுராக் கஷ்யப்பும் வெளியிட்டனர்.

          Posted in Uncategorized

          கணவரை உளவு பார்க்கும் அந்த நடிகை

          கணவரை உளவு பார்க்கும் அந்த நடிகை

          தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தெலுங்கு

          படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு

          நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

          திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

          சமந்தா

          சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது

          ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, ரசிகர் ஒரு ரகசியத்தை கூறுமாறு

          கேட்க, அப்போது “யாருக்கும் சொல்லாத ரகசியத்தை இங்கே உங்களிடம்

          சொல்கிறேன்.. நான் ஏன் ஜிம்மில் இணைந்தேன் தெரியுமா..? ஏன்னா

          என் கணவர் நாகசைதன்யாவும் இந்த ஜிம்தான். அவர் இங்கே என்ன

          செய்கிறார், நிஜாமாகவே வொர்க் அவுட் செய்கிறாரா என கணவரை

          உளவு பார்க்கத்தான் இந்த ஜிம்மில் சேர்ந்தேன்” என தான் ஜிம்மில் இணைந்தது ஏன் என்பது குறித்த ரகசியத்தையும் போட்டு உடைத்தார்

          Posted in Uncategorized

          தமிழர்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை – வைகோ video

          தமிழர்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை – வைகோ

          தனது காலத்தில் தமிழீழம் அமைய வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார் ,தமிழர் தேசிய விடுதலை அழிந்து போக உழைத்தவர் ,பல காட்டி கொடுப்புக்களை நடத்திய அதே வைகோ இப்பொழுது இப்படி பேசுகிறார்

          Posted in Uncategorized

          காரினை லாரியாக மாற்றிய சாரதி – துரத்திய போலிஸ்

          காரினை லாரியாக மாற்றிய சாரதி – துரத்திய போலிஸ்

          அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதியில் நபர் ஒருவர் வீடு மாறியுளளார் ,அப்பொழுது

          அந்த வீட்டில் உள்ள பொருட்களை தனது கொண்ட ரக காரின் ஊடாக

          எடுத்து செல்ல முயன்றார் ,அபபோது நான்கு மடங்கு அதிகமாக

          காரின் கூரைக்கு மேல் பொருட்களை வைத்து எடுத்து சென்றுள்ளார்

          இதை படம் பிடித்த ஒருவர் அதனை வெளியிட்டார் ,மேற்படி காட்சி தற்போது

          சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ,மேலும் குறித்த சாரதியை போலீசார் துரத்தி சென்றனர்

          Posted in Uncategorized

          இலங்கைக்கு எதிரான ஐநா அறிக்கையை நிராகரிக்க கோட்டா அரசு தீர்மானம்.

          இலங்கைக்கு எதிரான ஐநா அறிக்கையை நிராகரிக்க கோட்டா

          அரசு தீர்மானம்.

          ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்

          சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அறிக்கையை

          அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக

          அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

          Posted in Uncategorized

          கருணா பிள்ளையானுடன் இந்தியா பேச்சு

          கருணா பிள்ளையானுடன் இந்தியா பேச்சு

          பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)

          மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர், கிழக்கு

          மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்

          வினோத் கே ஜேக்கப்பை பெப்ரவரி 02 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

          இந்த சந்திப்புகள் இருவேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றன என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இந்த இரு சந்திப்புக்களிலும் இலங்கையுடனான நீண்ட அபிவிருத்தி பங்குடைமையை

          பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப்

          வலியுறுத்தியிருந்தார். பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும்

          13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

          இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி

          மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள்

          தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது திரு.விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார்.

          Posted in Uncategorized

          அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர் மரணம்

          மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் இன்று (3) காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற

          விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளராக கடமையாற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த ரி.எம்.

          சல்மான் (வயது-29) என்பவர் உயிரிழந்துள்ளார்.

          குறித்த விபத்து அடம்பன் சந்தியில் இடம் பெற்றுள்ளது.

          உயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனவும்,

          அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலும் மோதியே விபத்திற்கு உள்ளாகியது.

          இதன் போது படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

          சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டதோடு, குறித்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

          அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் கடமை முடித்து வீடு நோக்கி செல்லும் போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

          மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in Uncategorized

          இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ

          இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி பொரலை

          ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை

          கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

          ஒரே மருத்துவ மனையில் இந்த பரவல் ஏற்பட்டுள்ளது பெரும்

          அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          மேலும் சிசு ஒன்றும் இதன் தாக்குதலை இறந்துள்ளது

          Posted in Uncategorized

          இந்தியாவை ஓட வைத்த கோட்டா – அதிர்ச்சியில் இந்தியா

          இந்தியாவை ஓட வைத்த கோட்டா – அதிர்ச்சியில் இந்தியா

          கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற

          இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

          இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

          ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

          கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம்

          செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின்

          போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த

          ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்

          அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.

          இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

          வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

          இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என

          அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.

          கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ்

          முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும்

          இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு முனையத்தை 100 % இலங்கை

          துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

          Posted in Uncategorized

          சங்கத்துக்காக சிம்பு நடிக்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

          சங்கத்துக்காக சிம்பு நடிக்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

          தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

          சங்கத்துக்காக சிம்பு நடிக்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
          சிம்பு


          கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சிலம்பரசன், சுசீந்திரன்

          இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.

          இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை

          சிங்கார வேலன் தயாரிக்கிறார். வானம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக

          அறிமுகமாகி புகழ்பெற்ற ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

          சிம்பு

          இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.