Posted in Uncategorized

வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்

வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்

அவுஸ்ரேலியா மெல்போர்ன் பகுதியில் வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு


$3635 டொலர் தண்டமாக வழங்க பட்டுள்ளது

குறித்த பற்றுசீட்டை அந்த பெண்மணி டிக் டொக்கில் பதிவிட்ட நிலையில் அது செம வைரலாகி வருகிறது

இப்படியும் தண்டம் அற விடுவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம் ,மக்களே எச்சரிக்கை

    Posted in Uncategorized

    கோட்டா போடா வெளியே மக்கள் கோசம் – வீடியோ

    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக காலிக முக திடலில் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில்

    மூவின மக்களும் இணைந்து ஒன்றுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்

    இந்த தன்னியல் எழுசி ஆளும் அரசை கதிகலங்க வைத்து வருகிறது ,அங்கு முழக்க பட்ட கோசங்களை இங்கே காணுங்கள்

    இதில் அழுத்தி காணொளி பாருங்க

      Posted in Uncategorized

      சீமானால் ஆபத்து – வட இந்திய ஊடகங்கள்

      நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானால் தமக்கு ஆபத்து உள்ளது என வட

      இந்திய ஊடகங்கள் பர பரப்பு செய்தியை வெளியிட்டு ஒரே நாளில் கீரோவாக்கி விட்டுள்ளனர்

      சீமான் விடுத்த அறிக்கை இந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

      https://www.youtube.com/watch?v=n0V3Ck7IRVE
      Posted in Uncategorized

      தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்

      தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்

      இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியால் தற்போது நாடு

      பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போரட்டம் வெடித்துள்ளது

      தற்போது மேலும் எரிபொருள் விலை அதிகரிக்க பட்ட நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் முடக்க பட்டுள்ளன

      இந்த சேவைகள் முடக்கத்தினால் மக்கள் போக்குவரத்து பாதிக்க பட்டு இயல்பு வாழ்க்கை முடக்க பட்டுள்ளது ,


      இதனை அடுத்து போராட்டம் மேலும் அதிகரித்துள்ளது

        Posted in Uncategorized

        சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு

        சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு

        இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நிலையினை சீர் செய்திடும்

        நோக்குடன் சர்வதேச நாணய நிதியத்துடன்


        இலங்கை நிதி அமைச்சர் குழு சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது

        இதன் பொழுது உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக


        பேச பட்டதுடன் இலங்கைக்கு மேலும் உதவிடும் செயல் திட்டங்கள் முன் வைக்க பட்டுள்ளது

          Posted in Uncategorized

          கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு

          கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு

          இலங்கையில் ஆளும் கோட்டா அரசு சீனி இறக்குமதியை ஏற்படுத்தி பல மில்லியன் டொலர் பணத்தினை
          சம்பாதித்து வந்துள்ளது

          இதனை அடுத்து தற்போது இவ்விதம் மோசடி புரிந்த நபர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு


          எதிராக வழக்கு தாக்குதல் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்க பட்டு வருகின்ற நிலையில்


          கோட்டா அரசின் சீனி வியாபாரம் அம்பலத்திற்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது

            Posted in Uncategorized

            மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை

            மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை

            இலங்கையின் ஆளும் அரசின் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு


            வெளிநாடுகள் புறப்படுவதற்கு விதிக்க பட்ட தடை மேலும் நீடிக்க பட்டுள்ளது

            இவரது ஆளுமை காலத்தில் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி

            ஏற்பட்டுள்ளதாக கூறி மக்கள் போராட்டங்கள்


            வெடித்துள்ள நிலையில் இந்த கண்துடைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், மன்னிப்பு கேட்க வேண்டும்-மனோ எம்பி

              20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், கைகூப்பி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

              • தமுகூ தலைவர் மனோ எம்பி
                20ஐ அகற்றிக்கொண்டு 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இந்நிலையில் 20ம்
              • திருத்திற்கு ஆதரவாக கையை உயர்த்தி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அதீத அதிகாரங்களை கொடுத்து, அதை நியாயப்படுத்தியும் பேசிய எம்பீகள், அதே கைகளை உயர்த்தி வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை இன்று உருவாகிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் கோதாபய ராஜபக்சவின் சர்வதிகாரம் வீழும் என இவர்கள் கற்பனையிலும் நினைத்து இருக்க மாட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

              இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

              இன்று பாராளுமன்ற வாளாகத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், 20ஐ அகற்றவும், 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்த வரைபு ஒன்றை

              பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவும் அரசாங்கம் தயார் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இதை பிராதன எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

              முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றும் யோசனையும் தனக்கு கிடைத்ததாக சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு கூறினார். எனினும் முழுமையாக

              நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அகற்றப்பட சர்வஜன வாக்கெடுப்பு நடத்திட வேண்டிவரும் என்பதால், அதற்கு நாடு இன்றைய சூழலில் தயார் இல்லை என்பதால்,

              முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தற்சமயம் அகற்ற பெரும்பாலான கட்சி தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லை.

              நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றப்பட்டால்,
              விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்த மாகாணசபைகள் ஆகியவற்றையும்


              அகற்ற வேண்டி வரும் என சில ஆளும்கட்சி பிரதிநிதிகள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

              இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஏற்புடைய நிலைப்பாடுகள் இல்லை.
              தமது நிலைப்பாடும் இதுவே என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரிசாத் பதுர்தீன்,


              தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் என்னிடம் தெரிவித்தார்கள்.

                Posted in Uncategorized

                தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

                தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

                ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு

                வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் இரண்டாவது நாளாக இன்றும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் தொடர்கின்றது.

                ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

                இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும், பாராளுமன்ற

                உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர்.

                அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

                இந்த போராட்டத்தின் போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் கோ கோட்டா கம கிராமத்தின்
                கிளை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

                  இஸ்ரேல் ஏவுகணை
                  Posted in Uncategorized

                  ஐ எஸ் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – தப்பிய பெரும் நகரம்

                  ஐ எஸ் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – தப்பிய பெரும் நகரம்

                  பாகிஸ்தான் கராச்சி பகுதியில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்த விருந்த பெரும் தாக்குதல்

                  ஒன்று ரசியா உளவுத்துறையால் முறியடிக்க பட்டுள்ளது

                  இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த மூன்று தீவிரவாதிகள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .


                  இந்த தாக்குதல் நிகழ்த்த பட்டிருந்தால் பெரு மக்கள் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும் என அந்த உளவுத்துறை எச்சரித்துள்ளது

                    Posted in Uncategorized

                    பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்

                    பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்

                    பாலஸ்தீனத்தின் எல்லையோர குடியேற்ற பகுதிகள் மீது


                    இஸ்ரேல் இராணுவம் ரொக்கட் தாக்குதலை நடத்தியது

                    இந்த தாக்குதலில் அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை


                    ,இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல் ஹிஸ்புல்லல்களை வம்புக்கு இழுக்கும் நோக்கம் கொண்டவை என அடித்து கூறலாம்

                      Posted in Uncategorized உலக செய்திகள்

                      மேற்கு நாடுகளின் பொருளாதார தடை தோல்வி – புட்டீன் நக்கல்

                      மேற்கு நாடுகளின் பொருளாதார தடை தோல்வி – புட்டீன் நக்கல்

                      உக்கிரேன் மீது போரினை நடத்தி வரும் ரசியா மீது மேற்குலக நாடுகளின் கூட்டணி பொருளாதார தடையினை விதித்தன

                      இந்த தடை உத்தரவினால் தமக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை எனவும், அதனால்

                      அவர்கள் தோல்வியை தழுவியுள்ளதகாக ரசியா அதிபர் புட்டீன் கம்பிரமாக தெரிவித்துள்ளார்

                      ரஷியாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அதிக அளவான எரிவாயு

                      மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றன

                      இதனால் அமெரிக்கா சீற்றம் அடைந்தது ,இந்த நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு மேற்குலக நாடுகள் ,


                      மற்றும் அவர்கள் கூட்டணிக்கு கடுப்பை கிழப்பியுள்ளன

                        Posted in Uncategorized

                        அடித்து பாய்ந்த வெள்ளம் 443 பேர் மரணம் – 63பேரை காணவில்லை

                        அடித்து பாய்ந்த வெள்ளம் 443 பேர் மரணம் – 63பேரை காணவில்லை

                        ஆப்பிரிக்கா நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில் சிக்கி


                        443 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அறுபத்தி மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்


                        இவ்விதம் காணாமல் போனவர்களை தேடும் பனி தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        550 பாடசாலைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்க வைக்க பட்டுள்ளனர் ,


                        இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியும் , பெரும் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இராணுவம்

                          இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இராணுவம்

                          சிரியாவின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தியஏவுகணைகளை

                          சிரியா வான்காப்பு அணிகள் சுட்டு வீழ்த்தியுள்ளன

                          சிரியா மீது இஸ்ரேல் தொடர்ந்து வலிந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது


                          காமாஸ் அமைப்பினர் நடத்திய ரொக்கட் தாக்குதலில் சீர் குலைந்த


                          இஸ்ரேல் மீளவும் இந்த தாக்குதலை தொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            ரசிய கடலுணவு ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் தடை

                            ரசிய கடலுணவு ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் தடை

                            ரசிய மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரா தடைகளை வித்து வருகிறது ,இதன்

                            ஒரு அங்கமாக தற்போது ரஷியாவில் இருந்து ஏற்றுமதி எசெய்ய படும் கடலுணவுகள்

                            இறக்குமதி செய்திட தடை விதிக்க பட்டுள்ளது

                            இந்த தடை உத்தரவால் ரசியாவின் பொருளாதரம் மேலும் பாதிக்க படும் என தெரிவிக்க படுகிறது

                              Posted in Uncategorized

                              உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு

                              உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு

                              உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் 900 மனித சடலம் மீட்க பட்டுள்ளது

                              உக்கிரேனை ஆக்கிமிரமிக்கும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ரசிய

                              இராணுவம் 54 வது நாள் கழிந்தும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

                              இதுவரை இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ரசிய இரணைவம் பலியாகியுள்ள நிலையில் தொடர்ந்து சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


                              கீவ் நகரின் அருகில் 900 ம்னித சடலங்கள் மீட்க பட்டுள்ளது

                              ரசிய போர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது மேலும் முறுகளை அதிகரித்துள்ளது

                                Posted in Uncategorized உலக செய்திகள்

                                போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்

                                போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்

                                காரை நிறுத்தும்படி மகள் கத்தியும், மதுபோதையில் இருந்த தாய் காரை வேகமாக இயக்கியுள்ளார்.

                                மது போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்

                                ஆஸ்திரேலிய சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்த டெல் பல்மர் என்ற 58 வயது பெண்மணி போதையில் தன் மகள் மீது காரை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                கடந்த ஆண்டு மே 2-ம் தேதி மது விருந்து ஒன்றில் பங்கேற்ற டெல் பல்மர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது

                                மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த டெல் பல்மர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார்.

                                அவரது காரின் முன், கெலி பெனித் என்ற அவரது மற்றொரு மகள் நிற்பதை டெல் பல்மர் கவனிக்கவில்லை. இதனால் தாய் ஓட்டிச் சென்ற கார் கெலி பெனித் மீது

                                மோதியுள்ளது. கார் வேகமாக வந்ததால் கெலி பெனித் காரின் முன்பகுதிக்கும் டயருக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டுள்ளார். காரை நிறுத்தும்படி மகள் கத்தியும், மதுபோதையில் இருந்த தாய் காரை வேகமாக இயக்கியுள்ளார்.

                                காரின் அடியில் சிக்கிய மகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செய்யப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கத்தியபின் தான் டெல் பல்மர் காரை நிறுத்தியுள்ளார்.

                                படுகாயமடைந்த மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல மாத சிகிச்சைக்கு பின் தற்போது உடல்நிலை தேறியுள்ளார்.

                                இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டெல் பல்மரின் வழக்கு நீதிமன்றத்தில்
                                விசாரணைக்கு வந்துள்ளது. இதில் டெல் பல்மர் தனது மகளிடமும், அண்டை


                                வீட்டாரிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக டெல் பல்மர் கூறியுள்ளார்.
                                இந்த வழக்கிற்கான தீர்ப்பு அடுத்த மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

                                  Posted in Uncategorized

                                  ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்

                                  ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்

                                  உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 52-வது நாளாக நீடிக்கும் நிலையில்,உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளை ரஷியா எச்சரித்துள்ளது.

                                  லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்: ஜெலன்ஸ்கி கவலை
                                  ஜெலன்ஸ்கி, அணு ஆயுதம்
                                  16.04.2022

                                  03.20: உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

                                  தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.

                                  02.30: உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு ரஷியா வலியுறுத்தி உள்ளது. இது மோசமான

                                  விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்
                                  ரஷியா எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

                                    Posted in Uncategorized

                                    பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை

                                    பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை

                                    பிரிட்டனுக்குள் பிரான்ஸ் டோவர் கடல்வழியாக நுழையும் அகதிகளை பிரிட்டனில் இருந்து நான்காயிரம் மைல்


                                    தொலைவில் உள்ள பகுதி ஒன்றில் தடுத்து வைக்க பிரிட்டன் குடிவரவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது

                                    தனித்தீவு ஒன்றில் இவர்களை தடுத்து வைப்பதன் மூலம் ,இவர்களை தனிமைப்படுத்த முடியும் என


                                    இவர்கள் எதிர்பார்ப்பதன் நோக்கமே இதுவென நோக்க படுகிறது

                                    நாளை இது தொட்ரபில் பிரிட்டன் பிரதமர் பேசுவார் என தெரிவிக்க படுகிறது

                                      Posted in Uncategorized

                                      ஈராக்கில் அமெரிக்கா தொடரணி மீது தாக்குதல்

                                      ஈராக்கில் அமெரிக்கா தொடரணி மீது தாக்குதல்

                                      ஈராக்கில் முக்கிய சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ

                                      தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அந்த அணியில் பயணித்து

                                      கொண்டிருந்த கவச வண்டி சேதமாகியது

                                      இதன் பொழுது அதில் பயணித்தவர்கள் இறந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது

                                      எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இராணுவம் எதனையும் தெரிவிக்க வில்லை