Tag: இலங்கையில் மீண்டும்
இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் என்கின்ற தகவல்களை ,அவரது கூட்டாளிகள் வெளியிட்டுள்ளனர் .
மொட்டு கட்சியை மக்கள் விரட்டியைக்கவில்லை என, தொடர்ந்து கூறி வரும் ,மகிந்தா ஆதரவு சக்திகள் ,இலங்கையில் மீளவும் மகிந்த ராஜபாக்ஸ பிரதமராகிறார் எனவும் ,விரைவில் அவர் பதவி ஏற்பார் என்கிறது .
மகிந்தா ராஜபக்ச ,கோட்டபாய ராஜபக்ச ,அதிகாரத்தை துறந்து ஓடவேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர் .
அவ்வாறன நிலையில் ,அதனை மறந்து மீளவும் அரியணையில் அமர்ந்திட, மகிந்த தரப்பு முனைந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .
இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம்
இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) நேற்று டோக்கியோவில் சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.
சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர்
பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் .














