Posted in Uncategorized

உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு

ரஷிய போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா ஏற்கனவே வழங்கியுள்ளது.

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி – அதிபர் ஜோ பைடன் ஒப்புதல்

ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள்,
ராக்கெட்டுகள், மருந்துப் பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது

    Posted in Uncategorized

    மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

    மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

    உக்ரைன் மீது ரஷியா 50-வது நாளாக போர் தொடுத்துவருகிறது. ரஷிய தாக்குதலுக்கு

    உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

    உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில் மரியுபோல் நகரம் பெறும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள 95 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மரியுபோல்

    நகரை கடந்த 6 வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையான தாக்குதலை நடத்திய ரஷிய படைகள் அந்நகருக்குள் பெருமளவில் முன்னேறியுள்ளது.

    இதனால் மரியுபோல் நகரை விரைவில் ரஷியா கைப்பற்றும் நிலை உள்ளது. உக்ரைன் படையினர் எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளனர்.


    மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

      Posted in Uncategorized

      திருமண ஆசை காட்டி காதலியை கற்பழித்த காதலன்

      திருமண ஆசை காட்டி காதலியை கற்பழித்த காதலன்

      மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

      திருமண ஆசை காட்டி மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்- தாயையும் உல்லாசத்துக்கு அழைத்த வக்கிரம்

      வேலூர் விருஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மார்க்கபந்து, அரசு பஸ் டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது 20). இவன் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் இறுதியாண்டு படித்து வந்தார்.

      இவருக்கும் திருச்சி நவல்பட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே கடந்த 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு மலர்ந்தது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்தனர்.

      இந்த நிலையில் கடந்த ஜனவரி 5-ந்தேதி கோகுல் அந்த மாணவியிடம், தனது பெற்றோர் தனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கின்றனர். ஆகவே

      உன்னை பார்ப்பதற்காக திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் அறையில் எடுத்து தங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை நம்பிய மாணவியும் பெற்றோருக்கு தெரியாமல் கோகுல் தங்கி இருந்த தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

      பின்னர் மாணவியை பார்த்த மறுகணம் ஏற்கனவே தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து கோகுல் அவரது கழுத்தில் கட்டினார்.

      அதை தொடர்ந்து மாணவியை அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் மாணவிக்கு தெரியாமல் செல்போன் மூலம் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். அதன்

      பின்னர் இருவரும் தங்களின் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். காதலன் தாலி கட்டிய விவகாரத்தை பெற்றோரிடம் மறைத்து மாணவி வழக்கம்போல் பள்ளி சென்று வந்தார்.

      இதையடுத்து அடிக்கடி கோகுல் திருச்சி வந்து ஓட்டலுக்கு வரவழைத்து அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். அதனையும் அவருக்கு தெரியாமல் வீடியோ

      மற்றும் போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் தாயாருக்கு அரசல் புரசலாக தெரிந்துள்ளது. ஒருகட்டத்தில் மாணவியின் தாயாரிடமும் கோகுல் பேசி வந்தார்.

      இந்த நிலையில் கோகுல் தனது அவசர தேவைக்கு ரூ.10 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது. உடனே அனுப்பி வையுங்கள் என மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்தார்.

      உடனே உனது மகள் என்னுடன் தனிமையில் இருந்த வீடியோ, புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். மேலும் எல்லை மீறிய கோகுல் புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க மாணவியின்

      தாயாரையும் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர் நேராக நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

      பின்னர் வழக்கு திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவன் கோகுலை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

      செல்போன் பயன்பாட்டால் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடும் மாணவர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்வை தொலைக்கும் சம்பவங்கள்
      ஆங்காங்கே அரங்கேறி வருவது பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது.

        Posted in Uncategorized

        சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு

        சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு

        தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் மாமா ஆகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

        மாமா ஆனார் விஷால்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
        விஷால்


        வீரமே வாகை சூடும் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் தற்போது நடித்து வரும் படம் லத்தி. அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தை ரமணா மற்றும்

        நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

        இந்நிலையில் நடிகர் விஷால் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அவரின் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி 2019 அன்று விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா – கிருடிஷ் திருமணம்

        நடைப்பெற்றது. இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை விஷால் அவரின் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது,

        இதை விட என்ன கேட்டுவிட முடியும், நான் மாமா ஆகியிருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. என்னுடைய இளவரசி தங்கை ஐசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.


        புதிய இளவரசியை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டுள்ளார்.

          Posted in Uncategorized

          இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா

          இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா

          இலங்கைக்கு இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது

          இதற்கு அமைவாக இந்த நிதி உதவி வழங்க படவுள்ளது

          கடனை வழங்கியே இலங்கையின் பொருளாதாரம் இந்த நிலைக்கு மாறிட காரணமாக விளங்கியது


          தற்போதையை நெருக்கடியை நிவர்த்தி செய்திட இலங்கை முன்னெடுக்கும் மீளவும் கடன் பெறும்


          நிலை இவ்வாறு நீண்ட கால பொருளாதார நெருக்கடியை தணிக்கும் என கேள்வி எழுப்ப பட்டுள்ளது

            Posted in Uncategorized

            கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்

            கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்

            இலங்கை அளவும் ஜனாதிபதி மகிந்த மற்றும் பிரதமர் மகிந்த சுள்ளிட்டா ராஜபக்ஸ


            குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என

            அங்குகூடியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்

            மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து பதவி விலக மறுத்து வரும் கோட்டாவுக்கு

            எதிராக நாளுக்கு நாள் மக்கள்


            போராட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              கோட்டா வீட்டை போடா பாடி அசத்திய தமிழ் பெண் video

              கோட்டா வீட்டை போடா பாடி அசத்திய தமிழ் பெண் video

              இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டாவே வீட்டுக்கு போ என தமிழ் பெண் ஒருவர் பாட்டு எழுதி பாடி அசத்தியுள்ளார்

              இந்த காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

              இதில் அழுத்தி காணொளி பார்க்க

                Posted in Uncategorized

                நீர்வீழ்ச்சியில் காணாமல் போன பெண்கள் சடலமாக மீட்பு

                நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது – ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு


                வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்

                போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.


                ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.


                வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


                இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை

                சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.


                இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில்

                அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
                வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி

                (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.


                சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின்

                சடலம் கற்பாறை
                ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                  Posted in Uncategorized

                  கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை

                  கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை

                  சீனாவிடம் அதிக வட்டிக்கு கடனை பெற்றே இலங்கை அதனை மீள் செலுத்த முடியா

                  நிலையில் சிக்கி தவித்து வருகிறது .அழகான பாலங்கள் ,வீதிகள் என இலங்கையின் யுத்த பூமி எங்கும் காட்சி அளிக்கிறது

                  அந்த அபிவிருத்திக்கு பெற்ற கடனை மீள வழங்க முடியா நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது

                  இவ்வேளை இலங்கையின் நிலையினை புரிந்து மேலும் கடன்களை அள்ளி வழங்க

                  காத்திருக்கிறோம் ஓடிவாங்க என சீனா அழைக்கிறது ,ஆனால் இலங்கையோ வாங்கிட தயக்கம் காட்டுகிறது

                  இப்போது கழுத்தளவு மூழ்கியுள்ளது ,மேலும் வாங்கினால் அப்டியே மூழ்கிவிடுவார்கள் ,அந்த சாவு மணி அடிக்கவே சீனா அழைக்கிறது

                    Posted in Uncategorized

                    களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி

                    களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி

                    இலங்கையில் சந்திரிக்கா வந்திருக்கா சமாதானம் தந்திருக்க என்ற வாசகங்கள் 1994

                    ஆண்டுகளில் எங்கும் ஒலித்தவை ,அதே அம்மணி நவாலி செண்பட்டீஸ் ஆலயம் முதல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு அப்பாவிகளை கொன்று குவித்தனர்

                    எனினும் புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டவர் ,இன்று அதே அம்மணி ஜனாதிபதி

                    தேர்தலில் களமிறங்கும் நோக்குடன் தேர்தலை சந்திக்க புதிய கூட்டணி அரசை அமைக்கும் நகர்வில் ஈடுபடுகிறார்

                    இவருக்கு மேற்குல நாடுக்ளின் பலத்த ஆதரவு உள்ளது ,அம்மணி தனது விட்ட அதிகாரத்தை பிடித்து நாட்டில் நிரந்த தெரிவை மேற்கொள்ள புது முயற்சிகளை

                    மேக்கொள்ள முனைகிறார்
                    இது சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

                      Posted in Uncategorized

                      வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் பலரை காணவில்லை

                      வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் பலரை காணவில்லை

                      தெற்கு ஆப்பிரிக்காவின் Durban and Umlazi பகுதிகளில் இடம்பெற்ற கடும் வெள்ள

                      பெருக்கில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்

                      மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் ,வீடுகள்,வாகனங்கள் என்பன நீரில் அடித்து

                      செல்ல பட்டுள்ளன
                      தொடர்ந்து மீட்பு பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது

                        Posted in Uncategorized

                        மக்களுக்குள் வெடித்து சிதறிய குண்டு – பலர் மரணம்

                        மக்களுக்குள் வெடித்து சிதறிய குண்டு – பலர் மரணம்

                        தெற்கு சிரியாவின் அலெப்போ பகுதியில் மக்களால் நெரிசல் மிகுந்த பகுதியில்

                        இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில்


                        சிக்கி பலர் மாரணமாகியும் ,காயமடைந்துள்ளனர்

                        இந்த குண்டு தாக்குதலை நடத்திவர்கள் யார் என்பது தெரிவிக்க படவில்லை

                          Posted in Uncategorized

                          இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது- புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

                          இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது- புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

                          பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷபாஸ் ஷெரீப் இரு நாடுகள் இடையே உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.

                          இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது- புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தகவல்

                          பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதால், இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதை அடுத்து, புதிய பிரதமராக

                          தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் செரீப் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

                          அவருக்கு பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத அமைதி மற்றும்

                          ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. இதன்மூலம் நமது வளர்ச்சி மற்றும் சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

                          பிரதமர் மோடியின் வாழத்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷபாஷ் செரீப், இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

                          இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                          பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் நன்கு அறியப்பட்டவை. அமைதியைப் பாதுகாப்போம் மற்றும் நமது மக்களின் சமூக-

                          பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம்,
                          என்று பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் செரீப் கூறியுள்ளார்.

                            Posted in Uncategorized

                            உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது-புதின்

                            உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது: அதிபர் புதின்

                            உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர்

                            தொடுத்த ரஷியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.

                            ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற அதிபர் புதின் நிருபர்களைச் சந்தித்தார்.

                            அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது

                            நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று.
                            எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

                            Posted in Uncategorized

                            உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு

                            உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு

                            உக்கிரேன் தலைநகர் கீவ் நகரம் அருகில் உள்ள நகரம் ஒன்றில் பெரும் குழிதோண்டி

                            புதைக்க பட்ட நிலையில் 1200 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                            ரசியா உக்கிரேனில் பெரும் மனித பேரழிவை நடத்தியுள்ளது எனவும் இவர்கள் புரிந்த

                            போர்குற்றத்திற்கு தண்டனை
                            வழங்க வேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது

                              Posted in Uncategorized உலக செய்திகள்

                              உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்

                              உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்

                              கவுதம் அதானியின் சொத்து தற்போது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது.

                              உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்
                              கவுதம் அதானி

                              உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இருக்கிறார். கடந்த ஆண்டில் அதிகமாக சொத்து சேர்த்த வகையில் அவர் மிகப்பெரிய லாபம் அடைந்தார்.

                              கவுதம் அதானி கடந்த ஆண்டே ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவர் ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவருமான முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார்.

                              இந்த நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் பட்டியலில் கவுதம் அதானி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். போர்ப்ஸ் வெளியிட்ட தகவல்படி அவர் அமெரிக்காவின் சாப்ட்வேர் சக்கரவர்த்தி லேரி எலிசனை முந்தினார்.

                              கவுதம் அதானியின் சொத்து நேற்று (ஏப்ரல் 11) ஒரே நாளில் ரூ.68 ஆயிரம் கோடி உயர்ந்து உள்ளது. அதன் காரணமாக அவர் உலக பணக்காரர்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

                              கவுதம் அதானியின் சொத்து தற்போது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது.

                              நேற்றைய வர்த்தகம் முடிவில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.27 லட்சம் கோடியாகும். இது முகேஷ்அம்பானியின் சொத்தைவிட ரூ.1.67 லட்சம் கோடி

                              அதிகமாகும். 2 வாரத்தில் இருவருக்கும் இடையே உள்ள சொத்து மதிப்பு வித்தியாசம் அதிகமாகி உள்ளது. கவுதம் அதானியின் 7 நிறுவனத்தின் பங்குகளின் விலையால் அவரது சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது.

                              அதானி குழுமத்தின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.
                              இதனால் தான் ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

                              Posted in Uncategorized

                              கோட்டாவை கடுப்பேற்றிய மைத்திரி – இதுக்கு பேர் தான் ஆப்பு

                              கோட்டாவை கடுப்பேற்றிய மைத்திரி – இதுக்கு பேர் தான் ஆப்பு

                              இலங்கையில் ஆளும் அரசு மக்களின் எதிர்ப்பை சந்தித்து அரியணையை இழக்க

                              வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

                              இவ்வேளை தனித்து செயல்பட்டு வரும் கட்சிகளில் ஒன்றான மைத்திரியின் சுதந்திர

                              கட்சியினர் ஏற்படுத்த படும் இடைக்கால அரசாங்கத்தில் மகிந்தா குடும்ப

                              உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பங்கேற்கும் பட்ஷத்தில் தாம் அதற்கு ஆதரவு என தெரிவித்துள்ளார்

                              இதனை நிர்க்கரித்துள்ள கோட்டா செம கடுப்பில் உள்ளாராம் ,

                                Posted in Uncategorized

                                காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை

                                காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை

                                இலங்கை ஊர் காவல்துறை பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் காதலி தற்கொலை

                                செய்துள்ள நிலையில் அதனால் மனமுடைந்த 22 வயது காதலன் தற்கொலை செய்துள்ளார்

                                அதிக மன உளைச்சலில் இருந்த இவர் இந்த தவறான முடிவினை மேற்கொண்டு காதலி

                                சென்ற இடத்திற்கு பயணித்துள்ளார்


                                மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in Uncategorized

                                  மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்

                                  மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்

                                  மைத்திரி கட்சியில் அங்கம் வகித்த சாந்த பண்டார கோட்டாவின் கட்சியில் இணைந்து

                                  விவசாய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்

                                  இவருக்கு பேச ப்பட்ட டீலில் அதிக தொகையை பெற்றுக்கொண்டு கட்சி

                                  தாவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                  சீற்றம் கொண்ட மைத்திரி அவரை தமது கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்

                                    Posted in Uncategorized

                                    கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்

                                    கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்

                                    இலங்கை இரத்தினபுரி பகுதியில் நள்ளிரவு வீடு புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த 82

                                    வயது கணவன் மற்றும் 75 வயதுடைய மனைவி ஆகியோரை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது

                                    இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க

                                    பட்டுள்ளன ,இந்த கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,


                                    சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நிகழ்த்த பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது