முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்
Posted in இலங்கை செய்திகள்

முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்

முதலை வாயில் மனித உடல் பசியால் வாடிய பிள்ளைகளுக்கு மீன்பிடிக்க சென்றவருக்கு நடந்த பரிதாபம்

இலங்கை நிலவள கங்கை பகுதியில் மீன்பிடிக்க சென்ற 28 வயதுடைய நபரை முதலை அடித்து இழுத்துச் சென்றுள்ளது .

தாய் இலலாத நிலையில் பசியால் வாடிய இரு பிள்ளைகளுக்கும் ,உணவு அளிப்பதற்காக மீன் பிடியில் இவர் ஈடுபட்டு வந்தார் .

இவாறு எனினும் பிள்ளைகளின் பாசி போக்கிட ,ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்ற இவரையே முதலை கொன்றுள்ளது .

தலை இல்லாத நிலையில் முண்டமாக, முதலை ஒன்றின் வாயில் மனித உடல் காணப்பட்டுள்ளது ,

இதனை வதனித்த மக்கள் அந்த உடலை மீட்க முயன்ற பொழுதும் அது பயக்கவில்லை .

முதலை மனித உடலுடன் நீருக்கு அடியில்சென்று மறைந்து விட்டது .

இவ்வாறு முதலை பிடித்த நபர் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான தமிழர் என தெரிவிக்க பட்டுள்ளது .

பிள்ளைகளின் பசி போக்க ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றவர் , வீடு திரும்பாத நிலையில் ,பிள்ளைகள் கண்ணீருடன் தவித்த வண்ணம் உள்ளனர் .

அன்றாடம் கூலி வேலை செய்து வந்த இவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் வேலை செய்திட முடியா நிலையில் ,இந்த தற்காலிக மீன்பிடியில் ஈடுபட்டிருந்தார் .

அதன் போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது .

இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு

இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு

இலங்கையில் ஒரு இறத்தல் பாணின் விலை 500 ரூபா வரை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கையில் பேக்கரிகளின் மூல பொருளாக விளங்கி வரும் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .

அதனால் மாவின் விலை அதிகரித்து செல்வதாலும் , இந்த விலைமீளவும் அதி உச்சத்தை எட்டி பிடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

500 ரூபாவுக்கு பாணின் விலை அதிகரித்துள்ளதால் ,அன்றாடம் கூலிகள் மற்றும் கீழ் தட்டு மக்கள் பெரும் இடர்களை சந்திக்க நேரிடும் என தெரிவிக்க படுகிறது .

இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்

இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்

இலங்கைக்கு இறக்குமதி செய்திடும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் ,மற்றும் தடைகளை விலக்கும் துரித நடவடிக்கை தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி ,அதனால் எழுந்துள்ள உணவு தட்டுப்பாடுகளை நிவர்தி செய்திடும் முகமாக இந்த தளர்வு நடவடிக்கை முக்கியமாக மீள் பரிசீலனைக்கு உள்ளாக்க பட்டு வருகிறது .

தளர்வுகளின் மூலம் இறக்குமதியை வேகமாக அதிகரிக்கலாம் என அரசு நம்புவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர்
Posted in இலங்கை செய்திகள்

மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர் மாணவர்களிடம் பணம் கறக்கும் பாடசாலை

மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர் மாணவர்களிடம் பணம் கறக்கும் பாடசாலை

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக ​சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என, ​கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி சாவித்ரி சர்மா தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் தனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிமிருந்து பணத்தை வாங்கி தருவதாக” குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை

மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர் மாணவர்களிடம் பணம் கறக்கும் பாடசாலை

செய்துக்கொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு ஓடி மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவியுடன் தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்த அத்தந்தை பொருளாதார பிரச்சினையில் தான் இருப்பதுடன், தனது

மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புளபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடையும் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, ஒழுக்கம் விடயமாகவே குறித்த மாணவியை
சிறு தடியொன்றில் தாக்கியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்

கொழும்பில் உள்ள முக்கிய இரு எரிபொருள் நிலையங்களுக்கு சீல் வைக்க பட்டுள்ளது .

மட்டுப்படுத்த பட்ட நிலையில் எரிபொருள் விற்றபனை மற்றும் மோசடி தொடர்பில் இந்த சீல் வாய்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது .

எரிபொருளை பெற்று கொண்ட இவர்கள் , அதனை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நிலையில் இந்த சீல் வைக்க பட்டுள்ளது .

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்

இவ்வாறன அதிரடி நடவடிக்கை ,ஏனைய எரிபொருள் நிலையங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்க படுகிறது .

மக்கள் எரிபொருள் இன்றி அவதியுறும் நிலையில் ,எரிபொருள் நிலையங்களில் பணி புரியும் ஊழியர்கள் தலமை நிர்வகிகள் மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளமை, காணொளிகளாக சமூக வலைதளத்தில் பரவி வந்த நிலையில் ,இந்த சீல் வைப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்

  • தேசிய சபை கூட்டத்தின் பின் மனோ கணேசன்

தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரலாறு முழுக்க தவற விட்ட வாய்ப்புகள்தான் அதிகம். ஆகவே எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட இனி நாம் தயார் இல்லை.

எமது மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூற எமக்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்துவோம். அந்த அடிப்படையிலேயே நாம் இங்கே வந்துள்ளோம்.

ஆனால், இதுவும் கதைக்கள கதாகாலேட்சபம் என்றால் நாம் விலகி விடுவோம். ஆனால், முன் கூட்டியே முடிவு எடுத்து, இது சரி வராது, என எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் நிராகரிக்கும் தேவை எமக்கு கிடையாது.

அதேபோல் இன்று நடந்தது, தேசிய சபை கூட்டம். இது தேசிய அரசாங்கமல்ல. தேசிய அரசில் நாம் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று நிகழ்ந்த முதலாவது தேசிய சபை கூட்டத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், தலைவர் மனோ கணேசன்,

பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கூட்ட நிறைவின் பின் கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது,

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்

எங்கள் மக்களின் பிரச்சினைகளை, துன்பங்களை, துயரங்களை, கண்ணீரை, சொல்ல வேண்டிய இடங்களில் எல்லாம் சொல்லியே தீருவோம் என்ற, குரல் கொடுத்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் நமது கட்சி இருக்கிறது.

அந்த அடிப்படையிலேயே நானும், திகாம்பரமும் இதில் இன்று கலந்துக்கொண்டோம். ஏனெனில் எங்கள் மக்களில் குறிப்பிட்ட பிரிவினர் விளிம்பு நிலையில் வாழ்கிறார்கள்.

இவர்களை பற்றி கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும், கிடைக்கும் எல்லா மேடைகளிலும் பேசா விட்டால், நாம் எதற்காக பாராளுமன்றம் வந்தோம்? ஆகவே அதை செய்வோம்.

ஆனால், விழிப்புடன் இருப்போம். சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்போம். வெறும் கதைக்களம்தான் என்றால் நாம் விலகி விடுவோம்.

மேலும் இன்று நாட்டின் நிதி உரிமை தொடர்பான பாராளுமன்றத்துக்கு இருக்கும் உரிமையை நாம் கோரினோம்.

குறிப்பாக பாராளுமன்றத்தின் நிதி கணக்காய்வு தொடர்பான கண்காணிப்பு குழுக்களின் தலைமை பதவிகளை எதிரணிக்கு தரும்படி நாம் கோரினோம்.

அப்படி இருந்தாலே அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னமேயே, கோதாபய ஆட்சி செய்த போது, இந்த நிதிக்குழுக்களின் தலைமை பதவிகள் எதிரணிக்கு வேண்டும் என நாம் கோரினோம்.

ஆனால், அரசாங்கம் அதை எமக்கு தரவில்லை. தமது ஆட்களை போட்டே அதை நிரப்பினார்கள்.

அரசாங்க அமைச்சர்கள், எம்பீக்கள் பாராளுமன்றத்துக்கு வந்து நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உண்மைக்கு புறம்பாக பொய் சொன்னார்கள். அவர்களுடன் சேர்ந்து சில அரசு அதிகாரிகளும் பொய் சொன்னார்கள்.

குறிப்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் பொய் பேசினார். எமக்கு வேண்டிய அளவு பணம் இருக்கிறது.

டொலர் இருக்கிறது. ரூபா இருக்கிறது. ஸ்டேர்லிங் பவுண்ட் இருக்கிறது என எல்லோரும் கூட்டாக பொய் சொன்னார்கள்.

கடைசியில், நாடு தலைகுப்புற கவிழ்ந்த போதுதான் உண்மை வெளிப்பட்டது. கஜானா காலி என்ற உண்மை வெளியானது.

இதனால்தான் இத்தனை துன்பமும் என்பது நாம் எடுத்து கூறினோம்.

ஆகவே இந்த நிதி கணக்காய்வு தொடர்பான கண்காணிப்பு குழுக்களின் தலைமை பதவிகளை எதிரணிக்கு தருவார்களா என பார்ப்போம்.

பொருளாதாரத்தை கண்காணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த தேசிய சபை சாத்தியமாகும்.

அதேவேளை, பொருளாதார மீட்சிக்கு அப்பால் எமது மக்களின் தேசிய,
சமூக, அரசியல் பிரச்சினைகளாகும் முன்வைக்க நாம் உத்தேசித்துள்ளோம்.

பாராளுமன்ற வாரங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும், பிற்பகல் இந்த சபை கூடும்.

கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி
Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி

கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி

இலங்கை கொழும்பு வந்தடைந்த சுப்பிரமணிய சுவாமி கோத்தபாயாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

இவருடன் பல மூத்த சட்டத்தரணிகள் ,மற்றும் தொழில் அதிபர்களும் வருகை தந்திருந்தனர் .

சுவாமி இலங்கை வந்து கோட்டாவை சந்தித்துள்ள விடயம் ,இலங்கையில் புதிய திட்டமிடல்களை கையாளவே என நம்ப படுகிறது .

பல விடயங்களை கோட்டாவுக்கு போட்டு கொடுத்துள்ள சுவாமி ,இதன் ஊடாக .இலங்கையில் ரணில் ஆட்சிக்கு ஆப்பு வைக்கவும் ,தமிழர்களை நசுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக நம்ப படுகிறது .

கோட்டாபாயாவின் செல்ல பிள்ளையாகவும் ,
தமிழ் இன விரோதியாகவும் சுப்பிரமணிய சுவாமி செயல் பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி

இலங்கைக்கு ஐரோபிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி

இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் யூரோக்களை விடுவித்து தமது மனிதாபிமானத்தை காண்பித்துள்ளது.

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் உணவு இன்றி வாடுவதாக கிடைக்க பெற்ற புள்ளி விபரங்களுக்கு அடிப்படையில் ,இந்த நிதி உதவிகள் வழங்கபட்டுள்ளது .

உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு .இந்த நிதி உதவியினை வழங்கும் படி ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்துள்ளது .

இவ்வாறு நிதிகள் வழங்க பட்டாலும் ,இலங்கையின் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீளவும்
கட்டியெழுப்பும் நடவடிக்கை முன்னெடுக்க படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது .

போதைக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி
Posted in இலங்கை செய்திகள்

மாணவி கற்பழித்து கொலை கொலையாளி கைது

மாணவி கற்பழித்து கொலை கொலையாளி கைது

இலங்கை ஏலியகொட பகுதியில் பாடசாலையை விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்ய பட்டுளளார் .

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நடத்த பட்ட விசாரணையில் ,அதே பகுதியைச சேர்ந்த 39 வயது நபரினால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

குறித்த கற்பழிப்பு கொலையாளி கண்டு பிடிக்க பட்ட நிலையில், தற்போது விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .

பல வருடங்களாக இடப்பெற்று வந்த விசாரணையில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுளள்து .

நடத்த பட்ட DNA சோதனையில் இந்த தடவையில் விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ..

கைதான நபர் மீதான குற்றம் நிரூபிக்க பட்டால், ஆயூள் தணடனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது.

இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு

இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு

இலங்கையில் சிறுவர்களின் வயது எல்லை 16 ல் இருந்து 18 ஆக உயர்த்த பட்டுள்ளது .

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றங்களை தடுக்கவே இந்த வயது எல்லை இவ்விதம் நீடிக்க பட்டுள்ளது என்கிறது அரசு .

பதினெட்டு வயது கடந்தால் மட்டுமே அவர்கள் பெரியவர் என்கின்ற நிலைக்குள் உள்ளடக்க படுவார்கள் ,

இந்த சட்டம் சிறுவர்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது .

சிறார் திருமணம் ,மற்றும் பல்வேறு பட்ட விடயங்களை தடுக்கும் முகமாக இந்த வயது எல்லை உயர்ரத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு

உலகம் முழுவதிலும் 17.3 மில்லியன் மக்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் இறப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

இதிலிருந்து நாம் பாதுகாப்பு பெறுவதாக இருந்தால் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் ஆண்டுக்கொருமுறை இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்பதை

அறிவுறுத்துவதற்காகவே உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருவதாக குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.

உலக இதய இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று (29) குச்சவெளி பிரதேச சபையில் இடம்பெற்ற இலவச இரத்ததான குழுவினரை சபை

உத்தியோகத்தர்களுக்குள் நியமிக்கும் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு

எமது நாட்டில் இடம்பெறும் உயிரிழப்புககளில் 34 சதவீதமானவை இருதய பாதிப்புக்களினால் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவு, இருதய விசேட வைத்திய நிபுணர்களின் நிறுவன அமைப்புடன் இணைந்து வருடந்தோரும் உலக இருதய தினத்தை கொண்டாடி வருகிற அதேவேளை, இதய நோயிலிருந்து நாட்டு

மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு திட்ட வரைபுகளை எமது அரசு சுகாதாரத்துறையுடன் இணைந்து அதற்கான முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றது.

வளர்ச்சியடைந்துள்ள தொழில் நுட்பத்திற்கு மத்தியில் எமது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில் இருத நோய் மற்றும்

தொற்றாநோய் போன்ற பல்வேறுபட்ட விழிப்புணர்வுகளை சுகாதார அமைச்சு மற்றும் அது தொடர்புபட்ட நிறுவனங்களும் மேற்கொண்டுவருவதுடன் அதற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவும் செய்து வருகின்றது என்றும் தவிசாளர் முபாறக் சுட்டிக்காட்டினார்

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 இலட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன.

இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறாகும்.

இதயத்தில் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க,


ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற விழிப்புணர்வை


பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று உலகம் முழுவதும் நடைபெறுகின்றது என்றார்.

பைஷல் இஸ்மாயில் –

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம்

ஆசிய வெற்றிக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை மகளிர் அணி நேற்று (28) காலை பங்களாதேஷ் பயணமானது.

பங்களாதேஷில் நடைபெறும் இந்த போட்டியில் சமரி அதபத்து தலைமை தாங்குகிறார். அணியின் தலைவர் சமரி அதபத்து அங்கே செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமது அணி போட்டிகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.

ஆசிய வெற்றிக்கிண்ண மகளிர் போட்டி தொடர் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை நடைபெறும்.

இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு

இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு

இலங்கையில் நாளை முதல் காலை ஆறுமுப்பது மணி முதல் எட்டு முப்பது மணிவரை மின்சாரம் துண்டிக்க படுகிறது .

காலை வேளையில் மிக முக்கிய வானொலி ,மற்றும் தொலை காட்சி செய்திகள் இடம்பெறும் நேரமாக உள்ளது .

இதனை மைய படுத்தி மின்சார துண்டிப்பு இடம்பெறுகிறது .

தவிர வேலைக்கு செல்லும் பணியாளர்களும் ,இவ்வேளை துரிதமாக சென்றிட ,வீட்டில் மின்சாரத்தை அதிகம் பாவனைக்கு உட்படுத்தி வருகின்றனர் .

மிக முக்கியமான கால பகுதியில் துண்டிக்க படும் இந்த மின்சார நிறுத்தம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஜப்பானில் மோடி ரணில் நேரில் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

ஜப்பானில் மோடி ரணில் நேரில் பேச்சு

ஜப்பானில் மோடி ரணில் நேரில் பேச்சு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் ,ஜப்பான் டோக்கியாவில் சந்தித்து பேசியுள்ளனர் .

ஜப்பான் முன்னாள் ஜனாதிபதியின் மரண இறுதி நிகழ்வில் ,கலந்து கொண்ட பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

இந்த சந்திப்பில் இலங்கை, இன்றைய நிதி நெருக்கடி மற்றும் ,கடன் உதவிகள் தொடர்பாக பேச பட்டுள்ளது .

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவும் என்கின்ற, உறுதி மொழி நரேந்திர மோடியினால் வழங்க பட்டுள்ளது, என்கிறது இலங்கை தரப்பு .

தற்கால இலங்கையின் நெருக்கடியை தணிப்பதற்கு ,கடன்மேல் கடனை வாங்கி இலங்கை குவித்து வருகின்றமை தெரிந்ததே .

பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது

பாதாள உலக குழு வில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது

இலங்கை இராணுவத்தின் சார்யன் தர அதிகாரி ஒருவர் ,பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கடந்த இரவு காவல்துறையினர் முல்லேரியாவா பகுதியில் ,மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், ஆமி சுரங்க என்ற சார்யன் தர இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார் .

இவர் பாதாள உலக குழுவின் ,உறுப்பினராக செயல் பட்டு வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இராணுவ அதிகாரி, மற்றும் இவரது குழுவின் முக்கிய இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவர்களிடம் இருந்து வெளிநாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் என்பனவும் மீட் ப்பட்டுள்ளன .

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வெளிநாட்டில் உள்ளவர்கள் மின்சார கார் இறக்குமதி செய்திட அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டில் உள்ளவர்கள் மின்சார கார் இறக்குமதி செய்திட அனுமதி

வெளிநாட்டில் உள்ளவர்கள் மின்சார கார் இறக்குமதி செய்திட அனுமதி

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மின்சார காரினை ,இலங்கைக்கு இறக்குமதி செய்திட அரசு அனுமதி வழங்கியுள்ளது .

இவ்வாறு மின்சார காரினை இறக்குமதி செய்திட உள்ளவர்கள் ,வேர்க் போமிட்டீல் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்திட சென்றால் ,அதனை காண்பித்து , இந்த மின்சார காரினை இறக்குமதி செய்திட முடியும் என்கிறது அரசு .

கடந்த காலங்களில் இவ்வாறு கூட மின்சார காரினை இறக்குமதி செய்திட முடியா நிலையில் வெளிநாட்டு மக்கள் சிக்கி தவித்தனர் .

டொலர் வர்த்தகத்தை அதிகரிக்க இவ்வாறான மாற்று நடவடிக்கைக்கு இலங்கை அனுமதி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .

இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டாலரில் டிக்கட் விக்க ஏற்பாடு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டாலரில் டிக்கட் விற்க ஏற்பாடு

இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டாலரில் டிக்கட் விற்க ஏற்பாடு

இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டொலரில் டிக்கட் விற்கும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது .

அமெரிக்கா டொலரை உள்வாங்கும் முகமாக இந்த ஏற்பாடு உல்லாச பயணத்துறை ஏற்பாடு செய்துள்ளது .

இலங்கையில் அறிமுகமாகும், இந்த டொலர் விலையில் டிக்கட் விற்பனை ஊடாக அமெரிக்கா டொலரினை, பெற்று கொள்ள முடியும் என அரசு எண்ணுகிறதது .

அதற்கு அமைவாக இந்த டிக்கட் விற்பனை இடம்பெற ,உள்ளதாக உல்லாச துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர்.

தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்

தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்

இலங்கை கொழும்பு பகுதியில் அமைந்துள்ள காஜி மவத்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 60 வீடுகள் எரிந்துள்ளன .

இதே பகுதியில் 300 மர வீடுகள் கொண்ட ,குடியிருப்பு பகுதியான இந்த பகுதி காணப்பட்டுள்ளது .

இங்கே ஒரு வீட்டில் போதைக்கு அடிமையானவர்கள் வசித்து வந்துள்ளனர் .

அந்த வீட்டில் இருந்தே முதலாவது தீ பரவல் ஏற்பட்டுள்ளது .

அதன் பின்னரே ஏனைய வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது .

தமது உடைமைகள் யாவும் இழந்து மக்கள் தற்போது அகதிகளாக உள்ளனர் .

தொடந்து தீ பிடித்தல் சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறியும் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

போதைக்கு அடிமையானவர்களினால் இந்த வீடுகள் எரியூட்ட பட்டுள்ளது என்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற 2 800மில்லியன் ஓதுக்கியுள்ள அரசு
Posted in இலங்கை செய்திகள்

யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற 2 800மில்லியன் ஓதுக்கியுள்ள அரசு

யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற 2 800மில்லியன் ஓதுக்கியுள்ள அரசு

இலங்கையில் காட்டு யானைகள் தாக்குதலில் சிக்கி காட்டுப்புறத்தை அண்மித்துள்ள மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் .

இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ,யானைகள் மீள் ஒழுங்கு படுத்தல் மற்றும் ,பாதுகாத்தல் திட்டங்களுக்கு 2800 மில்லியன் ரூபா ஒதுக்க பட்டுள்ளது .

யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றிடவும் ,அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவும் இந்த நிதி ஒதுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

நிதி ஒதுக்கியுள்ள பொழுதும் ,அதற்கு பொறுப்பானவர்கள் இந்த நிதியை ஒதுக்கி செல்லாது இருந்தால் ,இந்த திட்டம் பயனுள்ளதாக மக்களுக்கும் அமையும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம்

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) நேற்று டோக்கியோவில் சந்தித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர்
பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் .